Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Penn Manam
Penn Manam
Penn Manam
Ebook57 pages23 minutes

Penn Manam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சில போட்டிகளுக்காக நான் எழுதிய சில சிறுகதைகளின் தொகுப்பு தான் “பெண் மனம்” என்ற இந்த புத்தகம்.

யாரைச் சந்தித்தாலும் அவர்களின் பேச்சிலிருந்து அவர்கள் மனம் எப்படி யோசிக்கிறது என்பதை அமைதியாக யோசிப்பதே என் குணம். அதிலும் பெண்களின் மனம் மிக ஆழமானது என்று அந்தக் காலத்தில் இருந்தே சொல்லிச் சென்றுள்ளார்கள் மூத்தோர். அதனாலேயே இந்த தலைப்பு. படித்துவிட்டுச் சொல்லுங்கள். உங்களை யோசிக்க வைத்ததா இந்த கதைகள் என்று.

மிக்க நன்றியுடன் கௌரி கோபாலகிருஷ்ணன்.

Languageதமிழ்
Release dateJan 28, 2023
ISBN6580161409500
Penn Manam

Related to Penn Manam

Related ebooks

Reviews for Penn Manam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Penn Manam - Gowri Gopalakrishnan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பெண் மனம்

    Penn Manam

    Author:

    கௌரி கோபாலகிருஷ்ணன்

    Gowri Gopalakrishnan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gowri-gopalakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    தண்டனைக் களம்

    தத்துப் பெற்றோர்

    பப்பி லவ்

    பிறவிக் கடன்

    பெண் மனம்

    இடைவெளி

    தண்டனைக் களம்

    என்னடீ ஆழ்ந்த யோசனையில் இருக்க, குரல் கேட்டு நிமிர்ந்தாள் மாலா.

    அவள் தங்கை பாலாதான் வந்தாள்.

    ஒன்னுமில்லடீ, ஆமா நீ எங்க போயிட்டு வர.

    ஒன்னுமில்லாததற்கா இப்படி யோசித்துக் கொண்டிருக்க.

    நான் லைப்ரரி போயிட்டு வரேன். அது சரி. நீ என்ன யோசிச்சு கிட்டு இருந்த, அதைச் சொல்லு.

    சொல்லி என்ன பண்றது. இந்த போலீஸ்காரங்க எல்லோரையும் எப்படி தண்டிக்கறதுன்னு யோசிச்சு கிட்டிருக்கேன்.

    என்ன திடீர்னு, இல்லாத யோசனை எல்லாம் பண்ணற.

    சமீபமா நான் பார்க்கற விஷயங்கள் என் மனசை ரொம்ப பாதிக்குது.

    ஏய், என்னதான் ஆச்சு, ஏன் இப்படி புலம்புர.

    ச், ஒன்னுமில்லை விடு.

    என்ன விஷயம் சொல்லு.

    ம்ம். நான் இன்னிக்கு ஆபிஸில் இருந்து வரப்போ வழியில ஒரு காட்சி பார்த்தேன். ஒரு பெண் மாஸ்க் மாட்டிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள். திடீரென்று அவளுக்கு மூச்சு விட கஷ்டமா இருந்ததா இல்லை வேற பிரச்சினையா தெரியலை.

    மாஸ்கை கழுத்து வரை வைத்து கொண்டிருந்தாள். நானும் பார்த்து கொண்டே வந்தேன். அந்த காவலருக்கும் அது நிச்சயமாக கண்ணில் பட்டிருக்கும்.

    ஆனால், அந்த பெண் பக்கத்துல வந்தவுடனே சடாரென நிறுத்தி, மாஸ்கை ஏன் ஒழுங்கா போடல. ஃபைன் கட்டுங்க, என்று மிரட்டினார்.

    பாவம் அந்த பெண், தான் என்ன தப்பு செய்தோம் என புரியவே சில நொடிகள் எடுத்துக் கொண்டாள் ஆனால் விளக்கம் கொடுக்கவே நேரம் தராது படபடவென பேசி ரசீதை கையில் கொடுத்து பணத்தைப் பிடுங்கி விட்டார் அந்த காவலர்.

    பாவம் எந்த அவசர செலவிற்கு வைந்திருந்த பணமோ. முகம் வாடி அங்கிருந்து போய் விட்டாள்.

    பின்னாடியே இரண்டு வாலிபர்கள் வண்டியில் வந்தார்கள். தலைகவசமும் இல்லை முககவசமும் இல்லை. தடுத்து நிறுத்திய காவலர், அவர்களை ஃபைன் கட்டச் சொல்ல, முதலில் விவாதம் செய்து, பின்னர் யாருக்கோ ஃபோன் செய்து அந்த காவலர் கையில் கொடுத்தனர்.

    ஃபோன் பேசியவுடன் அவர்களிடம் நட்பாக பேசி, அவர்களின் தவறை சுட்டிக்காட்டி இனிமேல் செய்யாதீர்கள் என கூறி அனுப்பி விட்டார்.

    இது என்ன ஞாயம். அனைத்திற்கும் சாட்சியாக இருந்த என் மனது துடிக்கிறது. ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை.

    அக்கா, இதுக்கா இவ்வளவு வருத்தம். இது நம் ஊரில் வழக்கமாக நடப்பது தானே.

    இது இந்த எல்லாவற்றையும் கடந்து செல்லும் நம் இயல்பு தான்

    Enjoying the preview?
    Page 1 of 1