உன்னைச் சரணடைந்தேன்: Fiction, #1
By Banu Mathi
()
About this ebook
நல்ல வசதியும், நல்ல மணமும் கொண்ட கூட்டுக் குடும்பம். ஒரு விபத்தில் பெரியவர்கள் அனைவருக்கும் பலத்த காயமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவர்களைக் காப்பாற்ற ஆகும் செலவைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் வீட்டின் மூத்த செல்ல மகள். அப்போது டாக்டர் ஒரு பெண்மணியைக் காட்டி உங்களுக்கு வேண்டிய செலவெல்லாம் இவர் பார்த்துக் கொள்வார். நீங்கள் அதற்குப் பதிலாக வாடகைத் தாயாக வேண்டும். இங்கு இல்லை. பாரீஸில் என்கிறார்கள். இவளும் ஒத்துக் கொள்கிறாள். இடையில் ஏற்கனவே காதலித்தவரை சந்திப்பது பல போராட்டங்கள், மோதல்களைக் கடந்து தன் வாழ்க்கையும் காப்பாற்றப்பட்டு குடும்பமும் உயிர் பெறுகிறது.
Related to உன்னைச் சரணடைந்தேன்
Titles in the series (23)
You Are My World: Fiction, #1 Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னைச் சரணடைந்தேன்: Fiction, #1 Rating: 0 out of 5 stars0 ratingsA Bygone Summer Wonderland: Fiction, #1 Rating: 0 out of 5 stars0 ratingsA Blessed Mess: Fiction, #1 Rating: 0 out of 5 stars0 ratingsThe Last Midnight Miracle: Fiction, #1 Rating: 0 out of 5 stars0 ratingsNaked In A Snowstorm: Fiction, #1 Rating: 0 out of 5 stars0 ratingsपुनर्जन्म: Fiction, #1 Rating: 0 out of 5 stars0 ratingsThe Unexpected Chase: Fiction, #1 Rating: 0 out of 5 stars0 ratingsअज़नबी लड़की अज़नबी शहर: Fiction, #1 Rating: 0 out of 5 stars0 ratingsकैसे लिखूं मैं अपनी प्रेम कहानी ?: Fiction, #1 Rating: 0 out of 5 stars0 ratingsआर्ट्स फैकल्टी: Fiction, #1 Rating: 0 out of 5 stars0 ratingsLeonard's Son: Fiction Rating: 0 out of 5 stars0 ratingsHazel: Fiction, #1 Rating: 0 out of 5 stars0 ratingsSatan Praising the Bible: Fiction, #1 Rating: 0 out of 5 stars0 ratingsAdventure in the demons' forest: Fiction Rating: 0 out of 5 stars0 ratingsI Thought It Was Freedom: Fiction, #1 Rating: 0 out of 5 stars0 ratingsअनकही बातें: Fiction, #1 Rating: 0 out of 5 stars0 ratingsThe Quantum Chronicles: Fiction, #2.5 Rating: 0 out of 5 stars0 ratingsВы не поверите: Fiction, #1 Rating: 0 out of 5 stars0 ratingsधीरज की कलम से...: Fiction, #1 Rating: 0 out of 5 stars0 ratingsابن ليونارد: Fiction Rating: 0 out of 5 stars0 ratingsايلين: Fiction Rating: 0 out of 5 stars0 ratingsمغامرة في غابة الشياطين: Fiction Rating: 0 out of 5 stars0 ratings
Related ebooks
Ivarkalum Avarkalum Rating: 0 out of 5 stars0 ratingsNetru Nila Indru Nee Rating: 5 out of 5 stars5/5Kannalaney Rating: 0 out of 5 stars0 ratingsEzhiloviyam Rating: 0 out of 5 stars0 ratingsMalare Ennai Nerunkaathe Rating: 4 out of 5 stars4/5Mazhai Mega Mayilgal Rating: 5 out of 5 stars5/5Vaarayo... Vennilave... Rating: 5 out of 5 stars5/5Kadhal Kalam Idhu Rating: 0 out of 5 stars0 ratingsUllangal Ondragi... Rating: 0 out of 5 stars0 ratingsVeppamarathu Pookkal Rating: 5 out of 5 stars5/5Andhi Varum Neram Rating: 5 out of 5 stars5/5Nandhini Oru Nandhavanam Rating: 5 out of 5 stars5/5Uravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsKanne Ethirkkaathe Rating: 4 out of 5 stars4/5Mazhai Tharum Megam Rating: 5 out of 5 stars5/5Neeyiruntha Manasu Rating: 4 out of 5 stars4/5Oru Gulmohar Marathin Keezhaey Rating: 0 out of 5 stars0 ratingsThulli Sellum Megam Rating: 0 out of 5 stars0 ratingsSuvaril Nuzhaintha Vergal Rating: 4 out of 5 stars4/5Vasantha Kaala Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThedinen Vanthathu Rating: 5 out of 5 stars5/5Idhayamellam Un Ninaivu Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Oru Nimidam Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vandha Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsPanneril Nanaintha Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAbiyum Azhaganum Rating: 2 out of 5 stars2/5Enakkaakave Vanthaai Rating: 3 out of 5 stars3/5Neruppu Malar Rating: 5 out of 5 stars5/5Ilamai Kaatru Rating: 5 out of 5 stars5/5Piriyaudan Oru Vaarththai Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for உன்னைச் சரணடைந்தேன்
0 ratings0 reviews
Book preview
உன்னைச் சரணடைந்தேன் - Banu Mathi
பொருளடக்கம்
உன்னைச் சரணடைந்தேன் (Fiction, #1)
பாரீஸ் நகரம். இரவு பதினோரு மணி. பல அடுக்கு மாடிகளில், பத்தொன்பதாவது தளத்தில், இருபத்திரண்டு வயதுடைய பெண், கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள். வட்டமான முகம், அலை அலையான கேசம், பிறை போல நெற்றி, நீண்ட நாசி, அதில் சின்ன மூக்குத்தி, ஆப்பிள் போல கன்னம், பிரித்து வைத்த ஆரஞ்சுச் சுளை போல் உதடு, சங்கு போன்ற கழுத்து, கழுத்தில் தாலி இல்லை.
ஒரு ஜெயின் மட்டும் கிடந்தது. சந்தனமும், தங்கமும் கலந்தது போல் நிறம், வழவழப்பான கைகள், அதில் வண்ண வண்ண கண்ணாடி வளையல், வாழைத் தண்டு போல கால்கள், அதில் வெள்ளிக் கொலுசு. மொத்தத்தில் பிரம்மன் செய்த அற்புதமான படைப்பு.
மேடிட்ட வயிறு அவள் கர்ப்பிணி என்று தெரிகிறது. ஏழு மாதம் இருக்கும் போல. அவள் தூங்கும் போது அவள் முகத்தில் கவலை தான் தெரிந்தது. திடீரென தூக்கத்திலிருந்து விழித்தவள், ரெஸ்ட் ரூம் சென்று வந்தவள், கட்டிலில் மறுபடியும் படுத்தாள்.
படுத்தவளுக்குத் தூக்கம் வராமல் போகவே, எழுந்து பால்கனிக்குச் சென்றாள். அங்கு போட்டிருந்த ஷோபாவில் அமர்ந்தவள், வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். இரவு நேரம், பௌர்ணமி நிலவு, அந்த நேரத்தில் கூடப் பரபரப்புடன் தெரிந்த கூட்டம், வண்ண வண்ண விளக்குகள் கண்ணைப் பறித்தன.
இதில், எதிலும் நாட்டம் காட்டாமல், தன் மேடிட்ட வயிற்றைத் தடவிப் பார்த்தாள்.
இப்படி ஒரு நிலை தனக்கு வரும் என்று, கடந்த வருடம் யாராவது சொல்லியிருந்தால், வாய் விட்டு சிரித்திருப்பாள். ஆனால், இன்றோ தன்னுடைய இந்த நிலையை எண்ணி, அவளால் கண்ணீர் மட்டுமே விடமுடிந்தது.
தான் எப்படிப்பட்ட தவறைச் செய்திருக்கிறோம், என்று தன் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரிந்தால், தன்னைக் கொன்றே போட்டு விடுவார்கள்.
ஆனால், இன்று தன் குடும்பத்தின் நிலைமைக்காக, இதைச் செய்திருக்கிறேன்
. வருங்காலத்தில் தான் செய்த தவறு தெரிந்தால், தன்னைப்பற்றி எவ்வளவு கேவலமாக நினைத்து, தன்னை வெறுக்கக் கூடச் செய்வார்கள்.
அது சரி, எல்லாம் தெரிந்து தானே இந்த முடிவெடுத்தேன், தன் வாழ்க்கை போனாலும் பரவாயில்லை, தன் குடும்பத்தில் உள்ளவர்கள் நன்றாக இருந்தால் போதும், என்று நினைத்து கண்ணீர் விட்டாள்.
அப்படியே, அழுதவள் அங்கேயே தூங்கி விட்டாள். காலை சூரிய ஒளிபட்டதும், வாரிச் சுருட்டி எழுந்தவள், தான் எங்கிருக்கிறோம்
என்று புரிய கொஞ்சம் நேரம் ஆனது.
பால்கனியில் தூங்கியிருப்பதைக் கண்டு, தன் அறைக்குள் நுழைந்து, காலைக் கடன்களை முடித்து விட்டு வரவும், சமையல் வேலை பார்க்கும், மல்லிகா மேலே வரவும் சரியாக இருந்தது. வந்தவர் அவள் கையில் சத்து மாவுக் கஞ்சியைக் கொடுத்ததும், அதை வாங்கியவளுக்கு முகமே வாடிவிட்டது
. இதைக் கவனித்த மல்லிகா, இப்போ இதைக் குடிம்மா, அப்புறம் காபி தருகிறேன் என்று சொன்னார்.
