Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sella Kiliye Mella Pesu
Sella Kiliye Mella Pesu
Sella Kiliye Mella Pesu
Ebook198 pages1 hour

Sella Kiliye Mella Pesu

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465643
Sella Kiliye Mella Pesu

Read more from R.Geetharani

Related authors

Related to Sella Kiliye Mella Pesu

Related ebooks

Reviews for Sella Kiliye Mella Pesu

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sella Kiliye Mella Pesu - R.Geetharani

    18

    1

    மளிகைக் கடையில் இருந்து மதியம்போல டேவிட் சாப்பாட்டிற்காக வந்திருந்தார். வறுத்த மீனும் அவித்த முட்டையும் மிளகு சீரக ரசமும் வீட்டை முற்றிலுமாக சுற்றி மணம் வீசிக் கொண்டிருந்தது. மோட்டார் சைக்கிளை மரக்கிளைகளின் நிழல்பதிவில் நிறுத்தி விட்டு படியேறினார்.

    தெரசா .... செருப்பை ரேழியில் விட்டவாறே மனைவியை அழைத்தவராய் வீட்டிற்குள் நுழைந்தார்.

    வந்துட்டீங்களா... இப்போத்தான் நினைச்சேன் என்ன இன்னும் காணோமேன்னு ...

    ஈரக்கையினை டவலால் துடைத்து சமையலறை கம்பி மீது உலர வைத்து விட்டு தெரசா வெளிப்பட்டாள்.

    டைனிங் டேபிளில் இலை போட்டு பரிமாறினாள். சீரகச்சம்பா அரிசி சோற்றின் மணமும், மீன் குழம்பும், வறுவலும் கூட ஒரு பிடியை சேர்த்து சாப்பிட வைத்தது.

    இன்னைக்கு சாப்பாடு ரொம்ப பிரமாதம் தெரசா... என்றவராய் இன்னும் கொஞ்சம் கேட்டு வாங்கி சாப்பிட்டார்.

    தெரசா விசயத்தை இப்போது ஆரம்பிக்கலாமா இல்லை எப்பொழுது ஆரம்பிக்கலாம் என்ற யோசனையில் இருந்தாள்.

    என்ன யோசனை எல்லாம் பலமா இருக்காப்ல தெரியுது... என்று மனைவியின் முகத்தைப் பார்த்தே படித்து விட்டவராய் மெல்லிய புன்னகை சிந்தினார்.

    எவர்சில்வர் வெற்றிலை செல்லப்பெட்டியைக் கொண்டு வந்து கணவர் முன் வைத்து விட்டு பேச்சைத் துவக்கினாள்.

    நம்ம உமையாள் இருக்காளில்லே ...

    ஆமாம் .... அவங்களுக்கு என்ன இப்போ....?

    ஒண்ணுமில்லே ... உமையாளோட வீட்டுக்காரருக்கு ரைஸ் மில்லுல வேலை போய்டிச்சாம். சம்பளம் வாங்கி மூணு மாசம் போலாகுது. ரொம்ப சிரமப்படறா மூணு பொண்ணுங்களை வெச்சிட்டு. போதாக்குறைக்கு வயித்துல வேற எட்டு மாசம் .

    ம் ... ஹ் இல்லாதபட்ட மக்களுக்குத்தானே கடவுளும் குழந்தைகளை அள்ளிக்கொடுத்து சோதிக்கறான். நம்ம வீட்டுல தான் நீயும் நானுமே பத்து வருசமா குழந்தைகளா குடித்தனம் நடத்திட்டு இருக்கோம்.....

    உங்க மனசை கஷ்டப்படுத்திட்டேனா நான் ...?

    எனக்கா மனக்கஷ்டம் தெரசா? நானோ வெளியே நாலு இடம் போறவன் வர்றவன். பலவித சிந்தனைகள்ல பொழுது ஓடிடும். உனக்கு என்ன அப்படியா ... பொழுதுக்கும் வீடு, எப்பவாவது மார்க்கெட், வாரம் ஒருக்கா சர்ச்ன்னு.. என்னை விட உனக்கு தான் உள் குமைச்சலா இருக்கும். சரி... சரி... சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லு. அரிசி மண்டியில இன்னைக்கு வேலை கொஞ்சம் அதிகப்படியா இருக்கு. ஆந்திரா, கர்நாடகா ரகம் எல்லாம் வந்து இறங்கி இருக்கு. தரம் வாரியா பிரிச்சு நம்ம பசங்களை விட்டு அடுக்க சொல்லணும்... காதை ஜான்சன் பட்டினால் குடைந்தவாறே பேசினார்.

