Vidiyatha Iravondru Vendum
By Rajesh Kumar
()
About this ebook
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Read more from Rajesh Kumar
Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Good Night Krotham! Rating: 5 out of 5 stars5/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Pirivathillai Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5
Related to Vidiyatha Iravondru Vendum
Related ebooks
Agmark Drogam Rating: 4 out of 5 stars4/5Aakasa Veedugal Rating: 0 out of 5 stars0 ratingsUraintha Ragasiyam... Rating: 4 out of 5 stars4/5Athikalai Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsMattroru Naal Rating: 4 out of 5 stars4/5Aagaya Kottai Rating: 5 out of 5 stars5/5Oru Athikaalai Kolai Rating: 0 out of 5 stars0 ratingsSodukkinal Sorgam Rating: 5 out of 5 stars5/5Kanniley Neer Yetharku Rating: 0 out of 5 stars0 ratingsVanakkathukkuriya Kutram Rating: 5 out of 5 stars5/5Court Kalaigirathu Rating: 5 out of 5 stars5/5Mortuary House Full Rating: 0 out of 5 stars0 ratingsBrindha Private Limited Rating: 5 out of 5 stars5/5Nilavum Varum Unnodu Rating: 0 out of 5 stars0 ratingsNenjinile Oonjalaai Rating: 5 out of 5 stars5/5Naan Kolluvathellaam Penmai Rating: 5 out of 5 stars5/5Red Signal Rating: 5 out of 5 stars5/5Avan Aval Theevu Rating: 5 out of 5 stars5/5Irakka Piranthaval Sindhu Rating: 4 out of 5 stars4/5Abaya Noyali Rating: 3 out of 5 stars3/5Ennai Naan Santhithen Rating: 0 out of 5 stars0 ratingsNovember Rathirigal Rating: 5 out of 5 stars5/5Appuram... Anitha...? Rating: 5 out of 5 stars5/5Kaiyil Oru Minnal Rating: 0 out of 5 stars0 ratingsMuyandral Madivai! Rating: 3 out of 5 stars3/5Miss. Preethi, 545, Beach Road, Mumbai Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi kattalai Rating: 0 out of 5 stars0 ratingsMaandavan Kattalai Rating: 3 out of 5 stars3/5Manmathan Vanthaanadi Rating: 5 out of 5 stars5/5Kanneer Michamillai Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Vidiyatha Iravondru Vendum
0 ratings0 reviews
Book preview
Vidiyatha Iravondru Vendum - Rajesh Kumar
http://www.pustaka.co.in
விடியாத இரவொன்று வேண்டும்
Vidiyatha Iravondru Vendum
Author:
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
1
முதலிரவு அறை பூக்களின் வாசத்தில் நிரம்பியிருக்க சம்யுக்தா வல்லப் மார்பில் சாய்ந்திருந்தாள். காலையில் கட்டிய புதுத்தாலி அக்மார்க் முத்திரையோடு அவள் கழுத்தில் இடம்பிடித்து இருந்தது. வலது கையின் ஆட்காட்டி விரலால் வல்லபின், சர்ட் பட்டனை நிரடிக் கொண்டிருக்க, சம்யுக்தா கொஞ்சலாய் கூப்பிட்டாள்.
என்னங்க!
ம்...
உங்களுக்கு 'வல்லப்'னு பேர் வைக்க ஏதாவது காரணம் இருக்க...?
காரணம் இருக்கு...
என்ன...?
என்னோட தாத்தா ஒரு சுதந்திர போராட்ட தியாகி. அவருக்கு பிடிச்ச தலைவர் வல்லபாய் பட்டேல். அவர் பிறந்த தேதியில் நானும் பிறந்ததாலே எனக்கு வல்லப்னு பேர் வைச்சுட்டாங்க... ஏன் உனக்கு அந்த பேர் பிடிக்கலையா...?
சேச்சே! ரொம்பவே பிடிக்குது. உங்க பேரை யார் சொல்லிக் கூப்பிட்டாலும் உடனே 'சல்யூட்' வைக்கத் தோணுது. இப்படித்தான் ஒவ்வொருத்தரும் பேர் வைக்கணும். இல்லேன்னா சுதந்திரத்துக்காக போராடின தியாகிகளை நாம் மறந்துடுவோம்...
