Oosi Munaiyil Usha
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Uchi Nila Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Oru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oosi Munaiyil Usha
Related ebooks
Mugamatra Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsInbavin Irandavathu Nizhal Rating: 5 out of 5 stars5/5Welldone Vivek Rating: 0 out of 5 stars0 ratingsIni Illai Ilaiyuthirkaalam Rating: 5 out of 5 stars5/5Neela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Virothiye! Rating: 0 out of 5 stars0 ratingsParappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Ullaththaik Killaathey! Rating: 0 out of 5 stars0 ratingsMatroru Mahaabaratham Rating: 3 out of 5 stars3/5Kovaiyil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Arai Vinaadi Aniyaayam Rating: 0 out of 5 stars0 ratingsPesum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsAppuram... Anitha...? Rating: 5 out of 5 stars5/5Thaduththaal Kooda Tharuven Rating: 0 out of 5 stars0 ratingsIllavasam Oru Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsMoodu Pani Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsThalaippu Seithi Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Pagal Rating: 5 out of 5 stars5/5Aabathukku Oru Azhaipithazh Rating: 1 out of 5 stars1/5Sivappu Thendral Rating: 0 out of 5 stars0 ratingsYarum Paarkkatha Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsSathamillamal Rathamillamal Rating: 0 out of 5 stars0 ratingsDecember Nila and Irandil Ondru Paarthu Vidu Rating: 0 out of 5 stars0 ratingsMiss Devathai 1996 Rating: 0 out of 5 stars0 ratingsAkalyavin Aagayam Rating: 0 out of 5 stars0 ratingsPuthiyathaai Oru Puthir Rating: 0 out of 5 stars0 ratingsPaththu Vinaadi Aabathu! Rating: 0 out of 5 stars0 ratingssaagavaram Rating: 0 out of 5 stars0 ratingsOru Maalainera Maranam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Oosi Munaiyil Usha
0 ratings0 reviews
Book preview
Oosi Munaiyil Usha - Rajeshkumar
23
1
அம்மா...!
பியூன் டேவிட்டின் குரல் கேட்டு தட்டச்சு இயந்திரத்திலிருந்து நிமிர்ந்தாள் உஷா. பவுர்ணமி நிலவுக்கு ஸ்டிக்கர் பொட்டு வைத்துவிட்ட மாதிரியான முகம். இரண்டு கண்களிலும் காந்தம் தெரிந்தது.
என்ன டேவிட்...?
மேனேஜர் உங்களைக் கூப்பிட்டாரம்மா...
தட்டச்சு இயந்திரத்தின் மேல் பிளாஸ்டிக் உறையை எடுத்து போர்த்திவிட்டு இரண்டாவது மாடியில் இருந்த மேனேஜரின் அறையை நோக்கிப் போனாள் உஷா. எதிர்பட்ட டெஸ்பாட்ச் கல்யாணி கேட்டாள்.
என்ன மேனேஜர்கிட்டயிருந்து ஓலையா?
ஆமா...
பார்த்துபோ...! காலையிலிருந்தே பெரிசு சரியில்லை. மூடு அவுட் போலிருக்கு. தெரியாத்தனமா நான் ஏதோ டவுட் கேக்கப்போய் செமத்தியா வாங்கி கட்டிகிட்டேன். நீ பார்த்து ஹேண்டில் பண்ணு...
உஷா புன்னகைத்தாள். நான் எந்த தப்பும் பண்ணாதபோது எதுக்காக மேனேஜரைப் பார்த்து பயப்படணும்? அவர் வயசிலேயும் அனுபவத்திலேயும் பெரியவர். அவர் கண்டிச்சார்ன்னா நாம ஏதோ தப்பு பண்ணியிருக்கோம்ன்னு அர்த்தம்.
நீ மேனேஜரை என்னிக்குமே விட்டுக்கொடுக்கமாட்டியே...?
கல்யாணி சிரித்துக்கொண்டே நகர்ந்துவிட, உஷா மாடியேறி மேனேஜர் உத்தண்டராமனின் அறைக்கு முன்பாய் வந்து நின்றாள்.
டொக்... டொக்...
கதவைத்தட்டி அனுமதி கேட்டுக்கொண்டு உள்ளே போனாள். குளிர்சாதனப் பெட்டி அந்த அறைக்கு ஊட்டியையே கொண்டுவந்திருந்தது.
