Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthiyathaai Oru Puthir
Puthiyathaai Oru Puthir
Puthiyathaai Oru Puthir
Ebook94 pages33 minutes

Puthiyathaai Oru Puthir

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Puthiyathaai Oru Puthir

Read more from Rajeshkumar

Related to Puthiyathaai Oru Puthir

Related ebooks

Related categories

Reviews for Puthiyathaai Oru Puthir

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthiyathaai Oru Puthir - Rajeshkumar

    18

    1

    க்ரே வண்ண டி.வி. திரையில் வீடியோ ஓடிக்கொண்டிருக்க - தலைக்கு ஹெட்போனை மாட்டிக்கொண்டு சவுண்ட் மிக்ஸிங்கை சரிபார்த்துக் கொண்டிருந்தாள் சியாமளா. சட்டென்று வயலின் இசை நீளமாய் இழுபட - ஸ்விட்சை அணைத்து, திரையை இருட்டாக்கிவிட்டு தனக்குப் பக்கத்தில் நின்றிருந்த சவுண்ட் என்ஜீனியரிடம் திரும்பினாள்.

    ‘மிஸ்டர்... உதயகுமார்..."

    மேடம்...

    நம்ம வீடியோ கேஸட்ல ஒரு மில்லி மீட்டர் பிட் கூட போரடிக்கிற மாதிரி இருக்கக்கூடாது. நம்ம கம்பெனி கேஸட்ஸுக்கு ஜனங்க மத்தியில் எவ்வளவு நல்ல இமேஜ் இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா...?

    தெ... தெரியும் மேடம்...

    பின்னே... ஏன் இந்த அழுகை வயலினை போட்டீங்க?

    கேப் ம்யூஸிக்தானேன்னு நினைச்சு... இன்ஸர்ட் பண்ணினேன்.

    ஸீ...! இப்படி வயலினை சோகமா இழுக்கிறது உங்களுக்கு போரடிக்கலை... பணம் கொடுத்து... நம்ம வீடியோ மேகஸினை வாங்கறவன் இதை எப்படி ரசனையோடு ரசிப்பான்...

    ஸாரி... மேடம்...

    ஸாரி சொல்லிட்டா போதாது உதயகுமார்... கொஞ்சம் க்ரியேட்டிங் திங்கிங் வேணும்... அந்த கேப் ம்யூஸிக்ல வயலினை - போடறதுக்கு பதிலா... பாங்க் கோஸ் போட்டிருந்தா... ஆப்டா இருக்குமே... அதை எரேஸ் பண்ணிட்டு போட்டுடுங்க...

    எஸ்... மேடம்...

    சியாமளா - அந்த அறையைவிட்டு வெளியே வந்தபோது ஆபீஸ் பாய் காதர் எதிர்பட்டான்.

    அம்மா...

    என்னடா...?

    தினேஷ் ஸார் உங்களைக் கூப்பிடறார்...

    தன்னுடைய ரெஸ்ட் அறைக்குப் போக நினைத்தவள் - இடது பக்கமாய்த் திரும்பி - மொஸைக் வராந்தாவில் நடந்தாள். இருபதடி தூரம் போனதும் கறுப்புக் கண்ணாடி வேய்ந்த கதவு வர - அதன் மேல் தங்க வர்ண எழுத்துக்கள் மின்னின. எடிட்டர்ஸ்: சியாமளா அண்ட் தினேஷ்.

    கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனாள்.

    அறைக்குள் அகலமாக இரண்டு கண்ணாடி மேஜைகள். அவற்றுக்குப் பின்புறம் சுழல் நாற்காலிகள். ஒரு மேஜையில் தினேஷ் பெயரும், இன்னொரு மேஜையில் சியாமளாவின் பெயரும் - முக்கோணக் கட்டைகளில் எழுதி வைக்கப்பட்டு தெரிந்தன அறையில் தினேஷ் தவிர வேறு ஒரு நபரும் இருந்தார். கெச்சலாய். மாநிறமாய் இருந்த அவரை பார்த்தபடி தினேஷிடமே கேட்டாள்.

    தினேஷ்! ரூமுக்கு எப்ப வந்தே...?

    இப்பத்தான்...

