Oviyamai Oru Pen
()
About this ebook
கதையில் காலம் காலமாகத் தொடரும் ஒரு சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து கணவனும் மனைவியும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை மிகவும் நாசூக்காகச் சொல்கிறார் கதாசிரியர் யோகா. புகைப்படக் கலைஞர் என்பதனாலோ என்னவோ கதையின் நிகழ்வுகளை நம் மனக்கண்முன் ஓட விடுகிறார். கதாபாத்திரங்களை நாம் பார்ப்பதுபோல் தோன்றுகிறது.
Read more from Kalaimamani ‘Yoga’
Enathu South Africa Payana Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsBoologa Sorgankal Rating: 0 out of 5 stars0 ratingsSri Kanchi Mahimai Rating: 0 out of 5 stars0 ratingsKajooraho Muthal Kanchipuram Varai Rating: 0 out of 5 stars0 ratingsEn Vazhve Peranantham Rating: 0 out of 5 stars0 ratingsKalaignar 77 Rating: 0 out of 5 stars0 ratingsBoologam Ananthathin Ellai Rating: 0 out of 5 stars0 ratingsAnbennum Thottathiley... Rating: 0 out of 5 stars0 ratingsAmericavukku Azhaithu Pona Bharathirajavum Palpandiyanum Rating: 0 out of 5 stars0 ratingsLondonuku Azhaithu Pona 'Sabari' Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oviyamai Oru Pen
Related ebooks
Vanthaanga Jeichaanga… Rating: 0 out of 5 stars0 ratingsIngey Etharkkaga? Rating: 0 out of 5 stars0 ratingsEnna Thavam Seitheno! Rating: 0 out of 5 stars0 ratingsWhite Nights - Venmayamana Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsFirst Teacher Rating: 0 out of 5 stars0 ratingsArul Vaakku Rating: 0 out of 5 stars0 ratingsMathilukal Rating: 0 out of 5 stars0 ratingsLondonuku Azhaithu Pona 'Sabari' Rating: 0 out of 5 stars0 ratingsAV.M. Thantha SP.M. Rating: 0 out of 5 stars0 ratingsKathaigalum Thiraippadangalum Rating: 0 out of 5 stars0 ratingsJayabharathi Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsJodi Sera Aasai Rating: 0 out of 5 stars0 ratingsCharulatha Rating: 0 out of 5 stars0 ratingsUlavu Sol Kiliye! Rating: 5 out of 5 stars5/5Muganoolil Mugam Paarkirean Rating: 0 out of 5 stars0 ratingsThiraichudargal Rating: 0 out of 5 stars0 ratingsUnnaipol Oruvar Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Kadhal Vendum Rating: 4 out of 5 stars4/5M.G.R.-in Success Formula Rating: 0 out of 5 stars0 ratingsW.P.A Soundrapandian Rating: 0 out of 5 stars0 ratingsThiraiyulagai Thirumbi Paarkkirargal Rating: 0 out of 5 stars0 ratingsAmma... Athma... Anuppama... Rating: 0 out of 5 stars0 ratingsJust Jolly Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsSpring Autumn Winter Summer Spring Rating: 0 out of 5 stars0 ratingsRajini Raajyam Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kiliye... Rating: 0 out of 5 stars0 ratingsUnnidam Oru Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKathanayakigalin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsAnthareen Rating: 0 out of 5 stars0 ratingsUlagam Pottrum Thirai Kaaviyangal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Oviyamai Oru Pen
