Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enekkenru Nee
Enekkenru Nee
Enekkenru Nee
Ebook90 pages34 minutes

Enekkenru Nee

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அனந்தசாமி-ஜானகி ஆத்மார்த்தமாக வாழ்ந்த தம்பதிகள். வாழ்வின் அர்த்தமாக இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை. குழந்தைகளின் திருமணத்திற்கு பின் இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? எப்படி மாறப்போகிறது? வாங்க வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580123904059
Enekkenru Nee

Read more from Indhumathi

Related to Enekkenru Nee

Related ebooks

Reviews for Enekkenru Nee

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enekkenru Nee - Indhumathi

    http://www.pustaka.co.in

    எனக்கென்று நீ

    Enekkenru Nee

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    http: //www. pustaka. co. in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1

    எப்போதோ விழிப்பு வந்துவிட்டது அனந்தசாமிக்கு. விழித்துக் கொண்டபோது நேரம் என்ன இருக்கும் என்று கணிக்க முடியவில்லை அவரால். அந்த இடத்தில் ஜன்னல் ஏதாவது இருந்தால் வானத்தின் நிறத்தையும், நட்சத்திரங்களின் கோணங்களையும் வைத்து இந்த நேரம் இருக்கலாம் என்று கண்டுபிடித்து விடுவார்.

    அதற்கும் வழி இல்லாமல் ஜன்னலோ, வேறு திறப்புகளோ அற்ற மாடிப்படி அடியின் சின்ன இடம் அது. முக்கியமாக மெயின் ஸ்விட்ச் போர்டிற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடம். படிக்கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டுவிட்டால் காற்றோ வெளிச்சமோ புக முடியாத இடம்.

    அந்தப் படியின் அடியில்தான் கயிற்றுக் கட்டில் போடப்பட்டு, அனந்தசாமிக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வீட்டில் அவர் படுத்துக் கொள்கிற மாதிரி வேறு இடம் இல்லை. இரண்டு படுக்கையறைகளும் ஒரு வரவேற்பு அறையும், சாப்பாட்டு, சமையல் அறைகளும், சின்னதாகச் சாமான்களும் உள்ளும் கொண்ட முக்கால் கிரவுண்டில் கட்டப்பட்ட வீடு.

    அதைக் கட்டி முடிப்பதற்குள்ளாகவே சந்திரசேகர் திணறிப் போய்விட்டான். ஆபீஸிலிருந்து வாங்கின கடன் போதாதென்று அனந்தசாமி ரிடையர் ஆனவுடன் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட பிராவிடண்ட் ஃபண்ட், கிராச்சுவிடி பணத்திற்கு வந்து நின்றான். அனந்தசாமி அதை பாங்க்கில் போட்டிருந்தார். இந்த வயதான காலத்தில் தனக்கும், மனைவி ஜானகிக்கும் அந்தப் பணம்தான் பெரிய ஊன்றுகோல் என்று நினைத்தார். அதிலிருந்து கிடைக்கிற வட்டிப் பணத்தில் சந்திரசேகரனின் மூன்று குழந்தைகள் ஏதாவது கேட்டால் வாங்கித் தருவார். அவ்வப்போது பணம் போதவில்லை என்று முணுமுணுக்கிற நாட்டுப் பெண் சுதாவின் வாயை அடைப்பார். தனக்கும் ஜானகிக்கும் இரவு சாப்பிடுவதற்கென்று அரை லிட்டர் பசும் பால் தனியாக வாங்கிக் கொள்வார். அது தவிர டாக்டர், மருந்துகள், வேஷ்டி, மேல் துண்டு, ஜானகிக்கு வருடத்திற்கு, தினசரி உபயோகத்திற்காக மூன்று நூல் புடவைகள்.