அவள் முகத்தில் கசந்த புன்முறுவல் தோன்றியது. கையில் வாங்கியதைக் குடித்து முடித்தவள், அந்தக் கோப்பையை மல்லிகாவிடம் கொடுத்தாள். சாப்பிட கீழே வருவீர்களா?, என்றார். ம்ம் கீழே வருகிறேன், என்று சொன்னாள். மல்லிகா கீழே இறங்கவும், இவளும் கீழே இறங்கினாள்.
டைனிங் டேபிளில் அமர்ந்ததும், மல்லிகா, தட்டைஎடுத்து வைத்துப் பறிமாறினார். மூன்று இட்டிலி வைத்து, நான்காவது இட்டிலி எடுத்து வைக்கப் போகும் போது, போதும் என்று விட்டாள். பொங்கல், வடை வைக்கப் போகும் போது, வெறும் வடை மட்டும் போதும் என்று விட்டாள். சாப்பிட்டு முடித்து, ஷோபாவில் அமர்ந்து, அன்றைய தினசரி நாழிதளைப் புரட்டினாள். மல்லிகா, " அவளிடம் மதியம் என்ன சமைக்கட்டும், என்று கேட்டார்.
உங்கள் விருப்பம். எதை சமைத்துக் கொடுத்தாலும் சாப்பிடுறேன், என்றாள். கோகிலா, ஒன்றும் சொல்லாமல் போய் விட்டார். கொஞ்ச நேரம் டீவி யை சேனல்களை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டிருந்தாள். பின், எழுந்து மேலே வந்து பால்கனியில் அமர்ந்து, பாரிஸ் நகர மக்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தன் குடும்பத்தில் உள்ளோர், எப்படி இருக்கிறார்களோ? என்று நினைத்த போது அவள் கண்களில் நீர் வழிந்தது.
எவ்வளவு நேரம் தான் அழுவது?, பாத்ரூம் சென்று முகத்தைக் கழுவி விட்டு, படுத்து விட்டாள். படுத்தவுடன் தூங்கிவிட்டாள். அவளுக்குத் துணையாக, ஒரு ஆயாவும் இருந்தார். அவர், வந்து பார்த்து விட்டு, சரி, தூங்கிறவளை எழுப்பக் கூடாது
, என்று நினைத்து, அவரும், கீழே ஒரு தலையணையை எடுத்துப் போட்டுப் படுத்துவிட்டாள்.
தொடரும்.அவள் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த, அந்த ஆயாவும் தரையில் தலையணையைப் போட்டுப் படுத்தாள். மதியச் சாப்பிட்டிற்கு, கூப்பிட வந்த மல்லிகா, அவர்கள் இருவரும் தூங்குவதைப் பார்த்த, மல்லிகா, ஆயாவை மட்டும் எழுப்பினாள். அவரும் எழுந்து, என்ன என்பதைப் போல் பார்த்தாள்?
சாப்பிட நேரம் ஆகலையா? என்று கேட்டாள். ம்ம் அந்தப் பொண்ணை எழுப்பலையா?, என்று கேட்டாள். வயித்துப் பிள்ளைக்காரி, அசந்து தூங்கிட்டு இருக்கிறவரை, எழுப்ப கஷ்டமா இருக்கு, என்றாள். அதுவும் சரிதேன் என்றாள், ஆயா. அவர்கள் பேச்சைக் கேட்டுக் கண் விழித்தாள், அவந்திகா.
அவள் எழுந்து மணியைப் பார்த்தவள், முகத்தைக் கழுவி விட்டு, சாப்பிட இறங்கி வந்தாள். தட்டை எடுத்து வைத்து பரிமாறினாள், மல்லிகா. தட்டில் விழுந்ததை, ஏதோ கடமைக்கு சாப்பிட்டு விட்டு எழுந்து விட்டாள். அன்றைய பொழுது, எப்படியோ ஓடி விட்டது. மல்லிகா, அவந்திகாவிடம், நாளை டாக்டரிடம் செக்கப்பிற்கு செல்ல வேண்டும், என்றாள்.
ம்ம் நியாபகமிருக்கு என்றாள். மேலே வந்து, ஒரு சாலை எடுத்துப் போர்த்திக் கொண்டு, பால்கனியில் உட்கார்ந்தாள். கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள், மறுபடியும் தன் அறைக்கு வந்து, படுத்து விட்டாள். ஏதேதோ, மனதைப் போட்டுப் புரட்டி எடுக்க, படுப்பதும், எழுந்து உட்காருவதுமாய் இருந்தாள்.
நீண்ட நேரம் கழித்தே, தூங்கினாள். காலையில் எழுந்தவள், தன் காலைக் கடனை முடித்து விட்டு தன்னுடைய மருத்துவ பைலை எடுத்துக் கொண்டு, கீழிறங்கி வந்தாள். வந்து சாப்பிட்டு விட்டு, மல்லிகாவும், அவந்திகாவும் வெளியே வரவும், டிரைவர் காரைத் தயார் நிலையில் வைத்திருந்தார். இருவரும் காரில் ஏறவும், டிரைவர் மருத்துவமனை நோக்கிக் காரை செலுத்தினார்.
மருத்துவமனை வந்ததும், மல்லிகாவும், அவந்திகாவும் டாக்டர் அழைப்பிற்காகக் காத்திருந்தனர். டாக்டர், அழைக்கவும் இருவரும் உள்ளே சென்றனர். ( ஆங்கில உரையாடலைத், தமிழில் கொடுத்திருக்கிறேன்) ஹாய் அவந்திகா, "எப்படி இருக்கீங்க? என்றார், ஐ ஆம் பைன், ஹவ் ஆர் யூ? என்று கேட்டாள். டாக்டரிடம் பைலை நீட்டினாள்.
அவளுக்கு, பிரசர் செக்கப் பண்ணி விட்டு, டாக்டரிடம், நர்ஸ் நார்மல், என்றார். பிறகு, உள்ளே அழைத்து சென்று, சில பரிசோதனைகள், எல்லாம் செய்து முடித்தார்; அவந்திகா, எல்லாம் நார்மல், ஆனால், நீ ரொம்ப வீக்கா இருக்கே; நல்லா சாப்பிடுறியா? இல்லையா? என்று கேட்டார்.
அவந்திகா, பேச ஆரம்பிக்கும் முன், மல்லிகா இடை புகுந்து, அட, அதை ஏன் கேட்கிறீங்க? டாக்டர். மூன்று இட்டிலி, ஒரு கை சாப்பாடு, இரண்டு தோசை என்று சாப்பிட்டால், எப்படி நல்லா இருக்க முடியும்?
என்றாள். அதைக் கேட்ட டாக்டர், என்ன அவந்திகா இது? இப்படி சாப்பிட்டால் குழந்தை எப்படி ஆரோக்கியமாக வளரும்?; உன்னை, என்னை நம்பி அனுப்பி வைத்த, என் தோழிக்கு, நான் என்ன பதில் சொல்லுவது?
என்று கத்தினார்.
அவந்திகா, தலையைக் குனிந்தபடி, தன் கண்ணீரை வெளி வராமல், உள்ளிளுத்துக் கொண்டாள்.
அப்புறம், "டாக்டர், சில அறிவுரைகளை அவளிடம் கூறி, மாத்திரைகள், சிரப்புகள் எழுதிக் கொடுத்து அனுப்பி வைத்தார். இவர்கள் வெளியே வந்து, அங்கேயே மாத்திரைகளை, வாங்கிக் கொண்டு, வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
அவந்திகா எதுவும் பேசாமல், பைலை ஷோபாவில் போட்டு விட்டு, தலையை் இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு, உட்கார்ந்து விட்டாள். கோகிலா, சென்று, அவளுக்கு பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தாள். அதை, கண்ணில் நீர் வழிய வாங்கிக் குடித்து விட்டு, மேலே சென்று விட்டாள்.
இன்று, எப்படியும் பெரிய மண்டகப்படி காத்திட்டிருக்கு,
என்று எண்ணிக் கொண்டாள். அதற்கு மேல் அவளால் யோசிக்க முடியவில்லை. கண்ணீர் அருவியாய்க் கொட்டிக் கொண்டிருந்தது. தன் நிலையையும், குடும்பத்தையும் நினைத்து, அழுது கொண்டிருந்தாள்.
ஆயா, வந்து அழுகாதேம்மா. நீ, இப்படி அழுகிறது, உனக்கும் நல்லதில்லை, வயித்தில் இருக்கும் பிள்ளைக்கும் நல்லதில்லை தாய், பொம்பளையா பிறந்தால், இன்னும் என்னென்ன அனுபவிக்க, வேண்டியிருக்கும் தாய்
, என்று சொல்லி முடிக்கவும், ஆயா, நான் கொஞ்ச நேரம் உங்க மடியிலே படுக்கட்டுமா", என்று கேட்டாள்.
அதுக்கென்ன தாயி, என்று கூறி விட்டு, கட்டிலில் உட்கார்ந்தாள் ஆயா. அவர் மடி மீது தலை வைத்துப் படுக்கவும், அவர், அவள் தலையைக் கோதிவிட, அந்த இதத்தில், நீண்ட நாள்களுக்குப் பிறகு, நிம்மதியாய் தூங்கினாள்
.
கோகிலா, சாப்பாட்டை மேலே கொண்டு வந்து கொடுக்கவும், எழுந்து சாப்பிட்டு முடித்தாள். இரவு உணவைக் கீழேயே முடித்துக் கொண்டு, மல்லிகா கொடுத்த பாலையும் குடித்து விட்டு, ஆயா, நீங்க கீழேயே படுங்க என்று விட்டு, மேலே வந்தாள். கதவை அடைத்து தாளிட்டு விட்டாள். அவள் அப்படி, உள்ளே நுழையவும் போன் ரிங்காகவும் சரியாக இருந்தது.
அதை பயத்துடனே எடுத்து, காதில் வைத்து, ஹலோ! என்றாள், அவ்வளவு தான், அந்தப் பக்கம் இருந்து வந்த வசவுகளைத் தாங்க முடியாமல், கட்டிலில் உட்கார்ந்து விட்டாள்.
