லேவியராகமத்தைக் குறித்த பிரசங்கங்கள்: கர்த்தர் உங்கள் எல்லா மீறுதல்களையும் தீர்த்து விட்டார்
By Paul C. Jong
()
About this ebook
இஸ்ரவேல் மக்கள் கர்த்தருக்கு எதிராகவோ அல்லது மனிதர்களுக்கு எதிராகவோ பாவம் செய்த போது இஸ்ரவேல் மக்கள் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள பயன்படுத்திய பலிகாணிக்கை முறையினைக் குறித்து லேவியராகமம் புத்தகம் விளக்குகிறது. எல்லா மனிதர்களுக்குமான பாவ பிரச்சனையைக் குறித்து பேசுகிற கர்த்தர், அவரால் நிறுவப்பட்ட பலி காணிக்கை முறையின் விதிமுறைகளின் படியாக ஒரு குறிப்பிட்ட பலி காணிக்கையைக் கொடுத்து ஒருவனால் எப்படி தன் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியும் என்று சுட்டிக் காட்டுகிறார். பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் இருந்து, உங்கள் பாவப் பிரச்சனையை தீர்த்து விட்ட சத்தியத்தை இப்போது கண்டு கொள்ள முடியும். ஆகவே இப்போது நீங்கள் செய்வதற்கு ஒரே ஒரு காரியம் மட்டுமே இருக்கிறது, நீங்கள் இப்போது கர்த்தருடைய கிருபையையும் நீதியின் அன்பையும் அவர் உங்களுக்காக நிறைவேற்றிய கர்த்தருடைய நீதியையும் விசுவாசித்து உங்களுடைய பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.
Related to லேவியராகமத்தைக் குறித்த பிரசங்கங்கள்
Related ebooks
மத்தேயு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (I) - ஒரு கிறிஸ்தவனால் எப்படி தேவனுடனே கூட நெருக்கமாக உரையாட முடியும்? Rating: 0 out of 5 stars0 ratingsதேவபக்தியும் அவபக்தியும்!: தேவபக்தியை அடையக்கூடிய வழிமுறைகளை விளக்கும் ஒரு புத்தகம்! Rating: 0 out of 5 stars0 ratingsகலாத்தியரைக் குறித்த பிரசங்கங்கள் - சரீர விருத்தசேதனத்திலிருந்து மனந்திரும்பும் கொள்கை வரை (I) Rating: 0 out of 5 stars0 ratingsOnly God Works: (Tamil) Investing Now What Matters Then Rating: 0 out of 5 stars0 ratingsஆசரிப்புக் கூடாரம்: இயேசுகிறிஸ்துவைக் குறித்த ஒரு விளக்கமான ஓவியம் (II) Rating: 0 out of 5 stars0 ratingsAanma Vazhikatti Punitha Thanthai Pio Rating: 0 out of 5 stars0 ratingsஆசரிப்புக் கூடாரம்: இயேசுகிறிஸ்துவைக் குறித்த ஒரு விளக்கமான ஓவியம் (I) Rating: 0 out of 5 stars0 ratingsமத்தேயு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (V) - நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் இவ்வாறு கூறினர் Rating: 0 out of 5 stars0 ratingsஉங்களுடைய இருதயத்தில் குழப்பமும் வெறுமையும் இருந்தால், சத்தியத்தின் ஒளியைத் தேடுங்கள் (I) (Tamil67) Rating: 0 out of 5 stars0 ratingsVivekanandarin Aalumai Sinthanaigal Rating: 0 out of 5 stars0 ratingsInna Narpathu Rating: 0 out of 5 stars0 ratingsமாற்கு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (III) - விசுவாசத்தின் ஆசீர்வாதம் இருதயத்தினால் பெற்றுக் கொள்ளப் படுகிறது Rating: 0 out of 5 stars0 ratingsAnugraham Rating: 0 out of 5 stars0 ratingsIthu Engal Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsAanandha Sai Rating: 0 out of 5 stars0 ratingsஉங்களுடைய இருதயத்தில் குழப்பமும் வெறுமையும் இருந்தால், சத்தியத்தின் ஒளியைத் தேடுங்கள் (II) Rating: 0 out of 5 stars0 ratingsSilapathigarathil Ara Kotpaadu Rating: 0 out of 5 stars0 ratingsValmiki Mudhal Valluvar Varai! Rating: 