Niram Maarum Nilaakkal
By Rajeshkumar
5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsTheepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsAthiradi Aattam! Rating: 4 out of 5 stars4/5
Related to Niram Maarum Nilaakkal
Related ebooks
Unakke Uyiraanen Rating: 0 out of 5 stars0 ratingsSathyavin Sapatham! Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaal Suvadu Thodargirathu...! Rating: 0 out of 5 stars0 ratingsWelldone Vivek Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Irappathu Sugam... Rating: 5 out of 5 stars5/5Oru Kulirkaala Kutram Rating: 0 out of 5 stars0 ratingsThirakkaatha Kathavugal! Rating: 5 out of 5 stars5/5Maaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal Rating: 2 out of 5 stars2/5Naalai Yaaro? Rating: 5 out of 5 stars5/5Kurithuvaithu Kol! Rating: 5 out of 5 stars5/5Enakku Mattume Therintha Hema Rating: 0 out of 5 stars0 ratingsHydrogen Pookkal Rating: 5 out of 5 stars5/5Suttu Vida Suttu Vida Thodarum Rating: 4 out of 5 stars4/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Ulagai Vilai Kel Rating: 5 out of 5 stars5/5Karuppu Thamarai Rating: 4 out of 5 stars4/5Sangamithirai Rating: 0 out of 5 stars0 ratingsSaiva Kokkugal Rating: 5 out of 5 stars5/5Nizhalin Niram Sivappu Rating: 5 out of 5 stars5/5Iruttile Rendu Per Rating: 4 out of 5 stars4/5Mudhal Nimisham Rating: 2 out of 5 stars2/5Meendum… Meendum… Rating: 5 out of 5 stars5/5முத்திரை சதி Rating: 5 out of 5 stars5/5Andha October 14 Rating: 5 out of 5 stars5/5Poi, Poiai Thavira Verontrum Illai Rating: 0 out of 5 stars0 ratingsSamaathi Aagivida Sammathama Rating: 5 out of 5 stars5/5Thapu Thapai Oru Kolai Rating: 5 out of 5 stars5/5Jannal Nila and Nee Indri Naan Yethu Rating: 0 out of 5 stars0 ratingsKannellam Unnodudhaan Rating: 2 out of 5 stars2/5
Related categories
Reviews for Niram Maarum Nilaakkal
1 rating0 reviews
Book preview
Niram Maarum Nilaakkal - Rajeshkumar
எடுக்கப்படும்.
1
மும்பை ரெயில் நிலையத்தில், புவனா இறங்கிய போது - விடியற்காலை ஐந்து மணி. ரெயில் நிலையம், வெளிச்சமாய் - சுறுசுறுப்பாய் இருந்தது. அந்நேரத்துக்கு காற்று புழுக்கமாய் தெரிந்தது.
சுவர்களில் ராட்சத இந்திப்பட பேனர்கள். கதாநாயகர்கள் எந்திரத் துப்பாக்கிகளோடு பரட்டைத் தலையில் - பற்களைக் கடிக்க, கதாநாயகிகள் வயிற்றைக் காட்டிக்கொண்டு - மழையில் நனைந்தார்கள். புதுமையான விளம்பரங்கள் கண்ணிலடிக்க - நம் புவனா நடந்தாள்.
புவனா மாநிறம்தான். ஆனால், அழகாக இருந்தாள். சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணின் உடம்பு எங்கெங்கு வளைந்து, சதைப்பிடித்து இருக்கவேண்டுமோ... அங்கெல்லாம் அவளுடைய உடம்பு கீழ்ப்படிந்திருந்தது.
சல்வார் கமீசுக்குள் சிக்கியிருந்த புவனாவுக்கு வயது இருபத்தி மூன்று இருக்கலாம். ஆனால், கடந்த மூன்று வருடமாய் இருபத்தியோராவது பிறந்த நாளையே கொண்டாடி வருகிறாள்.
‘நான் போட்ட கடிதம் மைத்ரேயிக்குக் கிடைத்திருக்குமா? கிடைத்திருந்தால் நிச்சயமாய் காரை எடுத்துக் கொண்டு ஸ்டேசனுக்கு வந்திருப்பாள். இல்லாவிட்டால், கார் பிடித்து சயானில் இருக்கும் அவளுடைய பங்களாவுக்கு போக வேண்டியதுதான்!’
