Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Then Sindhum Neram
Then Sindhum Neram
Then Sindhum Neram
Ebook112 pages1 hour

Then Sindhum Neram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

GA Prabha is a prolific writer of Tamil, and has written about 100 novels, 120+ short stories, 5 novelettes covering in family and romance category. Her works are published in various magazines. She has also won many prizes conducted by various magazines like Kalki and Anandha Vikatan.


Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386351524
Then Sindhum Neram

Read more from Ga Prabha

Related to Then Sindhum Neram

Related ebooks

Reviews for Then Sindhum Neram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Then Sindhum Neram - GA Prabha

    http://www.pustaka.co.in

    தேன் சிந்தும் நேரம்

    Then Sindhum Neram

    Author:

    ஜி.ஏ.பிரபா

    G.A.Prabha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ga-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    நம்பிக்கை, பொறுமை, அன்பு, கருணை

    இவையே வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது.

    காடு குளிர்ச்சியுடன் அடர்ந்திருந்தது.

    தண் என்று ஒரு குளுமை. கதகதப்பு. அடர்ந்த காட்டுக்குள் சூரியன் தன் தங்கரேகைகளை அவ்வப்போது வீசியது.

    பாதை நீண்டு கிடந்தது.

    உதிர்ந்த சருகுகள் பாதை எங்கும் பரவியிருந்தது. மெத்து மெத்தென்று கால் புதைய அழுத்தி எழும் கதகதப்பை உணர்ந்து மனம்.

    ‘அடர்ந்து இருள் படர்ந்து

    அழகாய் இருக்குது காடு.

    நான் கொடுத்த வாக்குகள்

    உண்டு காப்பதற்குநடந்து

    போக வேண்டும்இன்னும்

    பல காலம் கடந்து போக வேண்டும்.’

    ராபர்ட் ப்ராஸ்டின் கவிதை வரிகள் மனதில் ஓடும் போதே விழிப்பு வந்தது. விழித்த பிறகும் காட்டிலிருந்து வெளியில் வர முடியவில்லை. என்ன வாக்குகள்? கேள்வி துரத்தியது.

    மஞ்சரி அப்படியே படுத்திருந்தாள்.

    யாருக்கும் கெடுதல் நினைக்காமல் இருந்தால் போதும். ஒவ்வொரு நிமிஷத்தையும் சுவாரஸ்யம் குறையாமல் வாழு. காட்டில் நடப்பது கடினம்தான். ஆனால் ஒளி தெரிகிறது. எழு, உற்சாகத்துடன் எழு.

    மஞ்சரி உற்சாகத்துடன் எழுந்தாள். பல் தேய்த்து, முகம் கழுவி வெளியில் வந்தபோது பானு தியானத்தில் இருந்தாள். தன்னைச் சுற்றி உள்ள நல்ல அதிர்வலைகள் மூலம் தன் உணர்வுகளைப் பரப்புகிறாள்.

    அம்மாவைப் பார்த்தபடி நின்றாள்.

    யாருக்கு அனுப்புகிறாள் என்று தெரியும்.

    அப்பா என்ற முகம் அறியாதவனுக்கு.

    அம்மாவை தொந்தரவு செய்யாமல் வாசல் கதவைத் திறந்து வைத்தாள். காபி கலந்து பானு அருகில் வைத்து விட்டு, தனக்கும் எடுத்துக் கொண்டு வந்து வெளித் திண்ணையில் அமர்ந்தாள். தெரு விழிக்க ஆரம்பித்திருந்தது.

    ஹாய் சைக்கிளில் போன ஒருவன் கை ஆட்டிவிட்டுப் போனான். ஹாய் பதிலுக்கு கை ஆட்டினாள் மஞ்சரி.

    யார் அது?மாடிப்படியில் இறங்கியபடி ஹரி கேட்டான்.

    அவனும், அவன் சித்தப்பாவும் மாடியில் இருக்கிறார்கள். சித்தப்பா பரந்தாமன்தான் மஞ்சரிபானு குடும்பத்தின் ஆதரவு. பானு சம்பத் காதலுக்கு துணை நின்றவர். அதே சம்பத் ஒதுக்கி விட, நான் இருக்கேன் என்று ஆதரவு தந்தவர். ஹரி அவரின் அண்ணன் பையன். ஒரு விபத்தில் அண்ணா, அண்ணி இறந்துவிட, பரந்தாமன்தான் எடுத்து வளர்த்தார். ஒரு அரசு கலைக் கல்லூரியில் கணிதப் பேராசிரியர்.

