Ilamai Pudhithu
3/5
()
About this ebook
Read more from Thuduppathi Ragunathan
En Uyir Thozhi Nee Allavo Rating: 0 out of 5 stars0 ratingsAchaani Rating: 4 out of 5 stars4/5Nalla Kudumbangale Samuthaaya Valarchiyin Viththukkal Rating: 0 out of 5 stars0 ratingsMaanjolai Manmathan Rating: 5 out of 5 stars5/5
Related to Ilamai Pudhithu
Related ebooks
Anandha Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsPattaampoochi Nenjukkulle Rating: 5 out of 5 stars5/59-vathu Thisai Rating: 4 out of 5 stars4/5கண்ணை நம்பாதே Rating: 0 out of 5 stars0 ratingsKannai Nambathey Rating: 3 out of 5 stars3/5Iranthavan Pesukirean! Rating: 0 out of 5 stars0 ratingsKizhakku Kadarkarai Saalai Rating: 2 out of 5 stars2/5Thiyaga Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsOozhikkaala Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsPoove Neeyum Penthano Rating: 0 out of 5 stars0 ratingsArai Milli Meettaril Oru Aabathu Rating: 5 out of 5 stars5/5Kulire! Kulire! Kollathey! Rating: 5 out of 5 stars5/5Anandha Alaigal Rating: 5 out of 5 stars5/5Arai Millimeteril Oru Abathu Rating: 5 out of 5 stars5/5Kadhalai Vittu Vidu...! Rating: 5 out of 5 stars5/5Senganthal Rating: 0 out of 5 stars0 ratingsOru Sanikkilamai Iravu Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Thara Vanthen Rating: 0 out of 5 stars0 ratingsகாதல் தர வந்தேன்! Rating: 0 out of 5 stars0 ratingsVaanavil Kutram Rating: 5 out of 5 stars5/5வானவில் குற்றம் Rating: 0 out of 5 stars0 ratingsKanne Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsகோவையில் ஒரு குற்றம் Rating: 0 out of 5 stars0 ratingsKovaiyil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Malare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsமலரே, மயங்காதே! Rating: 0 out of 5 stars0 ratingsOru Uyirin Kural Rating: 0 out of 5 stars0 ratingsMugam Paarkkum Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsமுகம் பார்க்கும் நிலவு Rating: 0 out of 5 stars0 ratingsSivappai Sila Pulligal and Sivappu kavithai Rating: 5 out of 5 stars5/5
Reviews for Ilamai Pudhithu
1 rating0 reviews
Book preview
Ilamai Pudhithu - Thuduppathi Ragunathan
10
1
"சார்... தந்தி..."
கையெழுத்துப் போட்டு தந்தியைப் பெற்றுக் கொண்ட ஆறுமுகத்தின் கரங்கள் நடுங்கின.
என்ன தந்தி?
என்று பிரிப்பதற்குள் அவசரப்பட்டார் பக்கத்து வீட்டுக்காரர். அதற்குள் ஆறுமுகத்தைச் சுற்றி ஒரு சின்னக் கூட்டமே கூடிவிட்டது.
ஆங்கிலம் படிக்கத் தெரிந்த ஒருவர், தந்தியை வாங்கிப் பிரித்துப் படித்து விட்டுச் செய்தியைச் சொன்னார்
மீனாட்சியை ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். உடனே புறப்படவும்!
ஆறுமுகம் அதிர்ச்சியால் பேசாமல் நின்று கொண்டிருந்தார்.
என்ன ஆறுமுகம்... பேசாமல் நின்னுட்டே... இப்பவே புறப்பட்டாத்தான் கடைசி வண்டியைப் பிடிக்க முடியும்... உம் சீக்கிரம்...
என்று துரிதப்படுத்தினார் பக்கத்து வீட்டுப் பெரியவர்.
கண்களைத் துடைத்துக் கொண்டே மடியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார் ஆறுமுகம். அது பத்திரமாகத்தானிருந்தது.
துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டே பஸ் ஸ்டான்டை நோக்கி நடையைக் கட்டினார்.
பக்கத்து வீட்டுப் பெரியவர் நினைவுபடுத்தியவுடன் மறுபடியும் திரும்பி வந்து வீட்டைப் பூட்டிய ஆறுமுகம் மீண்டும் திரும்பி வேகமாக நடந்தார்.
ஆறுமுகம் பஸ் ஸ்டான்டை அடைவதற்குள் ஈரோடு செல்லும் கடைசி பஸ் வெளியே நகரவும் சரியாக இருந்தது.
ஓடிப்போய் புறப்பட்ட வண்டியில் தொத்திக் கொண்டார் ஆறுமுகம்.
