Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sathamillatha Yudham
Sathamillatha Yudham
Sathamillatha Yudham
Ebook94 pages30 minutes

Sathamillatha Yudham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அருணா ஒரு மருத்துவர். "செந்தூர் குளம்" என்ற கிராமத்திற்கு டிரான்ஸ்பர் ஆகி தன் அண்ணனின் நண்பர் அல்லிராஜ் வீட்டில் தங்குகிறாள்.

அந்த வீட்டில் இரவு நேரத்தில் பல விசித்திர அமானுஷ்ய நிகழ்வுகளை எதிர் கொள்கிறாள். அதைப் பற்றி ஆராய, சரி செய்ய, ஒருபுறம் அறிவியலையும் நவீன மருத்துவமுறையையும் நாடுகிறாள் அருணா.

மறுபுறம் அல்லிராஜ் அவன் தந்தையும் வேறோரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணிக்கின்றனர்.

நடுவே நடக்கும் பிரச்சனைகளை மூவரும் எப்படி கடக்கின்றனர். அந்த அமானுஷ்ய நிகழ்வுகளை யார் வெற்றி கண்டார்கள்?

வாசிப்போம் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்...

Languageதமிழ்
Release dateFeb 7, 2022
ISBN6580100407812
Sathamillatha Yudham

Read more from Rajesh Kumar

Related to Sathamillatha Yudham

Related ebooks

Related categories

Reviews for Sathamillatha Yudham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sathamillatha Yudham - Rajesh Kumar

    https://www.pustaka.co.in

    சத்தமில்லாத யுத்தம்

    Sathamillatha Yudham

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    அந்த பாஸஞ்சர் ரயில் செந்தூர்க்குளம் கிராமத்து ரயில்வே ஸ்டேஷனில் அழகான இருபத்தைந்து வயது அருணாவை உதிர்த்துவிட்டு ‘ப்ரான்க்’ என்று கத்திக் கொண்டு நகர்ந்தது. அடுத்த சில மாதத்திற்குள் ரிடையர் ஆகும் பக்குவத்தில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் இடதுகை சுண்டு விரலால் காதைக் குடைந்து கொண்டே - வலது கையால் சாயம் போயிருந்த பச்சைக் கொடியை ஆட்டினார்.

    அருணா கையில் சூட்கேஸை எடுத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள். நீளமான செம்மண் பிளாட்பாரம். பிளாட்பாரத்தின் கோடியில் ஸ்டேஷனின் நோயாளித்தனமான ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த கட்டிடம். ஸ்டேஷனின் நெற்றியில் மஞ்சள் பெயின்ட் அடிக்கப்பட்டு - அதில் ‘செந்தூர்குளம்’ என்ற கறுப்பு பெயிண்ட் எழுத்துக்கள். செந்தூர்குளம் என்று ஹிந்தி, பெரிய எழுத்துக்களை தமிழ் இன மக்கள் தார் பூசி அழித்திருந்தார்கள்.

    அந்த சாயந்திர நேரத்தில் ரயிலினின்றும் இறங்கிய ஒரே பாஸஞ்சர் அவள்தான். மணல் கெட்டிப்பட்டு இறுகிப் போயிருந்த பிளாட்பாரத்தில் சற்றே கனத்த சூட்கேஸைத் தூக்கிக்கொண்டு மெதுவாய் நடந்தாள் அருணா. ரயில்வே தண்டவாளத்தையொட்டி வியாபித்திருந்த காலியிடத்தில் - நரிக்குறவ கூட்டம் ஒன்று ‘காரே - பூரே’ என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். பிரம்மாண்டமான பூவரசு மரங்களில் காகங்கள் இரைச்சலோடு அடைந்து கொண்டிருந்தன. கோவணம் மட்டுமே கட்டியிருந்த கிராமத்து சிறுவர்கள் ரயில்வே இரும்புக் கிராதியின் மேல் ஏறி பக்கத்தில் இருந்த புளியமரக்கிளையை உலுக்கிக் கொண்டிருந்தார்கள்.

    அருணாவைப் பார்த்ததும் ஒரு சிறுவன் ஓடிவந்தான்.

    அக்கா...! பொட்டியைத் தூக்கியாரட்டுமா?

    வேண்டாம்...

    அம்பது பைசா குடுங்கக்கா...

    வேண்டாம்... போடா... அருணா அதட்டும் குரலில் சொன்னதும் பையன் கோவணம் பறக்க திரும்பவும் புளிய மரக்கிளையை உலுக்க ஓடினான்.

    பச்சைக்கொடி, சிவப்புக்கொடி இரண்டையும் பக்கத்தில் சுருட்டி வைத்துக் கொண்டு - காத்திருந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் டிக்கெட்டைக் கொடுத்தபடியே கேட்டாள் அருணா.

    ஸார்! கிராமம் இங்கிருந்து ரொம்ப தூரமா?

    ஒன்றரை கிலோ மீட்டர் இருக்கும்...

    வண்டி ஏதாவது கிடைக்குமா...?

    கிராமத்துல யார் வீட்டுக்குப் போகணும்?

    காளிங்கராயர் வீட்டுக்கு.

    நீங்க வர்றது அவங்களுக்குத் தெரியாதா?

    தெரியாது...

    காளிங்கராயர் உங்களுக்குச் சொந்தமா?

    இல்லை. தெரிஞ்சவங்க...

    வாங்க வண்டிக்கு நான் ஏற்பாடு பண்றேன்...

    அழுக்கான அந்த ஸ்டேஷன் கட்டிடத்தை விட்டு வெளியே வந்த ஸ்டேஷன் மாஸ்டர் பக்கத்தில் இருந்த ஓட்டு வீட்டைப் பார்த்துக் குரல் கொடுத்தார்.

    டேய்... பொன்ராசு...

    ….

    பொன்ராசு...

    முண்டாசு கட்டிய தலையொன்று - கதவைத் திறந்து கொண்டு எட்டிப் பார்த்தது.

    வந்துட்டேனுங்கய்யா...

    சீக்கிரமா வா.

    அழுக்கான தீசல் வேஷ்டியை இறுக்கிக் கட்டியபடி - அவன் ஓடிவந்தான்.

    அய்யா...

    இவங்க கிராமத்துக்குப் போகணுமாம். வண்டியைக் கட்டிக்கிட்டு வா.

    அய்யா...! மாட்டுக்கு கழிச்சல் நோவுங்க... வண்டியில் பூட்ட முடியாதுங்களே...

    ஸ்டேஷன் மாஸ்டர் சிரித்தான். ஏண்டா பொய் சொல்றே. பொழுது சாஞ்சா போதும். சாராயக்கடைப் பக்கம் போயாகணும் உனக்கு... போய் வண்டியைக் கட்டிட்டு வாடா.

    அ... அய்யா...

    எந்த சால்ஜாப்பையும் சொல்லிட்டிருக்காதே...! இவங்க இந்தக் கிராமத்துல யாரைப் பார்க்க வந்திருக்காங்க தெரியுமா?

    யாரைங்கய்யா...?

    காளிங்கராயரை...

    பொன்ராசுவின் கை தன்னிச்சையாய் - தலைக்குப் போய் முண்டாசை அவிழ்த்தது. மார்புக்குக் குறுக்காக

    Enjoying the preview?
    Page 1 of 1