என்ன நினைச்சிட்டு இருக்கிறே அவந்திகா? டாக்டர் கொடுக்கிற மருந்தெல்லாம் சாப்பிடறதில்லையா? வீட்டிலும் ஒழுங்கா சாப்பிடறது இல்லையாம்? எனக்கு, உன்னிடம் இருந்து வரக் கூடிய குழந்தை அழகாக இருக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
நீ இப்படி, ஒழுங்கா சாப்பிடாமல், அழுதுட்டே இருந்தால், எப்படி குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும்? நீ இப்படியே இருந்தால், நான், உன் வீட்டிற்குக் கொடுக்க வேண்டிய தொகை, உன் குடும்பத்தாருக்குக் கொடுக்கும் மருத்துவச் செலவை நிறுத்த வேண்டியிருக்கும்
, என்று கூற, அதில் பதறித் துடித்தவள், மேடம் அப்படி செஞ்சிடாதீங்க, மேடம், நான், இனிமேல் ஒழுங்கா சாப்பிடுறேன், என்று கண்ணீரை உள்ளிலுத்துக் கொண்டு கூறினாள்.
அது மட்டும் செய்தால், என் குழந்தை அப்படி மட்டும், கடமைக்காக சாப்பிட்டு வளரக் கூடாது; எதைக் கொடுத்தாலும் ரசிச்சு ருசிச்சு சாப்பிட வேண்டும், மியூசிக், புத்கம் வாசித்தல், ஆன்மீகம், பொது அறிவு, இயற்கையை ரசிக்கத் தெரிஞ்சிறுக்க வேண்டும்.
அதனால், இதெல்லாம் நீ செய்தால் தான், என் குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
உனக்கு , உடனடியாக ஒரு கம்ப்யூட்டர் வரும், அதில், உன் மொபைலில் உள்ள ஈமெயில் ஐடிக்கு சில ப்ராஜெக்ட் வரும், அதைப் பொறுமையா செய், ஆயாவுடனும், மல்லிகாவிடமும் நன்றாகப் பேசிப் பழகு, ஷாப்பிங் போ, கோயிலுக்குப் போ
, அப்படிப்பட்ட குழந்தை தான் எனக்கு வேண்டும் இல்லை....என்று ஆரம்பிக்கும் போதே, நீங்க சொல்றபடி எல்லாம் செய்றேன், மேடம், நீங்க மல்லிகா அக்காகிட்டே கூட தினமும் விசாரிச்சுக்கோங்க மேடம்" என்று கூறி முடித்தாள். ம்ம் அந்த பயத்தோட, என் குழந்தை நல்லபடியாக வர வேண்டும், என்று கூறி, அந்தப் பக்கம் போன் ஆப் ஆனது. அவந்திகா, கண்ணில் நீர் ததும்ப பக்கத்திலிருந்த ஜாடியில் இருந்த தண்ணீரைக் குடித்து முடித்தாள்.
உடனே, அவள் போனில் மெயில் வந்திருந்தது. கதவைத் தட்டும் சத்தம் கேட்கவும், கதவைத் திறந்தாள் அவந்திகா. வெளியே கறுப்பான, நெட்டையான ஒருத்தன் ஒரு அட்டைப் பெட்டியுடன் நின்றிருந்தான். அவள், அவனை ஏறெடுத்துப் பார்க்கவும், ஐ ஆம் மைக்கேல். தேவகி மேடம் கொடுக்கச் சொன்னார்கள். லேப்டாப் பாக்ஸ் என்று நீட்டினான்.
அவனே, அதைப் பிரித்து எல்லாவற்றையும் செக் பண்ணிக் கொடுத்தான். எந்த உதவி வேண்டும் என்றாலும், என்னைக் கூப்பிடுங்கள் சகோதரி. இது என் போன் நம்பர் என்று ஒரு விசிட்டிங்கார்டைக் கொடுத்தான். அவளும் புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள். தேங்க் யூ ப்ரதர் என்றாள். வெல்கம் என்றான். ஏதாவது குடிக்கிறீர்களா என்றாள். நோ தேங்க்ஸ். இன்னொரு நாள் நான் சாப்பாடே சாப்பிடுறேன் என்று கூறிவிட்டு குட் நைட் என்று கூறிச் சென்றான்.
ஆயா, மேலே வந்து, என்னாதும்மா இது? என்றார். இது, லேப் டாப். தேவகி மேடம் சில வேலைகள் கொடுத்திருக்காங்க. அதை, இதன் மூலம் செய்து , அவர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றாள் அவந்திகா. என்னமோ சொல்றே! ஆனால் எனக்குப் புரியலை என்றார். சரிம்மா, நான் தூங்கப் போறேன். நீயும் தூங்கு என்றார்.
இல்லை ஆயா! நான் தூங்க கொஞ்ச நேரம் ஆகும். இந்த வேலையைக் கொஞ்ச நேரம் பார்த்துட்டு தூங்குறேன் என்றாள். சரிதாம்மா, நான் அந்தப் பக்கத்து ரூமிலே தூங்குறேன், என்று சொல்லிப் போனார். கொஞ்ச நேரம் தேவகி, அனுப்பியிருந்த ஈமெயில் எல்லாத்தையும் சேவ் பண்ணி விட்டு, போனை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு வந்தாள்.
தன் மொபைலில், தன் தம்பியின் போனுக்கு போன் செய்தாள். அந்தப் பக்கம் ரிங் போக, எடுக்க ரொம்ப நேரமானது. மறுபடி போன் செய்தாள். அந்தப் பக்கத்திலிருந்து, ஒரு பெண் எடுத்து ஹலோ! அக்கா எப்படிக்கா இருக்கே? நல்லா இருக்கியாக்கா? என்று கேட்கும் போதே அழுதுவிட்டாள். குட்டிமா, "இப்போ எதுக்கு அழறீங்க? அக்கா நல்லா இருக்கேன்.
அங்கே எல்லாரும் எப்படி இருக்கீங்க? என்று கேட்டாள். ம்ம் நல்லா இருக்கோம் அக்கா. நானும், அண்ணணும் சமையல்னு எதையோ பண்ணி சாப்பிடுறோம்க்கா. உன்னைப் பார்க்கனும் போல இருக்குக்கா. நீ எப்பக்கா வருவே? இன்னும், ஐந்து மாதம் பொறுத்துக்கோங்க. அக்கா, அங்கே வந்து விடுவேன் என்றாள். மருத்துவமனையில் எல்லாரும் எப்படி இருக்காங்க?
ஆப்பரேசன் பண்ணி இருக்காங்க அக்கா. இன்னும் ஐசியூவிலே தான் வைச்சிருக்காங்க அக்கா. அண்ணா, தான் பாவம்க்கா. காலையிலே சாப்பாடு செய்யும் போது உதவுறது, கல்லூரிக்கும் போய்க்கிட்டு, இராத்திரிலேயும் மருத்துவமனையிலே இருந்துட்டு, ரொம்ப கஷ்டப்படுறது அண்ணா தாங்க்கா
, என்று அழுதாள்.
அதற்குள், அவளிடமிருந்து போனை வாங்கியவன், அக்கா எப்படிக்கா இருக்கே? நல்லாயிருக்கியா? ஒழுங்கா சாப்பிடுறியா? என்று கேள்வி கேட்டான், அந்தப் பாசமிகு தம்பி சூர்யா.
ம்ம் நான் நல்லா இருக்கேன்டா. உனக்கு ரொம்ப வேலையைக் கொடுத்துட்டேனாடா, என்று அழுதாள். அதெல்லாம் இல்லைக்கா. எங்களுக்காக, பல ஆயிரம் மைல் தாண்டி உழைக்கிறப்போ, நான் செய்றதெல்லாம் வெறும் தூசு தானேக்கா, என்றான்.
அக்கா, அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, தாத்தா, பாட்டிக்கு ஆப்பரேசன் பண்ணிட்டாங்கக்கா. சீக்கிரமே அவர்களுக்கு நினைவு திரும்பிவிடும் என்று டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்க அக்கா என்றான். நிஜமாவாடா சொல்றே. சத்தியமா அக்கா. எவ்வளவு பெரிய பெரிய டாக்டர்களை, "உங்க கம்பெனி முதலாளி, அனுப்பியிருக்கார் தெரியுமா! என்றான். மனதுக்குள் சுருக்கென்று தைத்தது , அந்த வார்த்தை. அவர்கள் சொன்னபடி செஞ்சிட்டாங்க. ஆனால் நடந்து கொண்டது முறையா? என்று மனதிற்குள் மறுகி, நாளையிலிருந்து என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
அவள் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த, அந்த ஆயாவும் தரையில் தலையணையைப் போட்டுப் படுத்தாள். மதியச் சாப்பிட்டிற்கு, கூப்பிட வந்த மல்லிகா, அவர்கள் இருவரும் தூங்குவதைப் பார்த்த, மல்லிகா, ஆயாவை மட்டும் எழுப்பினாள். அவரும் எழுந்து, என்ன என்பதைப் போல் பார்த்தாள்?
சாப்பிட நேரம் ஆகலையா? என்று கேட்டாள். ம்ம் அந்தப் பொண்ணை எழுப்பலையா?, என்று கேட்டாள். வயித்துப் பிள்ளைக்காரி, அசந்து தூங்கிட்டு இருக்கிறவரை, எழுப்ப கஷ்டமா இருக்கு, என்றாள். அதுவும் சரிதேன் என்றாள், ஆயா. அவர்கள் பேச்சைக் கேட்டுக் கண் விழித்தாள், அவந்திகா.
