Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irandavathu Seethai!
Irandavathu Seethai!
Irandavathu Seethai!
Ebook81 pages27 minutes

Irandavathu Seethai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜானகி என்ற விலைமாதுவை, அவளைப்பற்றி தெரிந்தும், திருமணம் செய்துகொள்ள நினைக்கிறான் பவித்ரன். ஒரு ப்ராஸ்டிட்யூட் பெண் கடைசிவரை அப்படியேவா இருப்பாள். அவளுக்குள் நல்ல மாற்றங்கள் ஏற்படக் கூடாதா? வேறு ஒரு பாதையை தேர்ந்தெடுக்க முயல்கிறாள். ஆனால், ராபர்ட் போன்ற கொடூர மிருகங்கள் அதற்கு தடையாக இன்னும் இருக்கத்தானே செய்கின்றனர். இரண்டாவது சீதையாக வாழ நினைக்கும் ஜானகி, ராபர்ட் மூலம் சந்தித்த துயரங்கள் என்னென்ன? பவித்ரனின் நண்பனான, இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அவளின் உதவிக்கு வருகிறார்.அவரால் ஜானகிக்கு விமோசனம் கிடைத்ததா? அவளின் பிரச்னைகள் ஓய்ந்ததா?

வாசிப்போம் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்...

Languageதமிழ்
Release dateDec 6, 2021
ISBN6580100407813
Irandavathu Seethai!

Read more from Rajesh Kumar

Related to Irandavathu Seethai!

Related ebooks

Related categories

Reviews for Irandavathu Seethai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irandavathu Seethai! - Rajesh Kumar

    https://www.pustaka.co.in

    இரண்டாவது சீதை!

    Irandavathu Seethai!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    பட்டுச் சேலையைச் சுற்றிக் கொண்டு கண்ணாடி முன் வந்து நின்று நெற்றியில் பொருத்திக் கொள்ள ஸ்டிக்கரைத் தேடினாள் ஜானகி. கட்டியிருந்த சேலைக்கு ஏதுவாய் மெரூன் கலர் ஸ்டிக்கர் கிடைக்காமல் போகவே, வேறு எதை இட்டுக் கொள்ளலாம் என்று யோசித்த வேளையில் காலிங்பெல் கூப்பிட்டது.

    ஸ்டிக்கரைத் தேடுவதை விட்டுவிட்டு, போய்க் கதவைத் திறந்தாள். பவித்ரன் நின்றிருந்தான். வெள்ளை பேண்ட், வெள்ளை ஷர்ட், கண்களில் வெளிர் நீல நிறக் கண்ணாடி.

    என்ன, ரெடியா?

    ஆயிட்டே இருக்கேன்.

    நீ சொன்ன மாதிரி எட்டு மணிக்கெல்லாம் வந்திட்டேன். ஆனா நீதான் ரெடியாகலை.

    மணி இன்னும் எட்டாகலை... 7.55 தான். நெத்திக்கு ஸ்டிக்கர் பொட்டை இட்டுக்கிட்டா என்னோட வேலை முடிஞ்சுது. சொன்னவள் கண்ணாடிக்கு முன்பாய் நின்று ஒரு இளஞ்சிவப்பு ஸ்டிக்கரை எடுத்து நெற்றியின் மையப் பகுதிக்குப் பொருத்திக் கொண்டாள்.

    போலாமா?

    போலாம்...

    வீட்டைப் பின்பக்கம் பூட்டியிருக்கியா?

    ம்...

    வேலைக்காரப் பொண்ணு என்ன ஆனா?

    ரெண்டு நாளைக்கு வரமாட்டா...

    வெளியே வந்தார்கள். ஜானகி வீட்டைப் பூட்டிக் கொண்டாள். வாசலில் பவித்ரனின் மாருதி, ஒரு சாக்லேட் துண்டம் மாதிரி காத்திருந்தது.

    இருவரும் உள்ளே திணிந்தார்கள்.

    மாருதி ஒரு சின்னச் செருமலோடு புறப்பட்டது. தெரு முனையைத் தாண்டியதும் கேட்டான் பவித்ரன்.

    எந்தக் கோயிலுக்குப் போகணும்னு சொன்னே?

    பரமேஸ்வரியம்மன் கோயில்.

    அந்தக் கோயிலுக்குத்தான் போகணுமா?

    ஆமா...

    இந்த நேரத்துக்குப் போனா கூட்டம் இருக்குமா?

    இருக்காது. அதுவுமில்லாம இன்றைக்குத் திங்கட்கிழமை. செவ்வாய், வெள்ளிதான் அந்தக் கோயில்லே கும்பல் இருக்கும்.

    சாமிக்கு முன்னாடி திருவுளச் சீட்டு போடப் போறோமா? இல்லை பூக்கட்டி போடப் போறோமா?

    பூக்கட்டித்தான் போடப் போறோம்.

    அதாவது ஒரு வெள்ளைப் பூவையும், ஒரு சிவப்புப் பூவையும் தனித்தனியா காகிதத்திலே பொட்டலம் கட்டி சாமி பாதத்திலே போட்டு, கோயில் குருக்களை விட்டு எடுக்கச் சொல்றோம்?

    ஆமா...

    வெள்ளைப் பூ வந்தா... என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்கிறே... சிவப்புப் பூ வந்தா ‘நஹி’ன்னு சொல்லப் போறே?

    ஆமா... ஆமா...

    அம்மா தாயே பரமேஸ்வரி... வெள்ளைப் பூவா எனக்கு எடுத்துக் குடும்மா... உன் சன்னதியில் நூத்தியெட்டு தேங்காயை உடைக்கிறேன்.

    சாமியை இப்படியெல்லாம் தாஜா பண்ணக்கூடாது.

    சரி, நான் வேண்டிக்கலை.

    கார் ரோடுகளைத் தேய்த்துக் கொண்டு நகரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த அந்தச் சிறிய கோயிலுக்கு முன் போய் நின்றது. இருவரும் இறங்கினார்கள்.

    ஜானகி கோயில் வாசலில் இருந்த பூக்காரியிடம் அரளி மாலையையும் மல்லிகைச் சரத்தையும் வாங்கிக் கொண்டாள்.

    ஜானகி...

    ம்...

    பயமா இருக்கு...

    ஏன்?

    சிவப்புப் பூ வந்திடப் போகுதேன்னு...

    வெளிப் பிராகாரத்திற்குள் நுழைந்தார்கள்.

    இதோ பாருங்க பவித்ரன்... வெள்ளைப் பூவோ சிவப்புப் பூவோ... எது வந்தாலும் அந்தத் தீர்ப்பை ஏத்துக்கணும்.

    சரி...

    இப்போ சரின்னு சொல்லிட்டு... அப்புறம் அழிச்சாட்டியம் பண்ணக் கூடாது.

    சரி... சரி...

    கீழே கிடக்கிற ரெண்டு துண்டுப் பேப்பரை எடுங்க.

    எதுக்கு?

    எடுங்க சொல்றேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1