Muraipadi Kural Padi - IX Std
()
About this ebook
மாணவ மணிகளே!
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை, அருமையிலும் அருமையான 240 திருக்குறள்களைத் தெரிவு செய்து 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை தமிழ் பாடத் திட்டத்தில் சேர்த்துள்ளார்கள். ஆகவே தொடக்கத்திலிருந்தே குறள் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, தேர்வுக்காகப் படிப்பதோடு அல்லாமல் குறள் நெறிகளைக் கற்று அதன்படி நின்று ஒழுக முயலுங்கள். வாழ்க்கை சரியான பாதையை நோக்கிச் செல்லும். அதனால் உங்கள் வாழ்க்கை ஒளிரும்; உங்களைச் சுற்றியுள்ள சமுதாயம் ஓங்கி ஒளிரும்! அதற்கு இந்நூல் பெரிதும் துணை செய்யும் என உறுதியாக நம்புகிறேன்!
சீனி.வரதராஜன்
Read more from Srini.Varadarajan
Muraipadi Kural Padi - VI Std Rating: 0 out of 5 stars0 ratingsMuraipadi Kural Padi - X Std Rating: 0 out of 5 stars0 ratingsMuraipadi Kural Padi - XII Std Rating: 0 out of 5 stars0 ratingsMuraipadi Kural Padi - XI Std Rating: 0 out of 5 stars0 ratingsMuraipadi Kural Padi - VIII Std Rating: 0 out of 5 stars0 ratings
Related to Muraipadi Kural Padi - IX Std
Related ebooks
Thirumalai Thiruvanthathi Rating: 0 out of 5 stars0 ratingsAzhwargal Sollum Athisaya Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsUdanai Nirkindraan Rating: 0 out of 5 stars0 ratingsKural Selvam Rating: 0 out of 5 stars0 ratingsEliya Thiruppaavai Rating: 0 out of 5 stars0 ratingsThirukurugoor Thiruvanthathi Rating: 0 out of 5 stars0 ratingsThiruppavai Rating: 0 out of 5 stars0 ratingsNooru Kodi Roopai Vairam Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsThiruvasaakam Rating: 2 out of 5 stars2/5Therkku Vaasal Mohini Rating: 0 out of 5 stars0 ratingsSinthaiyil Thulirthavai Rating: 0 out of 5 stars0 ratingsDeivakavi Sekkilhar Aruliya Periyapuranam - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsThanjai Ezhilan Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsTamil Ennum Vinthaiyil (Vi)chithira Kavi Vilakkam Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsNagakumara Kaaviyam Rating: 0 out of 5 stars0 ratingsOorani Yappu Rating: 0 out of 5 stars0 ratingsVasantha Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsAgathiyar Andhathi Rating: 0 out of 5 stars0 ratingsThirukkural Saaram Rating: 0 out of 5 stars0 ratingsVizhigalai Thira... Rating: 0 out of 5 stars0 ratingsThiruppaavai Sorgankal Rating: 0 out of 5 stars0 ratingsKirupanandha Variyar Maanavargalukku Sonnathu Rating: 0 out of 5 stars0 ratingsPudhumaipithan Short Stories - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsAnalai Kaayum Ambuligal Rating: 5 out of 5 stars5/5Arivulaga Methai Anna Rating: 0 out of 5 stars0 ratingsVallalar Pillaithamizh Rating: 0 out of 5 stars0 ratingsAadi Pattam Thedi Vithai... Rating: 0 out of 5 stars0 ratingsAthvaidham Rating: 0 out of 5 stars0 ratingsThiruvasaga Thean Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Muraipadi Kural Padi - IX Std
0 ratings0 reviews
Book preview
Muraipadi Kural Padi - IX Std - Srini.Varadarajan
https://www.pustaka.co.in
முறைப்படி குறள் படி - ஒன்பதாம் வகுப்பு
(தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை தமிழ்ப் பாடத் திட்ட குறட்பாக்களை உள்ளடக்கிய நூல்)
Muraipadi Kural Padi - IX Std
Author:
சீனி.வரதராஜன்
Srini.Varadarajan
For more books
https://www.pustaka.co.in/home/author/srini-varadarajan
பொருளடக்கம்
நூலாசிரியர் அறிமுகம்
1. குறியீடு விளக்கம்
2. திருக்குறள் பாடப் பகுதி விளக்கம்
3. இலக்கணம்
4. நூல் மதிப்பீடு
நூலாசிரியர் அறிமுகம்
சீனி.வரதராஜன் மின்னியல் பிரிவில், பொறியியல் இளையர் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு நிலையில் பொறியாளராகப் பணியாற்றி, நிறைவாக மனிதவள மேம்பாடுப் பிரிவில், கூடுதல் தலைமைப் பொறியாளர் என்ற நிலையில் பிப்ரவரி 2008இல் பணி நிறைவு அடைந்தவர்.