அவள் எழுந்து மணியைப் பார்த்தவள், முகத்தைக் கழுவி விட்டு, சாப்பிட இறங்கி வந்தாள். தட்டை எடுத்து வைத்து பரிமாறினாள், மல்லிகா. தட்டில் விழுந்ததை, ஏதோ கடமைக்கு சாப்பிட்டு விட்டு எழுந்து விட்டாள். அன்றைய பொழுது, எப்படியோ ஓடி விட்டது. மல்லிகா, அவந்திகாவிடம், நாளை டாக்டரிடம் செக்கப்பிற்கு செல்ல வேண்டும், என்றாள்.
ம்ம் நியாபகமிருக்கு என்றாள். மேலே வந்து, ஒரு சாலை எடுத்துப் போர்த்திக் கொண்டு, பால்கனியில் உட்கார்ந்தாள். கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள், மறுபடியும் தன் அறைக்கு வந்து, படுத்து விட்டாள். ஏதேதோ, மனதைப் போட்டுப் புரட்டி எடுக்க, படுப்பதும், எழுந்து உட்காருவதுமாய் இருந்தாள்.
நீண்ட நேரம் கழித்தே, தூங்கினாள். காலையில் எழுந்தவள், தன் காலைக் கடனை முடித்து விட்டு தன்னுடைய மருத்துவ பைலை எடுத்துக் கொண்டு, கீழிறங்கி வந்தாள். வந்து சாப்பிட்டு விட்டு, மல்லிகாவும், அவந்திகாவும் வெளியே வரவும், டிரைவர் காரைத் தயார் நிலையில் வைத்திருந்தார். இருவரும் காரில் ஏறவும், டிரைவர் மருத்துவமனை நோக்கிக் காரை செலுத்தினார்.
மருத்துவமனை வந்ததும், மல்லிகாவும், அவந்திகாவும் டாக்டர் அழைப்பிற்காகக் காத்திருந்தனர். டாக்டர், அழைக்கவும் இருவரும் உள்ளே சென்றனர். ( ஆங்கில உரையாடலைத், தமிழில் கொடுத்திருக்கிறேன்) ஹாய் அவந்திகா, "எப்படி இருக்கீங்க? என்றார், ஐ ஆம் பைன், ஹவ் ஆர் யூ? என்று கேட்டாள். டாக்டரிடம் பைலை நீட்டினாள்.
அவளுக்கு, பிரசர் செக்கப் பண்ணி விட்டு, டாக்டரிடம், நர்ஸ் நார்மல், என்றார். பிறகு, உள்ளே அழைத்து சென்று, சில பரிசோதனைகள், எல்லாம் செய்து முடித்தார்; அவந்திகா, எல்லாம் நார்மல், ஆனால், நீ ரொம்ப வீக்கா இருக்கே; நல்லா சாப்பிடுறியா? இல்லையா? என்று கேட்டார்.
அவந்திகா, பேச ஆரம்பிக்கும் முன், மல்லிகா இடை புகுந்து, அட, அதை ஏன் கேட்கிறீங்க? டாக்டர். மூன்று இட்டிலி, ஒரு கை சாப்பாடு, இரண்டு தோசை என்று சாப்பிட்டால், எப்படி நல்லா இருக்க முடியும்?
என்றாள். அதைக் கேட்ட டாக்டர், என்ன அவந்திகா இது? இப்படி சாப்பிட்டால் குழந்தை எப்படி ஆரோக்கியமாக வளரும்?; உன்னை, என்னை நம்பி அனுப்பி வைத்த, என் தோழிக்கு, நான் என்ன பதில் சொல்லுவது?
என்று கத்தினார்.
அவந்திகா, தலையைக் குனிந்தபடி, தன் கண்ணீரை வெளி வராமல், உள்ளிளுத்துக் கொண்டாள்.
அப்புறம், "டாக்டர், சில அறிவுரைகளை அவளிடம் கூறி, மாத்திரைகள், சிரப்புகள் எழுதிக் கொடுத்து அனுப்பி வைத்தார். இவர்கள் வெளியே வந்து, அங்கேயே மாத்திரைகளை, வாங்கிக் கொண்டு, வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
அவந்திகா எதுவும் பேசாமல், பைலை ஷோபாவில் போட்டு விட்டு, தலையை் இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு, உட்கார்ந்து விட்டாள். கோகிலா, சென்று, அவளுக்கு பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தாள். அதை, கண்ணில் நீர் வழிய வாங்கிக் குடித்து விட்டு, மேலே சென்று விட்டாள்.
இன்று, எப்படியும் பெரிய மண்டகப்படி காத்திட்டிருக்கு,
என்று எண்ணிக் கொண்டாள். அதற்கு மேல் அவளால் யோசிக்க முடியவில்லை. கண்ணீர் அருவியாய்க் கொட்டிக் கொண்டிருந்தது. தன் நிலையையும், குடும்பத்தையும் நினைத்து, அழுது கொண்டிருந்தாள்.
ஆயா, வந்து அழுகாதேம்மா. நீ, இப்படி அழுகிறது, உனக்கும் நல்லதில்லை, வயித்தில் இருக்கும் பிள்ளைக்கும் நல்லதில்லை தாய், பொம்பளையா பிறந்தால், இன்னும் என்னென்ன அனுபவிக்க, வேண்டியிருக்கும் தாய்
, என்று சொல்லி முடிக்கவும், ஆயா, நான் கொஞ்ச நேரம் உங்க மடியிலே படுக்கட்டுமா", என்று கேட்டாள்.
அதுக்கென்ன தாயி, என்று கூறி விட்டு, கட்டிலில் உட்கார்ந்தாள் ஆயா. அவர் மடி மீது தலை வைத்துப் படுக்கவும், அவர், அவள் தலையைக் கோதிவிட, அந்த இதத்தில், நீண்ட நாள்களுக்குப் பிறகு, நிம்மதியாய் தூங்கினாள்
.
கோகிலா, சாப்பாட்டை மேலே கொண்டு வந்து கொடுக்கவும், எழுந்து சாப்பிட்டு முடித்தாள். இரவு உணவைக் கீழேயே முடித்துக் கொண்டு, மல்லிகா கொடுத்த பாலையும் குடித்து விட்டு, ஆயா, நீங்க கீழேயே படுங்க என்று விட்டு, மேலே வந்தாள். கதவை அடைத்து தாளிட்டு விட்டாள். அவள் அப்படி, உள்ளே நுழையவும் போன் ரிங்காகவும் சரியாக இருந்தது.
அதை பயத்துடனே எடுத்து, காதில் வைத்து, ஹலோ! என்றாள், அவ்வளவு தான், அந்தப் பக்கம் இருந்து வந்த வசவுகளைத் தாங்க முடியாமல், கட்டிலில் உட்கார்ந்து விட்டாள்.
என்ன நினைச்சிட்டு இருக்கிறே அவந்திகா? டாக்டர் கொடுக்கிற மருந்தெல்லாம் சாப்பிடறதில்லையா? வீட்டிலும் ஒழுங்கா சாப்பிடறது இல்லையாம்? எனக்கு, உன்னிடம் இருந்து வரக் கூடிய குழந்தை அழகாக இருக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
நீ இப்படி, ஒழுங்கா சாப்பிடாமல், அழுதுட்டே இருந்தால், எப்படி குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும்? நீ இப்படியே இருந்தால், நான், உன் வீட்டிற்குக் கொடுக்க வேண்டிய தொகை, உன் குடும்பத்தாருக்குக் கொடுக்கும் மருத்துவச் செலவை நிறுத்த வேண்டியிருக்கும்
, என்று கூற, அதில் பதறித் துடித்தவள், மேடம் அப்படி செஞ்சிடாதீங்க, மேடம், நான், இனிமேல் ஒழுங்கா சாப்பிடுறேன், என்று கண்ணீரை உள்ளிலுத்துக் கொண்டு கூறினாள்.
அது மட்டும் செய்தால், என் குழந்தை அப்படி மட்டும், கடமைக்காக சாப்பிட்டு வளரக் கூடாது; எதைக் கொடுத்தாலும் ரசிச்சு ருசிச்சு சாப்பிட வேண்டும், மியூசிக், புத்கம் வாசித்தல், ஆன்மீகம், பொது அறிவு, இயற்கையை ரசிக்கத் தெரிஞ்சிறுக்க வேண்டும்.
அதனால், இதெல்லாம் நீ செய்தால் தான், என் குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
உனக்கு , உடனடியாக ஒரு கம்ப்யூட்டர் வரும், அதில், உன் மொபைலில் உள்ள ஈமெயில் ஐடிக்கு சில ப்ராஜெக்ட் வரும், அதைப் பொறுமையா செய், ஆயாவுடனும், மல்லிகாவிடமும் நன்றாகப் பேசிப் பழகு, ஷாப்பிங் போ, கோயிலுக்குப் போ
, அப்படிப்பட்ட குழந்தை தான் எனக்கு வேண்டும் இல்லை....என்று ஆரம்பிக்கும் போதே, நீங்க சொல்றபடி எல்லாம் செய்றேன், மேடம், நீங்க மல்லிகா அக்காகிட்டே கூட தினமும் விசாரிச்சுக்கோங்க மேடம்" என்று கூறி முடித்தாள். ம்ம் அந்த பயத்தோட, என் குழந்தை நல்லபடியாக வர வேண்டும், என்று கூறி, அந்தப் பக்கம் போன் ஆப் ஆனது. அவந்திகா, கண்ணில் நீர் ததும்ப பக்கத்திலிருந்த ஜாடியில் இருந்த தண்ணீரைக் குடித்து முடித்தாள்.
உடனே, அவள் போனில் மெயில் வந்திருந்தது. கதவைத் தட்டும் சத்தம் கேட்கவும், கதவைத் திறந்தாள் அவந்திகா. வெளியே கறுப்பான, நெட்டையான ஒருத்தன் ஒரு அட்டைப் பெட்டியுடன் நின்றிருந்தான். அவள், அவனை ஏறெடுத்துப் பார்க்கவும், ஐ ஆம் மைக்கேல். தேவகி மேடம் கொடுக்கச் சொன்னார்கள். லேப்டாப் பாக்ஸ் என்று நீட்டினான்.
