Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jannal Nila and Nee Indri Naan Yethu
Jannal Nila and Nee Indri Naan Yethu
Jannal Nila and Nee Indri Naan Yethu
Ebook327 pages1 hour

Jannal Nila and Nee Indri Naan Yethu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Jannal Nila and Nee Indri Naan Yethu

Read more from Rajeshkumar

Related to Jannal Nila and Nee Indri Naan Yethu

Related ebooks

Related categories

Reviews for Jannal Nila and Nee Indri Naan Yethu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jannal Nila and Nee Indri Naan Yethu - Rajeshkumar

    19

    1

    திரைப்படங்களின் தாயகமான ஹாலிவுட்டில் மௌன படங்கள் தயாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிலும் படங்கள் தயாரிக்கப்பட்டன. இந்தியாவில், திரைப்படத் தயாரிப்பில் சென்னை முதலிடம் வகிக்கிறது. இங்கு தமிழ்ப்படங்கள் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிப்படங்களும் தயாராகின்றன. ‘இந்தியாவின் ஹாலிவுட்’ என்று சொல்லத்தக்க வகையில் சென்னை கோடம்பாக்கத்தில் ஏராளமான ஸ்டூடியோக்கள் நிர்மாணிக்கப்பட்டன. படத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பல ஸ்டூடியோக்கள் மூடப்பட்டு விட்டன என்றாலும், கோடம்பாக்கம் அதன் பழம் பெருமையை இழந்து விடவில்லை.

    ஃபைலில் கோர்த்திருந்த இன்வாய்ஸ் பில்களைப் புரட்டிப் புரட்டி தடிமனான லெட்ஜரில் போஸ்ட்டிங் போட்டுக் கொண்டிருந்தாள் ஹரிணி.

    உங்களுக்கு போன் வந்திருக்குங்க.

    அட்டெண்டர் வந்து சொன்னதும் - கலைந்து நிமிர்ந்தாள் அவள்.

    யாரு பொன்னுச்சாமி?

    தெரியலைங்க.

    யார் போன் எடுத்தது?

    மேனேஜர்தான் எடுத்தார்.

    நாற்காலியைப் பின்னுக்கு நகர்த்தி எழுந்தாள் ஹரிணி.

    மொடமொடப்பான காட்டன் புடவையில் கச்சிதமாய்ச் செதுக்கிய ஒரு சிலையைப்போல இருந்தாள்.

    மேஜைகளைக் கடந்து மேனேஜரின் கேபினைத் தொட்டாள்.

    போன் எனக்கா ஸார்?

    காதில் இயர் போன் மாட்டியிருந்த வழுக்கைத் தலை மேனேஜர் நிமிர்ந்தார்.

    கவிழ்த்து வைத்த ரிசீவரைக் காட்டித் தலையை அசைத்தார்.

    ஹரிணி சத்தமாய்க் கேட்டாள்.

    போன் வீட்டிலிருந்தா... இல்லை... வேற யாராச்சுமா?

    அவர் படித்துக் கொண்டிருந்த அலுவலகக் கடிதத்தைப் பென்சிலால் மார்க் பண்ணிக் கொண்டே சொன்னார்.

    எப்பவும் உன்னைக் கேட்டு போன் பண்ணுவானே விசுவோ... வாசுவோ...

    ‘ஓ... வாசன் பேசினாரா?"

    விழிகள் சந்தோஷத்தில் விரிய ஆர்வத்தோடு ரிசீவரை எடுத்தாள் அவள்.

    ஹலோ...

    ஹரிணி... நான்தான்.

    மறுமுனையில் வாசனின் குரல் கேட்டதும் - மேனேஜர் காதில் விழாத வகையில் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள்.

    என்ன... நாலு நாளா உங்ககிட்டே இருந்து போனே வரலை?

    அவசரமா வெளியூர் போக வேண்டியதாயிடுச்சு.

    அஃபிஷியலா?

    ஆமா...

    ஒரு போன் அடிச்சு சொல்லிட்டுப் போயிருக்கலாமே. நான் இங்கே தவிச்சுப் போயிட்டேன்.

    திடீர்ன்னு கிளம்ப வேண்டியிருந்தது. ஸாரிடா...