எக்ஸிக்யூடீவ் நாற்காலியில் சாய்ந்திருந்தார் அறுபது வயது உத்தண்டராமன். பெரிய நெற்றியில் லேசாய் விபூதிக்கோடுகளும் பளிச்சென்ற குங்குமப் பொட்டும் தெரிந்தன. கஞ்சியின் விறைப்போடு கூடிய கதர் சட்டைக்குள் கவனமாய் நுழைந்திருந்தார்.
வணக்கம் ஸார்...
வாம்மா! உஷா...! உட்கார்...
பார்த்துக்கொண்டிருந்த ஃபைலை மேஜையின் ஓரத்துக்கு தள்ளி வைத்தார் உத்தண்டராமன்.
உஷா உட்கார்ந்தாள்.
ஸார்...! நீங்க கூப்பிட்டதா பியூன் டேவிட் வந்து சொன்னார்...
ஆமாம்மா... உன்னோட லீவ் அப்ளிகேஷன் இப்பத்தான் என்னோட பார்வைக்கு வந்தது. ரெண்டு நாள் லீவு வேணும்ன்னு கேட்டிருக்கே. காரணம் பர்சனல் ஒர்க்ன்னு சொல்லியிருக்கே. அப்படி என்னம்மா பர்சனல் ஒர்க்?
ஸார்... அது வந்து...
ரொம்பவும் பர்சனலா இருந்தா வேண்டாம்மா. ஏன்னா எனக்கும் ஒரு எல்லை இருக்கே...
அப்படியொரு எல்லையெல்லாம் உங்களுக்கு கிடையாது ஸார்.
பின்னே என்னம்மா! தாராளமா சொல்லு. நான் உனக்கு மேனேஜர் மட்டும் கிடையாது. உன்னோட அப்பா ஸ்தானத்தில் ஒரு பெரியவர் மாதிரியும் நினைச்சுக்கலாம்.
உஷா சில விநாடிகள் தயங்கிவிட்டு பின் மேஜையின் முனையைக் கீறிக்கொண்டே சொன்னாள்.
ஸார்...! நாளைக்கு ராத்திரி நான் கோயமுத்தூர் கிளம்பறேன்.
எதுக்கு...?
ஒரு இண்ட்டர்வ்யூ அட்டெண்ட் பண்ண ஸார்.
உத்தண்டராமனின் விபூதி பூசிய நெற்றி வியப்புச் சுருக்கங்களுக்கு உட்பட்டது.
என்னது...! இண்ட்டர்வ்யூ அட்டெண்ட் பண்ணப் போறியா...?
ஆமா ஸார்! கோயமுத்தூர்ல இருக்கிற ‘வல்லப் க்ரூப்ஸ்’ உங்களுக்குத் தெரியுமா ஸார்?
தெரியுமாவது... தமிழ் நாட்டிலேயே மிகப்பெரிய கம்பெனியாச்சே...?
அந்தக் கம்பெனியிலிருந்துதான் எனக்கு இண்ட்டர்வ்யூ வந்திருக்கு ஸார். ஸ்டெனோ உத்யோகம். ஆரம்ப சம்பளமே பனிரெண்டாயிரம் ரூபாய். அது தவிர மத்த படிகள், க்வார்ட்டர்ஸ் தர்றாங்க...
உத்தண்டராமன் தோள்களைக் குலுக்கினார். நீ சொல்லவே வேண்டாம் உஷா... அந்தக் கம்பெனியைப் பத்தி எனக்குத் தெரியும். அங்கே வேலை கிடைச்சா சென்ட்ரல் கவர்ன்மெண்ட்ல வேலை கிடைச்சதுக்கு சமம். ஆனா இண்ட்டர்வ்யூவில் செலக்ட் ஆகணுமே...?
செலக்ட் ஆயிடுவேன்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு ஸார்.
இதோ பாரம்மா... உஷா...! அந்தக் கம்பெனியில் உனக்கு வேலை கிடைச்சா என்னைக் காட்டிலும் சந்தோஷப்படறவங்க வேற யாரும் இருக்க முடியாது. ஏன்னா இது ஒரு சின்ன கம்பெனி. இங்கே ரெண்டாயிரம் ரூபாய்க்கு மேல சம்பளம் கொடுக்க என்னால முடியாது. உனக்கு அந்த வேலை கிடைக்க என்னோட வாழ்த்துக்கள்.
