Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neethan En Pon Vasantham
Neethan En Pon Vasantham
Neethan En Pon Vasantham
Ebook168 pages1 hour

Neethan En Pon Vasantham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உண்மையான அன்பு என்றும் தோத்துப்போகாது என்பது நீதானே என் பொன்வசந்தம். தன் குடும்பத்திற்காகவே உழைத்து அண்ணன் தம்பிகளின் வாழ்க்கைக்காக தன்னை தேய்த்துக் கொண்டவள் சங்கரி. அவள் ஒரு பையனை எடுத்து வளர்க்கிறாள். ஆனால், தவறான புரிதலின் காரணமாக அந்தப் பையன் அவனை விட்டு விலகி போய்விடுகிறான். அதில் மனம் குழம்பி, புத்தி தடுமாறி கைகால் வராமல் போன சங்கரியை அவளுடைய அண்ணன், தம்பி குடும்பங்கள் கைவிட்டு விடுகிறது. அந்த சமையத்தில் ஆஸ்பத்திரியில் அவளை பார்த்து தன்னுடன் வீட்டிற்கு அழைத்து வருகிறாள் யமுனா. அவளுடைய கம்பெனி மேனேஜராக வருகிறான் சங்கரியின் வளர்ப்பு மகன். மெல்ல மெல்ல அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவை, அன்பை புரிந்து கொண்டு வளர்ப்பு மகனையும், சங்கரியையும் சேர்த்து வைக்கிறாள் யமுனா. யமுனாவை தன் மகனுக்கே திருமணம் செய்து வைக்கிறாள் சங்கரி. அவன்மேல் வைத்த உண்மையான அன்பு, தன் தாயாரை புரிந்து கொள்ளாமல் போய்விட்டோமே என்ற ஆதங்கமுமே இருவரும் இணைவதற்கு காரணமாகிறது.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580101007637
Neethan En Pon Vasantham

Read more from Ga Prabha

Related to Neethan En Pon Vasantham

Related ebooks

Reviews for Neethan En Pon Vasantham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neethan En Pon Vasantham - GA Prabha

    https://www.pustaka.co.in

    நீதான் என் பொன் வசந்தம்

    Neethan En Pon Vasantham

    Author:

    ஜி.ஏ.பிரபா

    GA Prabha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    விடியல் அழகாய் இருந்தது.

    இன்னும் முழுதாய் இருள் விலகாத நிலையில் அங்கங்கே நட்சத்திரங்கள் மின்னியது. வளர்பிறை சந்திரன் கீழ்வானில் மின்னியது. இன்னும் நாலைந்து நாட்கள் இருந்தது பௌர்ணமிக்கு. பிரகாசமாய் மின்னியது சந்திரன். அதிகாலைக்கே உரிய குளுமையான காற்று.

    நாதன் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தார்.

    எதிர்வீடுகள் விழித்து எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தது. தெருவில் பால் கேனுடன் வண்டி ஒன்று பறந்தது. நாலைந்து வயதானவர்கள் வாக்கிங் போக, எதிர் வீட்டில் பாட்டு ஆலாபனை கேட்டது.

    தெருக்கோடி மாரியம்மன் கோவிலில் அதிகாலை பூஜைக்கு பாட்டு போட்டாகி விட்டது. ஆடி மாதம் பிறக்கப் போவதால் கூழ் ஊற்றுதல் விழா என்று அந்தப் பகுதி பரபரப்பாகி விடும். தெருவின் இரு புறமும் டியூப் லைட் விடிய, விடிய எரிவதால் காலையில் வீதி பளீரென்று இருக்கும்.

    எதிர் வீட்டில் பானு பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வந்து வாசல் தெளித்தாள்.

    இன்னைக்கு என்ன கோலம்?

    சாதாரண கோலம்தான் அங்கிள். சீக்கிரம் போகணும்?.

    என்ன இன்னைக்கு ஸ்பெஷல்?

    ஆடிட்டிங். அதனால வெறும் தேங்காய் சாதம்தான்

    நீ நிதானமா கிளம்பிப் போ. நான் சாப்பாடு கொண்டு வரேன்.

    உங்களுக்கு எதுக்கு அங்கிள் சிரமம்.

