Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gyanaguru Happiness - May 2024
Gyanaguru Happiness - May 2024
Gyanaguru Happiness - May 2024
Ebook67 pages19 minutes

Gyanaguru Happiness - May 2024

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

May 2024 Issue

Languageதமிழ்
Release dateMay 11, 2024
ISBN6580152511124
Gyanaguru Happiness - May 2024

Read more from S.K. Murugan

Related to Gyanaguru Happiness - May 2024

Related ebooks

Reviews for Gyanaguru Happiness - May 2024

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gyanaguru Happiness - May 2024 - S.K. Murugan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஞானகுரு மகிழ்ச்சி - மே 2024

    Gyanaguru Happiness - May 2024

    Author:

    எஸ். கே. முருகன்

    S.K. Murugan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sk-murugan

    பொருளடக்கம்

    நல்ல தக்காளி தேர்வு செய்யுங்கள்

    ஐடியா மன்னர்களால் பணம் சம்பாதிக்க முடியாது...!

    விவேகானந்தர் ஞானியல்ல, அரசியல்வாதி

    ஞானகுரு பதில்கள்

    பணத்துக்காக ஒருவரை திருமணம் செய்துகொள்ளலாமா...?

    மனசுக்குள் வா புத்தனே…

    ஐ லவ் மீ

    கடவுளைத் தாண்டிய வள்ளலார்...

    ஆன்மாவின் எடை 0.0005 கிராம்...?

    பழக்கம் என்றால் நல்லதும் தப்பு… தீயதும் தப்பு

    கவித்துவம்

    ஆசிரியர் பக்கம்

    நல்ல தக்காளி தேர்வு செய்யுங்கள்

    காய்கறிக் கடை கூடையில் தக்காளி நிரம்பி வழிவதைக் கண்டாலும், அவற்றை அப்படியே எடுத்து யாரும் எடை போடுவதில்லை. அழுகல், ஓட்டை இருக்கிறதா, நசுங்கிப் போயிருக்கிறதா என்றெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து, இருப்பதில் நல்ல தக்காளிகளைத் தேர்வு செய்கிறார்கள்.

    வீட்டுக்கு வந்து பார்த்தால், அவற்றில் ஒன்று அல்லது இரண்டில் ஏதேனும் குறை இருக்கலாம். இந்த அனுபவம் கிட்டதட்ட எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும். ஏமாந்து போனதற்கு வருத்தப்பட்டாலும், அதற்காக ரொம்பவும் மன உளைச்சல் அடைவதில்லை. கெட்டுப்போன தக்காளியை குப்பையில் போட்டுவிட்டு அடுத்த வேலையைச் செய்கிறார்கள்.

    வாழ்க்கையும் இப்படித் தான். எத்தனை முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலும், தெளிவாகச் செயலாற்றினாலும் சில பிரச்னைகள் வருவதைத் தடுக்கவே முடியாது. இது போன்ற பிரச்னைகளே மனிதரின் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகின்றன. ஏனென்றால், பிரச்னைகள் இல்லாமல் எந்த ஒரு மனிதராலும் வாழவே முடியாது.

    நல்ல வேலை, நிறைய சம்பாத்தியம், நல்ல மனைவி, சுறுசுறுப்பான குழந்தைகள் என்று வாழும் ஒரு குடும்பத்தினரைப் பார்த்து பலரும் பொறாமைப்படலாம். ஆனால், அவர்களுடைய வீட்டுக்குள் நுழைந்து கேட்டுப் பாருங்கள்.

    * சிட்டிக்குள்ளே வீடு கட்டுறதுக்கு அரை கிரவுண்ட் இடம் தேடிக்கிட்டே இருக்கிறேன், இன்னமும் அமையலைங்கிறது ரொம்பவே டென்ஷனாகுது.

    * அவருக்கு ஆபீஸ், வேலை தான் முக்கியம். சிம்லாவுக்குக் கூட்டிட்டுப் போங்கன்னு ரெண்டு வருஷமா கத்துறேன், மதிக்கவே மாடேங்கிறார்.

    * எங்க ஃப்ரண்ட்ஸ்லாம் ஜாலியா நைட் ஸ்டடின் பண்றாங்க. என்னை விடுறதே இல்லை. எங்காவது இல்லாத வீடுல பொறந்திருக்கலாம்.

    என்பது போன்று ஆளாளுக்கு ஒரு பிரச்னை இருக்கும். மற்றவர்களுக்கு இது சாதாரண பிரச்னையாகத் தெரியலாம், ஆனால், அவர்களுக்கு இது பெரிய பிரச்னை. கடையில் வாங்கிய தக்காளி போன்று அவர்களே விரும்பி ஏற்றுக்கொண்ட பிரச்னைகள்.

    எனவே, பிரச்னைகளைக் கண்டு ஒருபோதும் வருந்த வேண்டாம். எல்லாமே நாமே தேடி வாங்கிய தக்காளி என்பது புரிந்துபோனால், இனியெல்லாம் மகிழ்ச்சியே.

    ஐடியா மன்னர்களால் பணம் சம்பாதிக்க முடியாது...!

    Enjoying the preview?
    Page 1 of 1