    எனக்காக நீங்க இதை மறுக்காமல் செய்யணும். மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க....

    விசயம் இன்னதுன்னு சொன்னாதானே புரியும்....

    வந்து.. உமையாளால இங்கே வீட்டு வாடகை கொடுத்து குழந்தைகளை நண்டும் சிண்டுமா வெச்சிட்டு புருஷனுக்கு வேலையும் இல்லாமல் தடுமாற்றமா இருக்காம். கையில் இருக்கிற அஞ்சு சவரன் செயினை வித்து வீட்டுக்காரரை பஹ்ரைனுக்கு அனுப்பி வெச்சுட்டு ஊர்ல கிராமத்து வீட்டுக்கு போய் இருக்கறதா முடிவு எடுத்து இருக்காங்களாம்...

    சரி... அதுக்கு நாம என்ன உதவி செய்யணும் இப்போ....?

    ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து உதவச்சொல்லி கேட்கறா உமையாள்.

    ........

    அதுக்கு கைமாறா வயித்துல இருக்கிற குழந்தையை பிறந்ததுமே - நமக்கு கொடுத்துட்டு போயிடறதா சொல்றா...

    யா.... ஜீஸஸ்! பெத்த பிள்ளையை விக்கறாளாமா? இதுக்கு நீயும் சரின்னு ஒத்து ஊதினியா? ஏதோ இல்லாத அன்ன தரித்திரம் ஆளை ஆட்டிப்படைச்சதுன்னா பெத்த குழந்தையை போய்... என்னதான் குழந்தை ஆசை உனக்கு அதிகம்ன்னாலும் பெத்த தாய்கிட்டேயிருந்து பறிச்சுக்கிறது மகாபாவம். அதுக்கு ஈடா எத்தனை பணம் கொடுத்தாலும் தகுமா..?

    தெரசாவின் கண்களில் துளிர்த்த கண்ணீர் டேவிட்டின் மனசை வாட்டிற்று. மனைவியின் தோளை ஆதுரமாய்த்தொட்டு அணைத்து முகவாயை நிமிர்த்தி விழிநீரைத் துடைத்து விட்டார்.

    ம்... உன் கண்ணுல கண்ணீரையே பார்க்கக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான். என் முன்னே போய் தெரசா நீ அழலாமா...? உமையாள் குடும்பத்துக்கு பண உதவி பண்ணணும்! அவ்வளவு தானே. இருக்கப்பட்டவங்கன்னு நினைச்சுதானே கேட்டிருக்காங்க. கொடுப்பாங்களா இல்லையான்னு கர்த்தர் நம்மை சோதிக்கிறார்ன்னே நினைக்கிறேன். வட்டியும் வேணாம், அசலும் வேணாம். உன் சகோதரி ஒருத்தியோட குடும்பத்துக்கு உதவி செய்ததா இருக்கட்டும். அப்புறம் குழந்தை சமாச்சாரம் எல்லாம் அவங்களோட விருப்பம். இதுல நான் தலையிட விரும்பலை. இப்போதைய இல்லாத சூழ்நிலைக்கு நாம அதை எடுத்து வளர்த்தாலும் நாளை பின்னே தன் தாய் தகப்பன் இவங்க இல்லைன்னு தெரிய வர்றப்போ பிரியறதுன்றது நமக்கும் வேதனையான விசயம். அந்தக் குழந்தைக்கும் வலி...

    அதெல்லாம் யோசிச்சுத்தான் பிறந்த சிசுவை உடனே கொடுத்துடறேன்னு உமையாள் சொல்லியிருக்காள். நாம என்ன இல்லாதபட்ட குடும்பமா? குழந்தையை ராஜா மாதிரி வளர்த்துடுவோமில்லே. சொல்லப்போனா உமையாளோட குடும்பத்தின் சுமையை நாம குறைக்கிற மாதிரிதானுங்க. பணத்துக்கான கைமாறுன்னு நினைக்காமல் அந்நியோன்யமான ஒரு நட்பா கருதலாம் இல்லையா...?