    அந்த சினி பிட் கிடைச்சுதா...?

    ஒரு வழியா கிடைச்சுது...! அந்த பிட்டை நடிகைகிட்டயிருந்து வாங்கறதுக்குள்ளே... பெரிய பாடா போச்சு... ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடறா...

    நம்ம வீடியோ மேகஸீனுக்கு சினிமாவே வேண்டாம்னு சொன்னா நீ எங்கே கேக்கறே...?

    சினிமா ஈஸ் ஏ மஸ்ட்...

    இருக்கையில் உட்கார்ந்தவள்

    ஸார் யாரு...? என்றாள்.

    தினேஷ் சொன்னான்.

    இந்த நாடு - பத்திரிகையின் நிருபர்.

    ஓ... இன்னிக்கு வர்றதா சொல்லியிருந்தீங்களே...? நான் மறந்தே போயிட்டேன்.

    நிருபர், பாழான பற்களில் சிரித்தார். ரொம்ப நாளா உங்களை இண்டர்வியூ பண்ணி - எங்க பத்திரிகையில் ஒரு கவர் ஸ்டோரியா போடணும்ன்னு எனக்கு ஆசை...

    சியாமளா புன்னகைத்தாள். நாங்க ஒண்ணும் அவ்வளவு பெரிய பிக்ஷாட்ஸ் இல்லையே...

    யானைக்குத் தன் பலம் தெரியாதுன்னு சொல்லுவாங்க... உங்க வீடியோ பத்திரிகைக்கு... ஜனங்க மத்தியில் - எவ்வளவு பெரிய ஆர்வம் இருக்குன்னு எனக்குத்தான் ஸார் தெரியும்...

    இட்ஸ்... ஆல்ரைட்... சரியா உங்களுக்கு முப்பது நிமிஷம் தர்றேன். அதுக்குள்ளே போட்டோ... பேட்டி... எல்லாத்தையும் முடிச்சக்கணும்...

    நிருபர் ஒரு சின்ன டயரியை பிரித்து வைத்துக் கொண்டார். பால் பாயிண்ட் பேனாவை பிதுக்கிக் கொண்டே கேட்டார். உங்க வீடியோ பத்திரிகைக்கு ‘நதி’ன்னு ஏன் பேர் வெச்சீங்க...?

    நதியை மேட்டில் நிறுத்தி வைக்க முடியாது. அதைப்போல் சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்களை நோக்கித்தான் எங்க சேவையும் இருக்கும். நாங்க நடத்தற வீடியோ மேகஸீனில் சமுதாய பொறுப்பும், உணர்வும் இருக்கும்... நாங்க பொழுதுபோக்குக்காக இந்த வீடியோ மேகஸீனை நடத்தலை...

    சமுதாயத்தோட அடிமட்டத்துல இருக்கிறவங்களோட அவலங்களை எடுத்துக்காட்டி - அதுக்கு நிவாரணம் தேடறதுதான் உங்க பணி இல்லையா...?

    ஆமா...

    உங்க மேகஸீன்ல சினிமா செய்திகளும் இருக்கே...?

    இந்தக் கேள்விக்கு சியாமளா தினேஷைப் பார்க்க - தினேஷ் நிருபரிடம் திரும்பினான். எங்க வீடியோ பத்திரிகைக்கு சமுதாய உணர்வும் இருக்கு; பணத்தேவையும் இருக்கு... கசப்பான மருந்தை சாப்பிடும்போது - கையில் கொஞ்ச இனிப்பையும் வெச்சுக்கிறோமே... அதே மாதிரிதான் இதுவும். சாதாரண ஜனங்களும் எங்க பத்திரிகையை திரும்பி பார்க்கணும்ன்னா... இந்த சினிமா என்கிற இனிப்பு தேவைதான்.

    இப்படி ஒரு வீடியோ பத்திரிகை நடத்தற எண்ணம். உங்களுக்கு எப்படி வந்தது?

    "நானும் சியாமளாவும்... ஒரே காலேஜில் எம்.ஏ. ஜர்னலிசம் படிச்சோம். ரெண்டு பேர்க்குமே ஓரளவு இலக்கிய

    Enjoying the preview?
    Page 1 of 1