    பாங்க்கில் போட்டிருக்கிற அந்த நாற்பதாயிரம் ரூபாய்க்குக் கிடைக்கிற வட்டிப் பணத்தில்தான் இத்தனை செலவுகளும். பிராவிடண்ட் ஃபண்டிலிருந்து ஒரே பெண் காயத்திரியின் கல்யாணத்திற்கும், பெரிய பையன் சிவசங்கரனை டாக்டருக்கும், சின்னவன் சந்திரசேகரனை இன்ஜினியரிங்குக்கும் படிக்க வைக்க கடன் வாங்காமல் இருந்திருந்தால் தற்போது கூடுதல் பணம் கிடைத்திருக்கும். வட்டியும் அதிகம் வந்திருக்கும். இன்னமும் தாராளமாகச் செலவு பண்ணுகிற வசதி இருந்திருக்கும். மூத்த பேரன் அரவிந்த் ஒரு சைக்கிள் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

    தாத்தா, எதிர்வீட்டு ஷேக் ஓட்டற மாதிரி எனக்கும் ஒரு சைக்கிள் வாங்கித் தா தாத்தா...

    அனந்தசாமி சிறுவனின் மனதைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காக, அவனின் அந்தநேரத் திருப்திக்காகத் தலையசைத்தார். ஆனால், அவன் அவரை அவ்வளவு சுலபமாக விடுவதாக இல்லை.

    எப்போ வாங்கித் தரே...?

    சீக்கிரமே வாங்கித் தரேன்டா கண்ணா...

    சீக்கிரமென்றால் எப்போ....?

    பணம் வரட்டும். வாங்கித் தரேன்...

    பணம் எப்போ வரும்....?

    சீக்கிரமே வரும்...

    அவ்வளவுதான். சிறுவன் அந்தச் சீக்கிரத்தில் நம்பிக்கையிழந்து கண்ணில் நீர் துருத்திக்கொண்டு நிற்க,

    போ! தாத்தா! நீ பொய் சொல்றே... முன்னேகூட அப்படித்தான். பணம் வரட்டும், மூணு சக்கர சைக்கிள் வாங்கித் தரேன்னு ஏமாத்திட்டே... கடைசில அந்தத் தாத்தாதானே திருநெல்வேலியிலிருந்து வந்து வாங்கித் தந்தார். (அவன் சொன்னது அவரின் சம்பந்தி வெங்கட்ராமனை. அதாவது சந்திரசேகரனின் மாமனாரை) இப்போ நீதான் எனக்கு இந்த சைக்கிளை வாங்கித் தரணும்... மூணு சக்கர சைக்கிளை என்னால் விட முடியலை. அதை ராஜீவும், அனுவும் விடறா... எனக்கு இப்போ இரண்டு சக்கர சைக்கிள் வேணும்...

    அவன் தன் அழுகையை மெலிதாய் ஆரம்பித்து, பின்னர் பலப்படுத்தினபோது, உள்ளேயிருந்து வந்த சுதா அவன் முதுகில் ஒன்று வைத்தாள்.

    ஏன்டா, இப்போ சைக்கிள் இல்லேன்னால் உயிரா போயிடும். நான்தான் அந்தத் தாத்தா வரட்டும், வாங்கித்தரச் சொல்றேன்னு சொன்னேன் இல்லை... அதுக்குள்ள கண்டவாளையும் போய்க் கேட்டுண்டு...

    அனந்தசாமிக்குச் சுருக்கென்றது. தன்னைக் ‘கண்டவன்’ என்றது மனதில் தைத்து உறுத்தத் தொடங்கிற்று. அவர் பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு எதற்கும் மறுப்புச் சொல்வதாக சுதாவிற்கு ஒரு நினைப்பு. அதை அடிக்கடி ஜானகியிடம் சொல்லிக் காட்டுவாள்.

    "ஏம்மா... கூலி தள்ளி பழைய சங்கிலி ஒன்று மூன்று பவுனில் விலைக்கு வர்றது.

    Enjoying the preview?
    Page 1 of 1