Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Simla Ramya
Simla Ramya
Simla Ramya
Ebook60 pages40 minutes

Simla Ramya

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
Simla Ramya

Read more from Rajeshkumar

Related to Simla Ramya

Related ebooks

Related categories

Reviews for Simla Ramya

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Simla Ramya - Rajeshkumar

    12

    1

    ரகுநாதன் பதினேழாவது தடவையாக, தன் பாக்கெட்டுக்குள் வைத்திருந்த ரம்யாவின் அந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை எடுத்துப் பார்த்தான்.

    ஆபீஸின் உச்சகட்ட நேரம் அது.

    உடம்பு பூராவும் ஒரு சிலிர்ப்பு ஓடியது. ரம்யா போட்டோவில் நேர்பார்வை பார்த்து மனசை நொறுங்கடித்தாள். காமிராவை க்ளிக் செய்திருந்த நேரம், லேசாய் வலது பக்க உதட்டைச் சுழித்திருந்தாள். எனவே பார்வையில் ஏராளமாய் போதை உட்கார்ந்திருந்தது. ஒரு ஜெனரேட்டர் மிஷன் மாதிரி மின்சாரத்தை உற்பத்தி செய்தது.

    ரகுநாதன் ரம்யாவின் போட்டோவை பார்வையால் கழுவிய அதே நேரம் அறையின் தள்ளு கதவுகளுக்கப்பால் ப்யூன் பரமசிவத்தின் தலை தெரிந்தது.

    நிமிர்ந்தான்.

    எரிச்சலாய் என்ன பரமசிவம்? என்று கேட்டான்.

    பரமசிவம் பவ்யமாய் உள்ளே நுழைந்து சொன்னான். உங்க சிநேகிதர் மோகன் வந்து காத்திட்டிருக்கார் ஸார்... உள்ளார வரச் சொல்லவா...?

    ஆர்வமானான் ரகுநாதன் மோகனா...? வரச் சொல்லு... வரச் சொல்லு... கிறுக்குப் பய நேரா உள்ளே வரவேண்டியது தானே. ஸேல்ஸ் ரெப் மாதிரி வெளியே உட்கார்ந்திட்டிருக்கறாரா!

    பரமசிவம் வெளியே போனான்.

    அடுத்த நிமிஷத்தின் ஆரம்பத்தில் மோகன் உள்ளே வந்தான். நீலநிற ஹெல்மெட்டைக் கையில் குழந்தை மாதிரி வைத்திருந்தான். வெய்யிலில் வியர்த்துப் போய் தலை கலைந்திருந்தான். கண்களை கூலிங்கிளாஸ் கவ்வியிருந்தது. சராசரி உயரம். மாநிறம்.

    வாடா... பெரிய மனுஷா... வந்ததும் நேரா உள்ளே வர வேண்டியது தானே. பர்மிஷன் கேட்டுத்தான் வரணுமா...?

    ரகுநாதன் கேட்க - மோகன் சிரித்தான்.

    என்ன இருந்தாலும் இந்த கம்பெனிக்கு நீ ஜி.எம். வெளியே நீ எப்படியிருந்தாலும் உள்ளே வர்றப்ப உனக்கு நான் தர மரியாதையை தந்துதானே ஆகணும்...?

    சரி... உட்கார்... நல்ல வெய்யில்ல வந்திருக்கே... என்ன சாப்பிடறே...?

    எதுவேணுமின்னாலும் சொல்லு...

    ரகுநாதன் பஸ்ஸரை அழுத்தி - பரமசிவத்தை வர வழைத்து இரண்டு ரோஸ்மில்க்கை கொண்டு வரச் சொன்னான். பரமசிவம் போனதும் மோகனின் பக்கமாய் திரும்பினான்.

    அப்புறம்... என்ன தொரை... இன்னிக்கு அதிசயமா என்னைத் தேடிட்டு ஆபீஸுக்கு வந்திருக்காரு... என்ன விஷயம்...? மச்சினிக்கு வேலை கேட்டு வந்தியா?

    அதெல்லாம் போன மாசமே முடிஞ்சாச்சு...

    சரி... இப்ப என்ன...?

    அவசரமா கொஞ்சம் பணம் வேணும்டா! போன்ல கேட்டா அது சரியாயிருக்காதுன்னுதான் நேர்ல வந்தேன்... வர்ற வழியில பாரீஸ் கார்னர் கிட்டே உன்னோட மாமாவை பார்த்தேன்... இன்னிக்கு சாயந்தரம் நாலு மணிக்கு அடையார்ல - ஒரு பெண்ணைப் பார்க்கப் போறியாமே?

    ஆமா...

    அடப்பாவி... யார்ரா... அந்த ஏமாந்தவன்... உனக்கு போய் பெண்ணைத் தர்றவன்? மோகன் சிரித்துக் கொண்டே கேட்க ரகுநாதன் புன்னகைத்தான்.

    "ஏண்டா... எனக்கென்ன குறைச்சல்...? தினசரி ராத்திரி குவார்ட்டர் விஸ்கி சாப்பிடுவேன்... அது தப்பா...? வாரத்துக்கு ஒரு தபா ஏதாச்சும் ஒரு பட்சியைத் தொடுவேன் அது தப்பா..? எல்லாருமே கல்யாணத்தை பண்ணிக்கிட்டு அந்த தப்புக்களை பண்ணிட்டிருக்காங்க...

    Enjoying the preview?
    Page 1 of 1