Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ungalukkum Thayar Oru Lingam
Ungalukkum Thayar Oru Lingam
Ungalukkum Thayar Oru Lingam
Ebook112 pages44 minutes

Ungalukkum Thayar Oru Lingam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஓம் காரேஷ்வர் மகாகாளேஸ்வர் தரிசனமும் பயணமும் மட்டுமல்ல அதனோடு சேர்ந்த அத்தனை கதைகளையும் வரலாறுகளையும், மத்திய பிரதேசத்தின் ஈடில்லா அரசி அகல்யா பாய் முதல் இன்றைய மக்கள் வரை அத்தனையும் சொல்கிறது இப்புத்தகம்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580149007570
Ungalukkum Thayar Oru Lingam

Read more from Varshith

Related to Ungalukkum Thayar Oru Lingam

Related ebooks

Related categories

Reviews for Ungalukkum Thayar Oru Lingam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ungalukkum Thayar Oru Lingam - Varshith

    https://www.pustaka.co.in

    உங்களுக்கும் தயார்… ஒரு லிங்கம்

    Ungalukkum Thayar… Oru Lingam

    Author:

    வர்ஷித்

    Varshith

    For more books

    https://www.pustaka.co.in/home/author/varshith

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    லிங்கம் தேடிய எங்கள் பயணம்.

    எந்த வயதிலும் கதை கேட்பதென்றால் கனகுஷி.

    இன்னொன்று... பயணம் போவதென்றால் படு குஷி.

    எல்லாம் மறந்து எந்த சிந்தனையும் இல்லாது ஆ... வென பார்த்துக்கொண்டே போவதும், கதை கேட்டுக் கொண்டேயிருப்பதும்தான் இந்த உயிருக்கு மிகப் பிடித்தமானது போலிருக்கிறது.

    மனம் பயணங்களை விரும்பினாலும், இலக்கின்றி பயணப்படுவது சாத்தியமா.

    ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒன்றை அடைவதை நோக்கித்தான் என்பது வேடிக்கையான வாடிக்கைதான்.

    ஆனால் கற்பனை எனும் நம் பிடியிலில்லா குதிரை, கடி வேகத்தில் அண்ட சராசரமும் அளந்துவிட்டு வந்துவிடுகிறது. நொடிப் பொழுதில்!

    அண்டத்தின் வடிவம் லிங்க வடிவில் என சொல்லப்படுகிறது.

    பிரும்மாவும் விஷ்ணுவும் பரமனின் அடிமுடியை அண்டம் முழுவதும் அலைந்து தேடிய பொழுது, நடுவில் பிரும்மாண்ட நெருப்பின் வடிவமாய் அவர் இருந்தார் என்ற கதையை கேட்டுருக்கிறோம். அதுவே லிங்கோத்பத்தி காலம் என அரியப்பட்டு வணங்கப்படுகிறது.

    இயற்கையாய் எழுந்த முதல் வணக்கம், லிங்க வழிபாடு.

    எங்களின் பாரதப் பயணங்கள், இமயத்தின் அத்தனை முடி கண்டும், குமரியின் அலை வருடும் அடி தொட்டும் பலவாய் இருந்தாலும், அத்தனை பயணக்களிலும் எங்கள் மனம் தொட்ட ஒரு துளி, இந்தலிங்கம் தேடிய எங்கள் பயணமாக அமைந்ததிலும், அதனை இங்கே உங்களுக்கு பயணக் கதையாய் எடுத்துச் சொல்ல முடிந்ததிலும் மிகப் பெருமை எனக்கு.

    பாரதத்தின் வரலாறு இயற்கையோடும் இறைவழிபாடோடும் கூடவே கோலாகல கொண்டாட்டங்களோடும் இணைந்ததுதானே.

