Ahalya
5/5
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Atchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Nadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kavarven Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsUnakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Androru Naal Rating: 3 out of 5 stars3/5Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsKasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Madhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Suzhal Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsThennangkaatru Rating: 5 out of 5 stars5/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsVetti Vergal Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Maaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Aasai Thee Valarthen Rating: 5 out of 5 stars5/5Ennuyire... Rating: 5 out of 5 stars5/5Chinnanchiru Kiliye! Rating: 5 out of 5 stars5/5Shyamala... Rating: 5 out of 5 stars5/5
Related to Ahalya
Related ebooks
Saayatha Bommaigal Rating: 5 out of 5 stars5/5Andha Maalai Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Arugil Varum Rating: 0 out of 5 stars0 ratingsSuriyagrahanam Rating: 5 out of 5 stars5/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Paarvai Ondre Pothume... Rating: 3 out of 5 stars3/5Oru Nimisam Please Rating: 5 out of 5 stars5/5பழைய பாடம் தேவையில்லை! Rating: 0 out of 5 stars0 ratingsMarakkumo Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsAmma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsAnbukku Panjamillai Rating: 5 out of 5 stars5/5Kanave Kalaiyadhe! Rating: 5 out of 5 stars5/5Ammavukku Oru Veedu Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Karaiyaangal Rating: 5 out of 5 stars5/5Thulasithalam Rating: 5 out of 5 stars5/5Vetti Vergal Rating: 5 out of 5 stars5/5Agni Puthri Rating: 0 out of 5 stars0 ratingsOru Paravaiyin Saranalayam Rating: 0 out of 5 stars0 ratingsNeeyindri Naanillai Rating: 0 out of 5 stars0 ratingsVeesum Thendral Naan Unakku Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Mudichu Rating: 5 out of 5 stars5/5Aahaya Malargal Rating: 0 out of 5 stars0 ratingsIrandu Manam Vendum Rating: 0 out of 5 stars0 ratingsDhanam Rating: 0 out of 5 stars0 ratingsThaan Than Sugam Rating: 0 out of 5 stars0 ratingsKadhalai Vittu Vidu...! Rating: 5 out of 5 stars5/5July Malargale! Rating: 0 out of 5 stars0 ratingsVaarisu Rating: 0 out of 5 stars0 ratingsAmma Pillai Rating: 5 out of 5 stars5/5
Reviews for Ahalya
1 rating0 reviews
Book preview
Ahalya - Vidya Subramaniam
http://www.pustaka.co.in
அகல்யா
Ahalya
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
அகல்யா
காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தது சொகுசுப் பேருந்து. இரவுப் பிரயாணம் என்பதனால் விரைவு அதிகமாகவே இருந்தது. சில்லென்று முகத்தைத் தாக்கி நாசியிலும் செவியிலும் நுழைந்த காற்றின் வேகம் தாங்க முடியாமல் அநேகமாக பஸ்ஸின் எல்லா கண்ணாடி கதவுகளும் இழுத்து விடப்பட்டிருந்தன. மாதவன் மட்டும் திறந்தே வைத்திருந்தான், சீறி வீசின காற்றை அனுபவிப்பதிலும் ஒரு சுகம் இருந்தது. பஸ்ஸில் விடிவிளக்கு கூட அணைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்கள். மாதவனுக்கு உறக்கம் வரவில்லை. எதற்காக அப்பா அவசரமாக தந்தி கொடுத்து உடனே புறப்பட்டு வரச் சொன்னார் என்று புரியவில்லை. அப்பா சொல்வதைத் தட்டி பழக்கமில்லாத காரணத்தால், தந்தியைக் காட்டி அலுவலகத்தில் ஒரு வாரம் விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டு டிராவல் ஏஜென்ஸி மூலம் பஸ்ஸில் இருக்கை பதிவு செய்து கொண்டு இரவே புறப்பட்டு விட்டான்.