0 ratings0 reviews
Book preview
Oviyamai Oru Pen - Kalaimamani ‘YOGA’
https://www.pustaka.co.in
ஓவியமாய் ஒரு பெண்
Oviyamai Oru Pen
Author:
கலைமாமணி 'யோகா'
Kalaimamani ‘YOGA’
For more books
https://www.pustaka.co.in/home/author/kalaimamani-yoga
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
வாழ்த்துரை
டி. ராதாகிருஷ்ணன் IPS
(Addi.Director General of Police)
தனித்து அடையாளம் தெரிபவர் ‘யோகா’
நண்பர் யோகாவுடன் என் குடும்பத்தாரின் நட்பு கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நீடிக்கும் நட்பு. ஆழமான, அகலமான தெளிவான, கலப்படமற்ற நட்பு ஆகும். எத்தனை கூட்டத்திலும் தனித்துத் தெரிபவர். எத்தனை கூட்டத்திலும் நம்மை தனித்துத் தெரியவைப்பவர். நிழற்படக் கலைஞர்களின் கூட்டத்தில் தனித்து அடையாளம் தெரிபவர். புன்முறுவல் பூத்த முகம். அயர்ச்சியைக் காட்டாத உழைப்பு. தேடி வந்து நட்பை நிலைநிறுத்தும் பாங்கு. தொழிலில் நேர்மையும் காலத்தின்படி செயலாற்றுதலும், தான் செய்வதைத் தொழிலாகச் செய்யாமல், ஒரு தவமாக இயற்றிக் கூட்டத்தில் அமைதியாக இருந்து கொண்டே கலகலப்பை ஏற்படுத்துபவர். எங்களது இல்ல விழாக்களின் முதன்மை விருந்தினராயும், முதல் விருந்தினராயும் எப்போதும் பங்கேற்பவர். அவர் எனது இனிய நண்பர் என்பதில் நான் எப்போதும் பெருமிதம் கொள்ளவைப்பவர்.
கலைமாமணி ‘யோகா’ ஒரு மிகச் சிறந்த நிழற்படக் கலைஞர் என்பது நாடறிந்த விஷயம். ஆனால் அக்கலைஞனுக்குள் மிகச் சிறந்த எழுத்தாளரும் ஒளிந்து கொண்டுள்ளார் என்பது அன்னாரின் சிறுகதைகளின் தொகுப்பான ‘ஓவியமாய் ஒரு பெண்’ எனும் நூல் கலங்கரை விளக்கமென வெளிப்படுத்தி ஒளிர்ந்து திகழ்கின்றது. பதினோரு சிறுகதைகளைத் தன்னகத்தே அடக்கியுள்ள இத்தொகுப்பு, அன்றாட வாழ்வில் சமுதாயத்தில் நிகழ்வுறும் சாதாரண நிகழ்வுகளை மையமாகக் கொண்டு மனிதர்களின் ஆசாபாசங்களையும், மன ஓட்டத்தினையும், வாழ்வியல் சிந்தனைகளையும் அவரது புகைப்படங்களைப் போன்றே தெள்ளத் தெளிவாகப் பலவித வண்ணங்களுடன் வெளிப்படுத்தி அவரது நிழற்படங்களின் சிறந்த தொகுப்பைப் போல, நம் இல்லங்களை அலங்கரிக்கும் வண்ணம் சிறந்து விளங்குகிறது.
அன்னாரின் புகைப்படக் கருவி மனிதர்களின் வெளித் தோற்றத்தை வண்ண வண்ணமாய், அழகாய், அற்புதமாய் வெளிப்படுத்துவது போன்றே. அவரது எழுத்துக்களும், மனிதர்களின் உட்புறத்தை உள்ளது உள்ளவாறே நிழற்படங்களாய், ஒளி நாடாவாகத் தொகுத்து வெளிப்படுத்தி ஆச்சரியப்பட வைக்கின்றன. அன்றாடம் அவர் ஆயிரக்கணக்கான மக்களைத் தம் தொழில் நிமித்தம் சந்திக்கும் வாய்ப்பின் மூலம், மனிதர்களின் உள்ளக்கிடக்கையினை ஆய்ந்து அறிந்து அவற்றை எழுத்துக்களாக வெளிக் கொணர்ந்துள்ளார். எளிய நடை. இனிய உரை, எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய ஆற்றொழுக்குநடை என எதை எடுப்பது, எதை விடுப்பது என ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் கதைக்கருக்கள். இதற்காகவே அன்னாருக்கு இன்னுமொரு ‘கலைமாமணி’ பட்டம் வழங்கப்பட வேண்டும். அனைவரும் படித்து உளம் மகிழ வேண்டிய படைப்பு!
