Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vivek! Un Ethiril Oor Ethiri
Vivek! Un Ethiril Oor Ethiri
Vivek! Un Ethiril Oor Ethiri
Ebook187 pages1 hour

Vivek! Un Ethiril Oor Ethiri

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vivek! Un Ethiril Oor Ethiri

Read more from Rajeshkumar

Related to Vivek! Un Ethiril Oor Ethiri

Related ebooks

Related categories

Reviews for Vivek! Un Ethiril Oor Ethiri

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vivek! Un Ethiril Oor Ethiri - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    ஒரு வரி ஆச்சர்யங்கள்:

    ஒட்டகங்கள் வெய்யிலில் பாலைவன மணல் பரப்பில் எவ்ளவு கிலோ மீட்டர் தூரம் நடந்தாலும் அவைகளுக்கு வியர்க்காது. காரணம் அதற்கு வியர்வை சுரப்பிகளோ வியர்வை நாளங்களோ கிடையாது.

    1

    போலீஸ் கமிஷனர் சக்கரபாணி பத்திரிகை நிருபர்கள் கூட்டத்தில் பேசிவிட்டு தன் அறைக்குத் திரும்பியபோது அவருடைய உதவியாளர் எதிர்பட்டார்.

    ஸார்! உங்களைப் பார்த்து பேசறதுக்காக இந்திராணின்னு ஒரு லேடி வந்து வெயிட் பண்ணிட்டிருக்காங்க...

    சக்கரபாணி தன் சதைப் பிடிப்பான வட்ட முகத்தில் வியப்பைக் காட்டினார். இந்திராணியா?

    ஆமா.. ஸார்! அவங்களும் நீங்களும் ஒரே காலேஜில் படிச்சதாய் சொல்றாங்க...!

    ஓ.கே....! நான் பார்த்துக்கிறேன்...! சொன்ன சக்கரபாணி - மூளைக்குள் ஆச்சர்யக்குறியொன்று உற்பத்தியாகி லேசாய் குடைய - தன்னுடைய அறைக்குள் நுழைந்தார்.

    அந்த இந்திராணி நரைமுடி கொண்டை போட்டுக் கொண்டு ரிம்லஸ் கண்ணாடி உதவியோடு பேப்பரைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    சக்கரபாணியைப் பார்த்ததும் பேப்பரை மேஜையின் ஓரம் தள்ளி வைத்துவிட்டு எழுந்தாள்.

    குட் மார்னிங்!

    வெரி குட்மார்னிங்... ப்ளீஸ் சீட்டட்...

    அந்த இந்திராணி நாற்காலியின் ஃபோம் பரப்பில் புதைந்துகொண்டே கேட்டாள். நான் இந்திராணி. என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

    ஸாரி! ஐ குட் நாட் ரெகக்னைஸ்...!

    "எப்படி மறந்தீங்கன்னே தெரியலை...! ஓ.கே.! நானே உங்களுக்கு ரிமைண்ட் பண்றேன். நீங்களும் நானும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஒண்ணா பி.ஏ. பண்ணினோம். 1969-ம் வருஷம். நீங்க பேட்ச். நான் பி பேட்ச். தமிழ் மன்றம் பேச்சுப் போட்டியில் நீங்க ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வாங்குவீங்க. நான் செக்கண்ட் ப்ரைஸ் வாங்குவேன். இப்ப ஞாபகம் வருதா...?"

    லேசா ...!

    அது போதும்..! நான் இப்போ வந்தது உங்ககிட்டே ஒரு உதவி கேட்கத்தான்... நீங்க தப்பாய் எடுத்துக்க மாட்டீங்களே?

    நோ... நோ...! நீங்களும் நானும் ஒண்ணா படிக்கலைன்னாலும் கூட உங்களுக்கு உதவி செய்ய காத்திருக்கேன். சொல்லுங்க... வாட் கேன் ஐ டூ ஃபார் யூ...?