அவனே, அதைப் பிரித்து எல்லாவற்றையும் செக் பண்ணிக் கொடுத்தான். எந்த உதவி வேண்டும் என்றாலும், என்னைக் கூப்பிடுங்கள் சகோதரி. இது என் போன் நம்பர் என்று ஒரு விசிட்டிங்கார்டைக் கொடுத்தான். அவளும் புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள். தேங்க் யூ ப்ரதர் என்றாள். வெல்கம் என்றான். ஏதாவது குடிக்கிறீர்களா என்றாள். நோ தேங்க்ஸ். இன்னொரு நாள் நான் சாப்பாடே சாப்பிடுறேன் என்று கூறிவிட்டு குட் நைட் என்று கூறிச் சென்றான்.
ஆயா, மேலே வந்து, என்னாதும்மா இது? என்றார். இது, லேப் டாப். தேவகி மேடம் சில வேலைகள் கொடுத்திருக்காங்க. அதை, இதன் மூலம் செய்து , அவர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றாள் அவந்திகா. என்னமோ சொல்றே! ஆனால் எனக்குப் புரியலை என்றார். சரிம்மா, நான் தூங்கப் போறேன். நீயும் தூங்கு என்றார்.
இல்லை ஆயா! நான் தூங்க கொஞ்ச நேரம் ஆகும். இந்த வேலையைக் கொஞ்ச நேரம் பார்த்துட்டு தூங்குறேன் என்றாள். சரிதாம்மா, நான் அந்தப் பக்கத்து ரூமிலே தூங்குறேன், என்று சொல்லிப் போனார். கொஞ்ச நேரம் தேவகி, அனுப்பியிருந்த ஈமெயில் எல்லாத்தையும் சேவ் பண்ணி விட்டு, போனை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு வந்தாள்.
தன் மொபைலில், தன் தம்பியின் போனுக்கு போன் செய்தாள். அந்தப் பக்கம் ரிங் போக, எடுக்க ரொம்ப நேரமானது. மறுபடி போன் செய்தாள். அந்தப் பக்கத்திலிருந்து, ஒரு பெண் எடுத்து ஹலோ! அக்கா எப்படிக்கா இருக்கே? நல்லா இருக்கியாக்கா? என்று கேட்கும் போதே அழுதுவிட்டாள். குட்டிமா, "இப்போ எதுக்கு அழறீங்க? அக்கா நல்லா இருக்கேன்.
அங்கே எல்லாரும் எப்படி இருக்கீங்க? என்று கேட்டாள். ம்ம் நல்லா இருக்கோம் அக்கா. நானும், அண்ணணும் சமையல்னு எதையோ பண்ணி சாப்பிடுறோம்க்கா. உன்னைப் பார்க்கனும் போல இருக்குக்கா. நீ எப்பக்கா வருவே? இன்னும், ஐந்து மாதம் பொறுத்துக்கோங்க. அக்கா, அங்கே வந்து விடுவேன் என்றாள். மருத்துவமனையில் எல்லாரும் எப்படி இருக்காங்க?
ஆப்பரேசன் பண்ணி இருக்காங்க அக்கா. இன்னும் ஐசியூவிலே தான் வைச்சிருக்காங்க அக்கா. அண்ணா, தான் பாவம்க்கா. காலையிலே சாப்பாடு செய்யும் போது உதவுறது, கல்லூரிக்கும் போய்க்கிட்டு, இராத்திரிலேயும் மருத்துவமனையிலே இருந்துட்டு, ரொம்ப கஷ்டப்படுறது அண்ணா தாங்க்கா
, என்று அழுதாள்.
அதற்குள், அவளிடமிருந்து போனை வாங்கியவன், அக்கா எப்படிக்கா இருக்கே? நல்லாயிருக்கியா? ஒழுங்கா சாப்பிடுறியா? என்று கேள்வி கேட்டான், அந்தப் பாசமிகு தம்பி சூர்யா.
ம்ம் நான் நல்லா இருக்கேன்டா. உனக்கு ரொம்ப வேலையைக் கொடுத்துட்டேனாடா, என்று அழுதாள். அதெல்லாம் இல்லைக்கா. எங்களுக்காக, பல ஆயிரம் மைல் தாண்டி உழைக்கிறப்போ, நான் செய்றதெல்லாம் வெறும் தூசு தானேக்கா, என்றான்.
அக்கா, அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, தாத்தா, பாட்டிக்கு ஆப்பரேசன் பண்ணிட்டாங்கக்கா. சீக்கிரமே அவர்களுக்கு நினைவு திரும்பிவிடும் என்று டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்க அக்கா என்றான். நிஜமாவாடா சொல்றே. சத்தியமா அக்கா. எவ்வளவு பெரிய பெரிய டாக்டர்களை, "உங்க கம்பெனி முதலாளி, அனுப்பியிருக்கார் தெரியுமா! என்றான். மனதுக்குள் சுருக்கென்று தைத்தது , அந்த வார்த்தை. அவர்கள் சொன்னபடி செஞ்சிட்டாங்க. ஆனால் நடந்து கொண்டது முறையா? என்று மனதிற்குள் மறுகி, நாளையிலிருந்து என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
அவந்திகா, அப்படியே தூங்கி விட்டாள். காலையில் தாமதமாகத் தான் விழித்தாள். எழுந்ததும், காலைக் கடன்களை முடித்து விட்டு கீழே இறங்கினாள். நேரே பூஜை அறைக்குச் சென்று, விளக்கேற்றி விட்டு ஊதுபத்தி, சாம்பிராணி எல்லாம் போட்டு விட்டு, உட்கார்ந்து, அபிராமி அந்தாதியின்
முதல் பாடலைப் பாடினாள். அவளுடன், மல்லிகா, ஆயா, சுப்பு அனைவரும் பூஜை அறையில் அமர்ந்தனர்.
ஞானமும் நல்வித்தையும் பெற
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்
உணர்வுடையார்
மதிக்கின்ற மாணிக்கம்,மாதுளம்
போது, மலர்க் கமலை
துதிக்கின்ற பொன்கொடி
விதிக்கின்ற மேனி
அபிராமி என்தன் விழித் துணையே!
என்று முதல் பதிகத்தைப் பாடினாள்.அது முடிந்த பின் தீபாராதனை காட்டி நெற்றீயில் விபூதியும், குங்குமமும் வைத்து விட்டு, மற்றவர்களுக்கும் ஆரத்தியைக் காட்டி, விபூதி, குங்குமம் கொடுத்தாள்.
அதன் பின் வெளியேறி வரவும், மல்லிகா கொடுத்த கஞ்சியைக் குடித்து விட்டு, சுப்புவைக் கார் எடுக்கச் சொல்லி, தன் ஹேன்ட் பேக்கை எடுத்துக் கொண்டு, காரில் ஏறி கோவிலுக்குச் சென்றாள். பின், சில உல்லன் நூல்கள், ஊசி, கலர் பெயிண்ட்ஸ், பிரஸ் சில புத்தகங்கள், சிடிக்கள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தாள்.
மல்லிகா வெண்பொங்கல், சாம்பார்,மெதுவடை, சட்டினி வைத்திருந்தார். அதை, சாப்பிட்டு முடித்துவிட்டு, தன் லேப்டாப்பில் தேவகி கொடுத்த வேலையைத் தொடங்கினாள். அவள் கண்ணும், கையும் அவ்வளவு வேகமாகச் செயல்பட்டது. தேவகி, கொடுத்த ஒரு மாத ப்ராஜெக்டை ஒரே வாரத்தில் முடித்து, அதை, எப்படி விளக்க வேண்டும் என்றும் டைப் பண்ணி, அனுப்பி வைத்தாள்.
ஒரு நாள், ஆயாவிடம், உனக்கு எப்படி தேவகி மேடம் தெரியும்? என்று கேட்டாள். அதற்கு, ஆயாவோ நல்லா கேள்வி கேட்டே போ. அந்தப் பொண்ணு வேறே யாருமில்லை. எங்க பெரிய ஐயாவோட பேத்தி தான், தேவகி என்றாள். அப்போ, எப்படி சென்னைக்கு வந்தே? என்றாள். அட, அதை ஏம்மா கேட்கிறே? எங்க ஐயா தான், எங்க ஊருக்கும், சுற்றியுள்ள ஊருக்கும் தெய்வம் மாதிரி; வயசுப் பொண்ணுகளை, எவனாவது வம்பு இழுத்தா, அடி பின்னிடுவாரு; குடிக்கவும் கூடாது; குடிச்சுப் போட்டு,வீட்டில் வந்து பொஞ்சாதி, புள்ளைகளை அடிச்சாலோ, குடும்பத்தைக் கவனிக்காம விட்டாலோ அவ்வளவு தான்.
அடிக்கவோ, திட்டவோ மாட்டார், அவனைப் பிடிச்சு இழுத்துட்டு வந்து, ஒரு பத்திரத்திலே கைநாட்டு வாங்கிடுவாரு; ஐயையோ! இது தப்பில்லையா? என்று கேட்டாள் அவந்திகா. ஆங் அது எப்படி தப்பாகும்? அவன், நிலத்திற்குத் தேவையான விதை நெல்லில் இருந்து, அறுவடை முடியுற வரைக்கும் அத்தனை செலவையும் செஞ்சிடுவாரு, ஐயா. அப்படிக் கூட ஆள் இருக்காங்களா! என்று கேட்டாள், அவந்திகா
.
நல்லாக் கேட்டே போ. எங்க ஐயா பேரே ஈஸ்வர மூர்த்தி
, தான். எங்க பெரியம்மாவும் அந்த மகாலட்சுமியாட்டம் இருப்பாக. எங்க ஐயா தான், எங்க ஊருலே சின்னப் பள்ளிக்கூடமா, இருந்ததைப் பெரிசாக்கினாரு, பஸ் வசதி, ஆசுபத்திரி, குடி தண்ணீ வசதினு நிறையச் செஞ்சிறீக்காறு, ஐயா, அவரோட மூனு தம்பிக அவுக பொஞ்சாதிக, இரண்டு தங்கச்சிக அவுக புருசன்காரவுக, பிள்ளைகள்னு வீடே ஜேஜேனு இருக்கும்.
