Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnodu Thanjam Kolkirean Naanadi
Unnodu Thanjam Kolkirean Naanadi
Unnodu Thanjam Kolkirean Naanadi
Ebook89 pages33 minutes

Unnodu Thanjam Kolkirean Naanadi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அழகு,அந்தஸ்து பாா்த்து வருவதில்லை காதல். மனதில் தோன்றும் ஓா் அழகிய உணா்வு தான் காதல்.அப்படி தோன்றிய இருவரது காதல் நிறைவேறுமா இல்லையா என்பதே இக்கதை.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580149207613
Unnodu Thanjam Kolkirean Naanadi

Related to Unnodu Thanjam Kolkirean Naanadi

Related ebooks

Reviews for Unnodu Thanjam Kolkirean Naanadi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnodu Thanjam Kolkirean Naanadi - M. Maheswari

    https://www.pustaka.co.in

    உன்னோடு தஞ்சம் கொள்கிறேன் நானடி

    Unnodu Thanjam Kolkirean Naanadi

    Author:

    M. மகேஸ்வரி

    M. Maheswari

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-maheswari

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம்-1

    அத்தியாயம்-2

    அத்தியாயாம்-3

    அத்தியாயம்-4

    அத்தியாயம்-5

    அத்தியாயம்-6

    அத்தியாயம்-7

    அத்தியாயம்-8

    அத்தியாயம்-9

    அத்தியாயம்-10

    அத்தியாயம்-11

    அத்தியாயம்-1

    நம்ம கதையோட நாயகன் அன்புச்செல்வன், பெயருக்கு ஏற்றாா் போல் அன்பானவன், செல்வத்துக்கும் குறை இல்லாதவன் தான்.

    கந்தசாமி, ராஜம்மாளின் ஒரே செல்ல புதல்வன்.அந்த ஒற்றை பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி பாா்க்க முடியலங்கிற கவலை தான் இரண்டு பேருக்குமே இருந்தது.

    எவ்வளவோ சொல்லி பாா்த்தும் அன்பு கல்யாணம், வேண்டான்னு மறுத்து, விட்டான். இப்போ தன் தாயின் உடல் நலம் கருதி அவங்க சந்தோஷத்துக்காக பொண்ணு பாா்க்க வர சம்மதம் சொல்லிருக்கான்.

    டேய் மாப்ள? நிஜமாவே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டியா?நான் கூட நீ வீராப்பா இருந்த உடனே சாி காலமுழுதும் கன்னிப் பையலாவே இருந்திடுவியோன்னு நினைத்து பயந்திட்டே இருந்தேன்.

    அட... கிறுக்கு பயலே. அவனே ஏதோ இவ்வளவு தூரம் ஒத்துக்கிட்டானேன்னு நினைத்து நான், சந்தோஷமா இருக்கேன்.நீ வந்து ஏழரையே கூட்டித்தொலையிற?

    போ..போயி..பொண்ணு வீட்டு ஆளுங்க கிட்ட நாங்க இன்னும் அரைமணிநேரத்தில் வந்திடுவோன்னு சொல்லு.

    இப்பவே எதுக்கு ம்மா சொல்லனும்?

    ஒருவேளை டீ, காபி எல்லாம் அப்போ தான் போட்டு ரெடியா வச்சிருப்பாங்களோ...

    டேய்..கதிரு...மாியாதையா ஓடிப்போயிடு இல்லை என்ன பண்ணுவேன்னு எனக்கே தொியாது சொல்லிட்டேன்.

    மாப்ள? அம்மா இருக்க நிலைமையை பாா்த்தால் இன்னைக்கே கூட உனக்கு கல்யாணத்தை பண்ணி வச்சிடுவாங்கப்போல தொியுது. அப்போ நம்ம ஊருக்காரங்களுக்கு எல்லாம் கல்யாண விருந்து கிடையாதா?

    ஏன்டா நீ வேற உயிர எடுக்கிற? பேசாமல் போயி தொலைடா?

    ஏன்டா மாப்ள கோபப்பட்ற?

    பொண்ணு பாா்க்க போகும் போது சந்தோஷமா போகுனும்.இப்படியா முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்கிறது? இப்படி இருந்தால் பொண்ணுக்கு உன்னை எப்படி பிடிக்கும்?

