Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appavin Nizhal
Appavin Nizhal
Appavin Nizhal
Ebook84 pages46 minutes

Appavin Nizhal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

‘அப்பாவின் நிழல்’ - அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்கள், கடந்து செல்லும் நிகழ்வுகள், கண்ணில் தென்படும் எளிய சம்பவங்கள் வாயிலாக எதார்த்தமான மனித உணர்வுகளைச் சித்தரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு இது.

- ஹேமா ஜெய்.

Languageதமிழ்
Release dateJun 26, 2020
ISBN6580133105449
Appavin Nizhal

Read more from Hema Jay

Related to Appavin Nizhal

Related ebooks

Reviews for Appavin Nizhal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appavin Nizhal - Hema Jay

    http://www.pustaka.co.in

    அப்பாவின் நிழல்

    Appavin Nizhal

    Author:

    ஹேமா ஜெய்

    Hema Jay

    For more books

    http://pustaka.co.in/home/author/hema-jay

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அப்பாவின் நிழல்

    வானப்ரஸ்தம்

    புன்னகை என்ன விலை?

    அமிதம் அமிர்தமல்ல

    வானம்பாடிகள்

    கனமாய்க் கரையும் கணங்கள்

    அப்பாவின் நிழல்

    வணக்கம்,

    ‘அப்பாவின் நிழல்’ - அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்கள், கடந்து செல்லும் நிகழ்வுகள், கண்ணில் தென்படும் எளிய சம்பவங்கள் வாயிலாக எதார்த்தமான மனித உணர்வுகளைச் சித்தரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு இது.

    நன்றி!

    அன்புடன்,

    ஹேமா ஜெய்.

    *****

    அப்பாவின் நிழல்

    குளியலறையின் கதவை திறந்து நான் வெளியே வந்த நொடி, நானாவித நறுமணங்களும் என் நாசியைச் சூழ்ந்துக்கொண்டன. நெய்யில் முந்திரி திராட்சை வறுபடும் மணமும், முருங்கைக்காய் சாம்பாரின் வாசமும், ஏதோ ஒரு காய் எண்ணைய்சட்டியில் ரோஸ்டாகும் காந்தல்மணமும்...

    மூக்கை இழுத்து அவற்றை அனுபவித்துக்கொண்டே மீனு எல்லாம் ரெடி ஆயிடுச்சா...? நேரம் ஆகிட்டே இருக்கு...பாரு கேசத்திலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருக்க, தலையையும் முகத்தையும் துடைத்தபடி சமையலறை வாசலில் வந்து நின்று குரல் கொடுத்தேன்.

    இதோ ஆச்சுங்க... பாயசத்தை இறக்கிட்டு அப்பளத்தைப் பொரிச்சு எடுத்தா தீர்ந்துச்சு... நீங்க ஒரு உதவி பண்ணுங்களேன்... பாதிப் பூவை துண்டு துண்டா நறுக்கி வச்சிருக்கேன். மேல இருக்கிற சாமி படத்துக்கெல்லாம் வச்சிட்டு மீதியை அத்தைப் படத்துக்குப் போட்டு விட்டுடுங்க.. எனக்கு எட்டாது... என் மனைவி மீனா, அடுப்புக் காரியத்தில் பரபரத்துக்கொண்டே எனக்கும் வேலை சொன்னாள்.

    இரு.. பனியனை போட்டுட்டு வந்துடறேன்... உள்ளே சென்று உடை உடுத்திக்கொண்டு சின்ன ஸ்டூலை கையோடு எடுத்து வந்தவன், அதன் மேலேறி மீனா வைத்திருந்த பூத்துணுக்குகளை மேலே இருந்த பெரிய படங்களுக்கு வைத்தேன்.

    மீதிப்பூவை இருகைகளாலும் பிடித்து மாலைப்போலச் சுற்றி அம்மாவின் படத்துக்குப் போட்டு விடும்போது, மனசு அப்படியே கனத்துப்போனது. அம்மாவின் முகத்தையே ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

    ஏற்கனவே மீனு வைத்திருந்த குங்குமம் கொஞ்சம் அலுங்கியிருந்தது போலத் தெரிய, அதைத் துடைத்து விட்டு மீண்டும் மஞ்சளைக் குழைத்து அழகான வட்டமாக அம்மாவின் நெற்றியில் பொட்டு வைத்து விட்டேன். எட்டி தலைசாய்த்துப் பார்த்தேன். இப்போது திருப்தியாக இருந்தது.

