Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mugavari Thantha Paadal
Mugavari Thantha Paadal
Mugavari Thantha Paadal
Ebook157 pages44 minutes

Mugavari Thantha Paadal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"முகவரி தந்த பாடல்" இந்த புத்தகப் பேழையில் 33 கவிஞர்கள் இடம் பெற்றுள்ளனர். தான் எழுதிய பாடல்களில், மிகச்சிறந்த முகவரியைத் தந்து, பெரிதும் மக்களின் வரவேற்புப் பெற்ற பாடல்களைப் பற்றி சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள். இந்தத் தொகுப்பில் முன்னணி திரைப்படப் பாடலாசிரியர்கள் மட்டுமல்லாமல் முன்னணிக்கு வர முயற்சித்துக் கொண்டிருக்கும் பாடலாசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர்.

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580163909690
Mugavari Thantha Paadal

Read more from Kalaimamani Manavai Pon. Manickam

Related to Mugavari Thantha Paadal

Related ebooks

Reviews for Mugavari Thantha Paadal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mugavari Thantha Paadal - Kalaimamani Manavai Pon. manickam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    முகவரி தந்த பாடல்

    (33 கவிஞர்கள்)

    Mugavari Thantha Paadal

    Author:

    கலைமாமணி மணவை பொன். மாணிக்கம்

    Kalaimamani Manavai Pon. Manickam
    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-manavai-pon-manickam

    பொருளடக்கம்

    என்னுரை

    சமர்ப்பணம்

    1. பாடலாசிரியர் பழனிபாரதி

    2. பாடலாசிரியர் முனைவர் கிருதயா

    3. பாடலாசிரியர் இளையகம்பன்

    4. பாடலாசிரியர் யுகபாரதி

    5. பேராசிரியர் சொற்கோ கருணாநிதி

    6. பாடலாசிரியர் கலைக்குமார்

    7. இயக்குநர் பேரரசு

    8. பாடலாசிரியர் விவேகா

    9. பாடலாசிரியர் தமிழ்அமுதன்

    10. பாடலாசிரியர் மதன் கார்க்கி

    11. பாடலாசிரியர் ப்ரியன்

    12. பாடலாசிரியர் ஏகாதசி

    13. பாடலாசிரியர் மதுரகவி

    14. பாடலாசிரியர் ஏக்நாத்

    15. பாடலாசிரியர் மோகன்ராஜ்

    16. பாடலாசிரியர் உமா சுப்பிரமணியன்

    17. பாடலாசிரியர் அருண்பாரதி

    18. பாடலாசிரியர் சீர்காழி சிற்பி

    19. பாடலாசிரியர் V.M. ஆறுமுகம்

    20. பாடலாசிரியர் கலைமாமணி மணவை பொன் மாணிக்கம்

    21. பாடலாசிரியர் கோட்டைக்குமார்

    22. பாடலாசிரியர் சுதந்திரதாஸ்

    23. பாடலாசிரியர் பா. மீனாட்சி சுந்தரம்

    24. பாடலாசிரியர் ஜெயம்கொண்டான்

    25. பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து

    26. பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின்

    27. பாடலாசிரியர் மகாலிங்கம்

    28. பாடலாசிரியர் கு. கார்த்திக்

    29. பாடலாசிரியர் ஜி.கே.பி.

    30. பாடலாசிரியர் திலகா

    31. பாடலாசிரியர் நா. ராசா

    32. பாடலாசிரியர் பா. இனியவன்

    33. பாடலாசிரியர். செந்தமிழ்

    என்னுரை

    12

    எனது ஆசான் மதிப்புமிகு பல்கலைவேந்தர், டைரக்டர் கே. பாக்யராஜ் அவர்கள், பாக்யாவில் எத்தனையோ தொடர்களை எழுத என்னைப் பணித்து இருக்கிறார்.

    அப்படி எழுதிய தொடர்களில், எதுவெல்லாம் வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதோ அவையெல்லாம் பெரும்பாலும் புத்தக வடிவம் பெற்றுவிடும்.

    அப்படித்தான் எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்., புகழ்மணச்செம்மல் எம்.ஜி.ஆர், அன்புள்ள அம்மா, வாரியாரை கவர்ந்தவர்கள், வந்தாங்க ஜெயிச்சாங்க, காதலும் வீரமும், ஐந்தாம் வேதம், எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். நூல் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு MGR The Altimate Plotharapist ஆகிய நூல்கள் உருவானது.

    அந்த வரிசையில்தான் இந்த முகவரி தந்த பாடல் புத்தகம் வெளிவந்துள்ளது. இந்த புத்தகப் பேழையில் 33 கவிஞர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    தான் எழுதிய பாடல்களில், மிகச்சிறந்த முகவரியைத் தந்து, பெரிதும் மக்களின் வரவேற்புப் பெற்ற பாடல்களைப் பற்றி சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள்.

    இந்தத் தொகுப்பில் முன்னணி திரைப்படப் பாடலாசிரியர்கள் மட்டுமல்லாமல் முன்னணிக்கு வர முயற்சித்துக் கொண்டிருக்கும் பாடலாசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    மதிப்புமிக்க இந்த பாடலாசிரியர்களுக்கு, அவர்களின் பாடல்கள் எப்படி ஒரு முகவரி தந்ததோ, அதேபோல் இவர்களின் பெருமை பேசும் இந்த புத்தகமும் அவர்களின் முகவரியை இன்னும் விசாலப்படுத்தும் என்று நம்புகிறேன்.

