Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Puvanathil Oru Poovanam
En Puvanathil Oru Poovanam
En Puvanathil Oru Poovanam
Ebook119 pages41 minutes

En Puvanathil Oru Poovanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆசை கொலைவரை போய்விடுகிறது என்பதை இந்த புதினம் தெளிவுபடுத்துகிறது. பெற்றோர் செய்யும் தவறு அவர்கள் பெற்ற குழந்தைகளையும் பாதிக்கிறது. யார் தன் மனைவியை கொலை செய்தார்களோ, அவர்களுடைய குழந்தையை அந்த கணவன் வளர்க்கிறான். அந்த குழந்தை அவனுடைய குழந்தைகளுடன் எப்படி வளர்கிறது என்பதை இந்த கதை மூலம் அழகாக விளக்கி இருக்கிறேன். தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதுடன் இதில் வரும் சிறைச்சாலை சம்பந்தப்பட்ட பகுதிகள் படிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாக இருக்கும். பாசமும் சோகமும் கலந்த இக்கதை சமுதாயத்திற்கு நல்ல பாடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Languageதமிழ்
Release dateApr 29, 2023
ISBN6580165709794
En Puvanathil Oru Poovanam

Related to En Puvanathil Oru Poovanam

Related ebooks

Reviews for En Puvanathil Oru Poovanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Puvanathil Oru Poovanam - Veeranvayal V. Uthayakkumaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    என் புவனத்தில் ஓர் பூவனம்

    En Puvanathil Oru Poovanam

    Author:

    வீரன்வயல் வீ. உதயக்குமாரன்

    Veeranvayal V. Uthayakkumaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/veeranvayal-v-uthayakkumaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    தேசிய பறவை ஒன்று அருகில் இருந்த வேப்ப மரத்தில் அமர்ந்து கொண்டு உய்யா உய்யா என்று அகவிக் கொண்டிருந்தது. உறக்கம் கலைந்த காயத்ரி மின் விளக்கை எரிய விட்டு சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். கணவன் பூவேந்திரன் போர்வைக்குள் உடலை மூடிக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். எட்டு வயது நிரம்பிய விக்னேஷ் கோரைப்பாயை விட்டு ஒதுங்கித் தரையில் படுத்திருந்தான். ஐந்து வயது நிரம்பிய பவித்ரா வாயில் கட்டை விரலை நுழைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள். கணவன் உடலைப் போர்த்தியிருந்த போர்வையை உறுவினாள் காயத்ரி.

    என்னங்க மணி அஞ்சரையாச்சு தீபாவளி சமயத்துல இப்படித் துங்கிட்டிருந்தா எப்படிங்க.

    கைகளை உதறியபடி எழுந்தான் பூவேந்திரன்.

    ஏண்டி கத்துற ஜவுளிக்கடையை மூடுறதுக்கே பத்தரை மணி ஆயிடுச்சி... அதுக்கப்பறம் வந்து சாப்புட்டு படுக்குறதுக்கு பதினொண்ணு... ஆயிடுது.

    சரி சரி... கோபம் வேண்டாம் இந்த நேரத்தில் தானே... இந்தத் தொழில்ல காசு பாக்க முடியும் காயத்ரி வாசலைப் பெருக்கிவிட்டு தண்ணீர் தெளிக்க ஆரம்பித்தாள் வாசலில் விளக்கை சுற்றி ஈசல் பூச்சிகள் வட்டமடித்துக் கொண்டிருந்தன. அவள் பெருக்கிய வாசல் மீண்டும் குப்பையாகிக் கொண்டிருந்தது.

    பாவம்... இதுகளோட வாழ்க்கையே சில மணி நேரந்தான்...

    என்னக்கா தனியா பேசிட்டுருக்கே...

    பக்கத்து வீட்டுக் குளியலறையில் இருந்து வெளியே வந்த செண்பகம் கேட்டாள்.

    ஒண்ணுமில்ல செண்பகா... இந்த ஈசல்களைப் பாக்குறதுக்கு பாவமா இருக்கு... அது சரி... என்ன இன்னைக்கு நேரத்துல எழுந்து குளிச்சிட்டே...

    குளிக்கிற தேதி வந்துருச்சி... ராத்திரி பூரா... புவனேஸ்வரி துங்கவே விடலே... லொக்கு லொக்குன்னு இருமிட்டே இருந்தா... இன்னைக்கு ஸ்கூல் லீவு போட சொல்லிட்டு ஆஸ்பிடல் கூட்டிட்டு போகணும்...

    அண்ணன எழுப்பி விட்டுட்டேன் தம்பி எழுந்திரிச்சாச்சா... இல்லையா...

    மொதல்ல புவியை ஆஸ்பிடல் கூட்டிட்டுப் போங்க.

    அவர்தான் நேரமா எழுந்திரிச்சி... வென்னீர் போட்டுக் கொடுத்தாரு... இப்ப காப்பி போட்டுட்டு இருக்கார்.

    பாவம் செண்பகா அளவா வேலை வாங்கு... பகல் பூரா... தையல் மிஷின் கூட கஷ்டப்படுறவரு...