அப்பாவுக்கு - தஞ்சாவூரில் ஆற்றங்கரையோரமாக கண்ணுக்கெட்டின தூரம் வரை நிலமும், தோப்பும், பெரிய வீடும் இருந்தது. மாதவன் பிறந்து வளர்ந்து படித்தது, எல்லாமே அங்குதான். உத்யோகம் தான் அவனை அங்கிருந்து பிரித்து விட்டது. நீ உத்யோகம் பார்த்து என்னடா ஆகணும்? இங்கயே இருந்து கணக்கு வழக்கை பார்த்துக்கலாமே என்று அம்மா கூட சொல்லிப் பார்த்தாள். ஆனால் உத்தியோகம் புருஷலட்சணம் என்று அப்பாவுக்குத் தெரிந்திருந்ததால் அப்பா அவனை ஆசிர்வாதம் பண்ணி அனுப்பி வைத்தார். அப்பாவுக்கு உதவியாக ரகு அண்ணாவும், ஸ்வாமிநாதனும் இருந்த காரணத்தால் மாதவன் கவலையின்றி சென்னைக்கு வந்து விட்டான். பண்டிகை விசேஷம் என்றால் ஊருக்குப் போய் வருவான். கடைசியாக தமிழ் வருடப் பிறப்புக்குப் போய் வந்ததோடு சரி. தீபாவளிக்குக் கூட போக முடியவில்லை. ஒருக்கால் அதனால் தான் உடனே வரச்சொல்கிறாரா?
வண்டி திண்டிவனத்தில் நின்றது. மாதவனின் அருகில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் இறங்கிக் கொள்ள அந்த இடத்தில் வந்து அமர்ந்த உருவத்தைக் கண்டு மாதவனின் கண்கள் லேசாய் விரிந்தன. கிளிப்பச்சை நிறத்தில் மைக்கா ப்ரிண்ட்டில் டிஸைன் செய்திருந்த சூரிதார் அணிந்த பதினெட்டு வயது பெண் ஒருத்தி வந்தமர்ந்தால் விழி விரியாமல் என்ன செய்யும்?
பஸ் புறப்பட்டது.
எக்ஸ்கியூஸ்மி... ரொம்ப குளிருது. கொஞ்சம் ஜன்னலை மூட முடியுமா?
ஓ ஷ்யூர்...
மாதவன் கண்ணாடி கதவை இழுத்து விட்டான். காற்று தடைபட்டது. அவள் சீட்டில் சாய்ந்து கண் மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.
இந்த இரவு வேளையில் தனியாக பயணம் செய்யுமளவுக்கு அப்படி என்ன அவசரம் இந்த பெண்ணுக்கு என்று யோசித்தபடியே தானும் தூங்க ஆரம்பித்தான் மாதவன்.
பஸ் வேகமாய்ச் சென்று கொண்டிருந்தது. சாலையின் இருமருங்கிலும் வெறும் மரங்களடர்ந்திருந்தது. கும்மிருட்டு. பஸ்ஸில் டிரைவர் மட்டுமே தன் கடமையைச்செய்து கொண்டிருக்க பயணிகள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர்.
சற்று தூரத்தில் புள்ளி புள்ளியாய் ஏதோ ஒளி தெரிய டிரைவர் வேகத்தை மெல்ல குறைக்க அந்த அத்துவானக் காட்டில் நாலைந்து பேர் கருப்புத் துணியால் முகத்தில் பாதியை மறைத்துக் கொண்டு, தீப்பந்தம் பிடித்தபடி சாலையின் நடுவில் நின்று கொண்டிருக்க டிரைவர் பதறிப் போய் வண்டியை நிறுத்தினார். அவர்கள் திபுதிபுவென்று வண்டியில் ஏறினார்கள். துப்பாக்கி முனையில் பயணிகளின் பணம் நகைகள் மற்ற விலையுயர்ந்த பொருட்கள் அத்தனையும் கை மாறின.
