Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yandhra Mandhra Thandhra
Yandhra Mandhra Thandhra
Yandhra Mandhra Thandhra
Ebook117 pages50 minutes

Yandhra Mandhra Thandhra

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100702710
Yandhra Mandhra Thandhra

Read more from Indira Soundarajan

Related to Yandhra Mandhra Thandhra

Related ebooks

Related categories

Reviews for Yandhra Mandhra Thandhra

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yandhra Mandhra Thandhra - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    யந்த்ரா மந்த்ரா தந்த்ரா

    Yandhra Mandhra Thandhra

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1

    ‘சூரியனில் இருந்து தெறித்து விழுந்த ஒரு துண்டுப் பகுதிதான் இந்த பூமி என்கிறது விஞ்ஞானம். மனித இனமும் மற்றுமுள்ள பல கோடி உயிர் இனமும் வாழ இறைவனால் படைக்கப்பட்டதுதான் இந்த பூமி என்கிறது மெய்ஞ்ஞானம் விஞ்ஞானம் புலன்களால் புலன்களுக்காக உருவானது. இதற்கு நிரூபணங்கள் வேண்டும். மெய்ஞ்ஞானம் மனம் சார்ந்தது. கற்பனையும் உணர்வுமானது நம்பிக்கை என்கிற உள்ளுணர்வு மட்டுமே இதற்குப் போதுமானது.

    விஞ்ஞானம் தான் அறிந்தவற்றில் மாற்றங்களை உணரும்போது தன்னையும் மாற்றிக் கொள்கிறது. சாசுவதமாக மாறாத ஒரு தன்மையோடு அது நிற்பதில்லை. மெய்ஞ்ஞானம் அப்படி இல்லை. அது நம்பிக்கை என்னும்தளத்தில் மாறாததாய் உள்ளது.

    இந்த நம்பிக்கைத் தளத்தில் உருவாகிமனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து கிடப்பது தான் ஆன்மிகம்.

    ஆன்மிகம் என்றால் ‘நமக்கு மேல் ஒரு சக்தி நம்மை வழி நடத்துகிறது. அந்தச் சக்தியால் அதனிடம் இருந்து வந்த ஒரு துண்டுச் சக்திதான் நாம் என்பதே பொருள்.

    ‘இப்படி இறைசக்தியின் வெளிப்பாடாக உள்ள நாமும் கூட ஒரு விதத்தில் இறைவனே’ என்றும் இதனுள் கருத்துக் கூறுவோரும் உண்டு.

    ஆற்று நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்துக்கொண்டு வந்துவிட்ட பின் அதை ஆற்று நீர் என்போமா? பாத்திரத்து நீர் என்போமா? இறைவன் என்பவன் ஆற்றுநீரைப் போன்றவன். நாம் அதில் இருந்து வந்த பாத்திர நீர் போன்றவர்கள் என்று வியாக்யானங்கள் கூறுகின்றவர்கள் பலர் உண்டு.

    எது எப்படியோ…? பாமரனும் உணரும் ஒரு உண்மை, ‘நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது’ என்பதே! அது எப்படிப்பட்ட சக்தி…? ஆணா, பெண்ணா? மிருகமா? இல்லை இதையெல்லாம் கடந்த வேறு வடிவமா? ஞானிகள் என்போரின் இறுதியான முடிவுப்படி அது ஒரு பேரொளியா? எது?

    இந்தக் கேள்விக்கு விடையறிய எவ்வளவோ வழிகள்…. அதில் இந்து மதத்தின் பாட்டையில் ஆசை மிகுந்த மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காமம், பொறாமை, அச்சம் போன்ற உணர்வுகளால் பின்னப்பட்டு அதில் சிக்கிக்கொண்டு கிடக்கும் லெளகிகமான மனிதனுக்கு உதவுவதற்காக ஞானிகளால் கண்டறியப்பட்ட ஒரு ஆன்மிக வழிமுறைதான் யந்த்ர மந்த்ர தந்த்ர வழிமுறை!

    "இந்தச் சுவரின் மேல் நோட்டீஸ் ஒட்டவோ எழுதவோகூடாது' என்கிற எச்சரிக்கை வாசகத்தின் மேலேயே அந்தத் திரைப்படப் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

    நின்று பார்த்துக் கொண்டிருந்தான் ரமேஷ்.

    போஸ்டரில் உள்ளதைப் பார்க்கிறானா இல்லை ‘இப்படி எச்சரிக்கையையும் மீறி ஒட்டியிருக்கிறார்களே' என்று பார்க்கிறானா என்பது தெரியவில்லை.