    அம்மா நேரில் பார்ப்பது போலேயே படத்திலும் வெகு அழகாக இருந்தாள். என்னடா அரவிந்தா...? அப்படிப் பார்க்குற...? சின்னவயதில் என் தாடையை ஆசையாகப் பிடித்துக் கன்னங்குழிய சிரிப்பாளே, அது போலவே கண்ணாடி சட்டத்தின் வழியேயும் அவள் கள்ளமில்லாமல் புன்னகைத்துக்கொண்டிருந்தாள்.

    அந்தத் தெள்ளிய முறுவலை, கண்கள் மலர்ந்து முகம் விகசித்து மொத்த மனசும் சேர்ந்து புன்னகைப்பது போல அந்தச் சிரிப்பை பார்க்க, பார்க்க, என் மனதில் இனம்புரியாத பாரம் ஏறியது. நெஞ்சம் நெகிழ்ந்து கண்கள் தன்னாலேயே பொங்கிக்கொண்டு வந்தது.

    அம்மா...ஐ மிஸ் யு... அந்தக் கன்னத்தைத் தடவியபடியே நான் மெல்ல முணுமுணுக்க,

    என்னங்க... போட்டுட்டீங்களா...? ம்ம்...நல்லா இருக்கு... மல்லிகைப்பூ மாலையே ஒரு அழகு தான்….இல்லீங்க... தள்ளி நின்று தன் மாமியார் படத்தை ரசித்த மீனு, சரி... வேலையை முடிச்சிட்டீங்கன்னா நகருங்க... இலை போட்டுடலாம்... அங்கிருந்த பொருட்களை ஒதுங்க வைத்தபடி சின்னதாய் ஒரு கோலம் இழுக்க ஆரம்பித்தாள்.

    இன்று அம்மாவின் பத்தாவது திவசம். முதல் திதியைத் தவிர்த்து, வருடாவருடம் ஐயர் வைத்துத் தெவசம் கொடுக்கும் பழக்கம் இல்லாததால், வருடாந்திர திதியின் போது அம்மாவுக்குப் பிடித்த பதார்த்தங்களைச் செய்து படையல் போட்டு வீட்டுடன் கும்பிட்டுக் கொள்வோம்.

    சரி.. எல்லோரும் வாங்க... அபியையும் வினுவையும் கூப்பிடுங்க... மாமா எங்க...? வெளில உட்கார்ந்திருக்காரா..?. அவரையும் சீக்கிரம் வர சொல்லுங்க... நேரமாச்சு... எங்கோ இலக்கற்று வெறித்தபடி நின்று இருந்த என்னை மீனுவின் குரல் அழைத்தது.

    என்ன...எந்த உலகத்தில இருக்கீங்க...? மாமாக்கு ஒரு குரல் கொடுங்க... அவரு வந்து தானே ஊதுபத்தி பொருத்தி வைக்கணும்... இலையில் உணவுவகைகளைப் பரிமாறியபடியே மீனு மீண்டும் என்னை அதட்ட,

    நீயே போய் உன் மாமாவை கூப்பிடு...என்னை விரட்டாத... என்னையுமறியாமல் குரல் உயர்த்திவிட்டேன்.

    திடீரென்று நான் இரைய, ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் என்னைப் பார்த்த மீனு, ஏன் இவ்வளவு நேரம் நல்லாதானே இருந்தீங்க... இருந்திருந்தாப்பல மூடு அவுட்டாயிடுமே...நல்ல ஆளு..? கேள்வியும் முணுமுணுப்புமாக அவளே எழுந்து சென்று என் அப்பாவையும் குழந்தைகளையும் அழைத்து வந்தாள்.

    அணிந்திருந்த

    Enjoying the preview?
    Page 1 of 1