    ம்... எல்லாவிதத்திலயும் யோசிச்சுட்டுத்தான் கடைசியா என்கிட்டே தீர்மான அரங்கேற்றத்துக்கான ஒப்புதலா...? டேவிட் மென்மையாய் புன்னகைத்தார்.

    சரின்னு சொல்லுங்க...! என்றவளாய் தெரசா தனது கணவரின் கையைப் பற்றினாள்.

    ம்... சரி... சரி. விருப்பம் போல குழந்தையை எடுத்து வளர்ப்போம். பணத்தை சேகரை நாளைக்கு காலையில வந்து வாங்கிக்கச் சொல்லு தெரசா...!

    ரொம்ப சந்தோஷம்ங்க. உமையாள் உண்மையாகவே ரொம்ப சந்தோஷப்படுவா...! என நெகிழ்ச்சியை தெரிவித்தாள்.

    சரி... சரி... கடைக்கு நேரமாகுது. கிளம்பட்டுமா...? டேவிட் விடைபெற்று மோட்டார் சைக்கிளைக் கிளப்பிக் கொண்டு விரைந்தார்.

    அவரை வழியனுப்பி விட்டு தெரசா கதவை லேசாய் ஒருக்களித்தாற் போல் சாத்தி விட்டு விரைந்தாள் உமையாளின் வீட்டிற்கு.

    உமையாள் முறத்தில் அரிசி புடைத்துக் கொண்டு இருந்தாள். இரண்டரை வயது சர்மிளா எதற்காகவோ அழுது கொண்டிருந்தாள்.

    சித்ரா... குழந்தை அழுறா இல்லே. கொஞ்ச நேரம்போல விளையாட்டு காட்டி வெச்சிருக்க மாட்டியா...? மகளை ஏசிக் கொண்டிருக்கும் போதே... உமையாள்... என்று மென்மையாய் அழைத்தவாறே உள்ளே பிரவேசித்தாள் தெரசா.

    கணவருக்கும், தனக்குமான சம்பாஷணைகளை ஒன்று விடாது ஒப்பித்தாள்.

    நிஜமாவாக்கா சொல்றே... என்று முறத்தை கீழே வைத்து விட்டு ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.

    ம்... பார்த்து... மெதுவா உமையா... என் புள்ளையை நீ எனக்கு நல்லபடியா பெத்து தர வேணாமா...? என்று சிரித்தாள் தெரசா.

    புள்ளைன்னு நீங்களே முடிவு பண்ணின மாதிரி வந்து பொறந்தாலும் சொன்ன சொல் மாறாது தெரசாக்கா. இன்னும் எண்ணி அறுபதே நாள்ல என் தெரசாக்கா அம்மா ஆகப் போறீங்க... என நெற்றியில் முட்டி சிரித்தாள் உமையாள். ஆனால்...,

    2

    அத்திப்பூக் குளத்தில் குறிஞ்சிப்பூ பூத்தாற்போன்று உமையாள் அழகான ஆண் மகவை ஈன்றெடுத்தாள். சேகர் ரொம்பவுமே பூரித்துப் போனான். நம்ம மகன் பிறந்த நேரம்தான்போல உமையா எனக்கு வெளிநாடு போக உடனே பாஸ்போர்ட் விசா எல்லாம் கிடைச்சிட்டது. எங்கே குழந்தை பிறப்பைக் கண்ணுலயே பார்க்காமல் போய்டுவேனோன்னு இருந்தேன். கடவுள் அந்த மனக்கவலையைக் கொடுக்கலை... மிகுந்த சந்தோஷத்துடன் ஆர்ப்பரித்தான்.

    மெத்துமெத்தென்று ரோஜாப்பூ வர்ண நிறத்தில் இருந்த அதன் பாதங்களை முகத்தில் வைத்து மகிழ்ந்தான்.

    பையன் பிறந்த நேரமில்லைங்க. எல்லாம் டேவிட் அண்ணாவோட ஏற்பாட்டால தான் இத்தனை சீக்கிரம் கிடைச்சதே....

    சரி... அப்படித்தான் இருக்கட்டும். நாளை மறுநாளே ஊருக்குக் கிளம்பறதை நினைச்சாத்தான் கஷ்டமாயிருக்கு...

    ஏன்... என்ன கஷ்டம்ன்றேன்...?

    "உன்னையும், இந்தக் குட்டிப்பையனையும் விட்டுப் போக மனசே

    Enjoying the preview?
    Page 1 of 1