யோசித்துக்கொண்டே நடந்தாள், புவனா. உருளும் சூட்கேஸ், அவளுக்குப் பின்னால் ஒரு நாய்க்குட்டி மாதிரி தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
புவனாவுக்கு மும்பை ஒன்றும் புதிது இல்லை. கல்லூரியில் படிக்கும்போது, ஒரு தடவை சுற்றுலா வந்திருக்கிறாள். பத்து நாள் தங்கி, அலுக்க அலுக்க மும்பையைச் சுற்றிப் பார்த்திருக்கிறாள்.
ரெயில் நிலையத்தைவிட்டு வெளியே வரும் பகுதி நெருங்கிக் கொண்டிருந்தது.
‘எங்கே மைத்ரேயியைக் காணோம்?’
‘போட்ட கடிதம் கிடைக்கவில்லையோ? சேச்சே.. சிக்கனம் பார்க்காமல் ஒரு எஸ்.டி.டி. போட்டுப் பேசியிருக்க வேண்டும்.’
வாசலில் நின்றிருந்த வழுக்கைத்தலை பரிசோதகரிடம் டிக்கெட்டை கொடுத்துவிட்டு வெளியே வந்தாள், புவனா. புறநகர் ரெயில்களைப் பிடிக்கிற கூட்டம் ஆண் - பெண் வித்தியாசமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.
கும்பலில் நுழைந்து - சூட்கேசை சிரமமாய் இழுத்துக் கொண்டு ஊர்ந்தபோது - உயர்த்திப்பிடிக்கப்பட்ட அந்த அட்டை புவனாவின் பார்வைக்குத் தெரிந்தது.
புவனா – சென்னை
அட்டையை நோக்கி வேகவேகமாய்ப் போனாள், புவனா. இளைஞன் ஒருவன் அட்டையை ஏந்தியபடி, கும்பலில் பார்வையைப் போட்டபடி நின்றிருந்தான்.
அவனுக்கு முன்பாய் போய் நின்றாள், புவனா.
நான் புவனா. சென்னையிலிருந்து வருகிறேன்.
அந்த இளைஞன், அட்டையைத் தாழ்த்திக்கொண்டு புன்னகைத்தான். மிஸ் மைத்ரேயியோட தோழி நீங்கதானே?
நானேதான்!
வாங்க… காருக்கு போலாம்.
நகர முயன்றவனை, அலோ...
என்று சொல்லி நிறுத்தினாள், புவனா.
நீங்க யாருன்னு?
சாரி… நான் பாலமுரளி. மிஸ் மைத்ரேயியோட அப்பா உயிரோட இருந்த காலத்திலிருந்தே அவங்க பங்களாவுக்கு மானேஜரா இருக்கேன். ஊர், கும்பகோணம் பக்கம் நீடாமங்கலம். வாங்க, பேசிக்கிட்டே காருக்கு போலாம்.
இருவரும் நடந்தார்கள்.
ஸ்டேசனுக்கு மைத்ரேயி வருவாள்னு நினைத்தேன்!
அவங்களுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லை.
ஏன் உடம்புக்கு என்ன?
காய்ச்சல்தான். ரெண்டு நாளைக்கு ஓய்வு எடுக்கணும்னு டாக்டர் சொல்லிட்டார். அதையும் மீறி அவங்க வர இருந்தாங்க... நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டு, காரை எடுத்துட்டு வந்தேன்!
வாகன நிறுத்துமிடத்தில் பல ரக கார்கள் சோடியம் வெளிச்சத்தில் குளித்து மின்னிக்கொண்டிருக்க, வெள்ளை நிற காரை நெருங்கினான், பாலமுரளி. சூட்கேசை வாங்கி டிக்கியில் வைத்து விட்டு, பின்பக்கக் கதவைத் திறந்துவிட்டான்.
இதுக்கு முன்னாடி இங்கே எப்ப வந்தீங்க?
மூணு வருடத்துக்கு முந்தி.
