Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Suseelavukku Oru Salute
Suseelavukku Oru Salute
Suseelavukku Oru Salute
Ebook113 pages46 minutes

Suseelavukku Oru Salute

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிருஷ்ணசுவாமி என்பவன் சீட்டுக்கட்டு விளையாட்டில் ஆர்வம் உடையவன். அவன் தன் மகன் ரிஷியின் படிப்பிற்காக பணம் ஏற்பாடு செய்ய சென்னை சென்றுள்ளான். அங்கு சூரிய மூர்த்தி கவுண்டர் உடன் சீட்டுக்கட்டு விளையாடி பணத்தை இழந்தான். ஒருநாள் திடீரென்று சத்யமூர்த்தி கவுண்டர் இறந்து கிடந்தார். அவர் ஏன் கொலை செய்யப்பட்டார்? யார் காரணம்? பரத்தும், சுசிலாவும் அதை எப்படி கண்டுபிடித்தார்கள் பார்ப்போம்...

Languageதமிழ்
Release dateAug 27, 2022
ISBN6580100908086
Suseelavukku Oru Salute

Read more from Pattukottai Prabakar

Related to Suseelavukku Oru Salute

Related ebooks

Reviews for Suseelavukku Oru Salute

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Suseelavukku Oru Salute - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    சுசிலாவுக்கு ஒரு சல்யூட்

    Suseelavukku Oru Salute

    Author :

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    கிருஷ்ணசாமிக்கு முந்தின நபர் பூத் டெலிபோனில் ரூ.117 தாண்டி விரைந்து கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் ஹிந்தியில் பேசிக்கொண்டேயிருந்தான். இடுப்பில் ஒரு கை. மெல்லிய ஜிப்பாவுக்குள் பான்பராக்.

    தோசையாய் சுருட்டிப் பிடித்திருந்த வாரமிருமுறை இதழைப் புரட்டி தன் எரிச்சலை சமன் செய்யப் பார்த்தான் கி. சுவாமி. சிரமப்பட்டான்.

    காத்திருப்பின் உச்சம் தொடும் அவனுக்குத் தலையோரப் பகுதிகளில் வெள்ளி முடிகள் கலப்படமாகியிருக்க, பார்க்கிற கண்ணாடி மூக்கிலும் படிக்கிற கண்ணாடி சட்டைப் பாக்கெட்டிலும் இருந்தன. வயது நாற்பது ப்ளஸ்.

    தற்சமயம் சென்னை மைலாப்பூர் துர்கா லாட்ஜில் தங்கியிருக்கும். நாளைக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரசில் திருச்சிக்குப் புறப்படவிருக்கும் கிருஷ்ணசுவாமி, ஹிந்தி நபர் ரிஸீவரை வைத்தும் எழுந்து கண்ணாடி அறைக்குள் வந்து எண்களை அழுத்தினான். கதவை மூடிக் கொண்டான்.

    ஹலோ, யார் வேணும்? என்றான் ப்ளஸ் டூ படித்த மகன்.

    ரிஷி, நான்தான் அப்பா பேசறேன்.

    சொல்லுங்க டாடி, என்னாச்சி? கண்களின் ஆர்வத்தை யூகிக்க முடிந்தது.

    பணம் கிடைச்சிடுச்சி ரிஷி.

    தேங்க் காட்! பெருமூச்சை இங்கே உணர முடிந்தது.

    அம்மா எங்கே? பேசச் சொல்லு...

    ஹலோ... சொல்லுங்க... எப்படி இருக்கீங்க? சகதர்மினி.

    நல்லாருக்கேன் திலகா. சித்தப்பா இன்னிக்குத்தான் ஊர்லேர்ந்து திரும்பினார். கேட்டேன். முதல்ல சத்தம் போட்டார். அப்புறம் படிப்பு விஷயம்னு சொன்னதும் மனசு மாறி கொடுத்துட்டார்.

    எவ்வளவு?

    அம்பதாயிரம்! ரெண்டு மாசத்துல கண்டிப்பா திருப்பிக் கொடுத்துடணும்னு சொன்னார். வட்டி எதுவும் வேணாம்னுட்டார். ஆனா புரோநோட்டுல கையெழுத்தெல்லாம் வாங்கிக்கிட்டார்.

    பரவால்லைங்க. பணம் கிடைச்சதே! திருவானைக் காவல்ல வாங்கிப் போட்ட மனையைத்தான் விக்கிறதுன்னு முடிவு செஞ்சிட்டமே. ரெண்டு மாசமென்ன, ஒரு மாசத்துக்குள்ளேயே அவருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்துடலாம். ரிஷிதான் புலம்பிக்கிட்டே இருந்தான்.

    பணம் எப்போ கட்டணும்?

    நாளன்னைக்கு. ஆமாம், நீங்க எப்ப புறப்படறீங்க?

    நாளைக்கு ராத்திரி ராக்ஃபோர்ட்ல டிக்கெட் வாங்கியிருக்கேன்.

    அதான் பணம் கிடைச்சிடுச்சே... இன்னிக்கே புறப்படலாமே!