நல்ல ரோடு போட்டுக் கொடுத்ததும் அவரு தான்.
அப்போ நீ "எப்படி ஆயா, சென்னைக்கு வந்தே? அட அதை ஏம்மா கேக்கிறே? எங்க ஊர்த் திருவிழாவிலே, நான் என் ஜோட்டுப் புள்ளைகளோட, சுத்திக்கிட்டு இருந்தேன். இதை, என் மாமியார்க்காரி, அவுக உறவுக்காரவுக வீட்டுக்கு வந்திருக்காக. நான் வாய் அடிக்கிறதைப் பார்த்துட்டு, இவளை தன் மகனுக்கு, கட்டி வைச்சா, திருந்திடுவானு, நினைச்சு என்னைப் பொண்ணு கேட்டுச்சு. என் ஆத்தா, என் அண்ணணுகளுக்குப் பிடிக்கலை. என் அப்பனுக்கு, அவள் கட்டியிருந்த சேலையையும், மினுக்கையும் பார்த்து ஒத்துக்கிட்டாரு.
மறுநாள், ஐயா வீட்டுக்கு வேலைக்குப் போன, எங்கம்மா மூஞ்சியே சரியில்லாமல் இருக்கிறதைப் பார்த்துட்டு, இந்தப் பொண்ணு தேவகி அம்மா, போய் பெரியம்மாகிட்டே சொல்லியிருக்காக. பெரியம்மா வந்து, என்னடி ஏன் மூஞ்சியே சரியில்லைனு கேக்கப் போய், "எங்கம்மா நடந்த கூத்தைச் சொல்ல, அதுக்குப் பெரியம்மா, ஐயா வரட்டும்டி, என்னனுகேட்கச் சொல்றேன், இவனுக்கு என்ன கிறுக்கா பிடிச்சுப் போச்சு, அவ்வளவு தொலைவுலே பொண்ணைக் கட்டிக் குடுத்துட்டு, நிம்மதியா இருந்துருவானாமா?
வரட்டும், "இன்னிக்கு இருக்கு, அவனுக்கு மண்டகப்படினு, பெரியம்மா கத்திட்டு இருக்கும் போது, வெளியே போன ஆண்கள் மதியச் சாப்பாட்டிற்கு வந்து விட்டார்கள். வரும்போதே பெரியம்மாவின் பேச்சைக் கேட்டுட்டு வந்த ஐயா! என்ன லட்சுமி, பேச்சி ஏன் அழுதிட்டிருக்கானு கேக்க, பெரியம்மாவும் நடந்ததைச் சொல்லி இருக்காக. ஐயாவுக்குக், கோபம் வந்து,ஒரு ஆளை அனுப்பி என் அப்பனையும், அந்த பட்டணத்துக்காரியையும் கூப்பிட்டு வரச் சொன்னாக.
எல்லாரும் வந்தவுடனே, முதல்லே என் அப்பனைப் போட்டு வறுத்து எடுத்துட்டாரு. "ஏன்டா உனக்கு அறிவிறுக்கா? அவ்வளவு தொலைவுலே பொண்ணைக் குடுத்துட்டு, இங்கே எப்படிடா நிம்மதியா இருப்பே? ஒரு ஆத்திரம் அவசரத்துக்கு உடனே போக முடியுமா? ஒரு நல்லது கெட்டதுனாதேன் , உடனே ஓட முடியுமா?
ஏன் நம்ம பக்கத்திலே இருக்கிற ஆம்பளைப் பயலுகலாம், உனக்கு ஆம்பளையாத் தெரியலையா? பட்டணத்துலேதேன் பொண்ணைக் கொடுப்பியலோ?
னு புடிச்சுக் கத்திருக்காறு. அடுத்து என் அண்ணண்களையும் விட்டு வைக்கலை. ஏன்டா உங்க அப்பனுக்குத்தேன் அறிவில்லை. உங்களுக்கு எங்கேடா போச்சு புத்தினு கேட்டிருக்காறு. நாங்க எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம்யா, அவரு கேட்காம வீட்டிலே இருந்த வெத்தலையைக் கொடுத்து, கல்யாணத்தை உறுதி பண்ணிட்டாரு ஐயானு சொல்லியிருக்குக.
என் மாமியார்க்காரியையும் விட்டு வைக்கலை. இங்கே பாரு, பொண்ணைக் குடுக்கிறோம், ஒழுங்கா வைச்சுப் பார்த்துக்கனும், அது கண்ணைக் கசக்கிட்டு வந்துச்சுனு, தெரிஞ்சது தொலைச்சுப்புடுவேன் தொலைச்சுனு சொல்லி,கல்யாணத்தையும் முடிச்சு வைச்சாரு.
கல்யாணம் முடிச்சு, பட்டணத்துலே காலை வைச்சதுமே, எனக்குக் கண்ணைக் கட்ட ஆரம்பிச்சிருச்சு.
நான், பயந்து போய் இந்த ஆளு கையைப் புடிச்சா, தட்டிவிட்டுட்டு நடக்குது. நான், இந்தாளு பின்னாடியே ஓட வேண்டியதாப் போச்சு. மூனு மாசம்தேன், அங்கே இருந்தேன். அதிலேயே, புரிஞ்சிறுச்சு , இந்த ஆளு ஜோக்காலினு, பாதி நாள் வேலைக்குப் போறது, பாதி நாள் குடிச்சிட்டு கிடக்கிறதுமா இருந்துச்சு, இதுக்கிடையிலே, எனக்கு கரு தங்கவும், என் மாமியார்க்காரி, என்னைக் கொண்டு போய், எங்க வீட்டிலே விட்டுட்டு வரச் சொல்லுச்சு.
இந்த மூனு மாசத்திலேயே, எனக்குப் போட்டிருந்த நகை, பண்டம் பாத்திரம்லாம் வித்தாச்சு. இரண்டு பேரும், கிளம்பி என் பிறந்த வீட்டுக்கு வந்தவுடனே, என் அண்ணிமார்கள், பார்த்து விக்கித்துப் போய் நின்னாக, ஒரு அண்ணி, எங்க அம்மாவைக் கூப்பிட ஓட, ஒரு அண்ணி, என் அண்ணண்களை கூப்பிட ஓடிச்சு, ஒரு அண்ணி, குளிக்க தண்ணியை ஊத்தி, குளிச்சிட்டு வரச் சொல்லவும், நான் குளிச்சிட்டு வாரதுக்குள்ளே, சாப்பாடு செஞ்சு வைச்சிட்டு, எனக்கு முதல்லே தட்டுலே சாப்பாட்டைப் போட்டுக் குடுத்து சாப்பிடச் சொல்லுச்சு.
இந்த மனுசன், ஏங்க நான் குளிக்கத் தண்ணி குடுங்கனு கேக்க, எங்க அண்ணி, அந்தா கம்மாய் தெரியுதுலே, அதிலே போய் குளிச்சிட்டு வாங்கனு சொல்லுச்சு.
அதுக்குள்ளே, என் குடும்பம் மொத்தமும் வந்திருச்சு. என் அண்ணணுக, எங்கேம்மா, உனக்குப் போட்டிருந்த நகையெல்லாம்னு கேட்டாக. ஏன் இப்படி மெலிஞ்சு போயிருக்கே?னு கேட்டாக. நான் நடந்ததுலாம் சொல்லி அழுதேன். அவ்வளவுதேன், இந்த மனுசனை இழுத்துக்கிட்டு, நேரே ஐயா வீட்டுக்குப் போயிட்டாக
.
உன்னைக் கூட்டிட்டுப் போகலையா? என்று அவந்திகா கேக்க, அது எப்படி, நான் தானே போய் நடந்ததுலாம் சொல்லனும். அதுனாலே என் அண்ணண், சைக்கிளில் உட்கார வைச்சுக் கூட்டிட்டுப் போச்சு. அப்புறம், என்ன! ஐயா போட்டு வறுத்து எடுத்துட்டு, இரண்டு ஆள்களைக் கூப்பிட்டு, பணத்தைக் குடுத்து என் மாமியார்க்காரியையும், மிச்சம் இருக்கிற தட்டு முட்டு சாமான்களையும் எடுத்துட்டு வரச் சொன்னாரு.
அவுகளும், ஐயா பணமெல்லாம் வேணாம், நம்ம தோட்டத்திலிருந்து வாழை இலை, வாழைத்தார், வாழைப்பூ, கரும்பு, பூ எல்லாம் ஏத்திக்கிட்டுப் போறோம், அதை இறக்கி விட்டுட்டு, இவன் வீட்டுக்குப் போய், இவன் ஆத்தாவையும், மிச்சம் கிடைக்கிறதையும் அள்ளிக்கிட்டு வாரோம்னு, சொல்லி விட்டுப் போனார்கள்.
மறுநாளே என் மாமியார்க்காரியும், வந்துச்சு. ஊரே கூடிப் போச்சு, ஐயா வீட்டிலே. ஐயா, என் மாமியார்க்காரிக்கிட்டே, நீ என்ன சொல்லி, எங்க ஊர்ப் பொண்ணைக் கூட்டிட்டுப் போனே.இப்போ, இப்படி அனுப்பி வைச்சிருக்கே,என்ன நடந்துச்சு?னு கேக்க, இந்தக் கிறுக்கி, என்மகன் சரியில்லாதவன் தான், ஆனால் இந்தப் புள்ளை திருவிழாவிலே வாயடிக்கிறதைப் பார்த்து, நம்ம பையனுக்குக் கட்டி வைச்சா, திருத்திடுவானு நினைச்சுத் தான் கல்யாணம் பண்ணி வைச்சேன்
என்று சொல்லிடுச்சு.