    இருங்க உங்களை நேர்ல பார்க்கிறப்போ வெச்சிக்கறேன்.

    எப்போ பார்க்கலாம்? கோபத்தில் சிவந்த உன்னோட அழகான முகத்தைப் பார்க்க ஆவலா இருக்கேன்.

    என்கிட்டே வாங்கிக் கட்டிக்க தாங்களே ஒரு அப்பாயின்மென்ட் ஃபிக்ஸ் பண்ணுங்க.

    இன்னிக்கு சாயந்தரம் அஞ்சு மணிக்கு ஆபீஸ் முடிஞ்சதும் நேரா ஹோட்டல் அஞ்சலிக்கு வந்துடு.

    ம்கூம்... இன்னிக்கு வர முடியாது.

    ஏன்?

    வேற எங்கேஜ்மென்ட் இருக்கு.

    என் காதில் இருந்து புகை வர்ற சத்தம் உனக்குக் கேட்குதா...?

    வாசன்?

    பல்லை நான் நறநறன்னு கடிக்கிற சத்தமாச்சும் கேக்குதா?

    கோபமா?

    பின்னே? நாலு நாளா வெளியூர் சுத்தியடிச்சுட்டு இன்னிக்குத்தான் வந்திருக்கேன். என்னைவிட முக்கியமான எங்கேஜ்மென்ட் என்ன இருக்கு?

    அந்த எங்கேஜ்மென்ட் இன்னிக்குக் காலைலதான் ஃபிக்ஸ் ஆச்சு. சாயந்தரம் பர்மிஷன் போட்டுட்டு நாலு மணிக்கே வீட்டுக்கு வரச்சொல்லி உத்தரவு.

    யாரோட உத்தரவு.

    அப்பாவோட உத்தரவு.

    கொஞ்சம் விபரமா சொல்லு ஹரிணி.

    என்னை இன்னிக்கு பொண்ணு பார்க்க வர்றாங்க.

    மறுமுனையில் வாசனிடம் ஒரு அதிர்ச்சியான மவுனம்.

    என்ன வாசன் சைலண்ட் ஆயிட்டிங்க?

    ஹரிணி...

    ஆபீஸ் வேலையை நாலு மணிக்குள்ளே முடிச்சிட்டு கிளம்பணும். ரிசீவரை வெச்சிடட்டுமா?

    ஹரிணி?

    ரிசீவரை வெக்கறேன்.

    அவன் பதிலை எதிர்பார்க்காமல் ரிசீவரை சாத்தினாள்.

    மேனேஜரைப் பார்த்து வார்த்தையை விடுவித்தாள்.

    தேங்க்யூ ஸார்.

    அவர் இயர் போனை சரியாய் மாட்டிக் கொண்டே என்னம்மா சொன்னே? என்றார்.

    அவரோட பேசிட்டேன் ஸார். உங்களுக்கு தேங்க்ஸ் சொன்னேன்.

    இன்னிக்கு பர்மிஷன் கேட்டிருந்தே இல்லே?

    ஆமா ஸார். நான் நாலு மணிக்குப் போகணும்.

    இன்வாய்ஸ் போஸ்ட்டிங் போட்டுட்டியா?

    மே மாசம் வரைக்கும் போட்டுட்டேன். ஜூன் மட்டும் பாக்கி இருக்கு ஸார்.

    அதை போட்டு முடிச்சாத்தான் உனக்கு பர்மிஷன் கிடைக்கும்?

    முடிச்சிடுவேன் ஸார்.

    அவளுடைய இருக்கைக்குத் திரும்பினாள்.

    கடிகாரத்தின் பெரிய முள் முப்பது கோடுகளைக் கடப்பதற்குள் வேலையை முடித்து வைத்தாள்.

    வாஷ்பேசினில் முகம் கழுவி ரீ ஃப்ரெஷ் ஆகிக் கொண்டு மேனேஜரிடம் சொல்லிவிட்டு தோல் பையோடு அலுவலகத்தினின்றும் வெளியே வந்தாள்.

    பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்கிறபோது -

    ஜர்ர்ர்ர்ர்...