    அதில் ஒரு மாபெரும் கொண்டாட்டமான உஜ்ஜயினியின் ஸிம்ஹித்மேளா என அழைக்கப்படும் கும்பமேளா கொண்டாட்டத்தையும் இந்த பயணத்தின் போது கண்டுகளித்த நிகழ்வுகளையும் கூடவே பகிர்வதில் மகிழ்வும் கொள்கிறேன்.

    வாங்க... வாங்க... ஆனந்தமாய் கதை கேட்டுக் கொண்டே பயணிப்போம்.

    அன்புடன்

    வர்ஷித்

    உங்களுக்கும் தயார்... ஒரு லிங்கம்!

    ஏப்ரல் 2004ல் ஒருநாள்:

    காலையிலேயே, டிபனெல்லாம் சாப்பிட்டாகி விட்டது! என்றாலும், இந்த வேர்க்கடலையும் முந்திரியும் வறுத்துக் கொட்டி, கமகமவென புளியஞ்சாதம் கலக்கும் பொழுது, ஒரு கை அள்ளி வாயில் போட்டுக் கொள்வதை, தவிர்க்க முடிவதில்லை...

    இதோ, ஆயிற்று. மதியம் எங்களுக்கும், இவரது பாஸ், அவரது மனைவிக்காகவும், புளியஞ்சாதம், தயிர்சாதம், அப்பளம், ஊறுகாய்…

    மாலை நேர நொறுக்குக்கு, தட்டை, முறுக்கு, சோன்பப்டி…

    மிளகாய் பொடி தடவிய இட்லி..

    ஹய்ய்யா... இது, நல்லா ஜம்முனு ஊறி, இரவு சாப்பிட ஜோராக இருக்கப் போகிறது!

    வெத்திலை பாக்கு? ம்… ம்... அதுவும் ரெடி!

    எல்லாம் ரெடி... ரெடி...

    எல்லாம்… எதுக்கா...

    இதோ... நாங்க கிளம்பியாச்சே...

    எங்கள் பெண்ணும் மாப்பிள்ளையும் காரில் சென்ட்ரலுக்கு கொண்டுவந்துவிட, நவஜீவன் எக்ஸ்பிரஸ் மூலம் புறப்பட்டுவிட்டோம்!

    நாங்கள் எங்கே போகிறோம் என்பதை, உங்களுக்கு சொல்லவே இல்லையா இன்னும்? அடடா…

    இந்த யாத்ரையின், ப்ரதான நோக்கம், வியாசர்பாடி செல்வ கணபதி ஆலயத்தில், சிவ ப்ரதிஷ்டைக்காக, ஓம்காரேஸ்வர் சென்று, நர்மதா பாணம்… இவர், என் கணவர் திரு. கிருத்திவாசன் ஏற்கனவே அவருக்கு, கேதாரீஸ்வரர் என நாமகரணமும் செய்து வைத்துவிட்டார்… எடுத்து வருவதாகும்.

    அத்துடன், மத்திய ப்ரதேஷில் உள்ள, த்வாதச லிங்கங்களான ஓம்காரேஸ்வர், மகாகாளேஸ்வர், தரிசித்து வருவதாகும்.

    ஆமாம்பா... ஆமாம்! மகாகாளேஷ்வர் தரிசிக்க உஜ்ஜயினியும் போகப் போகிறோம்!

    அங்கே, இப்போ, பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும், கும்பமேளா வேறு நடந்து கொண்டிருக்கிறது!

    ஆஹாங்க்... நர்மதா பாணம் எடுத்து வருதல்... கும்பமேளா... டபுள் டமாக்காவாக... எக்கச்சக்கமான சுவாரசியங்கள் காத்திருக்கிறது, இந்தப் பயணத்தில்!

    நாங்கள் டூர் செல்லும்பொழுது, வழக்கமாக எடுத்துச் செல்லும், நானே கையால் எழுதி தயாரித்துள்ள, அந்தந்த மாநில முக்கிய ஊர்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய தொகுப்பு புத்தகம், இந்த முறை மத்திய பிரதேஷ் பற்றியது பாட்டு, ஸ்லோக புத்தகங்களுடன் இனிமையான பயணம். வெய்யில் அதிகம்தான்.