    இதிலென்ன சிரமம்? நான் யமுனாவுக்கு எடுத்துட்டு போகும்போது உனக்கும் கொண்டு வரேன்.

    ஏன்? இன்னைக்கு யமுனா சாப்பாடு எடுத்துட்டு போகலையா?

    இல்லைம்மா. எனக்கு ராமகிருஷ்ணா ஹாஸ்பிடல்ல ஒரு நண்பரைப் பாக்கப் போகணும். அப்படியே கணபதியில் யமுனா ஆபீஸ்ல கொடுத்துட்டுப் போயிடுவேன். நீ அதே பில்டிங் தானே.

    பானு நெகிழ்வோடு தலையாட்டினாள். எதிர்வீடுதான். அம்மா மட்டும். அப்பா, அம்மா இல்லை. திருநெல்வேலி அருகில் கிராமம். உறவுகள் யாவும் ஒதுக்கிய நிலையில் இங்கு வேலை தேடி வந்து நாதன் வீட்டிற்கு எதிரில் மூன்று பெண்கள் சேர்ந்து குடி இருக்கிறார்கள். மாற்றி, மாற்றி சமையல் டூட்டி. அதில் இருவர் ஊருக்குப் போய்விட பானு மட்டும் இப்போது தனியாக.

    உன் ஒருத்திக்குன்னு சமைக்கணும். இன்று ஒருநாள்தானே. நாளை சனி, ஞாயிறு. லீவ்தானே?"

    சண்டே அவங்க வந்துடுவாங்க அங்கிள்

    ‘அப்புறம் என்ன? ஒரு மாசம். பிறகு உன் கல்யாணம் நடந்துட்டா வாழ்க்கைல தினம், தினம் புது சமையல்"

    பானு வெட்கத்துடன் புன்னகைத்தாள். அவள் ஒருவரைக் காதலிக்கிறாள். பையன் வீட்டில் சம்மதித்து அடுத்த மாதம் கல்யாணம்.

    பானுவை நினைக்கும்போது அடுத்து யமுனா கல்யாணம் பற்றி கவலை வந்தது. அவளுக்கும் ஒரு நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைத்து திருமணம் ஆனால் அவரின் கடமை முடிந்தது. அவர் மனதில் சில திட்டங்கள் இருக்கிறது. மருதமலை முருகன் நல்லபடியாக நடத்திக் கொடுக்க வேண்டும்.

    அவர் தொலைவில் தெரிந்த மருதமலையைப் பார்த்துக் கண் மூடி கரம் குவித்து வணங்கிவிட்டு உள்ளே வந்தார்.

    சின்ன வீடுதான். அப்பாவின் தாத்தா வீடு. சின்ன ஹால். இரண்டு ரூம். கிச்சன். சின்னதாய் பூஜை ரூம். சுற்றி தோட்டம் என்று நாதன் அதை அழகு படுத்தியிருந்தார். அறுபது வயசாகி விட்டதால் , காலும் சிறிது பிரச்சினை வெளியில் வாக்கிங் போக அனுமதிப்பதில்லை யமுனா.

    அவள் வேலைக்குப் போன பிறகு ஒரு வேலைக்காரி வந்து எல்லா வேலைகளையும் செய்து விட்டுப் போவாள். பதினோரு மணிக்கு நாதனின் நண்பர் வருவார். அவரும் ரிடையர்டு ஆசிரியர். ஒரு மணி வரை கதை பேசி விட்டு போன பிறகு நாதன் சாப்பிட்டு தூங்குவார்.

    நாலு மணிக்கு எழுந்து ஒரு டீ போட்டுக் குடிப்பார். சின்ன நடைப் பயிற்சி வீட்டைச் சுற்றி. அஞ்சு மணிக்கு யமுனா வந்து விடுவாள். அவளுக்கு ஒரு கம்பெனியில் வேலை. நான்கு வருடமாகிறது. கல்லூரி இறுதியாண்டு முடித்ததும் வேலைக்கு வந்து விட்டாள். மேலே படிக்க விருப்பம்தான். அதற்குள் இந்தக் கம்பெனியில் நல்ல வேலை என்று சேர்ந்து விட்டாள்.