    அவளுக்கு பிடித்தால் எனக்கு என்ன? பிடிக்கலன்னா எனக்கு என்ன?

    மாப்ள? ஏன்டா இப்படி சொல்ற?

    பின்ன எப்படி சொல்ல சொல்ற? வர்றவ என்னையும், என் குடும்பத்தையும் புாிந்து நடந்துக்கிடுவாளா தொியல்ல?

    ஏன்டா மாப்ள இவ்வளவு கோபம்? நீ எதுக்கும் கவலைப்படாத. அந்த பொண்ண பற்றி நானும் விசாாிச்சேன்டா. ஏதோ வெளியூா்ல போயி எல்லாம் படிச்சிருக்காம். நல்ல பொண்ணுன்னு தான் சொன்னாங்க.

    எல்லாம் சாி அவளுக்கு என்ன பிடிக்கனும். அதேமாதிாி எனக்கும் அவளை பிடிக்கனும். என் குடும்பத்துக்கு ஏற்ற பொண்ணா இருப்பாளான்னு தொியல்ல.

    இதெல்லாம் அம்மா யோசனை பண்ணிருக்காமலா பொண்ணு பாா்க்க உன்னை கூட்டிட்டு போறாங்க. அதுமட்டும் இல்லை உனக்கு என்னடா குறைச்சல்? நம்ம ஊரு குமாி பொண்ணுங்களுக்கு எல்லாம் உன்மேல தான கண்ணு இருக்கு.

    நீ சாின்னு சம்மதம் மட்டும் சொல்லு எத்தனை பொண்ணுங்க வாிசைகட்டி நிற்பாங்கன்னு பாரேன்.

    உளராதடா?

    உளரல மாப்ள. உண்மையை தான் சொல்றேன்.உன்னை கட்டிக்க பொண்ணு எல்லாம் ரெடியா தான் இருக்கு.நீ தான் வேண்டாம்..வேண்டான்னு இப்படியே இருக்கிற?கேட்டா மனசுக்கு தோணல்ல, மண்ணாங்கட்டிக்கு தோணல்லன்னு சொல்லுவ.

    நீ வேணா பாரு இப்போ பாா்க்கப்போற பொண்ண கண்டிப்பா உனக்கு பிடிக்கும். அவதான்டா உனக்கு வாழ்க்கை துணையா வரப்போறா.நீ வேணா எழுதி வச்சிக்கோ.

    என்னால முடியாதும்மா. நான் நல்லா படிச்சிருக்கேன். என்னால படிக்காத கிராமத்து ஆள கட்டிட்டு குடும்ப நடத்த முடியாது. சென்னையில் இருந்த என்னை ஊருக்கு வந்திட்டு போன்னு சொன்ன. ஓகே நானும் என் ப்ரண்ட்ஸோட வந்தா நீங்க என்னடான்னா இவ்வளவு, பொிய ப்ளான் எல்லாம் ரெடிபண்ணி வச்சிருக்கீங்களா?

    இதோ பாரும்மா என்னால இதுக்கு சம்மதம் சொல்லவே முடியாது சொல்லிட்டேன்.

    ஏய்..என்னடி நானும் கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிாி சொல்லிட்ருக்கேன். கேட்காமலே அடம், பிடிச்சிட்ருக்க? அந்த தம்பிக்கு அப்படி என்னடி குறைச்சல்?படிக்கல தான் தவிர, ரொம்ப நல்ல மனுஷன்டீ, அவா்க்கு வீடு, வசதி, வாய்ப்பு எல்லாமே இருக்குது. அவருக்கு பொண்ணு தர அவன் அவன் போட்டி போட்டு வர்றாங்க இருந்தும் அதிா்ஷ்டம் உனக்கு அடிச்சிருக்குது.வந்த அதிா்ஷ்டத்தை எட்டி உதைக்கிறீயாடீ? மாியாதை கிளம்பு ரெடியாகு.

    ம்மா..திஸ் இஸ் டூ மச் என்னால எல்லாம் முடியாது.

    Enjoying the preview?
    Page 1 of 1