0 out of 5 stars0 ratingsடிடகே: The Didache in Tamil Rating: 0 out of 5 stars0 ratingsArulneri Muzhakkam Rating: 0 out of 5 stars0 ratingsThelivu Peru Om Rating: 0 out of 5 stars0 ratingsKadavulai Kanda Mahangalin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsManithathai Nokki Oru Payanam! Rating: 0 out of 5 stars0 ratingsSikkal Singaravelava Jeevanai Sivanakkiduvai Rating: 0 out of 5 stars0 ratingsBuddharin Bothanaigalum Zen Kutty Kathaigalum Rating: 0 out of 5 stars0 ratingsVaa Sayee!! Rating: 0 out of 5 stars0 ratingsகொரோனா வைரஸ் காலத்தில் நமக்கான கர்த்தருடைய நிரூபங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsInnilai Rating: 5 out of 5 stars5/5Arockiya Vazhvirku Pranayamam Rating: 0 out of 5 stars0 ratingsChanakya Neeti In Tamil Rating: 3 out of 5 stars3/5
Reviews for லேவியராகமத்தைக் குறித்த பிரசங்கங்கள்
0 ratings0 reviews
Book preview
லேவியராகமத்தைக் குறித்த பிரசங்கங்கள் - Paul C. Jong
லேவியராகமத்தைக் குறித்த பிரசங்கங்கள்
கர்த்தர் உங்கள் எல்லா மீறுதல்களையும் தீர்த்து விட்டார்
Smashwords Edition
Copyright 2023 Hephzibah Publishing House
எல்லா உரிமையும் பதிப்பாளருக்கே. இப்புத்தகத்தின் எப்பகுதியையும் பிரதியெடுக்கவோ, மறுபடியும் நூலாக்கும் வகையில் பதிவு செய்தலோ, மின்னனுவியல், இயந்திரவியல், ஒளிப்பிரதியெடுத்தல், பதிவு செய்தல், மேலும் எவ்வகையிலோ தகவல் பரிமாற்றம் செய்யலாகாது. அப்படிச் செய்வதானால் பதிப்பாளர் அல்லது பதிப்புரிமை உடையவர்களிடமிருந்து எழுத்து மூலமான அனுமதி பெறப்படவேண்டும்.
வேதவசனங்கள் தமிழ் வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
ISBN 978-89-282-2334-3
பொருளடக்கம்
முன்னுரை
1. உண்மையான நற்செய்தி எது? (லேவியராகமம் 1:1-9)
2. கர்த்தருடனே உங்கள் இருதயத்தை ஐக்கியப் படுத்தி வாழுங்கள் (லேவியாரகமம் 1:1-9)
3. கர்த்தருக்கு எப்போதும் போஜன பலி காணிக்கையை செலுத்துவீர்களாக (லேவியராகமம் 2:1-16)
4. நீதிமான்கள் தம்முடைய எல்லா ஆசாரிய கடமைகளையும் செய்ய வேண்டும் (லேவியராகமம் 3:1-17)
5. கர்த்தருடனான நம் உறவை உயிர்ப்பித்தல் (லேவியராகமம் 4:1-12)
6. இயேசுவானவர் சிலுவையிலே அடைந்த மரணம் (லேவியராகமம் 4:13-21)
7. நித்தியமான பாவமன்னிப்பு (லேவியராகமம் 4:27-31)
8. தேவன் நமக்காக நிறைவேற்றிய பாவங்களுக்கான மன்னிப்பு இதுவேயாகும் (லேவியராகமம் 4:27-35)
9. குற்றநிவாரனபலியைக் குறித்த பிரசங்கம் (லேவியராகமம் 5:14-19)
10. நம்முடைய வாழ்விலே கர்த்தருடைய வார்த்தையை தியானிப்பது எப்படி (லேவியராகமம் 11:1-12)
11. மனிதர்கள் அடிப்படையில் பாவ வித்தாக இருக்கிறார்கள் (லேவியராகமம் 13:1-15)
12. நம் உண்மையான தியாணம் எவ்வாறு? (லேவியராகமம் 13:1-23)
13. குறைபாடு உடையவர்களை கர்த்தர் இரட்சித்தார் (லேவியராகமம் 13:18-28)
14. பழைய ஏற்பாட்டின் பாவநிவாரண நாளின் பலிகாணிக்கை (லேவியராகமம் 16:6-22)
15. ஆத்துமாக்களை இரட்சிக்க உங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்யுங்கள் (லேவியராகமம் 17:10-16)
16. என்னுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடவுங்கள் (லேவியராகமம் 20:8)
முன்னுரை
தம்முடைய பலவீணங்களினால் செய்கின்ற அக்கிரமங்களை முன்னிட்டு முன்பு எப்போதையும் விட இன்றைய மக்கள் மிக அதிக பாடுகளுக்கு உள்ளாகின்றனர்.
