Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chitrerumbugalin Kalam
Chitrerumbugalin Kalam
Chitrerumbugalin Kalam
Ebook52 pages27 minutes

Chitrerumbugalin Kalam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

மங்கையர் மலர்,கல்கி, தென்றல் மற்றும் செந்தூரம் மின்னிதழில் வெளியான சிற்றெறும்புகளின் காலம், பூர்த்தி, அரசியல் பழகு, காதலே நிம்மதி! மற்றும் சொட்டு முத்தம் ஆகிய சிறுகதைகளின் தொகுப்பு இது.

Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580133106823
Chitrerumbugalin Kalam

Read more from Hema Jay

Related to Chitrerumbugalin Kalam

Related ebooks

Reviews for Chitrerumbugalin Kalam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chitrerumbugalin Kalam - Hema Jay

    https://www.pustaka.co.in

    சிற்றெறும்புகளின் காலம்

    Chitrerumbugalin Kalam

    Author:

    ஹேமா ஜெய்

    Hema Jay

    For more books

    https://www.pustaka.co.in/home/author/hema-jay

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சிற்றெறும்புகளின் காலம்

    பூர்த்தி

    அரசியல் பழகு

    காதலே நிம்மதி!

    சொட்டு முத்தம்

    சிற்றெறும்புகளின் காலம்

    அந்த ஜன்னல் திட்டை நுனிவிரலால் மெல்ல தடவிப் பார்த்தாள் மகிழினி. ஒருமுறை விளையாடும்போது தலைதெறிக்க ஓடி வந்ததில் இந்த முகட்டில் தான் இடித்து நெற்றி பிளந்து ரத்தம் கொட்டியது.

    எதுக்கும் லாயக்கு இல்லேனாலும் உயிரை வாங்காம இருக்கலாமில்ல... அப்போதுதான் ஜீப்பில் வந்திறங்கிய அப்பா தன்னை வாரி எடுத்துச்சென்று தையல் போட்டழைத்து வந்தது ஏதோ இப்போதுதான் நடந்தது போலிருந்தது.

    சிரிப்புடன் நெற்றித் தழும்பை நெருடியவள் பின்கட்டில் நுழைய, அம்மா அடுப்படியில் நின்றிருந்தாள்.

    சுடுதண்ணியாம்மா..? நான் போடுறேன், நீங்க உட்காருங்க

    அம்மா எதுவும் பேசாமல் நகர்ந்தாள். வந்ததிலிருந்து அவள் ஒரு வார்த்தை கூட நன்றாகப் பேசவில்லை என்பது மகிழினிக்கும் புரியாமலில்லை.

    ‘இத்தனை வருசத்துக் கோபத்தைத் தள்ளி வைச்சு இந்தளவு இறங்கி வந்திருக்காங்களே, அதுவே பெருசு’ என்றெண்ணியவள், எதுவும் சமைக்க வேணாம்மா, தேவையானதை எடுத்து வைக்கவே சரியாயிருக்கும், அவரை பார்சல் வாங்க சொல்லிட்டேன், ராத்திரிக்கு வழில பார்த்துக்கலாம் அம்மா கேட்காவிட்டாலும் சகஜமாகச் சொன்னபடி வெந்நீரை ஆற்றி அவளிடம் கொடுத்தாள்.

    அப்பாவுக்கு..?

    இதோ மகிழினி கூடத்திற்குச் செல்ல, அப்பா காலையில் பார்த்தமாதிரியே சாய்வு நாற்காலியில் சரிந்திருந்தார். ‘தூங்குறாரோ..?’ மகிழினி அவரையே பார்த்தபடி நின்று விட்டாள்.

    ஆறடி உயரமும், ஆகிருதியான உருவமுமாகத் தன் அப்பா மாதிரியே இல்லை அந்த உருவம், முதுகு ஒடுங்கி, தோள்கள் முன்னால் சரிந்து, வரிவரியான சருமத்துடன் கண்கள் பஞ்சு போலச் சுருங்கி... வயது இத்தனை தளர்த்துமா... என்ன?

    ஒரு காலத்தில் அப்பாவைக் கண்டாலே சிம்ம சொப்பனமாக இருக்கும் இங்குள்ள பள்ளி நிர்வாகிகளுக்கு. ‘இன்ஸ்பெக்ஷன் யாரு தெரியுமில்ல, சிவசுப்ரமணியம், சும்மா சார்ட், ஆர்ட்னு ஜிகினா வேலையெல்லாம் கதைக்குதவாது. அவரே கிளாஸ் எடுத்துக் கேள்வி கேட்பாரு, பசங்களைக் கவனமா தயார் பண்ணுங்க’ இவர் ஆய்வுக்குச் செல்கிறார் என்றால் இப்படித்தான் பரபரத்துப் போவார்கள்.

    அத்தனை கம்பீரம், ஆளுமை, கண்டிப்பு!

    என்ன வினோதமெனில் இந்த மாதிரி ஒரு புத்திசாலி மனிதருக்கு தான் மகளாய் வந்து பிறந்ததுதான். மக்கு..மக்கு... மானம் போகுது இவளால. என் பிள்ளைன்னு வெளில சொல்லிடாதே அப்பா

    Enjoying the preview?
    Page 1 of 1