    .அதிலிருந்து கொண்டே டிரஸ் டிசைனிங் படித்து, இந்த நாலு வருஷத்தில் டிசைனிங் செக்க்ஷன் ஹெட் ஆகி விட்டாள். அழைத்துப்போக கார் வரும். நல்ல சம்பளம். டிசைனிங் அவள் எடுக்கும் முடிவுதான்.

    கை நிறைய சம்பளம். அன்பான அப்பா. அம்மா இல்லாத குறை தெரியாமல் வளர்ந்தாகி விட்டது.

    போதும் என்ற மனம் இருந்தாலே போதும். வாழ்க்கை திருப்தியாக இருக்கும். யமுனா எப்போதும் தனக்குக் கீழ் உள்ளவர்களைப் பார்த்துதான் திருப்தி பட்டுக் கொள்வாள். உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்று அடிக்கடி நாதன் சொல்வார்.

    அவர் எம்.ஜி.ஆர் ரசிகர். எப்போதும் வீட்டில் அவரின் பாடல்கள்தான் ஒலிக்கும். யமுனாவுக்கு இளைய ராஜா. பழைய ஹிந்திப் பாடல்கள். அதைப் போட்டு விட்டபடி வேலைகளைக் கவனிப்பாள். பென் டிரைவும், டி.வி யும் அப்பாவின் ஏகபோக உரிமை. யமுனா நியூஸ் மட்டும் கேட்பாள். இப்போதும் பாட்டு ஒலிக்க யமுனா சமையலில் இருந்தார். மற்றொரு அடுப்பில் நாதன் கத்தரிக்காய் வதக்கலும், ரசமும் வைக்க, சீக்கிரம் சமையல் முடிந்தது. கார் வந்து விட்டது.

    ஏம்மா இவ்வளவு சீக்கிரம்?

    நம்ம நிர்மலா சித்தி பெண் பிரசவம் ஆகி ஹாஸ்பிடல்ல இருக்காப்பா. சித்தியால முடியறது இல்லை. நான் அவளுக்கு சாப்பாடு கொண்டுபோய்க் கொடுத்துட்டு கம்பெனிக்குப் போயிடுவேன்.

    ஏன், நீதான் கிடைச்சியா? நிர்மலாவோட அக்கா, மாமியார், சம்பந்தி எல்லாம் கணபதியில் சுத்தி, சுத்திதானே இருக்காங்க. அவங்க பண்ண முடியாதா? உனக்கு என்ன உதவி செஞ்சிட்டாங்க?

    செஞ்சாத்தான்னு இல்லப்பா. நம்மால முடியும்னா செய்யலாமே?

    இதுல உனக்கு என்ன லாபம்?

    மனத் திருப்தி.- புன்னகைத்தாள் யமுனா.

    உதவிங்கறது ஒரு சங்கிலித் தொடர் மாதிரிப்பா. இது அடுத்தடுத்துன்னு போயிட்டிருக்கும். வாட்சாப்ல ஒரு கதை வந்ததே. படிச்சியா? நான் கூட உன்னை படிக்கச் சொல்லி தந்தேனே?

    என்னன்னு தெரியலையே?

    "அதான்பா. அந்த லேடி ஒரு சாலையில் போயிட்டிருக்கறப்போ கார் நின்னு போயிடும். நீள் வழிச் சாலை. ஸ்டெப்னி மாத்தணும். என்ன செய்யறதுன்னு தெரியாது முழிச்சிண்டு நிக்கறப்போ, ஒருத்தர் வந்து அதை மாட்டிக் கொடுப்பார். இவங்க பணம் கொடுப்பாங்க. அதை அவர் மறுத்துடுவார். நான் மெக்கானிக் இல்லைம்மா. நீங்க தவிசிகிட்டு நின்னதால நான் உதவி செய்தேன். என் பெயர் பிரெய்ன் ஆண்டர்சன். அடுத்த முறை நீங்க யாருக்கானும் உதவி செய்ய நேர்ந்தா என் பெயரை சொல்லி அவங்களுக்கு உதவுங்கன்னு சொல்லிட்டுப் போயிடுவார்.

