Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Desiya Geetham
En Desiya Geetham
En Desiya Geetham
Ebook101 pages41 minutes

En Desiya Geetham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateFeb 1, 2018
ISBN9781043466374
En Desiya Geetham

Read more from Rajeshkumar

Related to En Desiya Geetham

Related ebooks

Related categories

Reviews for En Desiya Geetham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Desiya Geetham - Rajeshkumar

    25

    1

    மீனம்பாக்கம் ஏர்போர்ட் அந்த வைகறை இருட்டில் ரன்வே விளக்குகளோடு ஒரு கிராமத்துத் திருவிழாவைப் போல் உற்சாகமாய் இருந்தது. கண்ட்ரோல் டவரின் வெளிச்ச ஜன்னல்களில் அதிகாரிகளின் நிழல் உருவங்கள் ஒரு விநாடி தெரிவதும் மறுவிநாடி மறைவதுமாக இருந்தன. லௌன்ஞ் அருகே இன்னர் விங்க் செக்யூரிட்டி ஃபோர்ஸை சேர்ந்த வீரர்கள் ஏ.கே. 47களை கக்கங்களில் இடுக்கிக்கொண்டு - கழுகுப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏர்போர்ட்டுக்கு வெளியே அவுட்டர்களில் செக்யூரிட்டி ஃபோர்ஸைச் சேர்ந்த வீரர்கள் மூன்று வரிசைகளாக நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

    பாதி பேர்களின் கைகளில் தோட்டாக்களை கர்ப்பம் தாங்கிய நிறைமாத துப்பாக்கிகள். ஏர்போர்ட் கட்டிடத்தின் உயரமான இடங்களில் ஜன்னல்களுக்கு பக்கத்தில் ஸ்பெஷல் செக்யூரிட்டி ஃபோர்ஸைச் சேர்ந்த வீரர்கள் - இருட்டிலும் பார்க்கக்கூடிய பைனாகுலர்களோட - அலர்ட்டாய்த் தெரிந்தார்கள்.

    விமான நிலையத்தின் எலக்ட்ரானிக் கடிகாரம் சிவப்புப் புள்ளிகளில் 5.05 என்று நேரத்தைக் காட்டியது.

    ஏர்போர்ட் ஆபீஸரின் அறையிலிருந்து வெளிப்பட்டான் விவேக். அந்த அதிகாலை வேளையிலும் வியர்த்திருந்தான். கேசம் கலைந்திருந்தது. ராத்திரி முழுவதும் தூங்காத களைப்பு கண்களில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

    லௌன்ஞ்சின் ஸ்பார்டெக் தளத்தில் பூட்ஸ் சத்தம் ஒலிக்க நடந்து - ரிசப்ஷன் கௌண்டர் அருகே - போலீஸ் அதிகாரிகளோடு - முகம் இறுகிப் பேசிக் கொண்டிருந்த டி.ஜி.பி. சக்கரவர்த்தியை நெருங்கினான்.

    ஸார்...

    அவர் நிமிர்ந்தார். கேட்டார்.

    என்ன ஏர்போர்ட் ஆபீஸரைப் பார்த்தீங்களா...? விமானம் லேட் இல்லையே...

    பதினைந்து நிமிஷம் லேட் ஸார்... 5.20க்கு வர வேண்டியது... 5.35க்குத் தான் வரும்...

    பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரி பார்த்திட்டீங்களா...?

    பார்த்தாச்சு ஸார்...

    தப்பு நேரக்கூடாது மிஸ்டர் விவேக்...

    நேராது ஸார்... எல்லாத்தையும் துல்லியமா பண்ணியிருக்கோம்... இந்த நிமிஷம் ஏர்போர்ட்டுக்குள்ளே... ஒரு விஸிட்டர் கூடக் கிடையாது. ஏர்போர்ட்டைச் சேர்ந்த நம்பிக்கையான ஊழியர்களும் - நாம் தேர்வு பண்ணின போலீஸ் அதிகாரிகளும் மட்டும்தான் இருக்காங்க...

    ஹாஸ்பிடலுக்குப் போன் பண்ணிப் பார்த்தீங்களா?

    பண்ணினேன் ஸார்...

    அந்தப் பெண்ணோட கண்டிஷன் என்ன...?

