Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arumbugal Uyarvil Namathu Pangu
Arumbugal Uyarvil Namathu Pangu
Arumbugal Uyarvil Namathu Pangu
Ebook152 pages47 minutes

Arumbugal Uyarvil Namathu Pangu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

சமூகத்தின் முதன்மை உறுப்பினர்களாக, வல்லவர்களாக, பொறுப்புள்ளவர்களாக, பண்பாடு மிக்கவர்களாக, நாகரீகம் தெரிந்தவர்களாக குழந்தைகளை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.

அதற்கு உதவும் வகையில் நான் அறிந்த, அனுபவித்த, வாழ வைக்கும் நெறிமுறை உண்மைகளுடன், “அரும்புகள் உயர்வில் நமது பங்கு” என்னும் நூலை ஆக்கியுள்ளேன்.

பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களை நற்பண்பாளர்களாகவும், அறிவில் சிறந்தவர்களாகவும் வளர்த்து ஆளாக்குவதற்கு இந்நூல் சிறந்த வழிகாட்டி.

Languageதமிழ்
Release dateApr 2, 2022
ISBN6580153608248
Arumbugal Uyarvil Namathu Pangu

Related to Arumbugal Uyarvil Namathu Pangu

Related ebooks

Reviews for Arumbugal Uyarvil Namathu Pangu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arumbugal Uyarvil Namathu Pangu - Kavitha Albert

    https://www.pustaka.co.in

    அரும்புகள் உயர்வில் நமது பங்கு

    Arumbugal Uyarvil Namathu Pangu

    Author:

    கவிதா ஆல்பர்ட்

    Kavitha Albert

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavitha-albert

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    என்னுரை

    வளமையாக வாழ வேண்டிய சிட்டுக்களின் வாழ்வு கருகுவதையும், சமூக அச்சுறுத்தல் என்னும் நரகாசுரனின் வன்கரம் கண்டு கலங்குவதையும் பார்க்கிறோம்.

    இந்த சின்னஞ் சிறுவர்கள்தான் நாளைய உலகின் நட்சத்திரங்கள். இவர்கள் மின்னி மறையும் மின்மினிக் கோளங்கள் அல்ல; வைர, வைடூரியங்களாக ஜொலிக்க வேண்டியவர்கள்.

    அவர்கள் வாழ்வின் செழுமை பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம் ஆகியவற்றின் கரத்தில்தான் இருக்கிறது. அவர்கள் நாம் வார்க்கும் வார்ப்பாகத்தான் இருப்பார்கள். குழந்தைகளை நேசிக்கத் தெரியாத மனிதர்கள் மனிதர்களாகவே இருக்க முடியாது.

    சமூகத்தின் முதன்மை உறுப்பினர்களாக, வல்லவர்களாக, பொறுப்புள்ளவர்களாக, பண்பாடு மிக்கவர்களாக, நாகரீகம் தெரிந்தவர்களாக குழந்தைகளை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.

    அதற்கு உதவும் வகையில் நான் அறிந்த, அனுபவித்த, வாழ வைக்கும் நெறிமுறை உண்மைகளுடன், அரும்புகள் உயர்வில் நமது பங்கு என்னும் நூலை ஆக்கியுள்ளேன்.

    பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களை நற்பண்பாளர்களாகவும், அறிவில் சிறந்தவர்களாகவும் வளர்த்து ஆளாக்குவதற்கு இந்நூல் சிறந்த வழிகாட்டி. இந்நூல் குழந்தைகள் முதல் அனைத்துத் தரப்பினரும் வாசித்து வாழ்வதற்கு சிறந்த நண்பனாகும்.