    ஸ்ரீபெரும்புதூர்க்குப் பக்கத்தில் ‘ஆன்ட்டி பயோ எராடிகேஷன் சென்டர்’ என்கிற ஒரு சென்ட்ரல் கவர்ன்மெண்ட் அமைப்பு ஒண்ணு இருக்கு. உங்களுக்குத் தெரியுமா?

    தெரியும்...! அந்த வழியாய் போகும்போது பார்த்து இருக்கேன். பல ஏக்கர் நிலப்பரப்பில் பரவியிருக்கிற ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் அது.

    நான் அங்கேதான் வேலை பார்க்கிறேன், டெஸிக்னேஷன்: சீஃப் அப்ஸர்வர் ஆஃப் ஸ்பெசிமன்ஸ். வெரி பவர்ஃபுல் போஸ்ட்...!

    சக்கரபாணி தன் புருவங்களை உயர்த்தினார், வெறும் பி.ஏ. படிச்சுட்டு எப்படி இப்படியொரு போஸ்ட்டுக்கு...?

    நான் பி.ஏ. முடிச்சதும் பயோ டெக்னாலஜி பக்கம் போயிட்டேன். எம்.எஸ்.ஸி. பயோ டெக் முடிச்சு மாநிலத்திலேயே முதலாவதாய் தேறினேன். ரிசல்ட் வந்த மறுவாரமே அப்பாயிண்மெண்ட் ஆர்டர் கைக்கு வந்தாச்சு. ‘பயோ எராடிகேஷன் சென்டர்’ல ரிசர்ச் ஸ்காலராய் ஜாய்ண் பண்ணினேன். படிப்படியாய் பதவி உயர்வு பெற்று இப்போ சீஃப் அப்ஸர்வர் ஆஃப் ஸ்பெசிமன்ஸ் போஸ்ட்டுக்கு வந்துட்டேன்.

    வெரி நைஸ்...! கேட்கவே சந்தோஷமாய் இருக்கு.

    பட்... நான் சந்தோஷமாய் இல்லை...

    ஏன்...?

    பிரச்னை பண்றாங்க...!

    யாரு?

    நிர்வாகம் தான்...!

    என்ன பிரச்னை?

    மூணு நாளைக்கு முன்னாடி நான் வழக்கமாய் வேலைக்குப் போனேன். என்னை உள்ளே விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க. நான் உள்ளே பார்க்க வேண்டிய வேலை எவ்வளவோ இருக்கு. பட் என்னை உள்ளே அனுமதிக்கிறது இல்லை. என்ட்ரன்ஸ் கேட்டிலேயே நிறுத்திடறாங்க.

    சக்கரபாணி தன்னுடைய இரண்டு புருவங்களையும் ஒரு அரையங்குலத்திற்கு உயர்த்தினார்.

    ஏன் அப்படி பண்றாங்க?

    அதான் எனக்கும் புரியலை...

    உங்க டிபார்ட்மெண்ட்டில் உங்களுக்கு இம்மீடியட் பாஸ் யாரு...?

    நரசிம்ம மூர்த்தின்னு ஒருத்தர்.

    அவர்கிட்ட பேசிப் பார்க்க வேண்டியதுதானே?

    அவரைப் பார்க்க யாரும் விடறது இல்லை....

    அவரோட செல்போன் நம்பர் உங்களுக்குத் தெரியுமா?

    தெரியும்.

    அவர்க்கு போன் பண்ணி பேச வேண்டியதுதானே?

    நான் போன் பண்ணினா அவர் செல்போனை அட்டெண்ட் பண்றதே இல்லை...!

    சக்கரபாணி சில விநாடிகள் யோசனையாய் இருந்துவிட்டு இந்திராணியை ஏறிட்டார்.

    ஓகே.! நான் இப்ப என்ன பண்ணனும்?

    என்னை வேலைக்குப் போகவிடாமே தடுத்து நிறுத்தறவங்க மேல நீங்க நடவடிக்கை எடுக்கணும்.