    எங்கள் கம்பார்ட்மெண்டில், எங்களுடன் பயணிப்பவர்கள், யார் தெரியுமா? ஆவடி ரெஜிமென்ட்ன் 100 ஜவான்கள்! தேர்தல் பணிக்காக, காந்தி நகர் செல்கிறார்கள். அவர்களோடு பேசுவதுதான், எனக்கு, ரொ…ம்ப பிடித்தமானதே. பேசி, வேடிக்கைப் பார்த்து, இன்று நன்றாக பொழுது போனது.

    பயணத்தின் 2ம் நாள்:

    6மணிக்கு அக்கோலாவை அடைகிறோம். 7.30க்கு வரவேண்டிய, காண்ட்வா செல்லும் எங்க ட்ரெயின், மதியம்தான் வருமாம்! லே…ட்…ட்….டு..!

    இங்கெல்லாம் இப்படித்தான்! பஸ்ஸில் போவோம் என, ஆட்டோவில் பஸ் ஸ்டாண்ட்க்கு சென்று, காண்ட்வா செல்ல, பஸ் பற்றி விஜாரிக்க…

    பஸ் 9 மணிக்கு தான் வரும், பாதையும் நன்றாக இருக்காது, பயணம்… ரொம்ப கஷ்டம். போய் சேரவும் லேட் ஆகும் என தகவல்கள் கிடைக்க...

    அப்பாடி... வேண்டவே வேண்டாம்! திரும்ப ஆட்டோ பிடித்து, ரயில்வே ஸ்டேஷன் வந்து…

    இன்னும், வேறு என்னென்ன வண்டிகள், காண்ட்வா போகும் என்பதை விஜாரித்து…

    10.30 பூர்ணா ஆஜ்மீர் எக்ஸ்பிரஸ்க்கு ரிசர்வேஷன் கிடைத்தது!

    டிக்கெட் வாங்கி, வெயிட்டிங் ரூமில் எல்லோரும் குளித்து, டிரஸ் பண்ணி, பிளாட்பார்மில் காபி, பழங்கள் என சாப்பிட்டு…

    இந்த ட்ரெயினும் ஒருவழியாக லேட்டாக வந்து, கூட்டத்தில் ஏறி இடம் பிடித்து…

    ஆம்..! ரிசர்வேஷன்னாவது ஒன்னாவது! இங்கு எல்லோரும் எல்லா பெட்டியிலும் ஏறுவர்.

    அக்கோலா இருப்பது மகாராஷ்ட்ரா. காண்ட்வா இருப்பது மத்யப்ரதேஷ். இரண்டுக்கும் இடையே தூரம் 152 கி.மீ.

    இந்த எக்ஸ்பிரஸ்ல், பேன்ட்ரி காரும் இருந்தது நல்லவேளையாக!

    அதில் மதியத்துக்கு ஆர்டர் பண்ணியதில், பிளாஸ்டிக் பாக்ஸ்ல் (சோப்பு டப்பா சைஸ்) சீரகம், வெங்காயம், உப்பு, போட்ட சாதம்,(வெஜ் ரைஸ்!) ரோட்டி, சப்ஜி, தால், தஹி, ஸ்கூப்ல் ஊறுகாய், பிளாஸ்டிக் டம்ளரில் குடிக்க தண்ணீர்… கொடுத்தார்கள். கூட பயணம் செய்யும் இவ்வூர் மக்கள், தாங்கள் கொண்டு வந்த, அடை போன்ற ரோட்டிகளை, வெஜ் பராத்தா போல இருக்கிறது- ஊறுகாய், தொகையல் போன்றவைகளோடு சேர்த்து, இரண்டு கைகளாலும்

    Enjoying the preview?
    Page 1 of 1