Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vilagum Thiraikal
Vilagum Thiraikal
Vilagum Thiraikal
Ebook83 pages39 minutes

Vilagum Thiraikal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
Vilagum Thiraikal

Read more from Rajeshkumar

Related to Vilagum Thiraikal

Related ebooks

Related categories

Reviews for Vilagum Thiraikal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vilagum Thiraikal - Rajeshkumar

    17

    1

    ரத்தச் சிவப்பான வெல்வெட் திரை மேலே தூக்கப்படுவதற்காக காத்திருந்தது கூட்டம். வெல்வெட் திரையின் மையத்தில் ராஜா சர் தேவநாதன் ஞாபகார்த்த அழகுப் போட்டி என்ற எம்பிராய்டரி செய்யப்பட்ட எழுத்துக்கள். ஸ்பாட் லைட்டுகளின் வெளிச்சத்தில் தங்கமாய் டாலடித்தது. மேடைக்கு முன்புறமிருந்த முதல் வரிசை நாற்காலிகளில் மிஸ் ப்யூட்டியை தேர்ந்தெடுப்பதற்காக வழுக்கைத் தலை ஜட்ஜ்கள் ஏகப்பட்ட சபலங்களோடு உட்கார்ந்திருந்தார்கள்.

    மைக் கரகரத்தது.

    மேடைக்குப் பின்புறமிருந்து யாரோ பேசினார்கள்.

    விழாவுக்கு வருகை தந்திருக்கும் பெருமக்களே! யாவர்க்கும் ராஜா சர். தேவநாதன் அறக்கட்டளை சார்பில் பணிவான வணக்கங்கள். போட்டி துவங்கப்படுவதற்கு முன்பாக இந்த அழகுப் போட்டியைப் பற்றிய சில குறிப்புகளை சொல்ல ஆசைப்படுகிறோம். ராஜா. சர்.தேவநாதன் அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் அவர் தேகாப்பியாசங்களில் நிரம்பவும் அக்கறை காட்டி வந்தார் என்கிற விஷயம் பலருக்குத் தெரியாது. உடம்பைப் பாதுகாக்க வேண்டிய முறைகளைப் பற்றி அவர் ‘மானிட உடம்பு’ என்கிற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார் - மேலும்...

    அந்த மனிதர் பேசப் பேச - அரங்கத்தின் பின் வரிசையில் உட்கார்ந்திருந்த இளைஞர் கூட்டம் ஊளையிட்டார்கள். விசிலடித்தார்கள்.

    அறுக்காதே... அறுக்காதே...

    போட்டியை ஆரம்பி...

    திரையைத் தூக்கு...

    மேடைக்குப் பின்புறம் மைக்கில் பேசிக் கொண்டிருந்தவர், இந்த அமளியை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசினார். மேலும் அவர் ‘உடம்பின் சூட்சமங்கள்’ என்கிற தலைப்பில் ஆயிரத்து தொளாயிரத்து, நாப்பத்திரெண்டாயிரம் வருஷம் ஒரு அப்பியாசம் எழுதி - அப்போது பிரபுவாய் இருந்த கர்னல் லாரன்ஸிடம் சான்றிதழ் வாங்கினார்.

    இளைஞர் கூட்டம் மறுபடியும் ஊளையிட்டு விசிலடித்தது.

    மகாத்மா காந்திக்கு ஜே. போட்டார்கள்.

    ஒரு ஐந்து நிமிஷம் அரங்கம் பூராவும் அமளியாய் இருந்தது.

    அமளி ஓய்ந்ததும் - மைக்கில் குரல் தொடர்ந்தது. "ராஜா. சர்.தேவராஜன் மறைவுக்குப் பின்னால் அவருடைய துணைவியார் ராஜாம்பாள் தன்னுடைய கணவரின் ஞாபகார்த்தமாக இந்த அழகுப் போட்டியை முதன் முறையாக நடத்த உள்ளார்கள். அம்மையார் அவர்கள் இப்போது குத்து விளக்கை ஏற்றி வைத்து போட்டியைத் தொடங்கி வைப்பார்கள்.

    அரங்கம் பூராவும் கைத்தட்டல் கடலின் இரைச்சலாய் எழுந்தது.

    அதைத் தொடர்ந்து

    வெல்வெட் திரை அங்குலம் அங்குலமாய் மேலே உயர்ந்தது.

    ராஜம்பாள் வெண்ணிற பட்டுப் புடவையில் - மேடையின் ஓரமாய் சங்கோஜமாய் நின்றிருந்தாள்.

    எழுபது வயதான ராஜாம்பாள் அசாத்திய கறுப்பு நிறம். கோனிக்கல் முகம். அணிந்திருந்த கண்ணாடி ஸ்பாட் லைட் வெளிச்சத்தில் கிளார் அடித்தது. தலை முழுசுமாய் நரைத்து போய் உடம்பு தளர்ந்திருந்தாள். கழுத்தில் சமஸ்தான காலத்து நகைச்சரமொன்று பகட்டாய் வெட்டிக் கொண்டிருந்தது. மேடையின் ஓரத்தில் பஞ்ச முகத்திரியோடு குத்து விளக்கொன்று எண்ணெய்யோடு தளும்பிக் கொண்டிருக்க - யாரோ ஒருவர் எரிகிற மெழுகுவர்த்தியை ராஜாம்பாளிடம் நீட்ட - ராஜாம்பாள் தளர்நடை போட்டு - குத்து விளக்கை நெருங்கி - திரியைப் பற்ற வைத்தாள்.

    மறுபடியும் கரகோஷம் பிய்த்துக்கொண்டு போயிற்று.

    ராஜாம்பாள் மைக் அருகே வந்தாள்.

    வயோதிக நடுக்கம் குரலில் தெரிய பேசினாள்.

    பெரியோர்களுக்கு வணக்கம். இத்தகைய போட்டிகள் நடப்பதின் மூலம் உடல் நலத்தைப் பேண வேண்டும் என்ற அக்கறை ஜனங்களுக்கு ஏற்படும் என்று என் கணவர் அடிக்கடி சொல்வார். நீளமான வாக்கியத்தை கஷ்டப்பட்டுப் பேசிவிட்டு - மூச்சு காற்றுக்காக சில வினாடிகள் திணறினாள். உதட்டை நீவி ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

    யாரோ டம்ளர் தண்ணீரோடு ஓடோடி வந்தார்கள்.

    வாங்கிக் குடித்துவிட்டு - மற்றொரு நீளமான வாக்கியத்தைப் பேசப் பிரியப்படாமல் ஆகவே போட்டியை நான் ஆரம்பித்து வைக்கிறேன் என்றாள்.

    கூட்டம் சந்தோஷமாய் கைகளைத் தட்ட - வெல்வெட் திரை மறுபடியும் அங்குலம் அங்குலமாய் கீழே இறங்கியது.

    கக்கத்தில் பையை இடுக்கிக் கொண்ட கட்டையான ஒருவர் மைக் அருகே வந்தார். "இந்த அழகுப் போட்டியில் கலந்து கொண்டு ‘மிஸ் ப்யூட்டி’ பட்டம் பெறுவதற்காக - தமிழ்நாடு முழுவதிலுமிருந்து முப்பத்தேழு பேர் வந்திருக்கிறார்கள். இந்த ப்யூட்டி கான்டெஸ்டுக்கு நடுவர்களாக வந்திருப்பவர்கள் மூன்று வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள். மிஸ் ப்யூட்டியை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அவர்களிடம் விடப்பட்டிருக்கிறது. போட்டியில் முதல்

    Enjoying the preview?
    Page 1 of 1