Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Koodu Thedum Paravai
Koodu Thedum Paravai
Koodu Thedum Paravai
Ebook101 pages36 minutes

Koodu Thedum Paravai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புறநகரில் ஆள் அரவமற்ற பகுதியில் வீடு கட்டி குடியேறும் குடும்பம். கதாநாயகி, தன் வீட்டில் இரவு திருட வந்த திருடனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள். அந்தத் திருடன் அந்த வீட்டில் திருடிய நகை உள்ளிட்ட பொருட்களை திருப்பிக் கொடுத்துவிட்டு அவளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறான். கதாநாயகியின் மனநிலை என்ன? திருடனின் ஆசை நிறைவேறிற்றா? என்பதே கதை.

Languageதமிழ்
Release dateSep 25, 2023
ISBN6580169210144
Koodu Thedum Paravai

Read more from K.G. Jawahar

Related to Koodu Thedum Paravai

Related ebooks

Reviews for Koodu Thedum Paravai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Koodu Thedum Paravai - K.G. Jawahar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கூடு தேடும் பறவை

    Koodu Thedum Paravai

    Author:

    கே.ஜி. ஜவஹர்

    K.G. Jawahar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kg-jawahar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    வீடு கலகலப்பாக இருந்தது ஒரே பேச்சும் கும்மாளமும்தான்! சிவராமன் ஈஸிசேரில் அமர்ந்து நடுநாயகமாக இருந்தார். அவரைச் சுற்றி பார்வதி, சோமநாதன், அவரது வாண்டுகள்... என்று கூட்டம். வந்த விருந்தினர்கள் எல்லாம் போயாகி விட்டபடியால், மேற்படி உறவுக் கூட்டம் மட்டும் ஹாலில் வியாபித்திருந்தது. ஹாலின் நடுவில் கணபதி ஹோமம் பண்ணிய தடயங்கள் இன்னும் மிச்சமிருந்தன... குத்து விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது...

    ஹாலில் நடப்பதை கிச்சனில் இருந்தவாறே பார்த்து ரசித்தாள் மைதிலி! அப்பா எப்போதும் இப்படித்தான். தான் இருக்கும் இடத்தை ஒரு விளையாட்டு அரங்கமாக மாற்றிவிடுவார்! இப்போதுகூட ஏதோ மாஜிக் செய்து காட்டுகிறேன் என்று எதையோ பண்ணிக் காண்பிக்க, சரியாகவில்லை போலும். சிரிப்புகளும் கிண்டல்களும்...!

    மைதிலி ஒரு ட்ரேயில் லெமன் ஜூஸ் கிண்ணங்களை வைத்தாள். பிறகு மெல்ல எடுத்து, குனிந்து ஒவ்வொருவரிடமும் நீட்ட... ஒவ்வொருத்தரும் எடுத்துக் கொண்டார்கள்.

    கிரஹப் பிரவேச சாப்பாடு இன்னும் சுவை மாறாமல் நெஞ்சிலே நிற்கிறது. ஏகத்துக்கும் அடைச்சிட்டேன். இப்ப ஜூஸ் வேறயா...! எடுத்து சொன்னாரேயொழிய சின்னக்குழந்தை மாதிரி நாக்கைச் சப்பிக்கொண்டே கிளாஸை மடக் மடக்கென்று குடித்து முடித்தார் சோமநாதன். சிவராமனின் தம்பி மைதிலியின் சித்தப்பா.

    ஏங்க போறும்... உங்களுக்கு சுகர்! என்று எச்சரித்தாள் சகதர்மிணி பார்வதி. அவளைச் சட்டை செய்யவில்லை சோமநாதன்.

    மாமா உங்களுக்கு சுகர்னா... நீ சர்க்கரை போடாம் சாப்பிடணுமா? என்றது ஒரு வாண்டு.

    ஆமாண்டா கண்ணா!

    அப்ப நீங்க ஒரு கிளாஸ் வாட்டர் குடிச்சாகூட அது சர்பத் மாதிரி இருக்குமா?

    இதைக் கேட்டதும் சிவராமன் லொக் லொக்கென்று சிரித்தார். (அவர் சிரித்தால் இருமுவது போலிருக்கும்)

    நெத்தியடிக் கேள்விடா சோமநாதா! சிரித்தான் சிவராமன். இந்தக் காலத்து குழந்தைகள்லாம் படுசுட்டி...!