    விருட்டென அவளை உரசிக் கொண்டு அந்த பைக் வந்து நின்றது. திரும்பிப் பார்க்க -

    வாசன் கால்களை ஊன்றிக் கொண்டு பைக்கில் ஆரோகணித்திருந்தான்.

    ஹரிணி அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

    அஞ்சு மணிக்கு என்கிட்டே அப்பாயின்மென்ட் கேட்டீங்க. ஆனா நாலு மணிக்கே ஆபீஸ் வாசலுக்கு வந்துட்டீங்களே வாசன்?

    அவ்வளவு பெரிய விஷயத்தை என் காதில் போட்டுட்டு போனை வெச்சிட்டே. என்னால நிம்மதியா எப்படி உக்காந்திருக்க முடியும்?

    டென்ஷன் ஆயிட்டிங்களா?

    எப்படி சிரிச்சிகிட்டிருக்கே ஹரிணி?

    ஏன்?

    எனக்கு அடி மனசிலிருந்து மேல் மனசு வரைக்கும் அமிலத்தைக் கொட்டின மாதிரி அரிச்சிட்டிருக்கு. பொண்ணு பார்க்கும் வைபவத்துக்கு ஒத்துக்கிட்டியா?

    ஒத்துக்காம என்ன பண்ண முடியும்? அப்பா திடீர்னு இன்னிக்கு காலையிலதான் சொன்னார். அவர்கிட்டே அந்த சமயத்தில் நம்ம காதல் விவகாரத்தை ஓப்பன் பண்ண முடியுமா?

    அப்படின்னா சாயந்தரம் உன்னைப் பார்க்க வர்றவங்களுக்கு காட்சிப் பொருளா நிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டியா?

    வேற வழி? நான் எத்தனை நாளா உங்ககிட்டே சொல்றேன். ‘அப்பாவை சந்திச்சுப் பேசுங்க. நம்ம காதல் விவகாரத்தை அவர்கிட்டே சீக்கிரமே உடைக்கணும். தள்ளிப் போட்டுட்டே போறது நல்லதில்லை’ன்னு பலமுறை உங்ககிட்டே சொல்லிட்டேன்.

    தப்புத்தான். வர்றவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போறே?

    பயப்படாதீங்க. கல்யாணம்ங்கறது எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிக்கிற சமாச்சாரம் இல்லை. இன்னிக்கு வர்றவங்களுக்கு என்னையும் எங்க குடும்பத்தையும் பிடிக்கணும். அதுக்கப்புறம் நகை நட்டுன்னு சில சுத்து பேச்சுவார்த்தைகள் இருக்கும். கடைசியாகத்தான் கல்யாணம். அதுக்கு முன்னால என்னோட விருப்பத்தைக் கேக்காம அப்பா எந்த முடிவும் செய்யமாட்டார்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

    அப்படின்னா நம்ம காதல் விவகாரத்தை இன்னிக்குக் காட்டிக்கப் போறதில்லையா?

    ம்கூம்... நீங்க வந்து அப்பாவைப் பார்க்காத வரைக்கும் நான் இந்த விஷயத்தை ஓப்பன் பண்ணப் போறதில்லை.

    நான் இந்த வாரத்தில் ஒருநாள் அவர்கிட்டே பேசறேன்.

    அதைச் செய்யுங்க. அதுதான் நம்ம காதலுக்கு நல்லது. சிலரைப்போல பெத்தவங்களையும் மத்தவங்களையும் உதறிட்டு ஓடிப்போக என்னால முடியாது. எனக்கும் கீழே நாலு தங்கச்சிகள் இருக்காங்க. அவங்க கல்யாணம் கவுரவமா நடக்கணும்ன்னா என்னோட கல்யாணம் பெத்தவங்க சம்மதத்தோட கவுரவமா நடக்கணும். அதனால...

    கவலைப்படாதே ஹரிணி. நான் சீக்கிரமே முறைப்படி அவரை சந்திச்சு பொண்ணு கேக்கறேன்.

    அந்த நம்பிக்கையிலதான் இன்னிக்கு பெண் பார்க்கும் வைபவத்தில் நான் அமைதி காக்கப் போகிறேன்.