மாதவனின் ரிஸ்ட் வாட்சும் மோதிரமும் கழுத்து செயினும் கழட்டிக் கொண்டே, ஒரு கொள்ளைக்காரன் அருகிலிருந்த பெண்ணையும் வெறித்துப்பார்த்தான். அவன் கண்களில் தெரிந்த வெறி அடுத்த பத்தாம் நிமிடம் அவர்கள் அவளை அலற அலற இழுத்துச் சென்றார்கள். கத்தியும் உருட்டுக் கட்டையும், துப்பாக்கியும் வைத்திருந்தவர்களோடு போராடும் துணிச்சல் அங்கு யாரிடமும் இல்லை. பத்து பேரோடு ஒரு சிராய்ப்பு கூட ஏற்படாமல் சண்டை போட சினிமா கதாநாயகனால் மட்டுமே முடியும், நிஜ வாழ்வில் யாரும் முழு கதாநாயகர்கள் அல்ல. மாதவன் ஸ்தம்பித்துப் போய் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். '
ஏங்க இத்தனை ஆம்பளைங்க இருக்கீங்க, யாராவது போய் அந்த பெண்ணைக் காப்பாத்துங்க
யாரோ ஒரு பெண்மணி கத்தினாள்.
ஏம்மா. எல்லாரையும் ரஜினிகாந்து, விஜயகாந்துன்னு நினைச்சுட்டீங்களா? டிரைவர் நீங்க வண்டியை எடுங்க மிச்சம் இருக்கற பொம்பளைங்களையாவது பத்திரமா கூட்டிட்டு போவோம்.
அதெப்டி தம்பி... பாவம் சின்ன பொண்ணு...
"அப்பொ நீங்களும் இறங்கிக்கங்க. பொண்ணு திரும்பி வந்ததும் பத்திரமா கூட்டிட்டு அடுத்த பஸ்ல ஊர் வந்து சேருங்க.'
ஒரு பெட்டி பையன் சொல்ல,
ஆமா பெரியவரே அந்த பையன் சொல்றதும் நியாயம் தான். யாரோ ஒரு பொண்ணுக்காக இப்டி ஊரில்லாத இடத்துல நடுராத்திரில வண்டியை நிறுத்திட்டு நாம எத்தனை நாழி நிக்க முடியும். அவங்கவங்க ஆயிரம் அவசர காரியமா புறப்பட்டு வந்திருக்கோம். இதுக்கு மேல இங்க நிக்கறது ரொம்ப ஆபத்து.
ரொம்ப சரிதான். ஏற்கனவே நகை நட்டு பணம்னு பறிகொடுத்தாச்சு. ஏதோ உயிரோட இந்த மட்டும் விட்டாங்களே பாவிங்க. இனிமே இங்க ஒரு க்ஷணம் நின்னாலும் ஆபத்து. வண்டியை எடுங்க டிரைவர்.
மெஜாரிட்டியின் ஆதரவை மீற முடியாமல் டிரைவர் வண்டியை எடுத்தார்.
மாதவன் ஜன்னல் திறந்து இருட்டுக்குள் அந்த பெண் இழுத்துச் செல்லப்பட்ட திசையை வெறித்தான். காற்று முகத்தில் அறைந்தது.
ஆட்டோ, வீட்டு வாசலில் நின்ற சப்தம் கேட்டு அம்மா வேகமாய் வெளியில் வந்தாள். பிள்ளையைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது.
வாடா மாதவா.
எதுக்கும்மா தந்தியடிச்சேள்? என்ன அவசரம்?
மொதல்ல உள்ள வாடா. குளிச்சு டிபன் சாப்ட்டுட்டு நிதானமா பேசலாம்.
அப்பா எங்க?
ராமண்ணா ஹோட்டலுக்கு போயிருப்பார். நா என்ன தான் விழுந்து விழுந்து பண்ணிப் போட்டாலும் அங்க போய் மெதுவடையும் காப்பியும் சாப்டாட்டா வயறு புண்ணாய்டும் உங்கப்பாக்கு.
"ஏம்மா தந்தின்னதும் நா பதறியடிச்சுண்டு வந்திருக்கேன். இவர் பாட்டுக்கு மெதுவடையும் காப்பியும் சாப்டப் போயிருக்கார்!!