    சித்தப்பா நாளைக்குத்தான் ஊர்லேர்ந்து திரும்பறதா முதல்ல சித்தி சொன்னதால நாளைக்கு டிக்கெட் எடுத்துட்டேன் திலகா. கன்ஃபர்ம்ட் பெர்த். சித்தப்பா இன்னிக்கே வந்துட்டார். டிக்கெட் மாத்தலாம்னு பார்த்தா எந்த டிரைன்லயும் பெர்த் இல்லை. பஸ்லதான் வரணும். எனக்கு ஸ்பைனல் கார்டு பிராப்ளம் இருக்கே... அதனால தங்கிட்டு நாளைக்கு நைட்டு புறப்படறேன். அனிதா என்ன பண்றா?

    தூங்கிட்டு இருக்கா. எழுப்பட்டுமா?

    என்ன இது? ஆறு மணிக்கே தூங்கறா?

    ஸ்கூல்லேர்ந்து வந்தப்பவே டல்லா இருந்தா. தொட்டுப் பார்த்தாக் கொதிச்சது. க்ரோஸின் கொடுத்தேன். அசந்து தூங்கறா!

    ஏன், டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போறதுதானே?

    பார்க்கலாம். மாத்திரை கொடுத்து அரை மணியாச்சு, வேர்த்து விட்டிருக்கு...

    பத்திரமா பார்த்துக்கோ திலகா. அஞ்சி மணி நேரம் கழிச்சி ஜுரம் இல்லைன்னாலும் இன்னொரு டேப்லட் கொடு.

    சரிங்க. பணம் பத்திரம். நீங்க தங்கியிருக்கற லாட்ஜ் நல்ல லாட்ஜ் தானே?

    பெரிய லாட்ஜ்தான். ஒண்ணும் பயப்படாதே. எனக்குத் தெரியாதா? வெச்சிடட்டுமா?

    பணம் கொடுத்துவிட்டு வடக்கு மாட வீதியில் மெதுவாக நடந்த கிருஷ்ணசுவாமி. தன் மனைவியோடு பேசிவிட்ட திருப்தியில் ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான்.

    மேற்கண்ட எஸ்.டி.டி. உரையாடல் மூலமாக நாமறிந்த தகவல்கள் யாவை என்று கேட்டுப் பார்க்கலாமென்றால்...

    கிருஷ்ணசுவாமி - திலகா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். ரிஷி, அனிதா, ரிஷியின் கல்லூரிப் படிப்புக்காக ஐம்பதாயிரம் பணத்தை சென்னை சித்தப்பாவிடம் கடன் வாங்க வந்த கிருஷ்ணசுவாமி, அவர் ஊரில் இல்லாததால் மைலாப்பூர் லாட்ஜில் தங்கி, இன்றைக்கு ஊரிலிருந்து திரும்பிய சித்தப்பாவிடம் கெஞ்சிக் காரியம் சாதித்து விட்டான் என்பது தெரிகிறது.

    ***

    இனி... உங்கள் கேள்விகளும், என் பதில்களும்.

    கேள்வி: கிருஷ்ணசுவாமி திருச்சியில் என்ன செய்கிறான்?

    - ஜெ. பாலகிருஷ்ணன், கிணத்துக்கடவு.

    திருச்சியில் பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிட்டட் என்கிற யானை நிறுவனத்திற்கு சில உதிரிப் பாகங்களைத் தயாரித்து சப்ளை செய்கிற ஒரு தனியார் பூனை நிறுவனத்தில் உதவி மேனேஜராக வேலை பார்க்கிறான். கேட்காத கேள்விக்கான பதில்: அவனுக்கு மாதம் ஏழாயிரத்து சொச்சம் சம்பளம்.

    கேள்வி: எத்தனை வருஷமாக இந்த வேலையில் இருக்கிறான்?

    - நீலா கிருஷ்ணமூர்த்தி, தாமரைக்குளம்.

    பதில்: சுமார் பத்து வருடங்களாக.

    கேள்வி: பத்து வருஷமாக நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கும் கிருஷ்ணசுவாமியால் ஐம்பதாயிரம் ரூபாய் சொந்தமாகப் புரட்ட முடியாதா? முடியாதென்றால் ஏன்?

    - ஆர். கருணாகரன், சிதம்பரம்.

    பதில்: முடியாது. ஏனென்றால் நண்பன் வாங்கிய ரெண்டு லட்சம் கடனுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டு, நண்பன் திருப்பதியிலிருந்து வாங்கி வந்த நாமக்கட்டியைக் கரைத்து வங்கிக்காரர்களுக்குப் போட்டுவிட்டு ஓடிவிட்டதால், இவன் மாட்டிக் கொண்டதால், மாதாமாதம் நண்பன் வாங்கிய அசல், வட்டி என்று மூவாயிரம் ரூபாயைக் கட்டி வருவதால், இது குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டில் துண்டுக்குப் பதிலாக வேட்டியே விழ வைத்து விட்டது என்பது திலகாவிடம் கிருஷ்ணசுவாமி சொல்லி வரும் அதி அப்பட்டமான பொய்!

    கேள்வி: அப்படியென்றால் அந்த மூவாயிரம் எங்கே போகிறது?

    -

    Enjoying the preview?
    Page 1 of 1