    விஷயம் என்னான்னு தெரியாமே நான் எது மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க முடியும்... மொதல்ல நான் உங்க இம்மீடியட் பாஸ் நரசிம்ம மூர்த்திகிட்டே பேசணும். நெம்பர் சொல்லுங்க. நான் என்னோட செல்போனிலிருந்து பேசறேன்...!

    நெம்பர் நோட் பண்ணிக்குங்க ஸார்.

    சொல்லுங்க.

    இந்திராணி எண்களைச் சொல்ல கமிஷனர் சக்கரபாணி தன் செல்போனில் அந்த எண்களை ஒற்றி எடுத்தார்.

    மறுமுனையில் ஒரு பெண்ணின் ரெக்கார்டட் வாய்ஸ் ‘ஸ்விட்ச் ஆஃப்’ என்று சொன்னது. மேலும் இரண்டு தடவை முயற்சி செய்தார் சக்கரபாணி. அதே ரெக்கார்டட் வாய்ஸ் விடாப்பிடியாய் கேட்டது.

    போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சிருக்கிறாரே?

    அந்த ஆள் எப்பவும் அப்படித்தான்...! செல்போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு ஏதாவது ஒரு கதை புத்தகத்தை படிச்சிட்டுருப்பார். இல்லேன்னா லேப்டாப்ல இந்தி படம் பார்த்துட்டு இருப்பார். நீங்க நேர்ல என்கூட வாங்க ஸார். நான் ஏன் வேலைக்கு வரக்கூடாதுன்னு காரணம் சொல்லட்டும். காரணம் சரியானதாக இருந்தா நான் அதே நிமிஷம் வெளியே வந்துடறேன். காரணத்தை சொல்லாமே என்னை ஏன் டார்ச்சர் பண்றாங்கன்னு தெரியலை. இந்த விஷயத்துல நீங்கதான் எனக்கு உதவணும்.

    இந்திராணி பேசப் பேசவே கண்கள் வெகுவாய் கலங்கி நீர் சிதறியது. சக்கரபாணி எழுந்தார்.

    சரி வாங்க.... போலாம்...

    எனக்கு பிரச்னை என்னான்னு தெரிஞ்சாக்கூட போதும். பிரச்னை என்னான்னு சொல்லாமே என்னை டார்ச்சர் பண்றதுதான் எனக்கு வேதனையாய் இருக்கு.

    டோண்ட் ஒர்ரி...! இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே பிரச்னை என்னான்னு புரிஞ்சுரும். என்கூட வாங்க போகலாம் என்ற சக்கரபாணி மேஜையின் மீது இருந்த இண்ட்டர்காமின் ரிஸீவரை எடுத்துப் பேசினார்.

    முத்துசாமி! ஜீப்பை ரெடி பண்ணு! ஸ்ரீ பெரும்புதூர் வரைக்கும் போயிட்டு வரணும்...!

    இருவரும் அறையைவிட்டு வெளியே வந்தார்கள். அறையின் வாசற்படியருகே ஜீப் நின்றிருந்தது. இந்திராணி ஜீப்பில் ஏறிக்கொண்டே சொன்னாள். ஸாரி! உங்களுக்கு தொந்தரவு தர்றேன்!

    "நோ....நோ... ! இது எனக்கு தொந்தரவு கிடையாது. உங்களுக்கு எதிராய் நிர்வாகத்தில் ஏதோ சதி நடந்துக்கிட்டு இருக்கு. என்னைப் பொறுத்தவரைக்கும் இது ஒரு ஹராஸ்மெண்ட். உங்களை வேலைக்கு வராமே தடுத்து பணியைச் செய்ய விட விரும்பலைன்னா சரியான காரணத்தை நிர்வாகம் சொல்லியாகணும். உங்களுக்கு ஏதாவது மெமோ கொடுத்து

    Enjoying the preview?
    Page 1 of 1