Enni Ettavathu Naal
By Rajeshkumar
4/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsUchi Nila Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Saagaavaram Rating: 4 out of 5 stars4/5
Related to Enni Ettavathu Naal
Related ebooks
Naalai Yaaro? Rating: 5 out of 5 stars5/5Kovaiyil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Singapore Vinaadigal and Thigil Kaalam Rating: 4 out of 5 stars4/5Vivekum 41 Nimishangalum Rating: 3 out of 5 stars3/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Endrendrum Un Ethiri Rating: 4 out of 5 stars4/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Sorgathin Saavi Rating: 0 out of 5 stars0 ratingsUn Vaanam En Arukil Rating: 3 out of 5 stars3/5Vilaikku Oru Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsThalai Illaatha Silai Rating: 5 out of 5 stars5/5Nagaratha Nizhal Ondru! Rating: 0 out of 5 stars0 ratingsNenjellam Nerunji Mul Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaandhamum Oru Irumbu Thundum Rating: 0 out of 5 stars0 ratingsVivek In Tokyo Rating: 0 out of 5 stars0 ratingsSutri Sutri Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsAbaayam! Thodu! Rating: 5 out of 5 stars5/5Aabathu Ingey Aarambam Rating: 5 out of 5 stars5/5Ularaatha Raththam Rating: 0 out of 5 stars0 ratingsJeeva Jeeva Jeeva Rating: 0 out of 5 stars0 ratingsSorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Vivek Viyugam Rating: 5 out of 5 stars5/5Kaatru Urangum Neram... Rating: 5 out of 5 stars5/5Ondru Irandu Iranthu Vidu Rating: 3 out of 5 stars3/5Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsManidhan Rating: 5 out of 5 stars5/5Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Kaatrin Niram Karuppu Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Enni Ettavathu Naal
6 ratings0 reviews
Book preview
Enni Ettavathu Naal - Rajeshkumar
ராஜேஷ்குமார்
1
அண்டத்தைப் படைத்த ஆண்டவனின் அளப்பரிய அற்புதங்களில் ஒன்று குழந்தைப்பேறு. ‘ஒரு ஆணின் உடல் இப்படித்தான் இருக்க வேண்டும், ஒரு பெண்ணின் உடல் ஆணின் உடலுக்கு எதிர்மறையாக இருக்க வேண்டும்’ என்று யோசித்து யோசித்து உருவாக்கிய இறைவனின் திறமையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. இறைவன் இல்லையென்று நாத்திகம் பேசுபவர்கள் இறைவன் என்னும் வார்த்தையை பயன்படுத்தாமல் அது ‘இயற்கை’ என்று சொல்வார்கள். ‘இந்த உலகத்தில் இறைவனும் இல்லை, இயற்கையும் இல்லை. எல்லாம் விஞ்ஞானம் தான்’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ‘ஒரு பெண்ணின் கரு முட்டையும் ஒரு ஆணின் உயிரணுவும் ஒன்றிணைந்துதான் குழந்தை உருவாகிறது’ என்று சொல்வார்கள். இந்த மூன்று வாதங்களில் எது சரியானது என்பதை இந்த நாவலில் பார்த்து விடலாம்.
சென்னையின் புறநகர்ப் பகுதி. நள்ளிரவு இரண்டு மணி.
செங்காட்டுக் குப்பம் போலீஸ் ஸ்டேஷன்.
பேட்ரோலிங் போய்விட்டுவந்த அசதியில் இன்ஸ்பெக்டர் சேவியர் நாற்காலியில் ஒரு ப்ராக்கெட் குறியாய் மாறி கண் அயர்ந்திருந்த போது அந்த டெலிபோன் அழைத்தது. எரிச்சலாய் எடுத்து எஸ்
என்றார்.
மறுமுனையில் அந்த ஆண் குரல் கேட்டது.
போலீஸ் ஸ்டேஷனா?
ஆமா...
இன்ஸ்பெக்டர் இருக்காரா?
இன்ஸ்பெக்டர்தான் பேசறேன்!
ஸார்...! ‘நான் யாரு.. என் பேர் என்ன...’ என்கிற மாதிரியான கேள்விகளையெல்லாம் கேட்காமே நான் இப்போ சொல்லப் போகிற விஷயத்தை மட்டும் நீங்க கேட்கிறதாய் இருந்தா மட்டும் நான் தொடர்ந்து பேசுவேன். இல்லேன்னா ரிஸீவரை வெச்சுடுவேன். என்ன சொல்றீங்க...?
