Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thozhil Seyya Virumbu
Thozhil Seyya Virumbu
Thozhil Seyya Virumbu
Ebook203 pages56 minutes

Thozhil Seyya Virumbu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தொழில் தொடங்க வேண்டும் என்ற சிந்தனை உங்களுக்குள் எழுந்துவிட்டால் அந்தச் சிந்தனையை மேலும் வளர்த்தெடுத்து, நீங்கள் அடுத்தடுத்த முடிவுகளை மேற்கொள்ள இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும். இந்த நூல் உங்கள் ஐயங்களை எல்லாம் தீர்க்கும் என்று சொல்வதைவிட, உங்கள் சிந்தனைப் பரப்பை இன்னும் விரிவாக்கும் என்று சொல்வதுதான் சரி. ஏனெனில் ஒரு தொழில் முனைவரின் அனைத்து ஐயங்களையும் யாராலும் தீர்த்துவிட முடியாது. ஒருவர் கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டால், அவர் சிந்திப்பதை நிறுத்திவிட்டார் என்று பொருள். அப்படியானால் அவர் தொழில் முனைவரே அல்ல. சிந்திப்பவரே தொழில் முனைவர். சிந்தனையை அகலப்படுத்துவதே நூலின் நோக்கம். தொடர்ந்து படியுங்கள்! மென்மேலும் சிந்தியுங்கள்!! சிந்தனைக்குச் செயல் வடிவம் தந்து உழைக்க ஆரம்பியுங்கள்!!! காசோலைகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

Languageதமிழ்
Release dateFeb 12, 2022
ISBN6580150907922
Thozhil Seyya Virumbu

Read more from Ramkumar Singaram

Related to Thozhil Seyya Virumbu

Related ebooks

Reviews for Thozhil Seyya Virumbu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thozhil Seyya Virumbu - Ramkumar Singaram

    http://www.pustaka.co.in

    தொழில் செய்ய விரும்பு

    Thozhil Seyya Virumbu

    Author :

    இராம்குமார் சிங்காரம்

    Ramkumar Singaram

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ramkumar-singaram

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    முன்னுரை எழுதுகிற எல்லோருக்கும் முதலில் எழுகிற கேள்வி: இந்தப் புத்தகத்தை நான் ஏன் எழுதுகிறேன்? என்பதாகத்தான் இருக்கும். இந்தக் கேள்வி எழாமல் இருந்திருந்தால் இப்படி ஒரு புத்தகம் எழுதும் எண்ணமே தோன்றாமல் போயிருக்கும்.

    இந்தப் புத்தகத்தின் நோக்கம் - தொழில் தொடங்க எண்ணுகிற முதல் தலைமுறை தொழில் முனைவருக்கு மனதில் எழும் ஐயங்களை நீக்கி, தயக்கங்களைத் தகர்த்தெறிந்து தொழில் முனைய வைப்பதுதான்.

    தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணுவோரின் மனதில் ஆயிரம் கேள்விகள் தோன்றக்கூடும். இந்தக் கேள்விகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று தகவல் சார்ந்தது; மற்றொன்று உளவியல் சார்ந்தது.

    தகவல் சார்ந்த ஐயங்கள் என்று எடுத்துக்கொண்டால், திட்ட அறிக்கை தயாரிப்பது எப்படி. வங்கிகளில் கடன் பெறும் வழிமுறைகள் என்ன. தொழிலைப் பதிவு செய்வது எப்படி. டி.என்.ஜி.எஸ்.டி. எண் வாங்குவது எப்படி. சந்தை ஆய்வு மேற்கொள்வது எப்படி? என்பன போன்ற பொதுவான பல கேள்விகளுக்கு பல்வேறு இணைய தளங்களிலும், நூல்களிலும் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

    ஆனால் உளவியல் - கொள்கை - நடைமுறை சார்ந்த ஐயங்கள் என்று எடுத்துக்கொண்டால், அதாவது, வேலையை விட்டுவிட்டுத் தொழில் தொடங்கலாமா. தொழில் தொடங்கிய பிறகு வேலையை விடலாமா. தனியாகத் தொழில் தொடங்கலாமா. பங்குதாரர்களுடன் சேர்ந்து தொடங்கலாமா. தெரிந்த துறையில் தொடங்குவது நல்லதா. அல்லது புதிய வாய்ப்புகளைத் தேடிச் செல்வது உகந்ததா? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்க எந்த நூலும் இல்லை.

    நான் மதுரைக் காமராசர் பல்கலையில் முதுகலைப் படிப்பு முடித்தபோது, என் மனதில் இருந்த ஒரே சிந்தனை, தொழில் தொடங்க வேண்டும் என்பதுதான் பிறகு வணிக இதழான ‘வளர்தொழிலில்’ 3 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றியபோது, அச்சிந்தனை இன்னும் ஆழமாக வேரூன்றியது.

