Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anthamaan Abaayam
Anthamaan Abaayam
Anthamaan Abaayam
Ebook169 pages53 minutes

Anthamaan Abaayam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Anthamaan Abaayam

Read more from Rajeshkumar

Related to Anthamaan Abaayam

Related ebooks

Related categories

Reviews for Anthamaan Abaayam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anthamaan Abaayam - Rajeshkumar

    25

    இந்திய கடல் பகுதியில் உடைந்த எலும்புத் துண்டுகள் போல் தெரியும் அந்தமான் நிகோபார் தீவுகள் உலகத்தில் உள்ள சுற்றுலா பயணிகளுக்கு வெகு பரிச்சயமானவை. அந்தமான் தீவு பூகோள வசதிக்காக நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 1. வடக்கு அந்தமான், 2. தெற்கு அந்தமான், 3. மத்திய அந்தமான், 4, லிட்டில் அந்தமான்.

    1

    அந்தமான் அழகாய் தென்னை மரக் கூட்டங்களுக்கு மத்தியில் நல்ல ஆரஞ்சு வர்ண நிறத்தில் விழித்துக் கொண்டிருந்தது. கிழக்குப் பக்க கடல் பூராவும் குங்குமம் தூவிய தினுசில் கடலில் அலைகள் அசைந்தன. கடற்பறவைகள் தாழ்வாக பறக்க சூரியன் கொஞ்சமாய் தலை நீட்டியிருந்தான்.

    ஹோட்டல் ஷாம்பேனின் மூன்றாவது மாடி ஜன்னலிலிருந்து பைனாகுலர் வழியாக கடல் பரப்பைப் பார்த்துக் கொண்டிருந்த மேகலை ‘உச்’ கொட்டினாள்.

    வாஷ்பேசின் பக்கத்தில் நின்று கண்ணாடியில் முகம் பார்த்து எலக்ட்ரிக் ஷேவரால் மோவாயை உழுது மொசைக்காய் மாற்றிக் கொண்டிருந்த கதிர் திரும்பிப் பார்த்து என்ன? என்றான்.

    அந்தமான் கடல் அழகைப் பார்க்க ரெண்டு கண்ணு போதாது கதிர்...

    நோ... யூஸ்... இனிமே வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை. பிரம்மா நமக்கு அலாட் பண்ணினதே ரெண்டு கண்ணுதான்...! இனிமே எக்ஸ்ட்ராவா உனக்கு கண்ணு வேணும்ன்னா... சிவபெருமானை வேண்டியோ மகாவிஷ்ணுவை வேண்டியோ தவம் இருக்க வேண்டியதுதான்.

    அந்த அழகான சுருட்டை முடி மேகலை பைனாகுலரிலிருந்து கண்களை விலக்கி அவனைப் பார்த்து தன் பெரிய கண்களால் முறைத்தாள்.

    கதிர்...

    ம்...

    உனக்கு கொஞ்சம்கூட ரசனையே கிடையாது.

    அது இல்லாமே வாழ முடியாதா என்ன...? சொல்லிவிட்டு கதிர் மீசை பரப்பை கவனமாய் மேய்ந்தான்.

    மேகலை தன் வெண்டைப் பிஞ்சு விரல்களால் நோகாமல் தலையில் அடித்துக் கொண்டாள்.

    உன்னைக் கட்டிக்கப் போறவ பாவம் பண்ணியிருக்கணும்...

    உன்னைப் பார்த்தா பாவம் பண்ணினது மாதிரி தெரியலையே...?

    என்னைக் கல்யாணம் பண்ணிக்கிற ஆசையை உன் மனசுக்குள்ளே பயிர் பண்ணி வெச்சிருந்தா அதை அழிச்சிடு...

    ஸாரி... உரம் போட்டு வளர்த்த பயிர்... அதைக் கல்யாண நாளன்னிக்குத்தான் அறுவடை பண்ண முடியும்... சொல்லிக் கொண்டே வாஷ்பேஷனில் முகம் கழுவி டவலால் முகத்தை ஒற்றியபடி மேகலைக்குப் பக்கத்தில் வந்து நின்றான். என்னைத் தவிர உன் கழுத்துல எவன் தாலி கட்டுவான் பார்த்துடறேன்... வைத்தீஸ்வரன் கோயில் ஏட்டுச் சுவடியிலேயே என்ன எழுதியிருக்கு தெரியுமா...?

    என்ன எழுதியிருக்கு...?

    ஆபரணப் பெயர் கொண்ட ஆரணங்கு ஒருத்தி உனக்கு இல்லக் கிழத்தியா வருவா...! மேகலைங்கிறது ஒரு ஆபரணம்.

    மேகலை கதிரின் தலை முன்னுச்சி முடியைப் பிடித்து ஆட்டினாள். விதி வலிது. உன்னையே கல்யாணம் பண்ணித் தொலைக்கிறேன்.

    மேஜை மேல் இருந்த - டெலிபோன் கூப்பிட்டது.

    கதிர் போய் ரிஸீவரை எடுத்தான்.

    எஸ்...

    ஹோட்டல் ரிசப்ஷனிலிருந்து பேசினார்கள்.

    ரிசப்ஷன் ஹியர்! மிஸ்டர் கதிர்...?

    ஹோல்டிங்...