நான் எதுவும் கேட்கலை... விஷயத்தை சொல்லுங்க...!
ஸார்! நான் ஒரு ஃபேக்டரியில வேலை செய்யறேன். ராத்திரி ஷிஃப்ட் முடிஞ்சு டூவீலர்ல என்னோட வீட்டுக்குப் போயிட்டிருந்த போது வழியில் யூரின் பாஸ் பண்றதுக்காக வண்டியை இருட்டுப் பள்ளம் பக்கத்துல நிறுத்திட்டு புளிய மரத்துக்குப் பின்னாடி போனேன். செல்போன் டார்ச் வெளிச்சத்துல உள்ளே நடந்து போகும் போதுதான் ‘அதை’ பார்த்தேன். அப்படியே ஒரு நிமிஷம் நடுங்கிப் போயிட்டேன்.
எதைப் பார்த்தீங்க...?
அது வந்து.. வந்து...
சொல்லுங்க...
நீங்களே வந்து பாருங்க ஸார்.. எனக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்கு. நான் மொதல்ல வீடு போய்ச் சேரணும்!
டொக்!
ரிஸீவர் வைக்கப்படும் சத்தம் கேட்டது.
இன்ஸ்பெக்டர் சேவியர் டெலிபோனின் காலர் ஐ.டி.யில் அந்த எண்ணைப் பார்த்தார். அது ஒரு பி.சி.ஓ. எண் என்று பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது.
‘பேசிய அந்த ஆள் என்ன சொல்ல வந்தான்?’
‘எதைப் பார்த்தான்?’
சேவியரின் தூக்கக் கலக்கம் சட்டென்று காணாமல் போயிற்று. மேஜையின் மீது இருந்த தொப்பி விநாடிக்கும் குறைவான நேரத்தில் அவருடைய தலைக்கு வந்தது. பக்கத்து அறையை எட்டிப் பார்த்துக் குரல் கொடுத்தார்.
மாறன்!
ஸார்!
மாறன் வெளியே வந்தார்.
ஒரு யூனானிமஸ் கால். இருட்டுப் பள்ளம் புளிய மரத்துக்குப் பின்னாடி யாரோ எதையோ பார்த்து பயந்துபோய் போன் பண்ணியிருந்தாங்க...! வாங்க போய்ப் பார்த்துடலாம்.!
மாறன் தயங்கினார்.
ஸ... ஸ.. ஸார்!
என்ன?
இது ரொம்பவும் அன் - டைம்...! போன் பண்ணினவங்க யார்ன்னு தெரியாமே நாம அந்த இடத்துக்குப் போறது சரியில்லைன்னு நினைக்கிறேன்!
என்ன... மாறன்.. பயப்படறீங்களா?
இது பயமில்லை ஸார்.. ஒரு முன்னெச்சரிக்கை.. ஏற்கெனவே இந்த ஏரியா தாதாக்கள் நம்ம மேல ரொம்பவும் கோபமாகவும் பழி வாங்கற உணர்வோடும் இருக்காங்க. எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்ன்னுதான் சொன்னேன்.
சேவியர் சிரித்தார்.
போலீஸ்காரனுக்கு என்னிக்குத்தான் ரிஸ்க் இல்லை...! எனக்கு போன் பேசின நபர் பொய்யான பேர்வழியாய் இருக்க முடியாதுன்னு என்னோட மனசுக்குப் படுது. வாங்க... ஸ்பாட்டுக்குப் போய் பார்த்துட்டு வந்துடுவோம்... நம்ம கூட ரெண்டு கான்ஸ்டபிளும் வரட்டும்!
தென் நோ ப்ராப்ளம் ஸார்.
ஜீப்பை ரெடி பண்ணுங்க...!
அடுத்த சில நிமிஷங்களுக்குள் புறப்பட்டு விட்டார்கள்.
ஸ்டேஷனை விட்டு இரண்டு கிலோமீட்டர் தள்ளி அந்த இருட்டுப்பள்ளம் இருந்தது. குண்டும் குழியுமான ரோட்டில் ஐந்து நிமிஷப் பயணம்.
இருட்டுப்பள்ளமும் அதையொட்டியிருந்த புளியமரமும் ஜீப்பின் ஹெட்லைட் வெளிச்சத்தில் புலப்பட்டது.