வல்லப், சம்யுக்தாவின் அவரைத் தோல் போன்ற அழகான காது மடலின் நுனியை தன் முன்பற்களால் கடித்தபடி சொன்னான்.
சம்யுக்தா! இன்னிக்கு உனக்கும் எனக்கும் பர்ஸ்ட் நைட். சுதந்திர போராட்ட காலத்தைப் பற்றி க்ளாஸ் எடுத்துடாதே...
சம்யுக்தா சிரிக்க சிரிக்கவே அவளுடைய உதட்டில் முத்தமிட முனைய அவள் எழுந்துகொண்டாள்.
மொதல்ல பால்... அதுக்கப்புறம்தான் எல்லாமே.
சரி... குடு...
சம்யுக்தா பால் சொம்பை எடுத்து ஒரு பெரிய வெள்ளி டம்ளர் நிறைய ஊற்றி வல்லபிடம் நீட்டினாள்.
மொதல்ல நீ சாப்பிடு.
நோ... நோ... அக்கார்டிங் டூ, தமிழ் பண்பாட்டுப் படி மொதல்ல நீங்கதான் சாப்பிடணும். அதுல இருக்கிற ஒரு 'சப்லா’ படி டம்ளர்ல பாதிப் பாலை மிச்சம் வெக்கணும். அதை நான் குடிக்கணும்.
ஓ...! ஒரு டம்ளர் பாலுக்கே இவ்வளவு... இவ்வளவு ஃபார்மாலிடீஸ் இருக்கா...?
சொல்லிச் சிரித்த வல்லப் பால் டம்ளரை உதட்டுக்குக் கொடுத்தான். பாதிப்பாலை வயிற்றுக்கு வார்த்துக்கொண்டு மீதியை சம்யுக்தாவிடம் கொடுக்க அவள் வாங்கிக் கொண்டாள்.
ம்... குடி.
குடிக்காமல் - அவள், டம்ளரில் இருந்த பாலையே பார்த்துக் கொண்டிருக்க வல்லப், அவள் தோளைத் தட்டினான்.
என்ன எச்சில் பாலுன்னு பார்க்கறியா?
"அது இல்லீங்க.
பின்னே...?
எனக்கு வெறும் பால் பிடிக்காது. பால்ல எதையாவது சேர்த்துக்கணும்.
இங்கே சேர்த்துக்க என்ன இருக்கு...
வல்லப் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சம்யுக்தா தன் கழுத்து செயினில் கோர்த்திருந்த ஸேஃப்ட்டி பின்னை எடுத்து இடது கையின் ஆட்காட்டி விரலைக் குத்திக் கொள்ள ரத்தம் பவள மணியாய் திரண்டு நின்றது. விரல் நுனியில் தத்தளித்தது.
வல்லப், பதட்டப்பட்டான்.
சம்யுக்தா! இது என்ன பைத்தியக்காரத்தனம்?
அவள், அவன் பதட்டத்தைப் பொருட்படுத்தாமல் ரத்தம் திரண்டிருந்த ஆட்காட்டி விரலை பால் டம்ளர்க்கு மேல் உயர்த்திப் பிடித்தாள். கட்டை விரலால் அழுத்தினாள்.
இரண்டு சொட்டு ரத்தம் பாலில் விழுந்து பரவ, சம்யுக்தா டம்ளரை வாய்க்கு கொண்டு போனாள்.
வல்லபின் விழிகள் அதிர்ச்சிக்குட்பட்டு விரிய...
அலாரம் டைம்பீஸ் விர்ரென்று வீறிட்டது.
வல்லப் திடுக்கிட்டு கண் விழித்து போர்வையை உதறிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். கண்ட கனவு மூளையில் உறைந்து போய் தண்டுவடத்தை பனிக்கட்டியாய் மாற்றியிருந்தது.
'என்ன பயங்கரமான கனவு?'
இப்படி விபரீதமாய் கனவு வருவது இது இரண்டாவது தடவை. போன வாரத்தில் ஒரு தடவை இதே மாதிரி கனவு வந்தது. பாலில் ரத்தத்தைக் கலந்து குடிக்கும் சம்யுக்தா.