    யார் அது? மீண்டும் கேட்டான் ஹரி.

    யாருக்குத் தெரியும்? கை ஆட்டினான் ரெஸ்பான்ஸ்

    நல்ல ரெஸ்பான்ஸ் கடுப்பு தெரிந்தது அவனிடம்.

    அறிவு இருக்கா? சீறினான்.

    ஏன் உனக்கு வேணுமா?

    உன் அறிவு எனக்கு வேண்டாம்.

    கூல் பாய் கூல். காபி குடிக்கிறியா?

    காபி, டீ ரெண்டுமே குடிக்கிறதில்லை.

    வொய் திஸ் கொலை வெறி.

    காபியில ரெண்டு ஈ, டீல ஒரு ஈ இருக்கு.

    கடவுளே அலுப்போடு கூவினாள் மஞ்சரி. கடிக்காதே.

    இப்படி திண்ணைல உட்கார்றதுக்கு பதிலா வாக்கிங் போலாம்ல. உடம்புக்கு நல்லது.

    ஸேப்டி இல்லை.

    யாரு... உனக்கு? ரோட்ல போறவனுக்குத்தான் இல்லை.

    காலங்காத்தால என்கிட்ட எதுக்கு வாக்குவாதம்?

    சரி, மார்க்கெட் போறேன். ஏதானும் வேணுமா?

    ஒரு ரெண்டு லட்சரூபா பணம் வேணும்.

    போதுமா?

    இப்போதைக்கு போதும்.

    நாளைக்குத் தரேன்.

    ஏன்? இன்னைக்கு என்ன முகூர்த்தம்?

    இன்னைக்கு நைட்தான் பேங்க்கை கொள்ளையடிக்கப் போறேன்.

    நானும் வரேன்டா பரந்தாமன் குரல் கேட்டது.

    அவர் குரலைக் கேட்கும்போதேல்லாம் மனசு குளிரும். பானுவுடன் ஒன்றாகப் படித்தவர். நண்பர்கள் என்று சொல்வதை விட நடமாடும் தெய்வம்.

    நான் இருக்கிறேன் என்று கை நீட்டியவர். இன்று வரை அது தாழவில்லை.

    ‘வாழ்க்கைல உங்கம்மா பட்ட அடிகள் அதிகம் மஞ்சரி. அவ மனசை புரிஞ்சு நடந்துக்கோ’ என்பார் அடிக்கடி.

    அப்படித்தான் நடக்கிறாள் மஞ்சரி. ஆனாலும், மூடி மூடி ஒதுங்கிப் போகும் பானுவைப் பார்க்கையில் ஒரு சீற்றம் பிறந்தது. அம்மாவிடம் கூட நெருங்க முடியாமல் எதற்கு இந்த விலகல், பதுங்கல்.

    புள்ளும் சிலம்பின காண்’னு சொல்லுது திருப்பாவை. இங்க புள்ளும் இல்லை புல்லும் இல்லை பரந்தாமன் புலம்பினார்.

    கான்கிரீட் நரகங்கள் ஆயிருச்சுமஞ்சரி.

    கீசுகீசென ஆனைச்சாத்தான் பேசும் அரவம் கேட்டிலையோ பெண்ணே’ன்னு ஆண்டாள் கேக்கறா? இங்க சிட்டுக்குருவி இனமே அழிஞ்சுகிட்டு வருது.

    திடீர்னு ஏன் சித்தப்பா இந்தக் கவலை ஹரி.

    கவலையா இருக்குடா. நம்ம எதிர்கால சந்ததிகள் பறவை இனத்தையே பார்க்கமாட்டாங்களோன்னு இருக்கு. சாயங்காலம் வானத்தை அண்ணாந்து பார்த்தா கூடு திரும்பற பறவைகளைப் பார்க்கலாம். இப்போ பறவைகளுக்கு கூடுகளே இல்லை. மரங்களை எல்லாம் வெட்டியாச்சு. நிமிர்ந்து பார்த்தா ஆகாயமா தெரியுது? குச்சி, குச்சியா கட்டிடங்கள். மணி ஏழுதான் ஆகுது. பாரு வெயில் கொளுத்துது.

    மாசி பொறந்துருச்சி அங்கிள்மஞ்சரி.

    சிவராத்திரி வந்தாத்தான் சிவ, சிவான்னு குளிர் போகுமாம்

    விடுங்க அங்கிள். காலைல என்ன டிபன்?

    Enjoying the preview?
    Page 1 of 1