Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pokkishathin Saavi
Pokkishathin Saavi
Pokkishathin Saavi
Ebook114 pages1 hour

Pokkishathin Saavi

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100703026
Pokkishathin Saavi

Read more from Indira Soundarajan

Related to Pokkishathin Saavi

Related ebooks

Related categories

Reviews for Pokkishathin Saavi

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pokkishathin Saavi - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    பொக்கிஷத்தின் சாவி

    Pokkishathin Saavi

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author//indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    பொக்கிஷத்தின் சாவி.

    கோட்டையூர் ஸ்டாப்பெல்லாம் இறங்கு! கண்டக்டரின் குரல் உச்சஸ்தாயியில் ஒலிக்க, அந்த மினிபஸ்ஸும் ஒரு குலுங்கு குலுங்கியபடி நின்றது. மினிபஸ் கூரை மேலெல்லாம் ஜனக் கூட்டம். விட்டால் போதும் என்று அதிலிருந்து பலர் உதிர்ந்தார்கள். பஸ்ஸுக்குள் இருந்து மனிதர்கள் மட்டுமல்ல -

    ஆடு மாடு கோழிகளும் இறங்கின.

    ***

    1

    யாருக்கும் விரோதி வெளியே இல்லை...

    யாருக்கும் விதி வழிச் செல்வதே வாழ்க்கை!'

    அன்று செவ்வாய் சந்தை!

    எனவே சந்தையில் வாங்க முடிந்ததை வாங்கிக் கொண்டு பஸ் ஏறியிருந்தார்கள். ஊர் வரவும் இறங்கிவிட்டார்கள். அவர்களில் தீனாவும் இருந்தான். ஜீன்ஸ் பேண்ட் டீ-ஷர்ட் - கூலிங் கிலாஸ் என்று அந்தக் கிராமத்துக் கூட்டத்தில் தனியாகத் தெரிந்தான். அவன் கையில் ஒரு சூட்கேஸ், காலில் – கேன்வாஸ் ஷு வேறு. -

    கோட்டையூர் வரையில் அவன் ஒரு அந்நியன் என்பது பளிச்சென்று தெரிந்தது. தீனா சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டே தான் நடந்தான். அவன் முகத்தில் லேசான ஏமாற்றம் தெரிந்தது. அதை ஆட்டை தோளில் சுமந்தபடி நடக்கும் ஒருவன் கவனித்தான்.

    என்னப்பு... ஊருக்கு புதுசாட்டம் தெரியுது?

    ஆமாங்க.

    யார் ஊட்டுக்கு வந்திருக்கீங்க?

    நீங்க இந்த ஊர்க்காரரா?

    பொறவு...

    அப்ப சரி... ஆமா கோட்டையூர் இறங்குன்னு பஸ் கண்டக்டர் சொல்லவும் இறங்கிட்டேன். இறங்கிட்டு பார்த்தா ஊரே கண்ணுக்குத் தெரியலீங்களே...?

    அதுவா... ஊர் கிடக்கு கொள்ள தூரத்துல. ஆனா ஊருக்கு அந்த பஸ்காரன் வரமாட்டான்.

    ஏன் அப்படி?

    அது அப்படித்தான். ஆமா நான் கேட்ட கேள்விக்குப்பதில் சொல்லவேயில்லையே. யார் ஊட்டுக்கு வந்திருக்கீங்க...?

    கிருஷ்ணன்கற என் நண்பன் வீட்டுக்குதான்...

    அட நம்ம ஊர் கர்ணத்தோட மவன் கிட்டன் வீட்டுக்கா...

    கிட்டனா?

    நாங்க அப்படித்தான் கூப்பிடுவோம். கிட்டன் தங்கச்சி மல்லிகாவுக்குக் கூட கல்யாணம். அதுக்குத்தானே?

    அதுக்கு தாங்க... ஆமா ஊர் இன்னும் எவ்வளவு தூரத்துல இருக்கு...?

    அதோ தெரியுது பாருங்க ஒரு இடிஞ்ச கோட்டை...

    - அவன் கை காட்டிய திக்கில் ஒரு அரை பனை மர உயரத்திற்கு இடிந்த சுவர்களுடன் கோட்டை ஒன்று தெரிந்தது.

    அதுக்கு அங்கிட்டுதான் எங்க ஊர்!

    ஆமா அது என்ன கோட்டை?

    எங்க ஊர் கோட்டை பத்தி கிட்டன் எதுவும் சொன்னதில்லையா?

    சொல்லியிருக்கான். ஊருக்குள்ள யாரும் கோட்டை பக்கமே போகமாட்டீங்களாமே. அப்படித்தானே?

    ஆமாமா... சிலர் அந்தக் கோட்டையையே பாக்கக்கூட மாட்டாங்க. பாருங்க ஒருத்தர் குடையை வலப்பக்கமா சாத்தி பிடிச்சிகிட்டு நேரா ரோட்டை பார்த்துக்கிட்டே வர்றதை...

    - அவன் சுட்டிக் காட்டும்போது ஒரு வயதானவர் அப்படித்தான் வந்து கொண்டிருந்தார்.

    ஏன் அப்படி?