    அந்தப் போஸ்டரோ ‘காதல்’ என்கிற சினிமாப் படப் போஸ்டர்!

    ஒரு விடலைப் பையனுக்கும் பெண்ணுக்கும் இடையில் தோன்றும் ஒருவிதமான அவஸ்தையைச் சொல்லும் திரைப்படம்!

    டேய் ரமேஷ்... என்னத்தடா அப்படி வாயப் பொளந்துகிட்டுப் பாக்கறே…? என்று ஒரு குரல் சட்டென்று ஒலிக்கவே திரும்பிப் பார்த்தான்.

    சரேலென்று சைக்கிளில் தேய்ந்து வந்து நின்றபடியே சங்கர். ரமேஷின் பால்ய ஸ்நேகிதன்.

    ஒண்ணுமில்லடா!

    என்ன ஒண்ணுமில்லடா...? காதல் பட நாயகி கவ்வி இழுக்கறாளாக்கும்…?

    அதெல்லாம் ஒண்ணுமில்லடா… இந்தப் படம் ரொம்ப நல்லா இருக்குதுன்னு சொல்லிகிட்டாங்க. நம்ம மதுரைல நடக்கற கதையாம்ல...?

    "மதுரைல மட்டுமா… உலகம் பூரால்ல நடக்குது, எங்க, பாருடா லவ்வல?

    - சங்கர் சைக்கிளை உருட்டியபடியே கேட்க, ரமேஷம் ஆங்கிருந்து விலகி அவனைத் தொடரத் தொடங்கினான்.

    நம்ம ஊருல ஷட்டிங் நடந்துருக்குது. எனக்குத் தெரியவே இல்லையேடா….

    இப்பல்லாம் டாடா சுமோவுக்குள்ள கேமராவை வெச்சு ஒரு பயலுக்கும் தெரியாம எடுத்துட்டுப் போய்ட்றாங்கப்பா. படத்துல நடிச்ச அம்புட்டு பேரும் புதுசு. அதனால ரொம்ப தெளிவாவே ஆகிட்டிங் முடிச்சுட்டாங்க. இல்லாட்டி நம்மாளுங்க விடுவாங்களா? சோப்பு விளம்பரப் பொம்பள வந்தாலே கேமரான்னு கூடிநின்னு பாப்போமேப்பா?

    சங்கரின் நக்கலான கேள்விமுன் ஒரு சிரிப்பு சிரித்தவன் திரும்பவும் அந்த சினிமா பற்றியே பேச ஆரம்பித்தான்.

    நீ அந்தப் படத்தைப் பார்த்துட்டியா சங்கரு?

    பார்த்தேன்… பார்த்தேன்…

    எப்படி இருக்குது?

    எனக்குப் பிடிச்சிருக்கு...

    சங்கரின் பதில் ஒரு ஆச்சரியமாக ரமேஷ் முகத்தில் பரவியது

    என்னடா… நம்ப முடியலையா?

    ஆமாம்... நீ இதுவரைல ஒரு சினிமா கூட நல்லா இருக்குன்னு சொன்னதே இல்லையேடா?

    நம்பள மாதிரி, காதுல பூ சுத்தாம, படம் பாக்கறவங்கள இளிச்சவாயனாக்காம யாருடா இப்படிப் படம் எடுக்கறா?

    படத்துக்குப் படம் ஒரு எம்.எல்.ஏ., அவன் பேச்சக்கேக்கற ஒரு ரவுடி... அந்த ரவுடியை சுத்தி ஒரு பத்து தடிப் பசங்க...! ஊரு உலகத்துல லட்சம் பேர் இருந்தாலும் ஹீரோ மட்டும்தான் இவனுங்களோட சண்டை போடுவார். கூட்டமா வந்தாலும் சண்டை போடும்போது மட்டும் ஹீரோவோட மோத தனித் தனியாதான் அவனுங்களும் வருவானுங்க.

    முந்தியாவது பரவாயில்ல... ஹீரோ ஒரு குத்து உட்டா பக்கத்துலதான் உழுவான். இப்பல்லாம் ஒரு குத்துவிட்டா ஒரு நூறு மீட்டருக்கு அந்தப் பக்கம் போய் உழுவுறாங்க. முதுகுக்கு பின்னால கம்பிய கட்டி மேல இழுத்து டுபாக்கூர் வேலைகாட்ட நம்மாளுங்க நல்லாவே கத்து கிட்டு இருக்காங்க.

    Enjoying the preview?
    Page 1 of 1