Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aabathu Inge Aarambam
Aabathu Inge Aarambam
Aabathu Inge Aarambam
Ebook182 pages1 hour

Aabathu Inge Aarambam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Aabathu Inge Aarambam

Read more from Rajeshkumar

Related to Aabathu Inge Aarambam

Related ebooks

Related categories

Reviews for Aabathu Inge Aarambam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aabathu Inge Aarambam - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    1

    சூரியனைப் பிரசவிக்கும் முயற்சியில் பம்பாயின் கிழக்கு திசை ரத்தமாகியிருந்தது.

    நட்சத்திரங்கள் கும்பல் கும்பலாய்ச் செத்துக் கொண்டிருக்க, மலபார்ஹில்சின் உயரமான கட்டிடத் தலைகளில் நிர்மாணித்திருந்த விளம்பர நியான் எழுத்துக்கள் ஊதாவிலும் பச்சையிலும் இன்னமும் உயிரோடு இருந்தது.

    நீலேஷ் கடற்கரையையொட்டிப் போடப்பட்டிருந்த சிவப்பு நிற பேவ்மெண்ட்டில் வியர்க்க வியர்க்க நடந்தான். காலை நேர வாக்கிங்கில் வெள்ளை நிற ஸ்கர்ட்டும், பனியனும் சொற்ப வியர்வையில் ஈரமாகியிருக்க - அவனுடைய சிவந்த உடம்பு - சூரியனின் காரட் நிற கதிர்களில் மினுமினுப்பாய் தெரிந்தது.

    ஹல்லோ.. நீலேஷ்.. குட்மார்னிங்...

    கைகளை வீசி வீசி நடந்து கொண்டிருந்த நீலேஷ், தனக்குப் பின்புறமாய் எழுந்த குரல் கேட்டுத் திரும்பினான்.

    ஒரு பெரிய சைஸ் பூசணிக்காயை வயிற்றோடு சேர்த்து கட்டிக் கொண்ட மாதிரி தொப்பையோடு ஓடிவந்து கொண்டிருந்த மல்ஹோத்ரா நின்றார். நீலேஷ் தங்கியிருக்கும் ‘ஹோட்டல் ஹெவன்ஸ் கேட்’டின் மானேஜர் அவர். பெரிதாய் மூச்சிரைத்துக் கொண்டே நீலேஷ் தோளைப் பற்றினார்.

    உன்னைப் பார்க்கிறதுக்காக ரொம்ப நேரமா ஒருத்தர் நம்ம ஹோட்டல் ரிசப்ஷன்ல காத்திட்டிருக்கார்.

    என்னைப் பார்க்கவா?

    உன்னைப் பார்க்கத்தான்.

    நீலேஷ் நெற்றியில் சின்னதாக ஆச்சரியப்பட்டான். வந்தவர் எப்படியிருந்தார்?

    ஏறக்குறைய என் வயசு.!

    நீலேஷ் ஸ்கர்ட்டின் பாக்கெட்டில் இருந்த கர்ச்சீப்பால் முகத்தைக் துடைத்துக் கொண்டான். கேட் வே ஆப் இண்டியாவுக்கு எதிரே பென்சிலைச் சீவி நிற்க வைத்த மாதிரி தெரிந்த ஹோட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

    வரவேற்பறை சோபாவில் உட்கார்ந்திருந்தவர் எழுந்தார்.

    நீலேஷ் அவரை ஏறிட்டான்.

    ஐம்பது வயதைத் தொட்டுக் கொண்டிருந்தார். எழுபத்தைந்து சதவீதம் வழுக்கைத் தலை.

    ஒழுங்கான பல் வரிசையில் மெலிதாய் சிரித்தார் அவர். ஐ’யம் வித்யாசங்கர். என்றார் கனமான குரல்.

    நீலேஷ் கையை நீட்டி அவருடைய கையைப் பற்றிக் கொண்டு, ப்ளீஸ்ட் மீட் யூ. பை த பை யூ ஆர் கம்மிங் ஃப்ரம்...? - மெல்லிய குரலில் கேட்டான்.