    அரும்புகள் வாழ்வு உயர வேண்டும் என்னும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஓர் அற்புதமான வழித்தடம். என் நோக்கத்திற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்னும் பேராசையில் நான்...! உங்கள் கருத்துக் குவியல்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

    அன்புடன்,

    கவிதா ஆல்பர்ட்

    பொருளடக்கம்

    1. பிஞ்சுகளின் முதல் காட்சி

    2. மனதைக் கவரும் விளையாட்டுச் சாதனங்கள்

    3. பிஞ்சுகளை அச்சுறுத்தும் ஒலி

    4. பிஞ்சுகளை படுகொலை செய்யும் பெற்றோர்கள்

    5. உணவு வகைகளால் உபாதைக்குள்ளாகும் குழந்தைகள்

    6. சலுகைகள் ஏற்படுத்தும் சங்கடங்கள்

    7. தவறான ஆலோசனைகளால் தடுமாறும் குழந்தைகள்

    8. தத்துக்கொடுப்பதால் தத்தளிக்கும் சந்ததிகள்

    9. சுமையானக் கல்வியால் சுரமிழக்கும் குழந்தைகள்

    10. அன்புக்காக ஏங்கும் அபலைக் குழந்தைகள்

    11. போர்களினால் போராடும் குழந்தைகள்

    12. தவறான வழிகாட்டுதலால் தடுமாறும் குழந்தைகள்

    13. ஒழுக்கமற்ற பெற்றோரால் ஒழுங்கீனமாகும் குழந்தைகள்

    14. நிதானமிழந்த பெற்றோரால் நிலைதடுமாறும் குழந்தைகள்

    15. பெற்றோரின் கவனக்குறைவால் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள்

    16. பெற்றோரால் பாரமாகக் கருதப்படும் பெண் குழந்தைகள்

    17. திசை தெரியாத பெற்றோரால் அழிக்கப்படும் குழந்தைகள்

    18. உதவும் மனங்களால் உயரும் குழந்தைகள்

    19. மனிதநேயப் பண்பால் மதிப்பு பெறும் குழந்தைகள்

    20. உயிரினங்களால் உயிர்ப் பலியாகும் குழந்தைகள்

    21. தொலைக்காட்சியால் தொலைந்து போகும் சிறுவர்கள்

    22. அர்த்தமற்ற கல்வியால் அவதியுறும் குழந்தைகள்

    23. அன்னையரால் அழிக்கப்படும் குழந்தைகள்

    24. நல்ல வார்த்தைகளை விதைத்து நல்லவர்களாக வளர்த்தெடுப்போம்

    25. மாயாஜாலத்தில் மயங்கும் குழந்தைகள்

    26. சுயநலத்துக்காக பிள்ளைகளை மரணத்துக்கு கட்டாயப்படுத்தும் பெற்றோர்

    27. கருவிலேயே குழந்தைகளை கரைக்கத் துடிக்கும் பெற்றோர்கள்

    28. ஊசிகளால் உயிர்ப்பலியாகும் குழந்தைகள்

    29. திரைப்படங்களால் தீவிரவாதிகளாகும் குழந்தைகள்

    30. மது அரக்கனால் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள்

    31. விட்டில் பூச்சிகளாய் குழந்தைகள்

    1. பிஞ்சுகளின் முதல் காட்சி

    குழந்தை முதலில் பார்ப்பது தாயின் முகம். நாளடைவில் சுற்றியிருப்பவர்களின் முகங்களைக் காண்கிறது. அதன்பின்னரே இயற்கை காட்சிகளைக் கண்டு இரசிக்கிறது.

    குழந்தை மல்லாந்து படுத்த நிலையிலேயே பார்வை செல்லும் இடம் வரை இருப்பதுதான் உலகம் என்று எண்ணிக் கொள்கிறது. இருட்டறைக்குள்ளே நாம் குழந்தைகளைப் படுக்க வைத்தால், குழந்தையின் பார்வையில் பரந்த ஓர் உலகம் இருப்பது தெரிவதில்லை.

    எனவே, குழந்தைகளைத் தினமும் ஒரு மணி நேரமாவது இயற்கைக் காட்சிகளை கண்டு இரசிக்கச் செய்ய வேண்டும்.