ஐயாவுக்கு வந்ததே கோபம். பெத்து இருபத்தைஞ்சு வயசு வரைக்கும், நல்லா வளர்க்கத் தெரியாமல் இருந்துபுட்டு, இன்னைக்கு வந்த புள்ளை, உன் மவனைத் திருத்திடுமாக்கும். ஒழுங்கா புள்ளையை வளர்க்கத் துப்பில்லை உனக்கு. அடுத்த வீட்டுப் பொண்ணு வந்து உம் மவனைத் திருத்த முடியுமா?
இங்கே பாரு, நாளையிலிருந்து என் வீட்டிலே, வயல்லே வேலை பாக்கனும், உனக்கு மூனு வேலை சாப்பாடு, துணிமணி, நோய் ஏதாவது வந்தால் நாங்களே பார்ப்போம். ஆனால், பத்துப் பைசா உன் கையிலே தரமாட்டோம். உம்மவனுக்கும் அதே நிலைமை தான். ஏம்மா பவானினு கூப்பிட்டாரு. இன்னையிலிருந்து இவளை வேலைக்கு வைச்சுக்கோ என்றார். சரிங்க மாமானு சொல்லிப்புட்டாக.
ஏன் அவங்க மனைவிக்கிட்டே சொல்லாமல், இவங்ககிட்டே சொன்னாரு, உங்கள் ஐயா என்று கேட்டாள் அவந்திகா. ஐயே, பெரியம்மா யார் என்ன சொன்னாலும் நம்பிடுவாக. அதுனாலே தான், ஐயா இந்தப் பொம்பளையை வேணும்னே தான் பவானி அம்மாகிட்டே அனுப்பிட்டாரு. ஓ ஓ சரி அப்புறம் என்ன நடந்தது. மறு நாளில் இருந்து எங்க அம்மாவோட வேலைக்குப் போச்சு, அந்த பொம்பளை.இந்த மனுசன் காலையிலேயே குளிச்சிட்டு, குழாய் டிரவுசர் போட்டு, சட்டையெல்லாம் போட்டு, தலையெல்லாம் வாரி, பவுடர்லாம் போட்டுக்கிட்டு கிளம்புச்சு.
நான் சிரிச்சிட்டு இருந்தேன். நைசா நழுவி, வீட்டுக்கு வெளியே வந்தேன். என் சின்ன அண்ணி நின்னுட்டு இருந்துச்சு. அது காதிலே போய் விசயத்தைச் சொன்னேன். அது மெதுவா வீட்டுக்குள்ளே எட்டிப் பார்த்துட்டு, சிரிச்சிட்டே எங்கே போறீய அண்ணேனு கேக்க, வேலைக்குத் தானு சொன்னாரு, இந்த மனுசன். அதுதேன் கேட்கிறேன், எந்த வேலைக்குப் போறீங்கனு கேக்க, மற்ற அண்ணிகளும், அண்ணண்களும் வந்துட்டாக. வயல் வேலைக்குத் தான் போறேனு சொல்ல, அதுக்கு இப்படியா போவாங்கனு கேட்க, ஒரு அண்ணண் போய் அதோட வேட்டி, துண்டை எடுத்துட்டு வந்து கொடுத்து, இப்படி கட்டிக்கிட்டு வானு சொல்லி, கட்டியும் விட்டு போனாக.
அப்புறம் இந்த மனுசனைக் கொண்டு போய், ஐயாவிடம் விட, ஐயா இருக்கிற தென்னை மரத்திலே இளநீர்க் காயெல்லாம் வெட்டிப் போடுனு சொல்லி இருக்காறு. இந்த மனுசன், அங்கே வேலை செஞ்சிட்டிருக்கிற, ஆள்ககிட்டே போய், ஏங்க ஏணி எங்கே இருக்குனு கேட்டிருக்கு. ஏணியா, எதுக்கு உனக்கு ஏணி வேணும்னு கேட்க, அப்போத் தானே மரத்திலே இருக்கிற இளநீரை பறிக்க முடியும்னு சொல்ல, அதைக் கேட்டு எல்லாரும் சிரிக்க, ஐயா! என்னடா அங்கே ஒரே சிரிப்பா இருக்குனு கேட்க, இந்த மனுசன் கேட்டதைச் சொல்ல, ஐயா, அவுக தம்பி, மச்சானெல்லாம் சிரிச்சிருக்காங்க.
வளரும்.
ஐயா! இவன் இளநீர் பறிக்க ஏணி கேட்கிறான், என்று சொன்னதும், அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். ஆயா, சொல்லி முடிக்கவும், அதுவரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அவந்திகா, சுப்பு, மல்லிகா அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். "ஏன் ஆயா உன் வீட்டுக்காரருக்கு, தென்னை மரத்திலே, இளநீர் பறிக்கத் தெரியாதா? இல்லை தெரியாதது போல நடிச்சாறா? என்று மல்லிகா கேட்டாள்.
அட யாருடி இவள், அந்த மனுசனுக்கு என்ன தெரியும், என்ன தெரியாதுனு? எனக்கெப்படி தெரியும்? என்று ஆயா சொல்ல, அப்ப எப்படி அவரோட ஐஞ்சு மாசம் குடித்தனம் பண்ணுணே? என்று மல்லிகா கேட்க, அட கூறு கெட்ட சிறுக்கி, எனக்குக் கண்ணாலம் ஆகிக் கூட்டிப் போனதும், என் மாமியார்க்காரி தான், சாப்பாடு செய்யல்லாம், அது வாங்கிக் குடுக்கும், நான் ஆக்கிப் போடுவேன். இந்த மனுசன் காலையிலே, வெளியிலே போறவரு , நல்லா மூக்கு முட்டக் குடிச்சிட்டு இராத்திரிக்குத் தான் வரும். எனக்கு , இந்த குடிப்பழக்க வாடை எல்லாம், எங்க ஊரிலே இல்லையா? நான் வாந்தி எடுத்துட்டுக் கிடப்பேன். மாமியார் வீட்டுக்குள்ளே போய் படுத்துடுவேன்.
என் மாமியார் தான், அந்த மனுசனைப் பார்க்கிறது எல்லாம். நான், அந்த மனுசன் குடிச்சிட்டு வந்தாலே, என் மாமியார் வீட்டுக்குள்ளே ஓடிடுவேன். அப்போ, எப்படி இத்தனை குழந்தை பெத்தே? என்று மல்லிகா கேட்க, அடியேய் கண்ணாலம் முடிஞ்ச ஒரு மாதம், அந்த ஆள் குடிக்காம கொல்லாம நல்லா இருந்தாரு.
அந்த ஒரு மாதத்திலே தான் புள்ளைத்தாச்சி ஆனேன். அதுக்கப்புறம், மாமியார்க்காரியும், நீயாச்சு, உன் புருசனாச்சுனு சொல்லி கையை விரிச்சிறுச்சு. இந்த மனுசன் பத்து பைசா கொண்டு வந்து கொடுக்கலை. கழுத்து, காதிலே இருந்த நகையை வித்து, பாதியைக் குடிச்சிட்டு, மீதியைக் கையிலே குடுக்கும்.
அதையும், மிச்சம் வைச்சிறுக்கிற காசையும் கேட்கும் போது தான், மாமியார்க்காரிக்கும் எனக்கும் சண்டை வந்தது. அதை, இந்த மனுசன்கிட்டே கோல் மூட்டி விட்டு விடும். உடனே, இந்த ஆளு வந்து அடிக்கக் கை ஓங்க, வந்தது பார் எனக்குக் கோபம். அடிக்க வந்த கையைப் பிடிச்சு முறுக்கிப் பிடிச்சிட்டு, ஓங்கி மூஞ்சியிலேயே ஒரு குத்து விட்டேன். குடிச்சதுக்கும் அதுக்கும் அப்படியே விழுந்தாரு. மாமியார்க்காரி குய்யோ முய்யோனு கத்திட்டு ,அங்கே இருந்தவுகளை எல்லாம் கூப்பிட்டு பஞ்சாயத்து வைச்சுச்சு.
நான், அதுக்கெல்லாம் பயப்படுறவளா. நானும் பதிலுக்குப் பதில் குடுத்தேன். அதுக்கப்புறம், மாமியார்க்காரி உடனே என்னைக் கொண்டு போய் பிறந்தை வீட்டிலே விட்டுட்டு வரச் சொல்லுச்சு. நான்,"மனசுக்குள்ளே வாடி, உன்னை என் ஊருக்கு வரவைச்சு, தெரியாத வேலையெல்லாம், எப்படி செய்ய வைக்கிறேனு பாரு?னு மனசிலே நினைச்சிட்டுத் தான், எங்க ஊருக்குக் கிளம்பினேன். அதையே, நடத்தியும் வைச்சுட்டேனு பெருமையாக, ஆயா சொல்ல, எல்லாரும் சிரிச்சிட்டாங்க.
அவந்திகா, மல்லிகா, சுப்பு எல்லாரும் ஆயா சொன்னதைக் கேட்டு, சிரிச்சிட்டாங்க. அவந்திகா, "ஆயாவிடம், ஏன் ஆயா உன் கணவனை அடிச்சதுக்கு, மறுநாள் உன் வீட்டுக்காரர், உன்னிடம் சண்டை போடலையா?, அதை ஏம்மா கேட்கிறே? இந்த மனுசன்கிட்டே காலையிலே, இராத்திரி நடந்ததுலாம் சொல்லிக் கொடுத்துச்சு. ஆனால், இந்த மனுசன் அதை நம்பலை. அதில், கோபமடைந்த மாமியார், இது தான் சாக்குனு கொண்டு போய் விடச் சொல்லுச்சுமா, என்றாள்.