தம் பணிக்காலத்தில் அதிமின்அழுத்தத் துணைமின் நிலையங்களை நிறுவதிலும், மின்வாரியப் பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் துறையிலும் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.
1993ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பயிற்சி பெற இந்திய அரசால் இவர் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள மின்தொடர் அமைப்பு நிறுவனத்தில் சுமார் 2 மாத காலம் சிறப்புப் பயிற்சி பெற்றவர்.
இந்திய அளவில் முதன்முதலில் 2002ஆம் ஆண்டு அனைத்து மின்அழுத்தத் துணைமின் நிலையங்களுக்கும் தரப்படுத்திய வரைபடம் தயாரித்துத் தொகுப்பு ஏடு வெளியிடவும், தமிழ்நாடு மின்சார வாரியப் பொறியாளர் கழகம் வெளியிட்ட மின்பொறியாளர் கையேட்டிற்கு துணைமின் நிலைய அமைப்பு பற்றிய தரவுகள் வழங்கியும் பங்களிப்பு செய்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சீரிய முறையில் பணியாற்றியதற்காக வாரியத் தலைவரிடமிருந்து, சிறந்த பொறிஞர் சான்றிதழும், வெள்ளிப் பதக்கமும் பெற்றுப் பாராட்டு பெற்றவர்.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில், ‘ஓமன் மின் தொடரமைப்புக் குழுமம்’ என்ற அரசு நிறுவனத்திற்கு அதிமின் அழுத்த தொடரமைப்பு மற்றும் துணைமின் நிலைய ஆலோசகராக 2008 முதல் 2012 வரை 4 ஆண்டு காலம் பணியாற்றியவர்.
திருக்குறளின்பால் மிகுந்த ஈடுபாடு உடையவராதலால், எழுத்துப் பணியை மேற்கொண்டு, ஜூலை 2016இல் குறளை அடிப்படையாகக் கொண்டு பணத்தினைப் பெருக்கு! ஏன்? எப்படி? எதற்கு?
என்ற நூலை எழுதி, வெளியிட்டார். ஏப்ரல் 10, 2019இல் உறவைக் காக்க உயில்! உயிரைக் காக்க உறுப்பு!
என்ற நூலை எழுதி, சந்தியா பதிப்பகம் மூலம் வெளியிட்டார்.
முதல் நூல் பொருளீட்டும் இளைஞர்களிடத்தும் இரண்டாவது நூல் மூத்த குடிமக்களிடத்தும் பெருத்த வரவேற்பைப் பெற்றன. இப்போது மாணவர்களின் நலனைக் கருதி, இந்நூலை எழுதியுள்ளார். இந்த முயற்சியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெறுவதோடல்லாமல் இளைய தலைமுறையாகிய மாணவர்களுக்கும், அரசுப்பணித் தேர்வு எழுத விரும்பும் இளைஞர்களுக்கும் இந்நூல் பயன்படும் என்பது அவரது நம்பிக்கை.
1. குறியீடு விளக்கம்
மூலம்: ‘மூலம்’ என்பது ஏழு சீர் மூலம்; முதல் அடி நான்கு சீரும், இரண்டாம் அடி மூன்று சீருமாக ஏழு சீர் கொண்டதாக அமையப்பெற்ற குறள் வெண்பா. அதாவது, மூல நூலில் உள்ளபடி.
எடுத்துக்காட்டு:
கற்க கசடறக் கற்பவை கற்றபி
னிற்க வதற்குத் தக - 0391
படிக்க: இது படிக்க; எளிதில் படிக்கவும் மனப்பாடம் செய்யவும் ஏற்ற வகையில் சீர் பிரித்து அமையப்பெற்ற குறள் வெண்பா.
எடுத்துக்காட்டு:
கற்க கசடுஅறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
மாணவ மணிகளே!
வள்ளுவர் புணர்ச்சி விதிகளைக் கையாண்டு எழுதப்பட்ட குறட்பாவை பிரித்து எழுதுவது முறையன்று. ஆகவே மூலத்தில் உள்ளபடியே குறட்பாக்கள் எழுதப்பட்டுள்ளன. அதே சமயத்தில்