    கதிரொளி படக்கூடாது என்று அறைக்குள்ளேயே மறைத்து வைத்திருக்கும் குழந்தையை, கதிரொளி படும் வகையில் நாம் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை வரும். அப்போது சுள்ளென்று சுடும் சூரிய ஒளி குழந்தையின் கண்களை கூசச் செய்யும்.

    அகச் சூழலில் பழக்கப்பட்ட குழந்தை. புறச்சூழலை எதிர்கொள்ள முடியாமல் போராடுகிறது. சில குழந்தைகள் அந்தப் புறச்சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாமல் அழவும் ஆரம்பித்துவிடுகிறது.

    எனவே, சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு எதையும் ஏற்று, எதிர்கொண்டு வாழக்கூடிய அக, புற சூழ்நிலைகளைப் பழக்கப்படுத்த வேண்டும்.

    காடு, கடற்கரை, சாலையோரங்களில் வாழும் குழந்தைகளை நாம் பார்க்கிறோம். அந்தக் குழந்தைகளின் உடலானது இயற்கையோடு தன்னை இணைத்துக் கொள்வதால், பெரும்பாலும் அக்குழந்தைகள் நோய்ப் பாதிப்புக்கு உள்ளாவதில்லை.

    மழை, வெயில், மணல், கற்கள் அனைத்துமே அவர்களின் விளையாட்டுப் பொருட்களாகிவிடுகின்றன. ஆனால், நம்மில் பலர் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பதாக எண்ணிக்கொண்டு, நாமே பலவிதமான கட்டுப்பாடுகளையும் வரையறுத்துக் கொள்கிறோம். அதுவே குழந்தைகளுக்கு நோய் உண்டாக்கும் காரணியாகவும், மன பாதிப்புக்கான தோற்றுவாயாகவும் அமைந்துவிடுகிறது.

    குளிர்ந்த நீரில் குளித்தால் சளி பிடித்துவிடும் என்று சுடு நீரில் குளிக்க வைப்போம். பழங்கள் சாப்பிடுவதால் நோய் வந்துவிடும் என்று நொறுக்குத் தீனி வாங்கிக் கொடுப்போம். இப்படி நாம் செய்யும் அறிவற்ற செயல்களே குழந்தைகள் நலனைப் பாதிக்கச் செய்கின்றன.

    சில நேரங்களில் நமது பராமரிப்பும், பாதுகாப்புமேகூட குழந்தைகளைப் பலவீனப்படுத்துகின்றன. நாம் குழந்தைகளை ஒரு வகையில் பழக்கப்படுத்தியிருப்போம். வேறு ஒரு இடத்திற்கு நாம் செல்ல நேரிடும்போது, நமது பழக்கத்தை மாற்றியாக வேண்டிய நிலை ஏற்படும். அப்போது நாம் எது செய்வது என்று புரியாமல் எதையாவது செய்து அல்லல்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    குழந்தைகளின் உடலும், மனமும் எந்தவிதமான சூழ்நிலையினையும், எதிர்கொள்ளும் வகையில் அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும்.

    குளிர்ந்த நீரில் குளிப்பது, குளித்துவிட்டு உண்பது, ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது, கை கழுவிவிட்டு உண்ணச் செல்வது. சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பது என்பது போன்ற நல்லப் பழக்கங்களை சிறுவயதிலேயே குழந்தைகள் மனதில் பதியும்படி செய்ய வேண்டும்.

    குழந்தை அடம் பிடிக்கிறது என்பதற்காக குழந்தையின் விருப்பத்திற்கே விட்டுக்கொடுக்காமல் நல்லது எது? கெட்டது எது? என்பதை அவர்களுக்கு நாம் புரிய வைக்க வேண்டும்.

    குளிர்ந்த நீரில் குளிப்பதால் மூளை புத்துணர்வுடன் செயல்படும்; நோய் வராமல் எதிர்க்கும் ஆற்றலைப் பெறும்.

    2. மனதைக் கவரும் விளையாட்டுச் சாதனங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1