Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Konjam Mayajaalam! Konjam Moolai!
Konjam Mayajaalam! Konjam Moolai!
Konjam Mayajaalam! Konjam Moolai!
Ebook82 pages59 minutes

Konjam Mayajaalam! Konjam Moolai!

By Meow

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான் மிகவும் ரசித்து எழுதிய கதைகளில் இதுவும் ஒன்று. ஒரு விரலின் அளவே உடைய பையன், வான் உலகத்தில் இருந்து கீழே பூமியில் விழுந்து விடுகிறான். அவனை அவனது அம்மாவிடம் சேர்ப்பதற்காக 'வானக் குகை' வழியாக மாலுவும் பாலுவும் அழைத்துச் செல்கிறார்கள். வழியில் எட்டு பூதங்கள் இருக்கின்றன. மாயாஜால வித்தைகளையும் தங்களது மூளைகளையும் உபயோகித்து எவ்வாறு அந்த பூதங்களைத் தாண்டிச் செல்கின்றனர் என்பதுதான் கதை. பல வண்ணச் சித்திரங்களுடன் எளிய தமிழில் உள்ள இந்தப் புத்தகத்தை சிறுவர்களுக்குப் பரிசளியுங்கள்; குழந்தை மனதுடைய பெரியவர்களும் குதூகலத்துடன் வாசியுங்கள்.

Languageதமிழ்
Release dateDec 27, 2021
ISBN6580150107722
Konjam Mayajaalam! Konjam Moolai!

Related to Konjam Mayajaalam! Konjam Moolai!

Related ebooks

Reviews for Konjam Mayajaalam! Konjam Moolai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Konjam Mayajaalam! Konjam Moolai! - Meow

    https://www.pustaka.co.in

    கொஞ்சம் மாயாஜாலம்! கொஞ்சம் மூளை!

    Konjam Mayajaalam! Konjam Moolai!

    Author:

    மியாவ்

    Meow

    For more books

    http://www.pustaka.co.in/home/author/meow

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. வானக் குகை

    2. முதல் பூதம்

    3. இரண்டாம் பூதம்

    4. மூன்றாம் பூதம்

    5. நான்காவது பூதம்

    6. ஐந்தாவது பூதம்

    7. ஆறாவது பூதம்

    8. ஏழாவது பூதம்

    9. எட்டாவது பூதம்

    1. வானக் குகை

    ஓர் ஊரில் பாலு, மாலு என்று ஒட்டிப் பிறந்த இரண்டு சுட்டிக் குழந்தைகள் வசித்து வந்தனர். அவர்களுக்கு வயது எட்டு. பாலு சாதுவானவன்; புத்திசாலி. மாலு தைரியசாலி; துடிப்பானவள்.

    அவர்கள் தினமும் அவர்களது வீட்டைச் சுற்றி உள்ள தோட்டத்தில் விளையாடுவார்கள்.

    அப்படி ஒருநாள் அவர்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருக்கும் போது, குதி! குதி! இன்னும் உயரமாக! இன்னும் உயரமாக! என்று யாரோ தூரத்தில் இருந்து கத்துவது போன்று அவர்களுக்குக் கேட்டது.

    சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்ப்பதற்காக தோட்டம் முழுவதும் தேடினார்கள். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை.

    பாலு, அவ்வளவுதான். இனிமேல் என்னால் தேட முடியாது. என்று கூறியபடி ஒரு ஆலமரத்தில் போய் சாய்ந்து கொண்டான்.

    மாலு தோட்டத்தைச் சுற்றிச் சுற்றித் தேடிக் கொண்டிருந்தாள். அப்போது பாலுவின் தலைமேல் ஏதோ பூச்சி போன்று ஒன்று குதிக்கவே, மாலு ஓடிவந்து அதைத் தட்டிவிட்டாள். அது பறந்து போய்க் கீழே விழுந்தது.

    அடுத்த நொடி, அய்யோ அம்மா! என்று முனகலும் கேட்டது.

    உடனே பாலுவும் மாலுவும் எட்டிப் பார்த்தனர். அங்கு ஒரு விரல் அளவே உள்ள பையன் கீழே முனகியபடி படுத்திருந்தான்.

    மாலு அவனைக் கையில் எடுத்து ஆச்சரியமாய்ப் பார்த்தாள்.

    பாலு, நீ பார்க்க எங்களை மாதிரியே இருக்கே. ஆனால் கொஞ்சம் குள்ளம். என்றான்.

    என்னது கொஞ்சமா? நம்ப விரல் அளவுதான் இருக்கான். என்றாள் மாலு.

    அந்த விரல் நீளப் பையன் மெல்ல வாய் திறந்தான். உங்களைக் காண, நீங்களும் என்னைப்போல் தான் இருக்கிறீர்கள். ஆயினும், உயரம் அதிகம்! என்றான்.

    மாலு, ஆமா நீ ஏன் வித்தியாசமா பேசறே? என்றாள் ஆச்சரியமாக.

    பாலு, அவன் தமிழ்தான் பேசறான். தூய தமிழ். என்று சிரித்தான்.

    அதற்கு அந்த விரல் நீளப் பையன், ஆமாம் ஆச்சரியமாக இருக்கிறது. உங்களது மொழியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறதே! என்றான்.

    மாலு, சரி..சரி. அதை விடு. உன் பேர் என்ன? நீ யாரு? எப்படி இங்கே வந்தே? என்றாள்.

    அந்த விரல் நீளப் பையன் புன்னகையுடன், எனது பெயர் சண்கல மண்கல வான பிரபஞ்ச மழையாய கடலாய…. என்று கூறிக் கொண்டிருக்கும்போதே,

    Enjoying the preview?
    Page 1 of 1