    ஆனாலும், இலக்கு முடிவான அளவுக்கு, வழி தெளிவாகத் தெரியவில்லை. எங்கிருந்து தொடங்குவது. எப்படித் தொடங்குவது. அடுத்தடுத்த நிலைகளுக்கு எப்படிச் செல்வது? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியாமல் தவித்திருக்கிறேன். பல புத்தகங்களைப் படித்தும், பலரோடு பேசியும், பல இரவுகள் தூக்கமின்றி சிந்தித்தும் கழித்திருக்கிறேன் (பிறகு பகல் நேரங்களில் தூங்கி அசடு வழிந்தது தனிக் கதை).

    ஒரு வழியாக, நான் தனியாகத் தொழில் தொடங்கிய பிறகு, வளர்தொழிலில் பணியாற்றிய அனுபவம் இருந்த ஒரே காரணத்திற்காக பலரும் தொழில் தொடங்குவது குறித்த சந்தேகங்களைக் கேட்டனர்.

    Ramkumar Singaram Tamil author

    அவற்றில் பெரும்பாலானவை என் மனதில் தோன்றிய கேள்விகள்.

    கடந்த 15 வருட காலத்தில், தொழில் தொடர்பாக எனக்குத் தோன்றிய கேள்விகள் மற்றும் என்னிடம் பலர் கேட்ட கேள்விகளின் தொகுப்பே இப்புத்தகம்! உங்களுக்கு தொழில் தொடங்கும் ஆர்வம் இருந்தால், நிச்சயம் உங்கள் மனதில் எழும் கேள்விகளில் பலவற்றுக்கு இந்நூலில் பதில் இருக்கும். நீங்கள் சிந்திக்காத பல கேள்விகளும் கூட இதில் இடம் பெற்றிருக்கக்கூடும்.

    சில கேள்விகளுக்கான விடைகள் உங்களுக்கு திருப்தி தராமலோ அல்லது மாற்றுக் கருத்தைக் கொண்டதாகவோ கூட இருக்கலாம். ஆனால் அப்படி ஒரு கேள்விக்கும் நீங்கள் விடை சிந்திக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டால் அதுவே போதுமானது.

    தொழில் தொடங்க வேண்டும் என்ற சிந்தனை உங்களுக்குள் எழுந்துவிட்டால் அந்தச் சிந்தனையை மேலும் வளர்த்தெடுத்து, நீங்கள் அடுத்தடுத்த முடிவுகளை மேற்கொள்ள இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும்.

    இந்த நூல் உங்கள் ஐயங்களை எல்லாம் தீர்க்கும் என்று சொல்வதைவிட, உங்கள் சிந்தனைப் பரப்பை இன்னும் விரிவாக்கும் என்று சொல்வதுதான் சரி. ஏனெனில் ஒரு தொழில் முனைவரின் அனைத்து ஐயங்களையும் யாராலும் தீர்த்துவிட முடியாது. ஒருவர் கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டால், அவர் சிந்திப்பதை நிறுத்திவிட்டார் என்று பொருள். அப்படியானால் அவர் தொழில் முனைவரே அல்ல. சிந்திப்பவரே தொழில் முனைவர். சிந்தனையை அகலப்படுத்துவதே நூலின் நோக்கம்.

    தொடர்ந்து படியுங்கள்! மென்மேலும் சிந்தியுங்கள்!! சிந்தனைக்குச் செயல் வடிவம் தந்து உழைக்க ஆரம்பியுங்கள்!!!

    காசோலைகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

    தோழமையுடன்,

    இராம்குமார் சிங்காரம்

    முதன்மை செயல் அதிகாரி,

    கேட்டலிஸ்ட் பப்ளிக் ரிலேஷன்ஸ் (பி) லிட்.,

    எண். 3, இரண்டாவது தளம், ‘டி’ பிளாக்,

    ஜெமினி பார்சன் அபார்ட்மென்ட்ஸ்,

    599, அண்ணா சாலை, சென்னை - 600 006.

    தொ.பே: 044-2822 0003/7/8

    நன்றி சொல்லவே.

    இந்த புத்தகம் வெளிவருவதற்கு பலருடைய உறுதுணையும், உற்சாகமும் உதவி புரிந்துள்ளன. அவர்கள் அனைவரது பெயர்களையும் தனித்தனியே பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.

    உள்ளே...

    1. ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல சுலபமா...?

    2. பலூன் கற்றுத் தரும் பாடம்

    3. அவமானம் அது வருமானம்!

    4. திருமணத்துக்கு முன்பா, பின்பா?

    5. பகுதிநேரமாகத் தொழில் தொடங்கலாமா?