    கொஞ்ச தூரம் போனதும் ஒரு உணவகத்தில் சாப்பிட நிறுத்தறா காரை. அங்க ஒரு பணிப்பெண் கர்ப்பிணி. ஓடி வந்து இவளுக்கு வேணும்கறதை கவனித்துச் செய்யறா. சாப்பிட்டு முடிந்ததும் நூறு டாலர் தந்துட்டு மீதி வாங்காம போயிடுவா. அவ சாப்பிட்ட தட்டுக்கு கீழ் ஒரு ஐநூறு ரூபா நோட்டு இருக்கும். "இது உனக்குப் பயன்படும். முகம் தெரியாத ஒருத்தர் எனக்கு சமயத்தில் உதவி செய்தார். அதன் தொடர்ச்சியா உனக்கு நான் இதைச் செய்திருக்கிறேன். இந்த அன்புச் சங்கிலி அறுந்து போகாமல் தேவைப் படுவோருக்கு உன்னால் இயன்ற உதவியைச் செய்னு எழுதி வச்சிருக்கா.

    பணிப்பெண்ணுக்கு அடுத்த மாதம் பிரசவம். செலவுக்கு என்ன செய்யறதுன்னு தெரியாம தவிக்கறப்போ இந்தப் பணம் கிடைச்சிருக்கு. கணவன்கிட்ட இதை நெகிழ்வோடு சொல்லிட்டு எல்லாம் நல்லபடியா நடக்குது. கவலையை விடுங்க பிரெய்ன் ஆண்டர்சன் அப்படின்றா."

    அட, அந்தக் கார்க்கார பெண்மணிக்கு உதவினவன்

    அதே, அதே, இன்று நாம உதவி செஞ்சா, நாளை எதோ ஒரு விதத்தில் திரும்பி வரும். வருமா, வராதாங்கறது கேள்வி இல்லை. நமக்கு ஒரு நிறைவு இருக்கும்ல? வாழ்க்கைல எதையப்பா கொண்டு போகப் போறோம்?"

    ஆனா ஏமாளியா இருக்கறியே?

    அப்படின்னு மத்தவங்க நினைப்பு. நான் எனக்குச் சரின்னு தோணறதை செய்யறேன்

    கொஞ்சம் சேர்த்து வைம்மா. நாளைக்கு உனக்கு கல்யாணம் நடந்தா?

    இருக்குப்பா. பி.எஃப், சரண்டர்ல போட்டுக்கலாம். நகை அம்மாவுடையது இருக்கே. கல்யாணம் என்ன இப்பவேவா வரப் போகுது?

    கல்யாணம்கறது முருகன் நினைச்சா எப்போ வேணாலும் வரலாம். ஆனா நீ ஏமாளியா இருக்கியே!

    "இருக்கட்டும் அப்பா. முருகா, முருகான்னு போனா எப்பவும் நன்மைதான்.

    "நாளென் செய்யும் வினைதான் என் செய்யும்,எனை நாடி வந்த

    கோள் என் செய்யும் கொடுங் கூற்றென் செய்யும்,குமரேசரிரு

    தாளும் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்

    தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

    யமுனா நிதானமாகக் கூறியதில் அப்பாவுக்கு கோபம் வந்தது.

    உனக்கு ஒரு கல்யாணம் செய்யனும்னு சொல்றேன். நீ முருகன் வருவான்னு சொல்றே?

    ஒரு கல்யாணம் தான்பா செஞ்சுக்க முடியும். ரெண்டெல்லாம் செஞ்சிண்ட தூக்கி உள்ள போட்ருவான்- சிரித்தாள்.

    எப்பவும் சிரிப்புதான் உனக்கு?- அப்பாவிடமும் ஒரு புன்னகை.

    சிரிக்கலாம்பா. அதுதான் நம் சுற்றுப் புறத்தையும் உற்சாகமா வைக்கும். எல்லோரும் இன்புற்று இருப்பதல்லால் வேறொன்று அறியேன் பராபரமே.

    நீ படிச்சது காமர்ஸ். என்னவோ தமிழ் இலக்கியம் படிச்சா மாதிரி பேசறே?"

    "இலக்கியமே ஆரோக்கிய வாழ்விற்கு

    Enjoying the preview?
    Page 1 of 1