தேங்க்யூ ஸார்...
பயணச் செலவுக்கு ஏதாவது பணம் வேணுமாம்மா...?
வேண்டாம் ஸார்... இருக்கு...!
பரவாயில்லேம்மா. கேஷியர்கிட்ட சொல்லிவிடறேன். ஒரு ஆயிரம் ரூபாய் வாங்கிக்க. வெளியூர்க்குப் போகும்போது பணத்தை அளவா கொண்டுட்டு போகக் கூடாது. கோயமுத்தூர்ல உனக்கு யாரையாவது தெரியுமாம்மா...?
ஆர்.எஸ். புரத்துல என் ஃப்ரண்ட் ஒருத்தி இருக்கா ஸார்.
நல்லதா போச்சு...! அவளுக்கு தகவல் கொடுத்துட்டியா...
கொடுத்துட்டேன் ஸார்! ஸ்டேஷனுக்கே வந்து என்னை ரிஸீவ் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டா.
இதைவிட வேற என்ன வேணும்! நல்லபடியா போயிட்டு வாம்மா... உனக்கு வேலை கிடைச்சதும் எனக்கு உடனடியா போன் பண்ணிச் சொல்லணும்...
கண்டிப்பா சார்
உஷா அவரிடம் விடை பெற்றுக்கொண்டு அறையினின்றும் வெளிப்பட்டாள். தன்னுடைய இருக்கையைத் தொட்டு நாற்காலிக்குள் தன்னைத் திணித்துக்கொள்ள முயன்ற விநாடி...
மறுபடியும் பியூன் டேவிட் குரல்.
அம்மா...! உங்களைப் பார்க்கிறதுக்காக யாரோ ஒருத்தர் விசிட்டர்ஸ் ரூம்ல வெயிட் பண்ணிட்டிருக்கார்...
பேர் கேட்டியா?
விஜயகுமார்ன்னு சொன்னாரம்மா...
யோசிக்க சில விநாடிகள் எடுத்துக்கொண்ட உஷா பின் ‘விடுவிடு’வென்று விசிட்டர்ஸ் ரூமை நோக்கிப் போனாள்.
கால்மேல் கால் போட்டபடி நாளிதழ் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்த அந்த அழகான இருபத்தேழு வயது விஜயகுமார் உஷாவைப் பார்த்ததும் பேப்பரைத் தாழ்த்திக்கொண்டு புன்னகைத்தான்.
குட்மார்னிங் உஷா...
எனக்கு குட்மார்னிங் சொல்ல விருப்பமில்லை
நோ பிராப்ளம்! உங்களைப் பார்த்ததே குட்மார்னிங்தான்.
எதுக்கு வந்தீங்க?
உட்கார்ந்து பேசலாமே...!
நின்னுகிட்டு இருந்தாலே எனக்கு காது கேட்கும். சொல்லுங்க! என்ன விஷயம்?
நான் போட்ட லெட்டர் கிடைச்சுதா?
கிடைச்சுது
பின்னே... நீங்க ஏன் பதிலே போடலை...?
பதில் போட எனக்குப் பிரியமில்லை...
உஷா, உங்களை எந்த அளவுக்கு விரும்பறேன்னு எனக்கே தெரியாது. உங்களை என்னால் ஒரு விநாடிகூட மறக்க முடியலை. எந்த வேலையைச் செஞ்சாலும் உங்க ஞாபகமாகவே இருக்கு. சாப்பிடப் பிடிக்கலை. தூங்கப் பிடிக்கலை...
எல்லாம் வயசுக் கோளாறு...
இது வயசுக் கோளாறு இல்லை உஷா. மனசுக் கோளாறு. என்னோட குடும்பத்தைப் பத்தி நான் உங்களுக்கு எழுதின லெட்டர்ல மென்ஷன் பண்ணியிருந்தேன். எங்க அப்பா இந்த சென்னையில் பெரிய பணக்காரர். அவருக்கு நான் ஒரே பையன். அப்பாவும் சரி, அம்மாவும் சரி, என்னோட இஷ்டத்துக்கு விரோதமா நடக்கக்கூடியவங்க இல்லை. நான் எந்தப் பெண்ணை கூட்டிக்கிட்டுப் போய் அவங்க முன்னாடி நிறுத்தினாலும் சரி, அந்தப் பெண்ணை அவங்க மருமகளா ஏத்துக்க தயாராயிருக்காங்க... நான் என்னிக்கு உங்களைப் பார்த்தேனோ... அன்னிக்கே...