    பஸ் ஸ்டாப் வரவும் அவள் போக வேண்டிய பஸ் வந்து நிற்கவும் சரியாயிருந்தது.

    பைக்கைத் தள்ளிக்கொண்டே உடன் வந்து வாசனிடம் விடை பெற்றுக் கொண்டு - அவசர அவசரமாய் டவுன் பஸ்ஸின் படிகளில் கால் வைத்தாள்.

    கம்பியைப் பற்றிக் கொண்டே பதினைந்து நிமிஷப் பயணம்.

    வீட்டை அடைந்தவள் உள்ளே நுழைவதற்கு முன் அம்மா அவசரப்படுத்தினாள்.

    சீக்கிரமா கை கால் முகம் அலம்பிட்டு டிரஸ் பண்ணிட்டு வாடி.

    ஹரிணி பரபரக்கிற அவளைப் பார்த்துச் சிரித்தாள்.

    ஏம்மா டென்ஷன் ஆகிறே? வர்றவங்களுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு? அவங்களும் நம்மைப்போல மனுஷங்கதானே? எங்கே நம்ம வீட்டில் யாரையுமே காணோம்?

    அவங்களுக்கு வீடு தெரியாதே. அதனால அப்பா தெரு முனைக்குப் போயிருக்கார்.

    தங்கச்சிங்க?

    எல்லாரும் சினிமாவுக்குப் போயிருக்காங்க.

    சினிமாவுக்கா?

    ஆமா... நான்தான் அனுப்பிவெச்சேன்.

    நீதான் அனுப்பிவெச்சியா?

    ஆமாடி... பெரியவங்க சமாச்சாரம் பேசறப்போ சின்னப் பொண்ணுங்க குறுக்கும் நெடுக்கும் அலைஞ்சிட்டிருந்தா சரிவராது.

    என் தங்கைகள் எல்லாம் சின்னப் பொண்ணுங்களா?

    உன்னைவிட சின்னப் பொண்ணுங்கதானே? உனக்கு அந்த விவரமெல்லாம் பத்தாது. யார் யார் எப்போ இருக்கணும்ன்னு எங்களுக்குத் தெரியும். முதல்ல ரெடியாகு ஹரிணி.

    தள்ளாத குறையாய் அம்மா அவளை பாத்ரூமுக்குள் அனுப்பினாள்.

    திரும்பி வந்தவளிடம் தயாராய் எடுத்து வைத்திருந்த புடவையைக் கொடுத்தாள்.

    பழுப்பு நிறத்தில் இருந்த அந்தப் புடவையைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாள் ஹரிணி.

    என்னம்மா கனமா ஒரு பட்டுப் புடவையை எடுத்துக் குடுப்பியோன்னு பயந்துட்டிருந்தேன். என்னோட டேஸ்ட்டை புரிஞ்சுக்கிட்ட மாதிரி நீயே சிந்தெட்டிக் புடவையைக் குடுத்துட்டியே?

    ரொம்ப அலங்காரம் வேண்டாம். வீட்டில் எப்படி இருப்பாளோ அதே மாதிரி சிம்ப்பிளா இருந்தா போதும்ன்னு அவங்க சொல்லிட்டாங்க.

    ஹரிணி சிரித்தாள்.

    ஓ! அவங்களே சொல்லிட்டாங்களா? அதானே பார்த்தேன். இல்லைன்னா என்னை இந்நேரம் ஒருவழி பண்ணியிருப்பியே.

    சரி சீக்கிரமா டிரஸ்ஸை மாத்திட்டு பொட்டை வெச்சிட்டு வா.

    அடுத்த அறைக்குள் போய் அந்தப் புடவையை உடலுக்குச் சுற்றிக் கொண்டாள்.

    பவுடரை அளவாய் கோட்டிங் அடித்துக்கொண்டே அம்மாவிடம் கேட்டாள்.

    திடீர்ன்னு எப்படி இந்தப் பெண் பார்க்கும் படலத்தை ஏற்பாடு பண்ணினீங்க?

    எல்லாம் திடீர்ன்னுதான் நடக்கும்.

    அம்மா சொல்லிக் கொண்டிருந்தபோது வாசலில் கார் சத்தம் கேட்டது.

