Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thoranthu Vaa Thottu Vidaathe
Thoranthu Vaa Thottu Vidaathe
Thoranthu Vaa Thottu Vidaathe
Ebook81 pages21 minutes

Thoranthu Vaa Thottu Vidaathe

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateApr 3, 2019
ISBN9781043466411
Thoranthu Vaa Thottu Vidaathe

Read more from Rajeshkumar

Related to Thoranthu Vaa Thottu Vidaathe

Related ebooks

Related categories

Reviews for Thoranthu Vaa Thottu Vidaathe

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thoranthu Vaa Thottu Vidaathe - Rajeshkumar

    17

    1

    கார் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் அடர்த்தியான இருட்டை ஊடுருவிக் கொண்டு அம்பு எய்த மாதிரி பறந்தது.

    ஸ்டியரிங்கைக் கையாளும் அரவிந்த் இருபத்தொன்பது வயதை நான்கு மாதங்களில் தொட இருக்கிறான். அசீல் க்ரூப் கம்பெனிகளின் ஜெனரல் மேனேஜர்.

    அவ்வளவு பெரிய நிறுவனத்தை ஆட்டுவிக்கும் ஜி.எம் ஒரு வழுக்கைத் தலை ஆசாமியாகத்தான் இருக்க வேண்டும் என்கிற பலரது கற்பனையை தோற்கடித்த அரவிந்துக்கு ஆபீஸ் நிர்வாகத்தில் உலக மகா ஞானம்.

    இந்த நிமிஷம் -

    அவனுடைய ஒரு கை ஸ்டியரிங்கைக் கையாண்டு கொண்டிருந்தாலும் இன்னொரு கை பக்கத்திலிருக்கும் வாணியைத் தொட்டுச் சீண்டிக் கொண்டிருந்தது.

    அரவிந்த்தின் தனிப்பட்ட அகராதியைப் பார்க்க நேர்ந்தால் சொர்க்கம் என்ற வார்த்தைக்கு எதிராக வாணி என்று போட்டிருக்கும்.

    ஒரு இன்டர்வியூக்காக அவனுடைய அலுவலகம் வந்த அவளைக் கண்டதும் காதல் பிறந்தது. தனியாகச் சந்தித்து எண்ணத்தை வெளியிட்டான்.

    நான்கு தடவை ரெஸ்டாரென்டில் சந்தித்து காதலை புஷ்டியாக்கிக் கொண்டார்கள். அவ்வப்போது இந்தக் காதல் சரிப்பட்டு வருமா என்று தீவிரமாய் விவாதித்துக் கொண்டார்கள்.

    அதற்கப்புறம் ஆறுமாதங்கள் பயமாய் காதலிப்பதில் செலவழித்தார்கள். இடையில் அவளுடைய அண்ணனிடமும் அரவிந்துடைய அப்பா அம்மாவிடமும் விஷயம் கசிய...

    எதிர்ப்புகள் எதுவுமின்றி ஒரு சுபயோக சுப தினத்தில் கெட்டிமேளம்... கெட்டிமேளம்.

    வாணி சீண்டுகிற அவன் கையைத் தட்டிவிட்டு கொள்ளை அழகோடு சிணுங்கினாள்.

    ச்சீ...கையை எடுங்க.

    கல்யாணமாகி இன்னியோட சரியா அஞ்சு வருஷமாச்சு. இன்னும் வெட்கமா? நீ என் பெண்டாட்டி... உன்னைத் தொட தடை உத்தரவா?

    உங்க பெண்டாட்டிதான்... யார் இல்லைன்னு சொன்னாங்க. அது அதுக்கு நேரம் காலம் பார்க்க வேண்டாமா?

    சிரித்தான் அரவிந்த்.

    எமகண்டம் - ராகுகாலம் எத்தனை மணிக்கு முடியுதுன்னு சொல்லு.

    நான் நேரம் காலம்ன்னு அந்த அர்த்தத்தில் சொல்லலை. ஒரு கையில் ஸ்டியரிங். இன்னொரு கையில் என்கிட்ட சில்மிஷம். இப்படி இந்த ஹைவேஸ்ல போனா எங்கேயாவது போய் மோத வேண்டியது தான். ஒழுங்கா ரோட்டைப் பார்த்துக் காரை ஓட்டுங்க.

    விவேகானந்தர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

    என்ன சொல்லியிருக்கார்?

    ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைச் செய்கிறவன் தியானத்தில் கை தேர்ந்தவன்னு சொல்லி இருக்கார்.

    முறைத்தாள் வாணி.

    ஆசையை அடக்கி வெச்ச தெய்வீக மனுஷர் அவர். உங்களோட ஆசைக்கு சப்போர்ட்டா அவரை ஏங்க இழுக்கிறீங்க?

    இப்போ நீ என்னதான் சொல்றே? உன்னைத் தொட்டு சில்மிஷம் பண்ண பர்மிஷன் க்ரான்ட்டா... இல்லையா?

    அப்ளிகேஷன் நிராகரிக்கப்பட்டது.

    அய்யய்யோ...!

    "ஒழுங்காக் காரை ஓட்டுங்க...!’’

    வாணி ப்ளீஸ்! கொஞ்சம் ஒட்டி உட்காரேன்...

    மாட்டேன்...

    ரொம்பக் குளிருது...!

    ஸ்வெட்டர் எடுத்துத் தரட்டுமா?

    வேண்டாம். நீ தான் எனக்கு ஸ்வெட்டர்

    சரி ஒட்டி உட்கார்றதுக்கு முந்தி உங்ககிட்ட ஒரு இன்டர்வ்யூ.

    இன்டர்வ்யூவா?

    ம்... கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லிட்டே வரணும்...

    சரி...

    நேத்திக்குச் சாயந்திரம் ஆறு மணியிலிருந்து இன்னிக்கு சாயந்தரம் ஆறு மணி வரை... நாம் எங்கே இருந்தோம்?

    என்னாச்சி உனக்கு? மயக்கம் தெளிஞ்சு நான் எங்கிருக்கேன்? தமிழ் சினிமாவில் கேட்பாங்களே... அந்த மாதிரிக் கேக்கிறியே?

    கேட்ட கேள்விக்கு பதில்!

    கடந்த இருபத்தி நாலு மணி நேரமா ‘பீச் வியூ’ ரிசார்ட்டில் ஒரு ஏ கிளாஸ் காட்டேஜில் இருந்தோம்.

    அங்கே என்ன பண்ணிட்ருந்தோம்?

    நம்ம ஐந்தாவது வெடிங் அனிவர்சரியை ரொம்ப விமரிசையாக கொண்டாடிட்டிருந்தோம்.

    எப்படிக் கொண்டாடினோம்?

    அதை எப்படி வாயால சொல்றது?

    சும்மா சொல்லுங்க...

    சாப்பிடற நேரம் தவிர... ஒரு விநாடியைக் கூட வேஸ்ட் பண்ணலை... ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் இறுக்கக் கட்டிகிட்டு ஃபோம் மெத்தையை ஒருவழி பண்ணிட்டோம்.

    இருபத்திநாலு மணி நேரமும் என்னை உரசிகிட்டே இருந்தது போதாதா...? இப்ப காருக்குள்ளே வேற தனியா சீண்டனுமா?

    Enjoying the preview?
    Page 1 of 1