சுப்பு, ஆயா உனக்கு ரொம்ப தான் தைரியம். ஒரு ஆம்பளையைக் கையை முறுக்கி அடிக்கிறதுலாம், சாதாரணமான பொம்பளைகளால், அடிக்க முடியாது என்று சொல்ல, ஆயாவோ, அசால்ட்டாக, என்னடா பொம்பளைனா,அவ்வளவு இளக்காரமா? என்று கேட்டார். இப்போவும் வரீயா,
நானா, நீயானு பார்த்திடலாமானு,கேட்டார்.
என்ன கிழவி கொழுப்பா?வா, பார்த்துடலாம், என்று சவால் விட, இரண்டு பேரையும் அடக்கி வைக்கப் பெரும்பாடுபட வேண்டியதாப் போச்சு.
அவந்திகா, அப்புறம் என்ன ஆச்சு? உன் கணவர் தேங்காய் உறிக்கக் கத்துக்கிட்டாரா?,
என்று கேட்டாள். அட, அதை ஏம்மா கேட்கிறே? இந்த மனுசன், ஐயா காட்டின ஆளுடன் போய், அந்த அண்ணண் செய்றதை, மட்டும் தான் பார்த்திருக்கு. உச்சி வேளை வரும் வரைக்கும், ஒரு காயும் உறிக்கலை.
எல்லாரும் சாப்பிடப் போகும் போது, ஐயா! அந்த முனியன் அண்ணண்கிட்டே, ஏய்யா முனியா, என்ன ஏதாவது வேலை பார்த்தானானு கேக்க, ம்க்கூம் ஒன்னும் இல்லையா. பட்டணத்துக்காரன், கொஞ்சம் வேலையைக் காட்டுறான் நம்மகிட்டேனு, ஐயா! கண்டு பிடிச்சிட்டாரு.
டேய், உன் பேர் என்ன?கேட்க, இந்த மனுசன், முத்துராமனு கெத்தா சொல்லியிருக்கு.
இப்போ, என்ன செய்யுற?இங்கே கிடக்கிற தேங்காயை, எல்லாத்தையும் உறிச்சிப் போடுறே. அப்புறம் தான், உனக்கு சாப்பாடு எல்லாம்னு, சொல்லிட்டுப் போயிட்டாரு. கூடவே நாலு பேரை வேறே, காவலுக்குப் போட்டுட்டாரு. வேறே வழி, விதியேனு அவ்வளவு காயையும் சரசரனு உறிச்சிப் போட்டிருக்கு.
முனியன் அண்ணே, ஏன்டா வேலையைத் தெரிஞ்சு வைச்சுக்கிட்டு, வேலை பார்க்காம டிமிக்கி கொடுக்கப் பார்க்கிறியானு கேட்டுப்புட்டு, அந்தப் பக்கம் கிடக்கிற தேங்காயையும் உறிச்சுப் போடு. ஆத்தாளும், மகனும் நாடகமா போடுறீங்க. எங்க ஊர் பொண்ணைக் கட்டினதுனாலே, நீ இன்னும் உயிரோட இருக்கே. இல்லை, உன்னைக் கண்டம் துண்டமா வெட்டி, இங்கே இருக்கிற தென்ன மரங்களுக்கு உரமா போட்டுடுவோம்னு திட்டியிருக்காறு.
வேறே வழி இல்லாமல், இந்த மனுசனும், அவர் சொன்ன வேலையைச் செய்திருக்காறு.
அப்போ, உன் மாமியார் கதி என்ன ஆச்சு? அந்தப் பொம்பளை, என் ஆத்தா கூட ஐயா வீட்டிலே வேலைக்குப் போச்சு. "என்னமோ, கலெக்டரு உத்தியோகத்துக்குப் போற மாதிரி, அவள் சேலை கட்டினது என்ன! தலையை வாரிச் ஜடை பின்னிப் போட்டு, பவுடர்லாம் பூசிக்கிட்டு வரவும், நான், என் அண்ணிமார்லாம் சிரிச்சுட்டோம்.
அங்கே, ஐயா! வீட்டிலே போனவுடனே, பவானி அம்மா, எல்லாருக்கும் வேலை ஏவிக்கிட்டு இருந்துருக்காங்க. இவுகளும் போனவுடனே, "என்னடி நாகம்மா, இவள் வேலைக்கு வந்துருக்காளா, இல்லை ஏதாவது வீட்டுக்கு விருந்துக்கு வந்திருக்காளானு? கேட்க, எங்க ஆத்தா, அதை அவள்கிட்டேயே கேளுங்கம்மானு, சொல்லிட்டு, உள்ளே போயிடுச்சு.
மதினி, மதினி என்ன என்னை விட்டுட்டுப் போறீங்கனு? கேட்டிருக்கு. அவளுக்கு உள்ளே வேலை இருக்கு. நீ, என் கூட வா. நான் சொல்ற வேலையைச் செய், சரியானு கேட்டிருக்காரு. ம்ம் னு தலையை ஆட்டி இருக்கு. அந்தப் பொம்பளையைக் கூட்டிட்டுப் போய், நெல் அரைச்சிட்டு வந்ததை, ஏற்கனவே புடைச்சிட்டு இருந்தவுகளுடன் உட்காரச் சொல்லி, ஒரு சொலவைக் கொடுத்து, அவுகளோட சேர்ந்து ,அந்த வேலையைச் செய்யச் சொல்லி இருக்காக.
இந்தப் பொம்பளை எனக்கு, இந்த வேலையெல்லாம் தெரியாதுனு சொல்ல, அதுக்குப் பவானி அம்மாவோ, கண் பார்த்தா, கை தானா வேலை செய்யும், உனக்கு இந்த வேலை நல்லாத் தெரியும்கிறதும், எனக்கு. தெரியும். மூடிக்கிட்டு வேலையைப் பாரு. இல்லை உனக்கு இன்னிக்கு சாப்பாடு கிடையாது, எப்படி வசதினு பார்த்துக்கோனு சொல்லவும்
,வேறே வழி இல்லாமல் வேலையை செஞ்சிருக்கு.
அதுக்கப்புறம் என்ன! ஆத்தாளும், மகனும், எவ்வளவு உழைக்காம இருந்தாங்களோ, அந்த அளவுக்கு வேலை செஞ்சாங்க. இப்போ, அத்தனை வேலையும் அத்துப்படி ஆகிடுச்சுனு சொல்லி முடிச்சிச்சு. "எத்தனை பிள்ளைகள் ஆயா உனக்கு? என்று அவந்திகா கேட்டாள். இரண்டு ஆம்பளைப் புள்ளைக, இரண்டு பொட்டைப் புள்ளைகம்மா. இரண்டு ஆம்பளைப் பசங்களும், பெரிய படிப்பெல்லாம் படிச்சு, பக்கத்துலே இருக்கிற டவுனுலே வேலை பார்க்குதுக.
அதுக இரண்டுக்கும், அண்ணண்களே எங்க ஊர்ப் பொண்ணுகளையே கட்டி வைச்சிட்டாங்க. இன்னும், உன் மாமியார், கணவர்லாம் இருக்கிறாங்களா? ஆயா, என்று கேட்டாள். இருக்கிறாங்கம்மா. அப்போ ஏன் ஆயா நீ மஞ்சள் பூசுறதில்லை? பொட்டு வைக்கிறதில்லை? என்று கேட்டாள் அவந்திகா. அந்த ஆள் இன்னொரு பொம்பளையைக் கூட்டுச் சேர்த்துக்கிருச்சு. ஐயாவுக்கும், ரொம்ப உடம்பு முடியாம கிடந்தாரு.
ஐயாவோட, தம்பிக, மச்சானுகல்லாம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாக. அந்த மனுசன் கேட்கலை. அண்ணண்களுக்கும், அந்த ஆளுக்கும் அடிதடி தகராறு எல்லாம் நடந்துச்சு. சரி, என்ன காரணம் சொன்னாரு? ஏம்மா, நீ நல்லா படிச்ச புள்ளை. பசங்களாம் பெரிசா வளர்ந்து நிக்கிதுக. அந்த நேரத்திலே, அவர் ஆசைக்கு இணங்கலைனு தான் காரணமா சொன்னாரு. அதை ஊரே கூடி நிக்கும் போது சொன்னால், எனக்கு எவ்வளவு அசிங்கமா இருந்திருக்கும். அதான், சரி தான் போடானு, அவன் கட்டின தாலியைக் கழட்டி, அவன் மூஞ்சியிலேயே எறிஞ்சிட்டு, இனி எனக்கும் ஒன்னும் இல்லைனு, பொட்டு, பூவெல்லாம் வைக்கிறது, இல்லைம்மானு
,சொல்லி முடிக்கவும், அவந்திகாவும், மல்லிகாவும் அழுதேவிட்டார்கள்.
அவந்திகா, "ஆயாவைக் கட்டிக் கொண்டு, அழாதே ஆயா! உன்னைப் போல ஒருத்தியோட அருமை, அந்த ஆளுக்குத் தெரியலை, கடைசி காலம் வரும் போது தான், அந்த ஆளுக்கு உன் அருமை தெரியும் என்று சொன்னாள். மல்லிகா, சுப்பு கூட அதையே சொன்னார்கள். இல்லைம்மா, என்னைப் பொருத்த வரைக்கும், அந்த மனுசனுக்கு நான் உண்மையாத் தான் நடந்துகிட்டேன்.
"வேறே யாரையும் மனசாலே கூட, நான் நினைச்சதில்லை. அந்த மனுசன் வராம, நான் ஒரு நாள் கூட சாப்பிட்டதில்லை. மசக்கையா இருக்கும் போது கூட, கௌச்சிலாம் ஆக்குனா, அந்த வாசனை பிடிக்காமல் முகத்துலே துணியைக் கட்டிட்டு, எப்படியோ சமைச்சுப் போட்டிருக்கேன். அந்த மனுசனுக்கு, ஒரு தடவை முத்து அம்மை போட, தொண்டையிலே தண்ணீ கூட இறங்கலை. நான், தினம் குளிச்சிட்டு ஈரப்