    6. வீட்டிலிருந்தே தொழில் தொடங்கலாமா?

    7. மனைவி, உறவினர்களை தொழிலில் சேர்க்கலாமா...?

    8. பங்குதாரர்கள் எப்போது தேவை...?

    9. முதலாளி ஆக அடிப்படை ஃபார்முலா

    10. நீ யாரென்று சொல்! உன் தொழிலைச் சொல்கிறேன்!

    11. தொழிலாளி, முதலாளி ஆக என்ன வழி...?

    12. உறுதியாக லாபம் தரக்கூடிய தொழில் எது?

    13. வெற்றி நிச்சயம். இது வேத சத்தியம்!

    14. காலாண்டுத் தொழிலில் கால் வைக்கலாமா...?

    15. எல்லோரும் மாவாட்டக் கத்துக்கிடணும்!

    16. எங்கே யாரை நியமிப்பது.?

    17. உங்களாலும் விற்க முடியும்!

    18. கடன் வாங்கித் தொழில் தொடங்கலாமா?

    19. பிரேக் ஈவன் பகவான் தென்படுகிறாரா...?

    20. பின் விளைவுகளைச் சமாளிப்பது எப்படி...?

    21. ஆற்றின் போக்கில் போகும் இலையாகலாமா...?

    22. சொல்லா, செயலா...?

    23. கேரக்டர் முக்கியம்

    1. ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல சுலபமா...?

    தொழில் தொடங்க எல்லோருக்கும் ஆசை தான். ஆனால், எத்தனை பேரால் முடிகிறது?

    தொழில் தொடங்க முதலீடு என்பது இரண்டாம் பட்சம்தான். முயற்சியும் மூளையும்தான் முக்கியம் என்று சிலர் போகிறபோக்கில் சொல்லலாம். இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது?

    ‘என் அறிவுக்கும் திறமைக்கும் நான் தொழிலில் இறங்கினால் நிச்சயம் வெற்றிதான். இறங்கத்தான் தயக்கம்’ என்பது பலரது நிலை. இவர்களது கையைக் கட்டிப் போடுவது எது?

    ‘மூணாங்கிளாஸ் படிச்ச அவனுக்கே காசு கொட்டும்போது, நானெல்லாம் பிசினஸ் பண்ணினா, எவ்வளவோ சம்பாதிக்க முடியும். இறங்கலை. அவ்வளவுதான்’ என்று சவடால் அடிப்பவர்களைத் தடுப்பது எது?

    வீட்டு வாடகை அல்லது வீடு வாங்கியதற்கான வங்கிக் கடன், குடும்பத்தினரின் சாப்பாட்டுச் செலவு, குழந்தைகளின் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு, போக்குவரத்துச் செலவு என அடிப்படையான மாதச் செலவுகளை சமாளிக்க உதவும் தொகையை யாராவது கொடுக்கத் தயாராக இருந்தால்தான் தொழில் பக்கமே போவதென்று பார்ட்னர்கள் தேடி அலைபவர்கள் பலர்.

    தொழிலைப் பொறுத்தவரை ரிஸ்க் எடுத்தவர்களே ஜெயித்திருக்கிறார்கள். மற்றவரெல்லாம் ரஸ்க் டயலாக் விட்டுக் கொண்டு கரையிலேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.

    தைரியமாகத் தொழிலில் இறங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? தொழிலில் போட்ட பணம் திரும்பி வரும் என்பதற்கும் நிலையான வருமானம் வரும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. இன்றைக்கு நல்ல நிலையில் தொழில் வருமானத்தோடு இருப்போரெல்லாம் ரிஸ்க் எடுக்கத் துணிந்தவர்கள்தான்.

    ‘ரிஸ்க் எடுக்கத் தயார் நான்’ என்பவர்களுக்கு அடுத்து காத்திருக்கிறது இன்னும் எண்ணற்ற கேள்விகள். அவை இதோ...

    1. என்ன தொழில் தொடங்குவது?

    2. தெரியாத தொழிலில் இறங்கலாமா?

    3. வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்குவது சரியா?

    4. திருமணம் தடைக்கல்லா...?

    5. எந்த வயதில் தொடங்குவது?

    6. பகுதி நேரமாகத் தொழில் புரியலாமா?

    7. போட்டி இல்லாத தொழிலை அடையாளம் காண்பது எப்படி...?

    8. பங்குதாரரைச் சேர்த்துக் கொள்ளலாமா?

    9. பெரிய முதலீடா, சிறிய முதலீடா?

    10. முதலீட்டைப் புரட்டுவது எப்படி?

    11. தொழிலில் ஈடுபட்டபின் வெற்றிக்கு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?

    12. விற்பனை விலை நிர்ணயம் செய்வது எப்படி?

    Enjoying the preview?
    Page 1 of 1