Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhagin Yathirai
Azhagin Yathirai
Azhagin Yathirai
Ebook110 pages34 minutes

Azhagin Yathirai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சந்துரு தனது சொந்த ஊரை விட்டு கேரளாவிற்கு வந்து 1.5 வருடங்கள் ஆகிவிட்டன. சந்துரு தனது கடந்த காலத்தை நினைத்து பார்க்கிறார். சந்துரு தனது அத்தை மகள் சரளாவை விரும்பினான். ஆனால் சரளா சந்துருவின் நண்பனை நம்பி ஏமாறுகிறாள். சரளா யாரை மணக்கிறாள்? இல்லை அவளது வாழ்வில் என்ன நிகழுகிறது என்பதில் தான் சுவாரஸ்யம் எழுகிறது....
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580129306367
Azhagin Yathirai

Read more from Rasavadhi

Related to Azhagin Yathirai

Related ebooks

Reviews for Azhagin Yathirai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhagin Yathirai - Rasavadhi

    https://www.pustaka.co.in

    அழகின் யாத்திரை

    Azhagin Yathirai

    Author:

    ரஸவாதி

    Rasavadhi

    For more books

    https://pustaka.co.in/home/author/rasavadhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1

    வானம் வெளி வாங்க ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் மழை ஓய்ந்து விடவில்லை. சிறு சிறு தூறல்களாகப் பரவி விழுந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே ஒதுங்கியிருந்த ஜனங்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தனர் சிலர்; பலர் கைகளை நீட்டிப் பார்த்தனர். பிறகு ஒரு வழியாகத் தீர்மானத்துக்கு வந்தவர்களாக ஏதோ தடைப்பட்டுப் போன நெடுந்தூரப் பிரயாணமொன்றை மீண்டும் தொடங்குவது போலத் தெருவில் நடக்க ஆரம்பித்தார்கள். குறட்டோரமாக இருந்த நாய் காதைப் படபடவென்று அடித்து உடலைச் சிலிர்த்து விட்டுக்கொண்டது. இத்தனை நேரமாகக் கொட்டுகிற மழையில் யோகியைப் போல நின்றிருந்த ஒரு எருமை காலியான கடைவாசலில் கனகாரியமாக ஒண்டிற்று. சேற்றையும் தண்ணீரையும் வாரியிறைத்தபடி கார் ஒன்று வேகமாகச் சென்றது. தெருவில் நடமாட்டம் இப்போது நன்றாகவே ஆரம்பித்துவிட்டது.

    ஜன்னலருகே நின்று பார்த்துக் கொண்டிருந்த சந்துரு அலுப்புடன் திரும்பினான். பெருமூச்சொன்று மார்பைக் கிழித்துக் கொண்டு வந்தது.

    'ஆயுள் முழுவதும் இந்த நிலைதானா? இதே நெட்டுயிர்ப்புத்தானா?' என்று அவன் உள்ளம் கலங்கியது.

    கண்ணாடியின் முன்பு நின்றுகொண்டு அவன் தன் முகத்தைப் பார்த்தான். எவ்வளவோ தடவைகள் பார்த்துப் பார்த்து அவனுக்கே அலுப்பையும் எரிச்சலையும் ஊட்டிய முகந்தான். பொளிந்த அம்மி போன்ற கன்னங்களும், நெற்றியும், பூ விழுந்த இடது கண்ணும்...!

    'நான் அழகாக இல்லைதான்; இருந்தாலும் கோரமா? சரளா வெறுக்கும்படியாக அவ்வளவு கோரமாகவா இருக்கிறேன்....'

    'சரளா!’

    'எப்படி உனக்கு இவ்வளவு அழகு அமைந்தது! உனக்குப் பிறகு பூமியில் பிறந்த பெண்மை இனத்துக்கே அழகு மீதி வைக்காமல் பிரம்மா ஓர வஞ்சனையுடன் உன்னிடமே எல்லாவற்றையும் வடித்து விட்டானோ? சுழலும் உன் கருவிழிகள் என் உயிர் நாடியையே போய்க் கவ்வுகின்றனவே? படபடக்கும் உன் இமைத் துடிப்பு எனக்கு எவ்வளவு பரவசம் தருகிறது தெரியுமா? புன்ளகையில் உன் இதழ்கள் நெளியும்போது என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் உன் காலடியில் கொட்டி விழுந்துவிடமாட்டோமா என்று தோன்றுகிறதே!’