இன்னும் பதினைந்து நாளில் சம்யுக்தாவுக்கும் அவனுக்கும் ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில் திருமணம். ஆபீஸுக்கு லீவு போட்டுவிட்டு இரண்டு நாட்களாய் அழைப்பிதழ் விநியோகம் நடந்து கொண்டிருக்கிறது.
'இந்த நேரத்தில் எதற்காக இப்படிப்பட்ட கனவு, இந்த கனவுக்கு ஏதாவது அர்த்தம் உண்டா?'
டொக்... டொக்...
அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்து போய் திறந்தான்.
வெளியே அவனுடைய அக்கா திலகம், இடுப்பில் கிரேடு இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு, நின்றிருந்தாள். கண்களில் கோபம்.
அலாரம் அடிச்சு பத்து நிமிஷமாச்சு. கல்யாண மாப்பிள்ளைக்கு எந்திரிக்க மனசு வரலை போலிருக்கு...
கோபமாய் பேசிக் கொண்டே போனவள் வல்லபின் முகத்தைப் பார்த்துவிட்டு தன் முகம் மாறினாள்.
வல்லப் என்னடா மூஞ்சி இப்படி வேர்த்து கிடக்கு... உடம்புக்கு ஏதும் முடியலையா...?
அதெல்லாம் ஒண்ணுமில்லேக்கா. கொஞ்சம், எக்சர்ஸைஸ் பண்ணினேன்.
திலகம் அவனை நம்பாத பார்வை பார்த்தாள். நிஜமாவா?
இதுல பொய் சொல்ல என்ன இருக்கு?
வல்லப் அவளிடமிருந்து விலகி குளியலறையை நோக்கிப் போனான்.
அந்த அதிகாலை ஐந்தரை மணி வேளையில் வீடே விழித்துக் கிடந்தது. எல்லாம் கல்யாணத்துக்காக வந்திருக்கும் மிக நெருங்கிய உறவுக்கூட்டம். அம்மா சமையலறையில் வேலைக்காரியோடு சத்தம் போட்டுக் கொண்டிருக்க, இரண்டு குளியலறைகளும் ஹவுஸ்ஃபுல். அப்பா திருஞானம், பூஜையறையிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டே அம்மாவுக்கு விண்ணப்பம் அனுப்பினார்.
சாரதா... ஒரு வாய் காப்பி குடேன்...
பதிலுக்கு அம்மா சீறினாள். எத்தனை தடவை காபி சாப்பிடுவீங்க... அஞ்சு மணிக்கு எந்திரிச்சீங்க. இப்போ மணி ஆறு. இந்த ஒரு மணி நேரத்துக்குள்ளே நாலு தடவை சாப்பிட்டாச்சு... இனி காபி கிடையாது. டிபன் சாப்பிட்ட பிறகுதான்...
இவ மட்டும் அஞ்சு தடவை சாப்பிடுவா...
திருஞானம் முனகிக் கொண்டே வாசலுக்குப் போனார்.
வீட்டில் இருந்த உற்சாகம் வல்லபின் மனசோடு ஒட்டவில்லை. அந்தக் கனவே மூளைப் பிரதேசம் பூராவும் வியாபித்துக் கிடந்தது.
ஸேஃப்டி பின்னால் விரலைக் குத்திக் கொண்டு பாலில் இரண்டு சொட்டு ரத்தத்தைக் கலந்து சம்யுக்தா குடிக்கும் அந்த காட்சியே திரும்பத் திரும்ப மனத்திரையில் ஓடியது.
திலகம் குரல் கொடுத்தாள். அம்மா! வல்லப் எந்திரிச்சுட்டான். காப்பி குடு...
நீயே கலந்து குடேன்... நான் உப்புமா கிளறிட்டிருக்கேன்...
வல்லப், சோபாவுக்கு போய்ச் சாய்ந்தான். பேப்பர் படித்துக் கொண்டிருந்த அக்காவின் கணவர் கோதண்டம், மெல்ல அவனைப் பார்த்து புன்னகைத்தார்.