உடனே கண்டக்டர் விசிலடித்து பஸ்ஸை நிறுத்தி ஏனெய்யா உயிரை வாங்கறே. ஓடற வண்டியில் இடம் இருக்கா இல்லையானு தெரிய வேண்டாம்? சரி சரி சீக்கிரம் கீழே எறங்கு
என்று கூச்சல் போட்டான்.
ஆறுமுகம் கீழே இறங்கியவுடன் பஸ் புறப்பட்டது.
ஒரு நிமிடம் யோசித்து விட்டு ஊர்க் கோடியிலிருந்த பெட்ரோல் பங்க்கை நோக்கி வேகமாக நடந்தார் ஆறுமுகம்.
அது ஒரு ‘டிரங்’ரோடு. ஊர்க்கோடி பெட்ரோல் பங்க்கிற்குப் பக்கத்திலிருக்கும் நாயர் டீக்கடை லாரி டிரைவர்களின் புகாரி. பெரும்பாலான லாரி டிரைவர்கள் நாயர் கடை முன் லாரியை நிறுத்தி விட்டு சுடச் சுட வறுவல் கொத்துக்கறியோடு அரைடஜன் இட்லியாவது சாப்பிடாமல் அவிநாசியை விட்டு லாரியை நகர்த்த மாட்டார்கள். அது அந்த வட்டாரமே அறிந்த விஷயம்தான்!
ஆறுமுகம் நாயர் கடையை நெருங்கவும் ஒரு டிரைவர் கடைசி ‘தம்’ அடித்துவிட்டு பீடியைக் கீழே போட்டு காலால் மிதித்து விட்டு லாரியை நெருங்கவும் சரியாக இருந்தது.
இந்த மாதிரி ‘கிராக்கிகளை’ வேண்டாம் என்று சொல்லி விட்டால் லாரி டிரைவர்கள் பிழைப்பு என்னாவது?
டேய் சிதம்பரம் நீ பின்னால் போய் ஏறிக்கோ
என்று கிளீனருக்கு ஆர்டர் போட்டுவிட்டு நீங்க முன்னால் ஏறிக் கொள்ளுங்க சார்
என்று ஆறுமுகத்திடம் சொன்னான் அந்த டிரைவர்.
டிரைவர் பக்கத்தில் எற்கனவே மூன்று பேர் இருந்ததால் முண்டியடித்துக் கொண்டு அவர்கள் பக்கத்தில் ஆறுமுகம் உட்கார்ந்து கொள்வதற்குள் போதும் போது மென்றாகிவிட்டது.
மறுபடியும் தன் மடியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார் ஆறுமுகம். அது பத்திரமாகத்தானிருந்தது கடந்த ஒரு வாரத்தில் அதற்காக அவர் பட்ட பாடு... அப்பப்பா...!
ஆறுமுகம் தாயில்லாத தன் ஒரே மகள் மீனாட்சியை சேலத்தில் கொடுத்திருந்தார். மருமகன் ஓர் அரசாங்க உத்தியோகஸ்தன் என்ற பெருமையைத் தவிர வேறொன்றும் இல்லை.
மருமகன் சந்தானத்தின் சொத்து சுகம் எல்லாம் முதல் தேதி வாங்கும் சம்பளம் ஒன்றுதான். பிடித்தமெல்லாம் போக சுமார் ஆயிரத்தி ஐநூறு ரூபாய் கைக்கு வரும். அதை வைத்துக் கொண்டுதான் அவன் தன் குடும்பத்தேரைக் கட்டி இழுத்துக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட அவிநாசி தேர் மாதிரிதான் அது நகரும்!
வயதான தாய். தந்தை, வாழாவெட்டித் தங்கை ஊதாரித் தம்பி, தன் மனைவி அத்துணை பேரையும் அந்த ஆயிரத்து ஐநூறைக் கொண்டுதான் அவன் திருப்திப்படுத்த வேண்டும்.
சேலத்திற்குப் போகும் பொழுதெல்லாம் ஆறுமுகத்திற்கு அந்தப் பெரிய குடும்பத்தின் மத்தியில் தன் மகளிடம் தனித்துப் பேசக் கூட வாய்ப்புக் கிடைப்பதில்லை. அப்படியே ஏதாவது கேட்டாலும் மீனாட்சி வாய் திறந்து எதுவும் சொல்ல மாட்டாள்.
வற்புறுத்திக் கேட்டால் நான் இங்கு சந்தோஷமாகத் தானிருக்கேன்
என்று சிரித்துக்கொண்டே மழுப்பி விடுவாள்.
மகளைப் பார்த்துவிட்டுத் திரும்பும் ஒவ்வொரு சமயத்திலும் நூறு ரூபாயாவது மகள்