    இந்தப் புத்தகம் உருவாக மிகுந்த ஒத்துழைப்புக் கொடுத்த திரைப்பட பாடலாசிரியர்கள், சங்கத் தலைவர் இளவல் தமிழ்அமுதன் அவர்களுக்கும், பிழை திருத்திக் கொடுத்த தம்பி கவிஞர் பா. இனியவன் அவர்களுக்கும், இந்த நல்ல வேளையில் நன்றி பாராட்டுகிறேன்.

    ‘இந்த முகவரி தந்த பாடல்’ புத்தகம் அழகிய வடிவில் உருவாக்கித் தந்த திரு. முரளி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

    என்றும் மனநிறைவுடன்,

    மணவை பொன் மாணிக்கம்

    63, ஐந்தாவது தெரு,

    விஜயராகவபுரம்

    சாலிகிராமம், சென்னை - 93.

    PH: 9940495579

    சமர்ப்பணம்

    13

    1. எதை

    எதையோ

    எதிர்பார்த்து எதிர்பார்த்து...

    2. இறுதியில்

    நலம் விசாரிக்கும்

    கடிதம் மட்டுமே

    எதிர்பார்த்து...

    3. இறுதி மூச்சு விட்ட

    என் தாய் தந்தையர்க்கு...

    வணக்கத்துக்குரிய

    எனது ஆசான் அவர்களின்

    ஆசியுடன்...

    மணவை பொன் மாணிக்கம்

    1. பாடலாசிரியர் பழனிபாரதி

    15

    கவியரசர் கண்ணதாசனைப் பற்றி ஒரு கவியரங்கில் நான் இப்படிப் பாடினேன்.

    "உனது குடியும்

    எனது குடியும்

    ஒரே குடி

    காரைக்குடி..."

    என்று. அவரது தொட்டில் நிலத்தில்தான் நானும் விளைந்தேன். அந்தப் பாட்டு நிலத்தில் பிறந்ததினாலோ என்னவோ காலம் என்னையும் ஒரு பாடலாசிரியனாக்கி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது. பத்திரிக்கையாளனாக இருந்த எனக்குள் ஒரு பாடலாசிரியனும் இருக்கிறான் என்பதை கண்டுபிடித்து அவனை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் விக்ரமன்தான். இரண்டாவது படமான ‘பெரும்புள்ளி’யில்.

    "இளமையான விழிகளில்

    வளர்பிறைக் கனவுகள்..."

    என்று தொடங்கும் பல்லவியில் எனது முதல் பாடல் பிறந்தது. முகவரி தேடும் வார்த்தை ஒன்று, இசை மடி சேரும் காலம் என சரணத்தில் எழுதினேன். எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் எனக்கும் பொருந்துவதாக இருந்தது. ஆனால், பாடல் படத்தில் இடம்பெறவில்லை. படத்தின் கதாநாயகன் என் ‘உயிர்த் தோழன்’ பாபு விபத்தில் சிக்கி முதுகெலும்பு பாதிக்கப்பட்டதால் படம் முடிக்க முடியவில்லை. ஆனால், வானொலியில் மட்டும் அடிக்கடி ஒலிபரப்பானது.

    அதன் பிறகு ‘நான் பேச நினைப்பதெல்லாம்’, ‘கோகுலம்’, ‘புதிய மன்னர்கள்’ எனத் தொடர்ந்தாலும் ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் பாடல்கள் தான் என்னைப் பரவலாக எல்லோருக்கும் அறிமுகம் செய்தது. குறிப்பாக அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா" என்கிற பாடல். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘புதிய மன்னர்கள்’ படத்தில் எனது பாடல்களை கேட்ட இயக்குநர் சுந்தர் சி. ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் எல்லாப் பாடல்களையும் எனக்கு அள்ளிக் கொடுத்தார். சிற்பியின் இசையில் அந்தப் பாடலை அரபுக்குரலில் மனோவை பாட வைத்தன. அந்த பாடலில்.

    "அடடா பூவின் மாநாடா

    அழகுக்கு இவள்தான் தாய் நாடா

    பிக்காசோவின் ஓவியம் ஒன்று,

    பீத்தோவனின் சிம்பொனி ஒன்று

    பெண்ணாய் மாறியதோ..."

    என்கிற எனது புதிய வரிகள் வளைகுடா பாடகர்களின் உச்ச சுதியில் மனோவை திசை திருப்பிய சிற்பியின் இசை, பாவாடை காற்றில் ஆட மர்லின் மன்றோவின் மறு பதிப்பாக ரம்பாவின் பேரழகு, வெளிச்சமெல்லாம் சேர்ந்தது அன்று, இந்தப் பாடலை கொண்டாட்டப் பாடலாக மாற்றியது. இளைஞர்கள் காதலின் தேசிய கீதமாகப் பாடிப் பாடி திரையரங்குகளில் என்னைத் திரும்பிப் பார்த்தது. இன்றைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதி என்னை முழு நேர பாடலாசிரியனாக நிலை நிறுத்திக் கொண்டேன்.

    2. பாடலாசிரியர் முனைவர் கிருதயா

    18

    அது ஒரு ரெண்டுங் கெட்டான் வயசு.

    பாட்டெழுத வாடா என்று இவன் தலையில் மூன்று பேர் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள்.

    முதலாமவர் கவியரசர் கண்ணதாசன்.

    இரண்டாமவர் கவிஞர் திலகம் வாலி.

    மூன்றாமவர் சந்தப்புலி புலமைப்பித்தன்.

    அவர்களின் பாடல்களை கேட்பது, மறுநாள்

    Enjoying the preview?
    Page 1 of 1