    ஸ்டில் வொர்ஸ்ட்... அவளுக்கு கான்ஷியஸ் திரும்புமான்னு டாக்டர்ஸினாலேயே சொல்ல முடியலை... நியூரோ சர்ஜன் ப்ரணவமூர்த்தி பக்கத்திலேயே இருக்கிறார். அவர் கைபட்டா டெட்பாடிக்குக் கூட சில விநாடிகள் உயிர் வந்துட்டுப் போகும்னு சொல்லுவாங்க... அவர் எப்படியும் அந்தப் பெண்ணை கான்ஷியஸுக்குக் கொண்டு வந்து பேச வெச்சுடுவார்...

    லெட் அஸ்... ஸீ... டி.ஜி.பி. சொல்லிக் கொண்டிருக்கும் போதே - ஒரு அதிகாரி வேகவேகமாய் வந்து சல்யூட் அடித்து நின்றார்.

    ஸார்... உங்களுக்கு ஹாட்லைன் டெலிபோன். சி.எம்.மோட செக்ரட்டரி லைனில் இருக்கிறார்...

    விவேக் நீங்களும் வாங்க... சொல்லிவிட்டு டி.ஜி.பி. சக்கரவர்த்தி நடக்க - விவேக் பின் தொடர்ந்தான்.

    விமான நிலையத்தின் ஒவ்வொரு சென்டிமீட்டரிலும் அசாத்திய பரபரப்பு தெரிந்தது. காற்று கூட யோசித்து யோசித்து வீசியது.

    இருவரும் வயர்லஸ் அறைக்குள் நுழைந்தார்கள். ஆபரேட்டர் சல்யூட் அடித்துவிட்டு ஒதுங்கி நிற்க - பாலிமர் மேஜையின் மேல் ஒருக்களித்து விழித்திருந்த ஹாட்லைன் டெலிபோனின் ரிஸீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தார் டி.ஜி.பி.

    குட்மார்னிங் ஸார்... நான் சக்கரவர்த்தி...

    மறுமுனையில் முதலமைச்சரின் தலைமைச் செயலாளர் சற்றே கவலையான குரலில் கேட்டார்.

    அங்கே நிலைமை என்ன...?

    முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கு ஸார். எந்த அசம்பாவிதமும் நடக்க வாய்ப்பில்லை...

    அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில் முதலமைச்சர் பதட்டமாக இருக்கிறார். இந்திய உயிரியல் விஞ்ஞானக் கழகத்துக்கு தலைவராய் இருக்கிற விஞ்ஞானி ஓம் நமச்சிவாயம் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கோவை மண்ணுக்குச் சொந்தக்காரர்... வெளிநாடுகளில் மூன்று மாத காலம் தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு விட்டு - அரிய செய்திகளோடு திரும்பி வரும் அவருடைய உயிருக்கு ஆபத்து என்றால் - அது ஒரு அவமானகரமான விஷயம்... அதுவும் விமானநிலையத்துக்குள்ளேயே... அவர் கொல்லப்படுவார் என்பது அதிர்ச்சியான ஒன்று.

    ஸார்... விஞ்ஞானி ஓம் நமச்சிவாயம் இந்த தேசத்துக்கு ஒரு விலையுயர்ந்த வைரக்கல்லைப் போன்றவர். அவருடைய உயிர்க்கு எந்தவிதமான பங்கமும் ஏற்பட்டு விடாமல் காப்பது தமிழகப் போலீஸாரின் கடமை.

    அந்தப் பெண்ணைப் பற்றிய விபரங்கள்...?

    "எதுவும் தெரியலை ஸார்... ஹாஸ்பிடல் வாசலில் ரத்தமாய் வந்து விழுந்திருக்கிறாள்... டாக்டர் ராஜலிங்கம் அந்தப் பெண்ணை ஐ.ஸி.யூனிட்டுக்குக் கொண்டு போய் - ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கிறார். போலீஸுக்குத் தகவல் போய் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஆஸ்பிடலுக்கு சென்று - சுயநினைவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் வாக்குமூலம் வாங்க முயன்று இருக்கிறார். ஆனால் அந்தப் பெண்ணால் சரியாகப் பேச முடியவில்லை... ‘உயிரியல் விஞ்ஞானி ஓம் நமச்சிவாயம் நாளை விடியற்காலை விமான நிலையத்தில் வைத்துக் கொலை செய்யப்படுவார். தடுத்து நிறுத்துங்கள்.’ இந்த ஒரு வாசகத்தை மட்டுமே அவள் திரும்பத் திரும்பச் சொன்னாள்... நீ யார்... உனக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்

    Enjoying the preview?
    Page 1 of 1