நாம் எதை நோக்கி ஓடுகிறோம்?
By Azhagar
()
About this ebook
இறை தத்துவங்களைப் படித்து உள்வாங்கிக்கொண்டு செயல்படுதல் ஆகியவை ஆன்மவாழ்க்கை வாழும் அனைவருக்கும் ``ஞானம்’’ எனும் தன் இறுதி இலக்கை அடைய இன்றியமையாத ஒன்றாகும்.
அதேபோல், லெளகீக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள கோடானு கோடி மக்களுக்கு, தன் வாழ்க்கையை பசியின்றி, அறிவுச் செழிப்போடு, வசதி வாய்ப்புகளோடு கடந்து செல்லத் தேவையான செல்வத்தைச் சேர்ப்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. அந்த முயற்சியில் ஸதா சர்வகாலமும் ஈடுபட்டுள்ள மனிதர்கள் ``ஞானத்தை’’ பற்றியும், ``தன்னைத் தானே அறிதல் அல்லது அகத்தாய்வு’’ பற்றியும் சிறிதளவும் சிந்தையே செய்யாமல், தன் வாழ்நாளை கழித்துவிட்டு, முதுமைக்காலத்தில் மட்டுமே, ஆன்மாவைப்பற்றி சிந்தனை செய்ய ஆரம்பிக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையான செல்வம் சேர்க்கும் அதே வேளையில், தன் ஆன்ம முன்னேற்றத்திற்காகவும் நேரம் ஒதுக்கி செயல்படும் விழிப்புணர்வு உண்டாக வேண்டும் என்ற நல்ல நோக்கில் எழுதப்பட்டதுதான் ``நாம் எதை நோக்கி ஓடுகிறோம்’’
Related to நாம் எதை நோக்கி ஓடுகிறோம்?
Related ebooks
Ottangal Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsSittha Jaalam Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsThottravanin Dairy Kurippu Rating: 0 out of 5 stars0 ratingsManam Sinthanai Seyalpadu Rating: 0 out of 5 stars0 ratingsArul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratingsUratha Sindhanai Rating: 0 out of 5 stars0 ratingsManitha Nilaikku Appal Oru Payanam Rating: 5 out of 5 stars5/5அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்கு மிருக மனங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsThedalgal Rating: 0 out of 5 stars0 ratingsEthanai Ethanai Manangal Rating: 0 out of 5 stars0 ratingsPrachanaigal... Theervugal Rating: 0 out of 5 stars0 ratingsArivuraigal Aayiram Rating: 0 out of 5 stars0 ratingsNeengal Innum Yen Kodeesvarar Agavillai? Rating: 0 out of 5 stars0 ratingsKatturai Kothu 50 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Kaanungal Rating: 0 out of 5 stars0 ratingsVetri Chakram Rating: 0 out of 5 stars0 ratingsKolai Thodarbukku Appal… Rating: 4 out of 5 stars4/5Kannaana Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsArulneri Muzhakkam Rating: 0 out of 5 stars0 ratingsAnma Kadandhu Sellum Padhai Rating: 0 out of 5 stars0 ratingsமனித மனம் ஒரு மிருகப் பண்ணை Rating: 5 out of 5 stars5/5தேடல்கள் Rating: 5 out of 5 stars5/5Manam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Maayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Kaatchikku Appal Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Sila Puthagangal Part 5 Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Vellam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for நாம் எதை நோக்கி ஓடுகிறோம்?
0 ratings0 reviews
Book preview
நாம் எதை நோக்கி ஓடுகிறோம்? - Azhagar
1. ‘‘நாம் எதை நோக்கி ஓடுகிறோம்?’’
தினமும் காலை துவங்கி இருள் சூழ்ந்து வீட்டிற்குள் வந்து சேரும் வரை ஒவ்வொரு மனிதனும் எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் ஓட்டத்திற்கான காரணங்கள் பலவாக இருப்பினும், அதன் பின்னணியில் இருந்து அவனை இயக்கிக்கொண்டிருக்கும் சர்வ வல்லமை படைத்த சக்தி எதுவென்று சற்று உற்று நோக்கினால், ‘பணம்’ என்னும் மகாசக்தியே என்பதை அறிந்துகொள்ளலாம். அந்த சக்தியே இரும்பினைக் காந்தம் ஈர்ப்பது போல், ஒவ்வொரு மனித மனத்தையும் தன்னை நோக்கி ஈர்த்து, அவர்களின் தேடலை ஒரு முடிவுக்கு வரவிடாமல் தடுத்து மனித வாழ்க்கையை ஒரு தொடர் ஓட்டமாக மாற்றிவிட்டது என்றால் அது மிகையாகாது.