    'ஆனால்.... எவ்வளவு இருந்தும் என்ன? உன்னைப் பேரழகியாகப் படைத்துவிட்ட ஒரு மயக்கத்தில், கர்வத்தில் சிருஷ்டிக் கடவுள் உன் உடலுக்குள் இதயத்தை வைக்க மறந்து விட்டான் போலும்! அப்படித்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால்.... இல்லையென்றால் என் மனம் படும் பாடும் உன் மீது நான் கொண்டிருக்கும் அழியாத காதலும் உனக்குத் தெரியாமற் போவானேன்?’

    'உன்னை நொந்து என்ன செய்ய? எல்லாம் என் தலைவிதிதான். என்னைப் படைத்தவனை அல்லவா கேட்க வேண்டும்?’

    'என்னை மனிதனாகவே நீ மதிக்கவில்லை. நான் அசடுதான். இன்றா நேற்று? உனக்குப் பேசத் தெரிந்த நாளிலிருந்தே வார்த்தைக்கு வார்த்தை அசடு என்று தான் என்னைக் குத்தி எடுத்தாய். நீ கேலி செய்தாலும் அந்த மென் குரலில் ஈடுபட்டு மயங்கினேன் நான். அதுதான் என் பொறுமையை நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. எனக்கும் இதயம் என்று ஒன்று இருக்கும் என்கிற எண்ணம் என்றாவது உனக்கு இருந்ததா....?'

    வாசலில் கேட்ட அரவம் சந்துருவின் சிந்தனையைக் கலைத்தது.

    எந்தா?

    கோவிந்த குருப்தான்!

    கோபித்துக் கொள்ளாதே. சந்துரு. மழை எதிர்பாராமல் பிடித்துக் கொண்டுவிட்டது. இல்லையென்றால் சற்று முன்னதாகவே வந்திருப்பேன்!

    அதனால் என்ன? பரவாயில்லை! அசுவாரசியமாகத்தான் பேசினான் சந்துரு.

    போகட்டும். தயார்தானே? மூட்டை எல்லாம் கட்டியாகி விட்டதா?

    ஓ!

    "பேஷ்! எங்க பக்கத்துக்கு வந்ததும் எங்களைப் போலவே பேசக் கற்றுக்கொண்டு விட்டதன் அடை யாளமா இது?'' குருப் வாய்விட்டுக் கடகடவென்று சிரித்தான். அது அவன் வழக்கம்.

    எல்லாமே உன் தயவுதான்!

    சரி, கிளம்பு; நேரமாகிறது. சரியாக இரண்டு மணிக்கு ஸ்டாண்டிலே இருக்கணும்!

    நான் ரெடி எப்போதோ!

    நண்பர்கள் இருவரும் வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினார்கள்.

    எக்ஸ்பிரஸ் பஸ் வேகமாகத் தார்ரோடில் பறந்து கொண்டிருந்தது. வழி நெடுகிலும் தென்னை மரங்களும் பசுமை பாய்ந்த வயல்களுமாகக் கண்ணுக்கு இதமாக இருத்தன. சந்துருவின் மனம் சற்று லேசாக ஆனது போலத் தோன்றிற்று. கடல் மட்டத்துக்குப் பல அடிகள் உயரத்துக்கு மேல் பாதை உயர்ந்து இறங்கிய போதெல்லாம் சுற்றுப்புறப் பள்ளத்தாக்கு தோற்றுவித்த ஒருவிதப் பிரமிப்பு அவன் உள்ளத்தைச் சற்றே கிளுகிளுக்க வைத்தது.

    கொல்லத்தைத்

    Enjoying the preview?
    Page 1 of 1