ஜீப் ரோட்டோரமாய் போய் என்ஜினின் உதறலோடு நின்றது. சேவியர் சொன்னார்.
உடனடியாய் யாரும் இறங்கிட வேண்டாம்.
ஒரு நிமிஷம் காத்திருந்து விட்டு எல்லோரும் இறங்கினார்கள். மாறனின் கையில் இருந்த எட்டு செல் டார்ச் உயிர் பிடித்து வெளிச்சத்தை உமிழ்ந்தது. மரத்தை நோக்கி வெளிச்சத்தை திருப்பினார்.
ஸார்! மரத்துக்குப் பின்னாடி நான் மொதல்ல போறேன். நீங்க பின்னாடியே வாங்க ஸார்...!
மாறன் புளியமரத்தை நோக்கி நடந்தார். சேவியரும் மற்ற இரண்டு கான்ஸ்டபிள்களும் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
ஸார்! இங்கே கொஞ்சம் சேறாய் இருக்கு. பார்த்து வரணும்!
மரத்தின் பின்பக்கம் வந்தார்கள். டார்ச்சின் வெளிச்சம் தத்தி தத்தி முன்னே போயிற்று.
அந்த இடம் அவ்வளவு சுத்தமாக இல்லை.
காற்றில் பறக்கும் பாலிதீன் கவர்கள், ஒரு அடி உயரத்துக்கு வளர்ந்திருந்த பார்த்தீனியம் குற்றுச் செடிகள்.
சேவியர் அந்த இடத்தின் மையத்தில் போய் நின்று கொண்டு டார்ச் வெளிச்சத்தில் குனிந்து பார்த்தார்.
‘போனில் பேசிய நபர் இந்த இடத்தில் எதைப் பார்த்தான்?’ அவர் யோசனையோடு விழிகளைச் சுழற்றிக் கொண்டு இருக்கும்போதே பக்கத்தில் நின்றிருந்த கான்ஸ்டபிள் கலவரமாய் குரல் கொடுத்துக் கொண்டே ஒரு இடத்தை சுட்டிக் காட்டினார்.
ஸார்... அங்கே பாருங்க!
சேவியரின் பார்வை திசைமாறியது. பார்த்தார்.
பார்த்தீனிய செடிகளுக்கு நடுவில்-
கணுக்கால் வரை வெட்டி எடுக்கப்பட்ட ஒரு மனித கால் தெரிந்தது.
2
ஒரு பெண் தான் பிறந்ததின் பயனை எப்போது அடைகிறாள் தெரியுமா? ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து தாய் என்ற பெருமையினை அடையும் போதுதான். ஒரு வீட்டில் எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் குழந்தைச் செல்வம் இல்லையென்றால் மற்ற செல்வங்களுக்கு அங்கே மதிப்பு இல்லாமல் போய்விடுகிறது. கல்யாணம் ஆனதுமே சில தம்பதிகள் தாங்கள் சில ஆண்டுகளாவது சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக பிள்ளைப் பேற்றினைத் தள்ளிப் போடுவார்கள். ‘இது இயற்கை நிகழ்வுகளைத் தடை செய்யும் ஒரு ஆபத்தான முயற்சி’ என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.
சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவில் - 5 கிலோமீட்டர் என்னும் அறிவிப்போடு அந்த மலைப்பிரதேசம் பச்சைப் பசேலென்று ஆரம்பமாயிற்று.
வேகமாய் விரைந்து கொண்டிருந்த வெள்ளை நிற மாருதி ஸ்விப்ட் காரின் ட்ரைவிங் சீட்டில் உட்கார்ந்திருந்த தன் கணவனின் தோளை அருகே உட்கார்ந்திருந்த பூவரசி மெள்ளத் தொட்டாள்.
சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நடுக்கமும் பயமும் கலந்த குரலில் கேட்டாள்.
என்னங்க...! கோயிலுக்கு இன்னும் அஞ்சு கிலோமீட்டர் போகணுமா?
ஆமா...! போர்டைப் பார்த்தியல்ல!
இங்கேயே ஆள் நடமாட்டத்தைக் காணோம். போகப் போக இனி எப்படியிருக்குமோ?
பூவரசியின் கணவன் கதிர்மணியன் சிரித்தான்.
"இதோ பார் பூவரசி...! நாம இப்போ போற