தன் உணவினை தானே தேடும் வேட்டையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஓடத் தொடங்கிய ஆதி மனிதன் அறிவு முதிர்ச்சியடைந்து, நாகரிக வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி, சொகுசு வாழ்க்கை என்று மாறிவிட்ட பிறகும் தன் தேடலை நிறுத்தவில்லை. தனக்குத் தேவையான உணவு, உறைவிடம் என்று நின்றுவிடாமல், தலைமுறை தலைமுறைக்குத் தேவையான சொத்துக்களை சேர்ப்பதை பார்க்கும்போது,
"வாழ்வதற்கு செல்வம் சேர்ப்பது?’’ என்கிற நிலை போய்,
"செல்வம் சேர்ப்பதற்காகவே வாழ்வது’’ என்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறான் என்றால் அதன் காரணம் என்ன?
பொதுவாகவே, மனிதர்கள் தன்னையும் அறியாமல் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என்றால் அதை `போதைப் பழக்கம்’ என்றே சொல்ல வேண்டும்.
இன்று உலகையே அடிமையாக்கி வைத்திருக்கும் ஒரு போதைப்பொருள் `பணமும்’ தான் என்றால், இல்லையென்று யாராலும் மறுக்கமுடியாது. `பணம்’ என்கிற போதைக்கு அடிமையாகும் மனிதனுக்கு, அவன் மனதில் வாழும் `மனிதாபிமானம்’ என்ற இன்றியமையாத பண்பு முதலில் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கி பின், முற்றிலும் காணாமல் போய்விடுகிறது. போதைக்கு அடிமையானவர்கள் "அந்தப் போதை இல்லாமல் தன்னால் உயிர் வாழவே இயலாது’’ என்கிற நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எனவே, அந்த போதைப் பொருளை அடைவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். பெற்ற தாய் தந்தையையும், உற்ற நண்பர்களையும் ஏமாற்றத் தயங்க மாட்டார்கள். இன்னும் சிலரோ, கொடூரமானவர்களாக மாறி, அதற்காகக் கொள்ளையடிக்கவும் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள்.
`பணம்’ என்கிற போதையில் சிக்கியவர்களும் சற்றும் இளைத்தவர் அல்ல. அதை அடைய எத்தனை குறுக்கு வழிகளில் வேண்டுமானாலும் செல்வார்கள். கொள்ளையடிப்பார்கள். அதைத் தடுப்பவர்களைக் கொலையும் செய்வார்கள். பாவம், புண்ணியம், தர்மம், அதர்மம் என்றால் இன்னது என்று அவர்களுக்குத் தெரியாது. இவ்வாறாக, மனித குலத்தையே தர்மத்திற்கும், நியாயத்திற்கும், எதிராக திருப்பி விட்டுள்ள `பணம்’ என்கிற அரக்கனை அடையவே நாம் எல்லோரும் தினமும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
"அந்த அரக்கனை அடையவேண்டி, இந்த மாய உலகமே ஆண்டவனைச் சரணடைந்துள்ளது’’ என்றால் எவ்வளவு பெரிய வேதனை. பணத்திற்காக கடவுளையே ஏமாற்ற எப்படியெல்லாம் யோசிக்கிறோம்.
நேர்த்திக்கடன்
நமக்கு ஏதேனும் ஒரு கஷ்டம் வந்தால், அதிலிருந்து மீட்டுத்தரும்படி இறைவனை மனமுருக வேண்டுவோம். நம் கோரிக்கையை ஏற்று இறைவன் நம்மைக் காப்பாற்றினால், அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, காணிக்கை செலுத்துவோம் அல்லது விரத முறைகளை மேற்கொண்டு அதை தவறாமல் நிறைவேற்றுவோம். கடவுள் நமக்கு செய்த உதவிக்குப் பதிலாக "திருப்பி அவருக்கு கொடுக்கின்ற காணிக்கைக்கு நேர்த்திக் கடன்’’ என்று பெயர்.
ஒரு பெரும் செல்வந்தர், பலகோடி மதிப்புள்ள தன்னுடைய பழைய வீட்டை விற்றுவிட வேண்டும் என முயற்சி செய்துகொண்டிருந்தார். நகரத்தின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள இடம் என்பதால் அதை விலைகொடுத்து வாங்குவதற்கு ஏகப்பட்ட போட்டிகள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த சமயம்.
அந்த நேரத்தில் ஒரு அவசர சந்திப்பில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டிற்குச் செல்லவேண்டிய கட்டாயம் அந்த செல்வந்தருக்கு ஏற்பட்டது. வெளிநாடு சென்று திரும்பி வந்து சொத்து விற்பதைப் பற்றி பேசலாம் எனத் தன் உதவியாளரிடம் கூறிவிட்டு விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.