    வித்யாசங்கர் தன் ஆட்காட்டி விரலாலும் நடுவிரலாலும் மீசையை ஒரு முறை வாரிக் கொண்டு சிரித்தார். பட்டென்று தமிழில் பேச ஆரம்பித்தார்.

    மிஸ்டர் நீலேஷ்! உங்ககிட்டே நான் ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் வந்திருக்கேன். உங்க ரூம்ல போய் பேசலாமா?

    ஷ்யூர் ஷ்யூர்.

    லிஃப்ட் பையன் லிஃப்டின் கம்பிக் கதவைத் தள்ளி வழி ஏற்படுத்திக் கொடுக்க இருவரும் லிஃப்ட்டுக்குள் நுழைந்தார்கள. கதவைச் சாத்திக் கொண்டு பையன் பட்டனைத் தட்டிவிட, லிஃப்ட் ஊஞ்சலாய் மேலே ஏறியது. பதினைந்து விநாடிகளில் ஐந்தாவது ப்ளோரைத் தொட்டார்கள்.

    நீங்க எந்தக் கம்பெனியிலே இருக்கீங்க நீலேஷ்.

    கார்டிகா வெகின்ஸ்.

    அதுல என்னவாயிருக்கீங்க?

    எஸ்.ஈ.யாக இருக்கேன்.

    சாலடரி?

    நாற்பது சொச்சம்.

    ‘545’ பித்தளை எண்களில் சிரித்த அறைக்கு முன்னால் நின்று பூட்டைப் பிளந்து கதவைத் தள்ளினான் நீலேஷ்.

    வாங்க மிஸ்டர் வித்யாசங்கர்!

    வந்தவர் தன் கோட் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை எடுத்து நீலேஷிடம் நீட்டினார்.

    இந்தப் போட்டோவைப் பாருங்க நீலேஷ்!

    நீலேஷ் வாங்கிப் பார்த்தான்.

    உடம்பின் சகல செல்களிலும் அதிர்ந்தான்.

    2

    வித்யா சங்கர் இடது கையால் மீசையை வாரிக் கொண்டு மெலிதாய் சிரித்தார்.

    என்ன நீலேஷ்.. அதிர்ந்து போய் உட்கர்ந்துட்டீங்க?

    நீலேஷ் இன்னமும் தன் கையிலிருந்த போட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தான். அதிர்ச்சியான அந்த விநாடிகள் கழிந்ததும் நடுங்கும் குரலில் கேட்டான். வித்யாசங்கர்! யார் இந்த யூத்? அசப்பில் என் மாதிரியே இருக்கானே. தலைமுடியைச் சீவியிருக்கிற விதம்தான் கொஞ்சம் டிஃபரன்ட்டாய் இருக்கு.

    யூ ஆர் கரெக்ட் நீலேஷ். இந்த போட்டோவில் இருக்கிற இளைஞன் தொண்ணூறு சதவீதம் உங்க சாயலாதான் இருக்கான். இவன் பெயர் கமலகுமார். ஒரு குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்த பையன். டாக்டர் படிப்பு படிச்சிருக்கான்.

    நீலேஷ் போட்டோவைப் பார்த்து மறுபடியும் ஆச்சரியப்பட்டான். சினிமாவிலே தான் இப்படியெல்லாம் உருவ ஒற்றுமை வரும்னு நினைச்சிட்டிருந்தேன். பட்.. இன்னிக்கு கண்கூடா பார்க்கிறேன். ரியலி இட் ஈஸ் த்ரில்லிங் ஒன்! இந்தக் கமலகுமாரை நான் உடனடியா பார்க்கணும் மிஸ்டர் வித்யா சங்கர். இவன் இப்போ எங்கே இருக்கான்?