என்ன... ராத்திரி சரியா தூங்கலையா? கண்ணெல்லாம் செர்ரி பழமாட்டம் இருக்கு.
அவஸ்தையாய் சிரித்து வைத்தான். கோதண்டம் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே கேட்டார்.
என்ன... சம்யுக்தா, ராத்திரி கனவுல வந்து ரொம்பவும் தொந்தரவு தர்றாளா...
தான் சொன்னது ஜோக் என்று நினைத்து அவரே சிரித்துக் கொண்ட விநாடி - டீபாய் மேல் இருந்த டெலிபோன் தொண்டையைத் திறந்தது.
கோதண்டம் ரிஸீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தார். மறுமுனைப் பேச்சை செவிமடுத்துவிட்டு வல்லபிடம் ரிஸீவரை நீட்டினார்.
போன் உனக்குத்தான்... யாரோ ராமுவாம்.
ராமுவா?
உன் ஃப்ரெண்ட்டாம்...
வல்லப் யோசித்தான். அப்படி யாரும் கிடையாதே...
ரிஸீவரை வாங்கி காதுக்குக் கொடுத்தான்.
ஹலோ...
மிஸ்டர் வல்லப்!
ஒரு பெண்குரல் கேட்டது.
எஸ்... ஹோல்டிங்...
வெரி குட்மார்னிங்.
நீங்க?
மரியாதை வேண்டாம்... நான் சம்யுக்தா.
வல்லபுக்கு நெற்றி வியர்த்தது. மறுமுனையில் சம்யுக்தா சிரிப்போடு தொடர்ந்தாள்.
உங்க அக்கா கணவரை - ஆண்குரல்ல பேசி ஏமாத்திட்டேன். ஸாரி...
கோதண்டம், பேப்பரை மடித்து வைத்துவிட்டு குளிக்க கிளம்பிக் கொண்டிருக்க வல்லப், குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டான்.
என்ன விஷயம்?
பாராளுமன்றத்தில் வரலாறு காணாத அமளி. பிஜி தீவில் இந்திய வம்சாவழியினர் போராட்டம். 'பாகிஸ்தான் வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும்' பிரதமர் எச்சரிக்கை. ஊட்டியில் பச்சைத் தேயிலை விலை உயர்வு. 'ஒரு டன் கரும்புக்கு ஆயிரம் ரூபாய்,' முதலமைச்சர் அறிவிப்பு. இந்திய கிரிக்கெட் வீரர்களின் வீட்டில் வருமானவரி அதிகாரிகள் திடீர் சோதனை. விஷயம் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா...?
வல்லப் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பேசினான். இவ்வளவு காலையில் எதுக்காக போன்...? அதைத் தெரிஞ்சுக்கத்தான் என்ன விஷயம்னு கேட்டேன்.
சரி சொல்றேன்... அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி. அந்த கேள்விக்கு நீங்க உண்மையான பதிலைச் சொல்லணும்...
என்ன கேட்கப் போறே...?
ராத்திரி உங்க கனவுல நான் வந்தேனா?
***
2
சம்யுக்தா மறுபடியும் கேட்டாள்.
என்ன ராத்திரி உங்க கனவுல நான் வந்தேனா இல்லையா?
வரலை...
என்றான் வல்லப்.
பொய் சொல்றீங்க... நான் கட்டாயம் வந்திருப்பேன். டூயட்கூட பாடியிருப்பீங்க...
சேச்சே!
என்ன சேச்சே?
எனக்கு கனவு காணற பழக்கமெல்லாம் கிடையாது. படுத்தா சவுண்ட் ஸ்லீப்தான். கனவுல ஒரு காக்கா, குருவிகூட பறக்காது.
இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ள உங்களுக்கும் எனக்கும் கல்யாணம். படுத்தா எப்படி சவுண்ட் ஸ்லீப் வரும்?
சரி... உனக்கு கனவு வந்ததா?
வந்ததே?
என்ன கனவு?
இப்போதைக்கு அது சொல்ல முடியாத கனவு. ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு அதைப்பத்தி பேசுவோம்.