சில மணிநேர பயணத்திற்குப் பிறகு, வழக்கத்திற்கு மாறாக விமானம் தள்ளாடியதையறிந்து, விமானத்தில் இருந்த அனைவரும் கூச்சலிட ஆரம்பித்தனர். "விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அனைவரும் Seat Belt மாட்டிக்கொண்டு பாதுகாப்பாக இருக்கும்படியும், தேவையென்றால், `பாராசூட்டில்’ கீழே குதிக்கவும் தயாராக இருக்கும்படியும் அறிவிப்பு வந்தது. அனைவருக்கும் மரண பயம் சூழ்ந்துகொண்டது.
அனைத்துப் பயணிகளும், அவரவர் மதக் கடவுளிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டத் துவங்கினர். செல்வந்தரும் சும்மா இருப்பாரா? தான் இறந்துவிட்டால், தன் சொத்துக்களையெல்லாம் எங்கெங்கு வைத்துள்ளோம் என்கிற ரகசியத்தை தன் குடும்பத்திற்கு சொல்லவில்லையே. பினாமி பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்களெல்லாம் பினாமிகளே அபகரித்துவிடுவார்களே... தான் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு சேர்த்த செல்வமெல்லாம் வீணாகப் போகிறதே என்ற எண்ணத்தில், அநேகமாக மூர்ச்சையாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அவர் ஒரு நல்ல வியாபாரி ஆயிற்றே. உடனே அவர் மூளை கடவுளிடம் வியாபாரம் பேசத் தொடங்கியது. `விலைமதிப்பு மிக்க தன் உயிரைக் காப்பாற்றித் தந்தால், கடவுளுக்கு தன் விலைமதிப்பு மிக்க வீட்டை தானமாகக் கொடுத்துவிடுகிறேன்’’ என்று கெஞ்சினார்; அழுது மன்றாடினார்.
சிறிது நேரத்தில், `விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது’ என்று அறிவிப்பு வந்தது. அனைவரும் ஆனந்தத்தில் ஆண்டவனுக்கு நன்றி கூறினர். செல்வந்தருக்கும் தாங்க முடியாத சந்தோஷம். பயணம் முடிந்து நல்லபடியாக வீடு திரும்பினார். சில தினங்கள் சென்ற பிறகு அவருடைய உதவியாளர், வீடு வியாபாரம் செய்வது தொடர்பாக ஞாபகப்படுத்தினார்.
இப்போது ஆரம்பித்தது மனப்போரட்டம், செல்வந்தருக்கு தூக்கம் போயிற்று. "பயத்தினால், அவசரப்பட்டு கோடிக்கணக்கான விலை மதிப்புடைய வீட்டை தானம் தருகிறோம் என்று வேண்டிக்கொண்டோமே. இப்போது என்ன செய்வது? வீட்டை விற்று கிடைக்கும் பணத்தை அப்படியே உண்டியலில் போடுவதா’’ என்று மனம் உடைந்து போனார். அவர் குறுக்குப்புத்தியில் ஒரு யோசனை உதித்தது. அதாவது, அந்த வீட்டை விலைக்கு வாங்குபவர்களுக்கு ஒரு நிபந்தனையுடன் விற்கத் தயாரானார். நிபந்தனை என்னவென்றால், அந்த வீட்டை வாங்குபவர் தான் பலகாலமாக வளர்க்கும் தன் செல்லப்பிராணி பூனை ஒன்றையும் சேர்த்து விலைக்கு வாங்க வேண்டும். வீட்டின் மதிப்பு பத்து லட்சம். ஆனால், `பூனையின் மதிப்பு சில கோடிகள்’ என்றார்.
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். வீட்டின் மதிப்பான பத்து லட்சங்களை உண்டியலில் போட்டுவிடுவது. அதன்படி பார்த்தால் அவர் வேண்டுதலை வேண்டியபடி நிறைவேற்றி விடுகிறார். பூனையின் மதிப்பான சில கோடிகளைத் தன் வசமே வைத்துக்கொள்கிறார்.
எப்படியிருக்கிறது யோசனை? இது ஒரு கற்பனைக் கதைதான் என்றாலும், "பணத்துக்காக தன்னைப் பெற்ற தாய் தந்தையையே விட்டுச் செல்லும் பிள்ளைகள் ஒரு பக்கம். அதே பணத்துக்காக நம்மை படைத்த கடவுளையே ஏமாற்ற நினைக்கும் மனிதர்கள் மறுபக்கம்’’ என்ற உண்மையை இதன்மூலம் நாம் எளிதில் உணரலாம்.
Content
2. ஏழை மக்களுக்கு பணம் ஒரு போதையா?
குறிப்பிட்ட அளவிற்கு மேல்