Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Celluloid Abhayam
Celluloid Abhayam
Celluloid Abhayam
Ebook72 pages25 minutes

Celluloid Abhayam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவர் - தாமிரபரணி தந்த இலக்கிய விளைச்சல். கவிதைப் பெண் என்பது இவரது முகம். நெல்லை மண் எல்லை கடந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என நேசிப்பவர். பெண்ணியவாதி நிலை கடந்து மனித நேயவாதி(Not feminist but humanist) என்னும் தளம் புகுந்து யோசிப்பவர்.
திரு மு.க.ஸ்டாலின், பத்மஸ்ரீ கமல் ஹாசன் மற்றும் பலர் வெளியிட்ட தொகுப்புகளோடு, கவிதை சிறுகதை புதினம், கட்டுரை, திரைப்பாடல்கள் என சிறகு விரிக்கும் பன்முகப் படைப்பாளி.
அவனின் திருமதி, தீ, தோஷம், பூஜை, கழிவு - முத்திரைச் சிறுகதைகளாக ஆனந்த விகடன் வைர விழாவில் பரிசு பெற்றவை.
உயரிய இலக்கிய விருதுகள் பெற்ற இவரின் படைப்புகள் கல்லூரிப் பாடமாகவும், ஆராய்ச்சி மாணவர்களின் முனைவர் பட்டப் பாதையாகவும் சிறக்கின்றன.
பல சாதனைகளுக்குப் பிறகும், தன் அடுத்தக் கட்டத்தை நோக்கிப் பயணம் செய்கிறார். திரைப்படப் பாடல்களும், கதை வசனமும் எழுதிவருகிறார்.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580109301149
Celluloid Abhayam

Read more from Andal Priyadarshini

Related authors

Related to Celluloid Abhayam

Related ebooks

Reviews for Celluloid Abhayam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Celluloid Abhayam - Andal Priyadarshini

    http://www.pustaka.co.in

    செல்லுலாய்டு அபாயம்

    Celluloid Abhayam

    Author:

    ஆண்டாள் பிரியதர்ஷினி

    Andal Priyadarshini

    For more books

    http://www.pustaka.co.in/home/author/andal-priyadarshini

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    குளிர்ப்பதனமூட்டப்பட்ட கலையரங்கில் காற்று நுழையக் கூட இடமில்லாமல் கூட்டம்.

    தோரணங்களும், மலர்ச்சரங்களும், வாழ்த்து அட்டைகளும், கொடிகளுமாய் அலங்காரம்.

    'அண்ணன் பிறைசூடி ஆஸ்கார் பெறவேண்டும்...' இப்படி சொன்ன பேனர்கள்.

    காற்றில் கலந்திருந்த உயர்ரக பெர்ஃப்யூம், மல்லிகைப் பூவின் கதம்ப வாசனை.

    தமிழ்த் திரை நட்சத்திரங்கள் ஒருத்தர் பாக்கியில்லாமல் திரண்டிருந்தார்கள்.

    'அடுத்த படத்தில் பிறைசூடி வாய்ப்புத் தரமாட்டாரா...' என்ற ஏக்கம்.

    'அவரின் படத்தில் நூறாவது காரக்டராகவாவது நான் தலைகாட்ட வேண்டும்...'

    இப்படி எதிர்பார்ப்பு.

    தங்களின் மானசீகக் கதாநாயகன் கதாநாயகியை. ரொம்பவும் கிட்டத்தில் பார்த்து ஜென்ம சாபல்யம் அடையத் திரண்டிருந்த ரசிகர்கள்.

    மின்னலாய் வெட்டிய காமிரா ஃப்ளாஷ், பத்திரிகை நிருபர்கள், ஸாடிலைட் டி.வி. காரர்கள்.

    எல்லோரும் ரொம்ப ஆர்வமாய் மேடையைப் பார்த்துக் கை தட்ட ரசிகர்கள் கூட்டம் 'ஹோ' வென்று ஆரவாரம் செய்தது.

    இளைஞர் பிறைசூடியைப் போன்ற இயக்குனர்களால்தான் தமிழ்த் திரையுலகின் தரம் ஆஸ்கர் விருதை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறது...

    முதல்வர், நழுவிய மூக்குக் கண்ணாடியை மேலே தள்ளி பேசினார்.

    வரிக்கு வரி கைத்தட்டல்.

    'பிறைசூடி' என்ற பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் உற்சாகக் கூக்குரல்.

    சிறந்த இயக்குனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிறைசூடி இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்து கிறேன்...

    பாராட்டி முடித்தார் முதல்வர்.

    தங்க ஜரிகையில் இழைத்த சால்வையைப் போர்த்தினார்.

    ரெட்டை மயில்கள் உற்சாகமாய்த் தோகை விரித்தாடும்படி பளபளவென்று வடிவமைக்கப்பட்ட ஷீல்டினைத் தந்தார்.

    அரங்கமே ஒளிவெள்ளமானது. கண்ணைப் பறிக்கும் ப்ளாஷ் வெளிச்சம்.

    ரொம்ப நன்றி எல்லாருக்கும் நன்றி... பிறைசூடி விருதினை உயரத்தூக்கி நன்றி சொல்லிப் பின்னால் நகர…

    ஆ…ஆ…அம்மா...

    படுத்திருந்த பெஞ்சிலிருந்து உருண்டு கீழே விழுந்தான். கால்மாட்டில் அடுக்கி வைத்திருந்த மூணு அலுமினியப் பானைகள் வழுக்கி அவன் மேலேயே சரிய...

    கரித்துள்ளும், உமியும் கலந்து புகைமண்டலமாய்த் தூசி கிளம்பியது.

    மேலெல்லாம் அப்பியிருந்த உமியையும், கரித்துளையும் தட்டியபடி வெளியே வந்தான்.

    கனவுதானா..? பாராட்டு விழாவும்,விருதும், பொன்னாடையும், எல்லாமுமே கனவுதானா?

    இந்தக் கனவெல்லாம் நிஜமாகவே நடக்குமா...? பரவாயில்லை. காலைக்கனவு பலிக்குமென்று சொல்லுவார்களே... நடந்துவிடுமா? இன்று என் கதை ஓ.கேயாகி விடுமா? படம் பண்ண வாய்ப்பு கிடைக்குமா? வெற்றி கிடைக்குமா? வாழ்க்கை கிடைக்குமா? சினிமாவில் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற லட்சியப் பசிக்குத் தீனி கிடைக்குமா? என் தாகம் தீருமா? என் வெறி தீருமா? என் கவலை தீருமா? இருள் தீருமா? ஏக்கம் தீருமா?

    என்னண்ணே... எழுந்த உடனே உமி அபிஷேகமா? நல்ல சகுனம்தான்... கூடிய சீக்கிரம் கனகாபிஷேகம் நடக்கும்...

    -கையகல வாசலைப் பெருக்கி, மண்ணில் சின்னதாய்க் கோலம் போட்டு நிமிர்ந்தாள் கனகலட்சுமி.

    தினமும்.இந்த நம்பிக்கைலதாம்மா.கண்ணு முழிக்கறேன். விடிய மாட்டேங்குதே...

    விடியும் விடியும் விடிஞ்சுதானே ஆகணும். இருளாவே இருந்திட முடியுமா என்ன...?

    -சூறைத்தேங்காய் உடைத்த மாதிரி படபடவென்று

    Enjoying the preview?
    Page 1 of 1