    காயத்ரியைப் பார்த்து சிரித்து விட்டு வீட்டிற்குள் நுழைந்த செண்பகம்... மகளைக் கவனித்தாள்.

    ஏய் புவி... எழுந்திரிச்சி... துணி மாத்திக்க... உடை முழுவதும் தொப்பலாக நனைந்திருந்தது.

    என்ன பொண்ணு இவ... தினம் பாயை அலச வேண்டியதாயிருக்கு.

    ஏண்டி... அவளுக்கு ஆறு வயசுதானே ஆச்சி... காபி டம்ளருடன் வெளிப்பட்டான் ஜவுளிக்கடை பூவேந்திரனின் தையல்கார தம்பி சரவணன்.

    ***

    அண்ணணின் ஜவுளிக் கடையும், தம்பியின் தையற்கடையும் பக்கத்திலேயே அமைந்திருந்தது. தீபாவளிக்கு அண்ணன் ஜவுளி இலவசமாகக் கொடுக்க... பதிலுக்கு அண்ணன் குடும்பத்துக்கு இலவசமாகவே தம்பி தைத்துக் கொடுப்பது வழக்கமாகி விட்டது. அண்ணணுக்கு துணிக்கடையில் வருமானம் அதிகமாகவே இருந்தது. தம்பி கஷ்டப்படும் சமயங்களில் அண்ணன் உதவுவதும் வழக்கமாகி விட்டது. இரண்டு குடும்பங்களும் ஒற்றுமையாக இருப்பதை அந்த ஊர்க்காரர்கள் பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். சிலருக்கு பொறாமையாகவும் இருக்கும்...

    ***

    கை கால்களைத் கழுவிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான் பூவேந்திரன்.

    உட்காருங்க... உங்களுக்கு புடிச்ச நண்டுக் கொழம்பு...

    எனக்குத் தெரியும்... தெருவுல வரும்போதே... மூக்கு என்கிட்ட சொல்லிடுச்சி... சரி பசங்க சாப்புட்டாங்களா...

    பெரியவன் சாப்புட்டான்... சின்னதுதான் ஏழு மணிக்கெல்லாம் தூங்கிட்டு... எழுந்திரிக்கவே மாட்டேங்குறா...

    தினம் இதையேதான் சொல்ற... இனி குழந்தைக்கு ஆறுமணிக்கெல்லாம் சாப்பாடு கொடுக்கப்பாரு...

    மனைவியின் அசத்தல் சமையலை சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் பூவேந்திரன்.

    மறுநாள் முகூர்த்த நாள் என்பதால் பூவேந்திரனின் ஜவுளிக்கடையில் கூட்டம் அலை மோதியது.

    இரண்டாயிரம் ரூபா கொடும்மா.

    ஆயிரத்து இருநூறுதாங்க இருக்கு... அந்தப் பெண்மணி தயங்கியபடியே சொன்னாள்.

    என்னம்மா... இந்த விலைக்கு எப்படிம்மா... ஒரிஜினல் பட்டுப் புடவை கிடைக்கும்...

    முப்பது வயசு தாண்டிய பொண்ணுக்கு... கல்யாணம் பண்றோம்... அவ தலைவிதி ரெண்டாந் தாரமாத்தான் வாக்கப் படணும்னு இருக்கு... சீர் செனத்தி வேண்டாம்னு சொல்லிட்டாங்க... ஒரே பொடவையாவது நல்லதா எடுத்துக் கொடுக்கலாம்னு நெனச்சேன்... அதுக்குகூட என்னால முடியலேய்யா...

    அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. பட்டுப் புடவைகளில் ஒன்றை அவனே தேர்வு செய்தான்.

    இந்தாம்மா... இந்தப் புடவை ஐயாயிரம் ரூபா... நீ பணமே கொடுக்க வேண்டாம்... நல்லபடியா பொண்ணோட கல்யாணத்தை நடத்து.

    புடவையைக் கையில் கொடுத்த பூவேந்திரன் அவள் முகத்தில் தோன்றிய மலர்ச்சியைக் கண்டான். இருகைகளின் நடுவே புடவையை வைத்துக் கொண்டு அவள் கைகூப்பினாள். பூவேந்திரனுக்கு இரக்க குணம் அதிகம். வறுமை நிலையில் இருக்கும் வாடிக்கையாளர்களிடம் அவன் எப்போதும் லாபத்தை எதிர்பார்ப்பதேயில்லை. அந்தப் பெண்மணி வெளியேறியதும்... காயத்ரி கடைக்குள் நுழைந்தாள்.

    என்ன காயத்ரி வியப்பு மேலிடக்கேட்டான் பூவேந்திரன்.

    அப்பாகிட்ட வேலை செய்ற வேலுச்சாமியோட பொண்ணுக்கு கல்யாணம் முடிவாயிருச்சி.

    தெரியுமே... அவங்களுக்கு ஜவுளி போட்டுக் கொடுக்கணுமா.

    "இல்லைங்க... நகை பூரா அடகு

    Enjoying the preview?
    Page 1 of 1