    இப்போது மைதிலி காலி கிளாஸ்களை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள். கிச்சனில் உள்ள வாஷ்பேஸின் அருகே வைத்துவிட்டு, ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, பச்சைபசேல் கிரவுண்ட். ஆங்காங்கே டப்பா டப்பாவாய் வீடுகள். தனித்தனியே ஏகாந்தமாய் இருந்தன. எந்த வீட்டிற்கும் இன்னும் காம்ப்பவுண்ட் சுவரை எழுப்பவில்லை. கூப்பிடும் தொலைவு என்பார்கள். அதைவிட தொலைவில்தான் பக்கத்து வீடு! ஒரு காலத்தில் இது விளைச்சல் நிலமாக இருந்திருக்க வேண்டும். இப்போது கூறுபோட்டு கல்நட்டு, பிளாட்டாக்கிவிட்டார்கள்.

    உண்மையைச் சொல்லப் போனால் மைதிலிக்கு இந்தத் தனிமையான வீடு பிடிக்கவேயில்லை. கலகலப்பான திருவல்லிக்கேணி எங்கே? பட்டப்பகலிலேயே நடுநிசி மாதிரி தனிமையாக இருக்கும் இந்த ‘கோவில்பாக்கம்’ எங்கே!

    என்ன செய்ய?

    அப்பாவின் ஆசை. தன் மகளுக்கு ஒரு வீடு கட்டித் தரவேண்டும் என்ற ஆசை. ஏன் நெடுநாளைய சேமிப்பில் இந்த மூன்று பெட்ரூம் வீடு. இந்தக் காட்டில்தான் கட்ட முடிந்தது! ஆனாலும், வீடு ஏகப்பட்ட அழகு! தரையெல்லாம் ‘கிளவுட் மொஸைக்’ நீலம், ரோஸ், மஞ்சள் என்று அழகான மொஸைக். நவீன கிச்சன், முற்றம், பால்கனி, மாடிக்குப் போக படிக்கட்டு. சுற்றிலும் ‘குரோட்டன்ஸ்’ வைக்க வசதிகள்... வீடு அழகோ அழகு. அப்படிக் கட்டிவிட்டு அதற்கு ‘மைதிலி பவனம்’ என்ற பெயரும் வைத்து, இதோ இன்று கிரஹப்பிரவேசம் முடிந்துவிட்டது!

    ***

    மறுநாள் வீடு வெறிச்சென்று ஆகிவிட்டது. எல்லோரும் ஊரைப் பார்க்கக் கிளம்பியாயிற்று. கலகலவென்று இருந்த வீடு... கப்சிப் என்று இருந்தது. மைதிலிக்கு அப்போதுதான் பயம் வந்தது. சாயங்காலம் அப்பாவும் கேம்ப் கிளம்பி விடுவார்... பிறகு... தனிமை!

    அப்பா...! என்றாள் மெல்ல.

    என்னம்மா! சிவராமன் சூட்கேஸில் துணிகளை மடித்து வைத்துக் கொண்டே கேட்டார்.

    எப்பப்பா திரும்பி வருவீங்க?

    நாலு நாள் ஆகும்மா...!

    பயமாயிருக்கப்பா. பெரிய வீடு... பக்கத்துல ஆள் நடமாட்டமே தெரியல. எல்லோரும் புதியவங்க...!

    நாமதான்மா புது ஆட்கள். அவங்க ஏற்கெனவே இருக்காங்க...! சிரித்தார் சிவராமன்.

    போங்கப்பா உங்களுக்கு எல்லாமே விளையாட்டுத்தான்!

    என்னம்மா பயம் இருக்கிறவங்கள் எல்லாம் மனுஷன் இல்லே...?

    ரொம்ப தனிமையா இருக்குப்பா... வீட்ல நகை நட்டுல்லாம் இருக்கு...!

    இருந்துட்டுப் போகட்டும். நான் கேம்பில் இருந்து திரும்பி வந்ததும் பாங்க் லாக்கர்ல கொண்டு வைச்சிடறேன்...

    அப்போது அவள் நாக்கில் சனி வந்து அமர்ந்தது; சொன்னாள்.

    முகமூடி கொள்ளக்காரன் எவனும் வந்திடப் போறான் ப...பயம்மா இருக்கு...!

    "அசடு இப்படிப்

    Enjoying the preview?
    Page 1 of 1