    வித்யாசங்கர் ஒரு மெலிதான புன்னகையோடு வானத்தை நோக்கிக் கையைக் காட்டினார். போயிட்டான். மூணு மாசத்துக்கு முன்னாடி ஸீமென் ஹாஸ்டல் ரோட்டில் ஸ்கூட்டரிலே வேகமா போய் ஒரு லாரிக்கு ரத்த அபிஷேகம் பண்ணி செத்தான்.

    நீலேஷ் முகம் கறுத்தான். ஓ... ஹாரிபிள்! என்று உதடுகளுக்குள் முனகிக் கொண்டான்.

    வித்யாசங்கர் தன் கோட்டின் இடது பக்கப் பையிலிருந்து ஓர் ஆங்கிலப் பத்திரிகையின் பேப்பர் கட்டிங்கை எடுத்தார்.

    இந்த மேட்ரிமோனியல் விளம்பரத்தை படிச்சுப் பாருங்க நீலேஷ்! அந்த பேப்பர் கட்டிங்கை ஆவலாய் வாங்கினான் நீலேஷ். விளம்பரத்தைப் பார்த்தான்.

    விளம்பரத்தின் ஓரத்தில் சற்றுமுன் போட்டோவில் பார்த்த கமலகுமாரின் முகம் தெரிய, கீழ் வாசகங்கள் தெரிந்தன.

    இருபது வயது நிரம்பிய ஒரு அழகான பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. மாப்பிள்ளையின் முக்கிய யோக்யதாம்சம்: மேலே பிரசுரமாகியுள்ள போட்டோவில் காணப்படும் இளைஞனின் முகச்சாயலாய் இருக்க வேண்டும். மற்ற விவரங்களுக்கு நேரில் வரலாம்.

    புருஷோத்தம் கிக்காணி,

    ராம் வில்லா,

    கமலாநேரு பார்க்ரோடு, மலபார் ஹில்ஸ். பம்பாய்.

    நீலேஷ் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு வித்யா சங்கரைப் பார்த்தான்.

    யார் இந்த புருஷோத்தம் கிக்காணி?

    வித்யா சங்கர் ஆச்சரியமாய் நீலேஷை ஏறிட்டார். இந்த பம்பாயிலே இருக்கிற எண்பது லட்சம் பேரிலே எழுபது லட்சம் பேருக்கு புருஷோத்தம் கிக்காணின்னா யார்ன்னு தெரியும் நீலேஷ். கிக்காணி பெஸ்டிசைட்ஸ், கிக்காணி ட்ராக்டர்ஸ், கிக்காணி ஸ்டீல்ஸ் - இந்த மூணு தொழிற்சாலைகளுக்கும் புருஷோத்தம் கிக்காணிதான் மானேஜிங் டைரக்டர். நான் அவருக்கு பர்சனல் செக்ரட்டரி, கான்ஃபிடென்ஷியல் ஃபிரண்ட், லீகல் அட்வைசர்... எல்லாமே நான்தான்.

    நீலேஷ் குறுக்கிட்டான்.

    இந்த விளம்பரத்துலே குறிப்பிட்டிருக்கிற பெண்?

    அவரோட மகள் வீணா.

    கமலகுமாரோட சாயலில் மாப்பிள்ளை வேணும்னு எதுக்காக விளம்பரம் கொடுத்திருக்காங்க வித்யா சங்கர்? அந்தப் பெண் வீணாவும் இறந்து போன கமலகுமாரும் ஒருத்தரையொருத்தர் விரும்பியிருந்தாங்களா?

    "தேர் யூ ஆர் நீலேஷ். வீணாவும் கமலகுமாரும் ஒருத்தரையொருத்தர் ஆழமா விரும்பினாங்க. கமலகுமார் டாக்டருக்குப் படிச்சிருந்ததால் புருஷோத்தம் கிக்காணியும் அவங்க காதலுக்குப் பச்சைக் கொடி காட்டிக் கல்யாணத்தை நடத்த ஏற்பாடு பண்ணிட்டிருந்தார். அந்தச் சமயத்துலேதான் கமலகுமார் விபத்துல மாட்டி உயிரை விட்டான். இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1