யோகா அவர்களின் புகைப்படக் கருவியைப் போன்றே அவரது எழுதுகோலும் அவருக்கு மிகச் சிறந்த கருவியாய் அமைந்துள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும்.
அன்னாரின் எழுத்துப் பணியும் சிகரத்தைச் சென்றடைய வாழ்த்துக்கள்!
வாழ்க! வளர்க!
டி.ராதாகிருஷ்ணன் IPS
(Addi.Director General of Police)
இடம்:
ராஜா அண்ணாமலை மன்றம்
சென்னை - 28.
பாராட்டுரை
பத்மஸ்ரீ பாக்டர்
நல்லி குப்புச்சாமி செட்டியார்
யதார்த்தத்துடன் கொஞ்சம் கற்பனை
நண்பர் யோகா புகைப்படக் கலைஞர் மட்டுமல்ல எழுத்தாளரும்கூட என்பது கலை இலக்கிய வட்டார அன்பர்களுக்குத் தெரியும். அநேகமாக அவரது எல்லாப் புத்தக வெளியீட்டு விழாக்களிலும் கலந்து கொண்டிருக்கிறேன். சமீபத்தில் ஒரு நாள் சார். இது என் முதல் சிறுகதைத் தொகுப்பு
என்று புத்தகத்தின் நகலைக் கொடுத்தார். ஓவியமாய் ஒரு பெண்
என்ற தலைப்பே கவித்துவமாக இருப்பதாகப்பட்டது. அதனால் அந்தக் கதையை முதலில் படித்தேன்.
அந்தக் கதையில் காலம் காலமாகத் தொடரும் ஒரு சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து கணவனும் மனைவியும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை மிகவும் நாசூக்காகச் சொல்கிறார் கதாசிரியர் யோகா.
புகைப்படக் கலைஞர் என்பதனாலோ என்னவோ கதையின் நிகழ்வுகளை நம் மனக்கண்முன் ஓட விடுகிறார். கதாபாத்திரங்களை நாம் பார்ப்பதுபோல் தோன்றுகிறது. விமர்சனம் செய்யும் விதமாக நான் கதையைச் சொல்லிவிட்டால் வாசகர்களாகி உங்களது சுவாரசியம் கெட்டுவிடும். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன்.
பொதுவாகவே வாழ்க்கையில் கணவனும் மனைவியும் அனுசரித்துப் போகவேண்டும். அதுவும் இரண்டுபேரும் ஒரே துறையில் இருந்தால் பிரச்சினைகள் அதிகம் வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. கலைத்துறையில் ஒரு பெண்மணி பிரபலமாக இருந்தால், அவரது கணவரும் வேறு துறையில் பிரபலமானவராக இருந்தால், கணவர் மனைவியின் திறமையை உற்சாகப்படுத்தும் விதமாக நடந்துகொள்ள வேண்டும். அப்படி ஸ்ரீமதி எம்.எஸ்.ஸுக்கு வாய்த்தவர் சதாசிவம். ஆனால் கலைத்துறையில் பலருக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. இப்படிப்பட்ட சிந்தனைகள் என்னுள் எழுப்பியது இந்தக் கதை.
நல்ல வேலை கிடைப்பது. நல்ல முதலாளி அமைவது. நல்ல மனைவி அமைவது போன்றேதான் நல்ல மாப்பிள்ளை அமைவதும் அதை ஒரு கதையில் அழகாகச் சொல்லி இருக்கிறார் முன்பின் தெரியாத பெண் சிரித்து சகஜமாகப் பழகினால் அவளை சமூகம் தப்பாக எடுத்துக்கொள்கிறது என்ற உண்மையை விளக்குகிறது ஒரு கதை.
இது போலவே பிற கதைகளும் சுவாரசியமாகவும் சிந்தனைகளைத் தூண்டுவதாகவும் உள்ளன. இந்த சிறந்த சிறுகதைகளை எழுதிய நண்பர் யோகா சிறுகதைத் துறையிலும் இனி சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்துக்களுடன்...
நல்லி குப்புசாமி செட்டியார்.
இடம்:
நல்லி சின்னச்சாமி செட்டி,
பனகல் பார்க், தி.நகர், சென்னை - 17