    அதை என்னன்னு சொல்ல... இந்த கோட்டை அப்புறம் தரங்கம்பாடி கோட்டை, குராயூர் கோட்டை எல்லாம் ஒரு காலத்துல வெள்ளைக் காரவுங்க வசம்ல இருந்துச்சு. இங்க இந்த கோட்டைல கூட கடைசி கடைசியா வெள்ளி ராஜான்னு ஒருத்தர் இருந்தாரு.

    வெள்ளி ராஜாவா... இது என்ன பேரு?

    அட நீங்க ஒண்ணு... அவர் பேரு வெள்ளிடன்னோ வெலிங்டனோ.... எங்களுக்குதான் இங்கிளி பீசு நாக்குல நுழையாதே... அதனால் அவரை வெள்ளி ராசாவாக்கிட்டோம்.

    ஓ... வெலிங்டன் பிரபுவா...

    நீங்க அப்படியே சொல்லுங்க. அந்த ராசாவுக்குப் பாருங்க அவருக்கு மூணு பொண்டாட்டிங்க! அப்பால் ஒரு நாலைஞ்சு புள்ளைங்க. பாக்க தக்காளிப் பழமாட்டம் அப்படி இருப்பாங்க.

    அவங்களுக்கு என்ன?

    அதை ஏன் கேக்கறீங்க. அந்த வெள்ளி ராசா எங்க ஊர் பொண்ணு ஒருத்திய பார்த்து மயங்கிப் போய்ட்டாரு...

    - நடந்த படியே பேசும் அவன் பேச்சில் அவன் ஒரு முக்கியப் புள்ளியைத் தொடவும் தீனாவிடமும் சுவாரஸ்யம் கூடியது.

    அப்ப ஒரு நல்ல லவ் ஸ்டோரி இருக்குன்னு சொல்லுங்க...

    ஆமாமா... கேட்டால் உங்களுக்குப் புல்லரிக்கும். அப்படி ஒரு காதல் கதை தம்பி... கிட்டா பய எப்படி சொல்லாம விட்டான்...

    அதனால என்ன... நீங்க சொல்லுங்க.

    சொல்றேன்... சொல்றேன். வெள்ளைக்கார வெள்ளி ராசா காதலிச்ச அந்த புள்ளை பேரு செவ்வந்தி. அது ஒரு சாமிப் பொண்ணு...

    சாமிப் பொண்ணுன்னா?

    சாமிப் பொண்ணுன்னா எங்க கோட்டையூர்ல ஏரிக்கரைல பொன்னியம்மன்கற சாமிக்கு ஒரு கோயில் இருக்கு. அந்தக் கோயிலுக்குன்னு நேர்ந்துவிடப்பட்ட பொண்ணு அவ...

    என்னங்க இது கொடுமை. கோயிலுக்கு ஆடு மாடுகளை நேர்ந்துவிடுவாங்களா...

    ஏன் விடமாட்டாங்க. செவ்வந்தியோடதாய் தகப்பனுக்கு கல்யாணமாகி 15 வருஷமா பிள்ளை குட்டி இல்ல. ஊரே செவ்வந்தி தகப்பனை ஒரு பொண்டுன்னு சொல்லவும் அந்த ஆளும் உசுரை விட்ற அளவுக்குப் போய்ட்டான். அப்பதான் பொன்னியம்மா ஆத்தா கோவில் பூசாரி அவராண்ட ஆத்தாகிட்ட வேண்டிக்கிட்ட சொன்னாரு... ஆனா அவரோ 'நான் ஆத்தாகிட்ட ஆயிரம் தடவை வேண்டிகிட்டாச்சு. அவ கண்ணு திறக்க மாட்டேங்கறா'ங்கற மாதிரி சொன்னாரு.

    உம்... அப்புறம் என்னாச்சு?

    "அப்புறம்தான் தம்பி கூத்தே... பூசாரி அவரை விடலை. 'ஆத்தா நீ எனக்கு பிள்ளை பாக்கியம் தந்தா அந்த பிள்ளையை நான் உனக்கே தந்துட்றேன். என்னை ஆம்பளைன்னு ஊர் சொன்னா போதும்னு வேண்டிக்க.... நிச்சயம் புள்ள பொறக்கும்'னு பூசாரி சொன்னாரு.

    அவரும் எத்த தின்னா பித்தம் தணியும்னு இருந்ததால் அப்படியே வேண்டிகிட்டாரு. பொறவு தான் செவ்வந்தி பொறந்தா..."

    சரிதான்... அதனால் தனக்குப் பொறந்த பொண்ணை கோயிலுக்குக் கொடுத்துட்டாராக்கும்?

    வேண்டிகிட்டா வேண்டிகிட்ட மாதிரி செய்துதானே தீரணும்? நாங்க என்ன பட்டணத்துக்காரங்களா காலைல ஒரு பேச்சு மாலைல ஒரு பேச்சுன்னு பேசறதுக்கு...

    - அவன் பேச்சுப் போக்கில் ஒரு வாரு வாரினான். தீனாவுக்குக் கொஞ்சம் கோபம் வந்தபோதும் அடக்கிக் கொண்டான். அவனும் கதையைத் தொடர்ந்தான்.

    "அப்படி சாமிக்கு விடப்பட்ட பொண்ணைக் கட்டிக்க

    Enjoying the preview?
    Page 1 of 1