மேற்கொண்டு பேச முயன்றவனை கையமர்த்தினாள் உஷா.
மிஸ்டர் விஜயகுமார்! கடந்த ஒரு மாச காலமாகத்தான் உங்களை எனக்குத் தெரியும். நீங்க என்மேல வைச்சிருக்கிற காதலை டீஸண்டா டிக்ளேர் பண்ணியிருக்கீங்க. இந்த அணுகுமுறை டீஸன்ட்ஸி எனக்குப் பிடிச்சிருந்த ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் உங்ககிட்ட நின்னு பேசிட்டிருக்கேன். இல்லேன்னா ‘கெட் அவுட்’ன்னு சொல்லிட்டு நான் பாட்டுக்கு போயிருப்பேன்...
தேங்க் காட்...! அப்படீன்னா நீங்க என்னை விரும்பறீங்க...
ஆமா... விரும்பறேன்! ஆனா... காதலிக்கலை...
காரணம்...?
பிடிக்கலை...
என்னையா...?
இல்ல! காதல்ங்கிற வார்த்தையை...
ஏன்?
உஷா எரிச்சலாய் நிமிர்ந்தாள். இதோ பாருங்க விஜயகுமார்...! உங்களோட ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லிட்டிருக்க நேரம் கிடையாது. இது ஆபீஸ். வேலை செய்யற நேரம். நான் வேலையை ஒழுங்கா பண்ணினாத்தான் மாசம் பொறந்தா சம்பளம் வாங்க முடியும்... போயிட்டு வர்றீங்களா?
உஷா சொல்லிவிட்டு நகர முயல... விஜயகுமார் குரல் கொடுத்தான்.
ஒரு நிமிஷம்...
என்ன?
நான் உங்களுக்கு அனுப்பின லெட்டரை படிச்சுப் பார்த்தீங்களா உஷா?
ம்... படிச்சுப் பார்த்தேன்...
இன்னிக்கு வீட்டுக்குப் போனதும் மறுபடியும் ஒரு தடவை அந்த லெட்டரைப் படிச்சுப் பாருங்க...
ஸாரி... அந்த லெட்டரை இனி படிக்க முடியாது.
ஏன்?
அந்த லெட்டரை அன்னிக்கே நெருப்புக்கு கொடுத்துட்டேன். எனக்கு வேண்டாத பொருள்களை எரிச்சுடறது என்னோட வழக்கம்.
உஷா... உங்களை...
வெரி... ஸாரி...! உங்களை ‘கெட் அவுட்’ன்னு சொல்லி நான் துரத்த விரும்பலை. நீங்களாவே போயிடறது உத்தமம்...
சொன்ன உஷா புயல்வேக நடையில் உள்ளே போய்விட, விஜயகுமார் நகம் கடித்துக்கொண்டு நின்றான்.
மாலை ஆறு மணி.
ஆபீஸிலிருந்து வீடு திரும்பி முகம் கழுவி சேலை மாற்றிக்கொண்டிருந்தபோது வீட்டு வாசலில் அந்த கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
வீட்டு முன் அறையில் உட்கார்ந்து ‘ஹோம் ஒர்க்’ செய்துகொண்டிருந்த வசந்தி, வித்யா, துர்கா மூன்று தாவணிகளும் உள்ளே எட்டிப் பார்த்து குரல் கொடுத்தன.
உஷாக்கா...! நம்ம வீட்டுக்கு கார்ல யாரோ வந்திருக்காங்க...
உஷா விளக்கேற்றிவிட்டு வாசலுக்கு வரவும் சமையல் கட்டில் வேலையாக இருந்த லட்சுமியம்மாள் எட்டிப் பார்த்து கேட்டாள்.
அது யாரு உஷா...?
தெரியல்லேம்மா...