மிஸ் மைத்ரேயியும், நீங்களும் கல்லூரித் தோழிகள் இல்லையா?
ஆமா.
அவங்களை கடைசியா எப்பப் பார்த்தீங்க?
ரெண்டு வருடத்துக்கு முந்தி... சிங்கப்பூர் போறதுக்காக அவள் சென்னைக்கு வந்தப்ப பார்த்தது. அதுக்குப் பிறகு இப்பத்தான் பார்க்கப் போறேன்!
நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒரு கேள்வி கேட்கலாமா?
ம்.. கேளுங்க.
எதுக்காக இங்கே வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?
தெரிஞ்சுக்கலாமே... யுரேகா கம்பெனியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?
பிரமாதமா கேள்விப்பட்டிருக்கேன். வொர்லியில் இருக்கே.... அதுதானே?
அதேதான். அங்கே எனக்கு வரவேற்பாளர் வேலைக்கான
இண்டர்வியூ வந்திருக்கு. அதுக்காகத்தான் வந்திருக்கேன்!
அப்படியா?
திரும்பிப் பார்த்து புருவங்களை உயர்த்தினான், பாலமுரளி. பிறகு புன்னகையோடு சொன்னான்: உங்களுக்கு அந்த வேலை கிடைச்சிடும்.
எப்படிச் சொல்றீங்க?
அழகா இருக்கீங்களே?
புவனா புன்னகைத்தாள் - உங்க வாய் முகூர்த்தப்படி எனக்கு வேலை கிடைச்சா என்னோட முதல் நன்றி உங்களுக்குத்தான்.
பரிந்துரை ஏதாவது பிடிச்சிருக்கீங்களா?
இல்லை.
அங்கே எம்.டி.யைப் பிடிக்க முயற்சி பண்ணலாமா?
வேண்டாம். என்னோட தகுதிக்கு வேலை கிடைச்சா கிடைக்கட்டும். இல்லேன்னா வேண்டாம்!
உங்க படிப்பு?
பட்டப்படிப்பு தான்.
கார், சயான் பகுதிக்குள் நுழைந்தது. வைகறை இருட்டில் பங்களாக்கள் மவுனமாய்க் கடந்தன. சாலையோர நடைமேடையில் சிலர் நடை போய்க்கொண்டிருந்தார்கள்.
பாலமுரளி ஒரு வளைவில் காரைத் திருப்பிக்கொண்டே சொன்னான்: மும்பை, முன்னே மாதிரியில்லை. இப்போ வன்முறை அதிகம். ஒரு பெண் தனியாகத் தங்கி வேலை பார்க்கிறது கஷ்டம்.. நீங்க ஏன் சென்னையிலேயே ஒரு வேலையைத் தேடிக்கக் கூடாது?
புவனா சிரித்தாள்.
மும்பையில் நான் தனியா தங்கி வேலை பார்க்கப்போறதா உங்ககிட்டே யார் சொன்னது?
பின்னே?
எனக்கு இங்கே வேலை கிடைச்சா, சென்னையில் வேலை பார்க்கிற என் கணவர் மாற்றல் வாங்கிட்டு ஒரு வாரத்துல இங்கே வந்துடுவார்!
கார் திடுமென்று பிரேக்கிட்டு நின்றது. பாலமுரளி, நெற்றி சுருங்கக் கேட்டான்: நீங்க திருமணம் ஆனவரா?
ஆமா.
நீங்க சொல்லவே இல்லையே?
புவனா புன்னகைத்தாள். நீங்க கேட்கலை. நான் சொல்லலை.
உங்க கணவர் என்ன வேலையில் இருக்கார்?
பாங்கியில் வேலையில் இருக்கார்!
பேரு?
கிருஷ்ண குமார்
வேறு தகவல்?
கல்யாணமாகி ஆறு மாதம்தான் ஆகுது.
ஆச்சரியமா இருக்கு!
எதைச் சொல்றீங்க?
இந்த மோசமான மும்பைக்கு, அழகான ஓர் இளம் மனைவியை - தன்னந்தனியாக அனுப்பி வைச்சிருக்கிற உங்க கணவரோட தைரியத்தைச் சொல்றேன்!