    உங்களைப் பார்க்கிறதுக்காக சவுகத் அலி என்பவர் வந்திருக்கார். ரிசப்ஷனில் காத்திருக்கிறார். அவரைப் பார்க்க நீங்களே இங்கு வருகிறீர்களா? இல்லை... அவரை உங்களுடைய அறைக்கு அனுப்பி வைக்கட்டுமா...?

    அவரையே அனுப்பி வையுங்கள்... சொல்லிவிட்டு கதிர் ரிஸீவரை அதனிடத்தில் அமர்த்த, மேகலை கேட்டாள்.

    போன்ல யாரு...?

    சவுகத் அலி...

    என்ன இவ்வளவு காலையில வந்திருக்கார்... ஏதோ விஷயம் இருக்கு.... வெறும் ஹலோ சொல்றதுக்காக மட்டும் வரக்கூடியவர் இல்லை சவுகத் அலி...

    வரட்டும். பார்க்கலாம்...

    காத்திருந்தார்கள். இரண்டு நிமிஷ நேர மரணத்துக்குப் பிறகு கதவு தட்டப்பட்டது.

    டொக்... டொக்...

    எஸ்... கம்மின்...

    கதவைத் திறந்து கொண்டு சவுகத் அலி உள்ளே நுழைந்தான். இளைஞன். முகத்தை தாடி மொய்த்திருந்தது. கட்டம் போட்ட சர்ட். கண்களில் கண்ணாடி.

    குட்மார்னிங்...

    குட்மார்னிங்... வா... சவுகத்...

    சவுகத் அலி கதவை சாத்திவிட்டு சுவரோரமாய் போட்டிருந்த நாற்காலிக்குப் போய் சாய்ந்தான். கண்ணாடியைக் கழற்றிய போது கண்களில் கனமான கவலை தோய்ந்திருப்பது தெரிந்தது.

    கதிரும் மேகலையும் பக்கத்துக்கு ஒருவராய் நெருங்கினார்கள்.

    ஏதாவது செய்தி உண்டா சவுகத்...?

    இல்லாவிட்டால் வருவேனா...?

    என்ன செய்தி...?

    நேற்று ராத்திரி போர்ட் ப்ளேயரிலிருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் லிட்டில் அந்தமானுக்குப் பக்கத்தில் நீர்க் கண்ணி வெடிகளால் தகர்க்கப்பட்டிருக்கு... நஷ்டம் கோடிக் கணக்கில்...

    மை குட்னஸ்...

    கடந்த ஒரு மாத காலத்தில் இது இரண்டாவது சம்பவம்...

    யாராவது பிடிபட்டாங்களா...?

    இல்லை...

    சரக்குக் கப்பலில் எத்தனை பேர் இருந்தாங்க...?

    பதினேழு பேர்...! அதில் பத்துபேர் மரணம்...!

    கதிர் நெற்றியைப் பிடித்துக் கொண்டான். யார் இதை பண்றாங்க... அவங்க நோக்கம் என்னன்னும் தெரியலை... நாம ஏதாவது கண்டுபிடிப்போங்கிற நம்பிக்கையில், டெல்லி க்ரைம் ப்ராஞ்ச் ‘க்யூ’ விங்கில் ஸ்பெஷல் ஆபீஸர்களா குப்பை கொட்டிகிட்டிருந்த நம்ம மூணு பேரையும் இங்கே உள்துறை அமைச்சகம் அனுப்பி வெச்சாங்க... ஆனா இதுவரைக்கும் நம்மாலே ஒண்ணையும் ட்ரேஸ் பண்ண முடியலை... அந்தமானில் நடந்துட்டு வர்ற வன்முறைச் செயல்களினால் வெளிநாட்டு டூரிஸ்ட்கள் வர்றது ரொம்பவும் குறைஞ்சு போச்சு.

    ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்ட சவுகத் அலி முதல் புகையை அண்ணாந்து ஊதிவிட்டு கதிரைப் பார்த்தான்.

    எனக்கொரு சின்ன க்ளூ கிடைச்சிருக்கு.

    என்ன...?

    போர்ட் ப்ளேயரில் இருந்து நாலுமணி நேர பயண தூரத்தில் ஹேவ்லாக் ஐலேண்ட் இருக்கு...

    ஆமா. மேப்ல பார்த்தோம்...

    ராத்திரி நேரங்கள்ல அந்த ஹேவ்லாக் ஐலேண்டுக்கு மேலே கலர் கலரா வெளிச்சப் புள்ளிகள் தெரியறதா கோஸ்டல் கார்ட்ஸ் மெஸேஜை கன்வே பண்ணியிருக்காங்க....

    அது விமானமாகவோ ஹெலிகாப்டராகவோ இருந்திருக்கலாம்.

    சவுகத் அலி தலையை ஆட்டினான்.

    அது விமானமோ ஹெலிகாப்டரோ அல்ல என்று இங்கே உள்ள ஏர்ஃபோர்ஸ் அலுவலகம் திட்டவட்டமாய் தெரிவித்து விட்டது.

    அது உண்மையா...?

    உண்மைதான்...

    எப்படி உண்மைன்னு சொல்றே...?

    "ஹேவ்லாக் ஐலேண்டுக்கு மேலே விமானமோ

    Enjoying the preview?
    Page 1 of 1