உஷா சொல்லிக்கொண்டிருக்கும் போதே கார் டிரைவர் ஒரு பெரிய பழத் தட்டோடு வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த ஸ்டூலின்மேல் வைத்துவிட்டு வெளியே போக -
விஜயகுமார் படியேறி வந்துகொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் பட்டுச் சேலையிலும் பட்டு வேஷ்டியிலும் அவனைப் பெற்றவர்கள் பெரிய பெரிய புன்னகைகளோடு வந்துகொண்டிருந்தார்கள்.
உஷா திகைப்பாய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கழுத்து டையை இறுக்கியபடி விஜயகுமார் பக்கத்தில் வந்து நின்றான்.
ஸாரி உஷா! உன்னைப் பெண் பார்க்க முன்கூட்டியே தகவல் கொடுக்காமே வந்தது தப்புதான். காலையில் ஆபீஸுக்கு வந்தேன். இது வேலை செய்யற இடம்; வேலை செய்யற நேரம்ன்னு சொல்லிட்டே. அதனால் வீட்டுக்கு வந்துட்டேன். அப்பா அம்மாகிட்ட விஷயத்தைச் சொன்னேன். அவங்களும் உன்னைப் பார்க்க பிரியப்பட்டாங்க. கூட்டிட்டு வந்துட்டேன்...
விஜயகுமாரைப் பெற்றவர்கள் புன்சிரிப்போடு உஷாவை நெருங்கினார்கள். அந்த அம்மாள் தோளில் கை வைத்தாள்.
ஏம்மா எம் பையனை வேண்டாங்கிறே? அவனுக்கு என்ன குறைச்சல்? சரி... நீ அவனைக் காதலிக்கவே வேண்டாம். காதல்ங்கிற வார்த்தை உன்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு கெட்டவார்த்தையாகவே இருக்கட்டும். இப்ப நாங்க முறைப்படி உன்னை பெண் கேட்க வந்திருக்கோம்...
உஷா மவுனமாய் தலைகுனிந்து நிற்க, விஜயகுமாரின் அப்பா சமையலறை கதவோரமாய் நின்ற லட்சுமியம்மாளைப் பார்த்தபடி சொன்னார்.
இனி நாம பேச வேண்டியது உஷாகிட்ட இல்லை. அவங்க அம்மாகிட்ட...
சொன்னவர் லட்சுமியம்மாளைப் பார்த்தபடி மெதுவாய் நடந்துபோக உஷா குறுக்கிட்டாள்.
எக்ஸ்க்யூஸ்மீ ஸார்...
என்னம்மா?
அவங்க என்னோட அம்மா கிடையாது.
பின்னே...?
என்னோட மாமியார்.
மூன்று பேரும் திடுக்கிட்டார்கள்.
நீ... நீ... நீ... என்னம்மா சொல்றே?
உஷா கசப்பாய் புன்னகைத்தாள். உண்மையைச் சொல்லிட்டிருக்கேன் ஸார். அவங்க என் மாமியார் தான்.
அ... அ... அப்படீன்னா ...உன் ...உன்னோட...
கணவர் எங்கேன்னு கேக்கறீங்களா...? அதோ!
உஷா பின்பக்க சுவரைச் சுட்டிக்காட்ட மூன்று பேரும் திரும்பிப் பார்த்தார்கள்.
வாடிய ரோஜா மாலையோடு அந்த இளைஞனின் போட்டோ தெரிந்தது.
2
வாடிய ரோஜா மாலையோடு சுவரில் அப்பியிருந்த அந்த இளைஞனின் போட்டோவைப் பார்த்ததும் விஜயகுமார் கோபமாகி, முகம் சிவந்துபோய் உஷாவை ஏறிட்டான்.
நீ ஒரு விதவைங்கிற உண்மையை என்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கலாமே...?
உஷா மெலிதாய் புன்னகைத்தாள். நான் விதவைன்னு உங்களுக்கு யார் சொன்னது...?
ஒரு பெண் கணவனை இழந்துட்டா அவளுக்கு பேர் விதவை.
போட்டோவில் இருக்கிற இவர் எனக்கு கணவர் கிடையாது.
விஜயகுமாருக்கு கோபம் தலைக்கேறியது.
உஷா...! நீ என்னை ரொம்பவும் குழப்பறே?
"இதுல எந்த குழப்பமும் கிடையாது... மிஸ்டர் விஜயகுமார், இப்போ போட்டோவில் வாடிய மாலைக்கு மத்தியில்