அவரும் என்கூட வரத்தான் இருந்தார். கடைசி நேரத்துல அவரால் வரமுடியலை. சரி, காரைக் கிளப்பலாமே?
பாலமுரளி காரை நகர்த்தினான்.
உங்களுக்கு இங்கே வேலை கிடைச்சா அவருக்கு உடனடியாக மாற்றல் கிடைக்குமா?
பத்தே நாளில் அவர் வாங்கிடுவார்!
எப்படி?
அவருக்கு இது ‘டிரான்ஸ்பர்’ நேரம். எந்த ஊருக்கு போக பிரியப்படுறீங்கன்னு கேட்டிருக்காங்க. அதனாலே எனக்கு மும்பையில வேலை கிடைச்சா அவரும் உடனே மாற்றல் வாங்கிடுவார்!
நல்ல முன்யோசனையுடன் தான் வந்திருக்கீங்க.
ஆமா.
உங்களுக்கு கல்யாணமான செய்திதான் எனக்குப் பெரிய அதிர்ச்சி. அந்த அதிர்ச்சி, எனக்கு இன்னிக்கு பூராவும் இருக்கும்!
ஏன் அப்படி?
உண்மையைச் சொல்லட்டுங்களா?
உம்...
உங்களைக் காதலிக்கலாமான்னு யோசனை பண்ணிட்டிருந்தேன்!
நான் தப்பிச்சேன்
புவனா சிரித்தாள்.
கார் வளைவில் திரும்பி - எதிர்ப்பட்ட பங்களாவுக்குள் நுழைந்து - அரை இருட்டான ‘போர்டிகோ’வில் நின்று - இயக்கத்தை நிறுத்திக்கொண்டது.
புவனா இறங்கினாள்.
பாலமுரளி அவளை வழிநடத்தி உள்ளே கூட்டிப்போய், மாடிப் படிகளைக் காட்டினான். மேலே போங்க.. மிஸ் மைத்ரேயி உங்களுக்காகக் காத்திட்டிருக்காங்க.
புவனா படிகளில் ஏறினாள். பங்களா முழுக்க அசாத்திய நிசப்தம்.
மாடி வராந்தாவுக்கு வந்தாள், புவனா. பக்கவாட்டு தோட்டத்து மரங்களில் பறவை வர்க்கம் கூச்சல் போட்டுக் கொண்டிருக்க - புவனா மெதுவாய் நடந்து - சாத்தியிருந்த அந்த அறைக் கதவுக்கு முன்பாய் வந்து நின்றாள்.
கதவை மெல்லத் தள்ளினாள்.
அறை, இரவு விளக்கின் வெளிச்சத்தில் இருந்தது. அந்த மெலிதான வெளிச்சத்திலும், கட்டில் காலியாய் கிடப்பது தெரிந்தது.
‘மைத்ரேயி, குளியலறைக்குப் போயிருப்பாளோ?’
யோசனையாய் உள்ளே நுழைந்து, பார்வையைத் திருப்பியவள் - திடுக்கிட்டாள்.
இதயத்துக்குள் ஓர் இரைச்சல் உற்பத்தியாயிற்று.
2
புவனா இமை கொட்டாமல் விரித்த கண்களோடு பார்த்துக்கொண்டிருக்க மைத்ரேயி, சக்கர நாற்காலியை உருட்டி கொண்டு பக்கத்தில் வந்தாள். பலவீனமான புன்னகையோடு, வா புவனா
என்றாள்.
புவனா பதற்றமாய் அவளை நெருங்கி தோள்களைப் பற்றினாள். குரல் நடுங்க கேட்டாள் - என்னடி இது கோலம்?
ரெயில் பயணமெல்லாம் எப்படி இருந்தது?
மைத்ரேயி! நான் கேட்டதுக்கு பதில் சொல்லு? எதுக்காக இந்த சக்கர நாற்காலி வாசம்? உன் காலுக்கு என்னாச்சு?
சொல்றேன். மொதல்ல அப்படி உட்காரு.
கட்டில் மூலையில் அவளை உட்கார்த்தி வைத்தாள், மைத்ரேயி.