    கார் கதவுகள் திறக்கப்படும் ‘க்ளிக்’ சத்தங்களும் அறைந்து சாத்தப்படும் ‘தட்’ சத்தங்களும் கேட்டன.

    வாங்க... வாங்க... உள்ளே வாங்க...

    அப்பாவின் குரல் கேட்டது.

    அதைத் தொடர்ந்து பரபரப்புடன் முன்னே விரைந்தாள் அம்மா.

    இந்த வைபவத்தில் மனம் ஒட்டாமல் இருந்தாலும் ஏதோ ஒரு ஆர்வத்தில் வருபவர்களை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள் ஹரிணி.

    அவள் முகத்தில் லேசான திடுக்கிடல் ரேகைகள் எட்டிப்பார்த்தன.

    2

    தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘கீசகவதம்’. ஆர்.நடராஜ முதலியார் தயாரித்த இப்படம் 1916 ல் வெளிவந்தது. மோட்டார் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஆர்.நடராஜ முதலியார், சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் ரோட்டில் ஒரு ஸ்டூடியோவை நிறுவினார். படத்தின் டைரக்டர், கேமராமேன், எடிட்டர் எல்லாமே நடராஜ முதலியார்தான்... ‘இந்தியா பிலிம் கம்பெனி’யை தொடங்கிய இவர் பல படங்களைத் தயாரித்து, பின்னர் நிதி நிலை சரியில்லாததால் படத் தயாரிப்பை நிறுத்திவிட்டார்.

    டிராயிங் ஹால் சோபாவில் அப்பா அவர்களை அமர வைத்தார்.

    கூழைக்கும்பிடு போட்டு அப்பா அவர்களிடம் வழியலாகப் பேசுவது ஹரிணிக்கு சுத்தமாய்ப் பிடிக்கவில்லை.

    வந்த ஆட்களைப் பார்த்தபோது இந்தப் பெண்பார்க்கும் வைபவமே ஹரிணிக்கு சற்றே விநோதமாகத் தெரிந்தது.

    பெண்கள் யாருமே வரவில்லை.

    கீழே விழுந்து விடுமோ என்கிற மாதிரி அபாயகரமான தொந்தியோடு மூன்று ஆசாமிகள் மட்டுமே வந்திருந்தார்கள்.

    அம்மா எதையோ எடுக்க உள்ளே வந்தபோது - ஹரிணி அவசரமாய் அவளிடம் குறுக்கிட்டுக் கேட்டாள்.

    அம்மா... இவங்களா என்னைப் பெண் பார்க்க வந்திருக்காங்க?

    ஆமா.

    லேடீஸ் யாருமே இல்லையே?

    இல்லைன்னா என்ன?

    இதிலே மாப்பிள்ளை யாரு?

    அதெல்லாம் நான் உனக்கு அப்புறம் சொல்றேன். மொதல்ல நம்மை அவங்களுக்குப் பிடிக்கணும். அவங்களை நமக்குப் பிடிக்கிறதெல்லாம் அப்புறம்.

    நடக்கிறதெல்லாம் எனக்கு ரொம்ப விநோதமா இருக்கம்மா.

    பரவாயில்லை. நான் கூப்பிடறப்போ அவங்க முன்னால வந்து நின்னுட்டுப் போ. அவங்க கேக்கற கேள்விக்கு பதில் சொல்லு.

    அம்மா.

    ஹரிணி மேலும் பேச முயன்றபோது - மர பீரோவின் மேல் வைத்திருந்த சில்வர் ட்ரேயைக் கண்டுபிடித்து எடுத்துவிட்ட அம்மா அவள் பேச்சைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் பரபரப்பாய் அகன்றுவிட்டாள்.

    சரி... ‘நடப்பது நடக்கட்டும்.

    வாசன் அப்பாவைச் சந்தித்துப் பேசும் முன்பு புயல் அடித்துவிடக்கூடாது.

    அவர் மாதிரி என்னால் பக்குவமாய் விஷயத்தை எடுத்துச் சொல்ல முடியாது.

    அதுவரைக்கும் எல்லாக் கூத்துகளும்

    Enjoying the preview?
    Page 1 of 1