தம்முடைய பலவீணங்களினால் செய்யும் பாவங்களின் பொருட்டு அநேக போதகர்கள் தம்முடைய ஊழியங்களை அழித்துக் கொண்டிருப்பதை காணுவது மிகவும் சாதாரணமாக இருக்கிறது. அவர் மனம் வருந்தி பாவ மன்னிப்பிற்காக ஜெபித்தாலும் கூட, அவர்கள் அடிக்கடி ஒரேவிதமான பாவத்திற்குள் விழுந்து கொண்டேயிருக்கிறார்கள். இத்தகைய பிரச்சனையானது சபைத் தலைவர்களுக்கு மட்டுமான ஒரு அதிசயம் அல்ல. இது சபையின் உறுப்பினர்கள் உட்பட சபையார் முழுவதும் சந்திக்கிற பிரச்சனையாகவ்ம் இருக்கிறது. இதன் விளைவாக, கிறிஸ்தவ விசுவாசம் என்பது உலகத்திலே கேலிக்குரியதாகவும் புறந்தள்ளவுமான ஒரு காரியமாகி விட்டது. இன்று உலகம் முழுவதும் இருக்கிற எல்லா சபையின் உறுப்பினர்களையும் இத்தகைய ஒரு போங்கு தாக்கி வருகிறது. அவர்கள் தொடக்கத்தில் இருந்தே தீமை செய்கிறவர்களின் வித்தாக பிறந்திருப்பதினால், அவர்கள் இயல்பாகவே பாவம் நிறைந்த செயல்களைச் செய்து இதன் விளைவாக கர்த்தருடைய பார்வையிலே ஆவிக்குரிய படியான பாடுகளை அனுபவிக்கிறார்கள்.
இன்றைய பாலியல் கலாச்சாரமானது முழு உலகத்தையும் பெரும் துயரத்திற்குள்ளும் குழப்பத்திற்குள்ளும் வீசி எறிகிறது. இத்தகைய மோசமான பாலியல் கலாச்சாரத்தினால் கிறிஸ்தவ குடும்பங்கள் மிகப் பெரும் பிரச்சனையை சந்தித்து வருகின்றன, உலகம் முழுவதும் இருக்கும் மதத் தொடர்பான மக்கள் தம்மை சரியான பாதையில் நடத்துவதற்காக சரியான ஆவிக்குரிய படியான தலைவர் வேண்டு என்று அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க நாடுகளிலே, சிறுமிகள் தம்முடைய 16 ஆம் வயதிலோ அல்லது அதற்கும் குறைந்த வயதிலே பாலியல் அனுபவத்தைப் பெறுகிறார்கள் என்றும் சிறுவர்கள் தம்முடைய 15 ஆம் வயதிலே பாலியல் அனுபவத்தைப் பெறுகிறார்கள் என்றும் கணக்கிடப் பட்டுள்ளது, ஒரின பாலியல் வளர்ந்து வருவதைக் குறித்து கூறவே வேன்டாம். இத்தகைய மோசமான போங்கு அமெரிக்க நாடுகளில் மட்டும் அல்லா, கொரியா உட்பட, உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. கொரிய சிறுவர்கள் தம் டீன் வயதை அடையும் போது, தம்மை பாலிய ரீதியாக கவர்ச்சியானவர்களாக மற்ற மிகப் பெரும் முயற்சிகளை அவர்கள் செய்கிறார்கள். ஆனாலும், பெற்றோர்களுக்கு தம் குழந்தைகளின் பாலியல் காரியங்களை எப்படி சமாளிப்பது என்று அறியாதவர்களாக இருக்கிறார்கள், கவலைத் தரும் விதமாக டீன் வயதினரால் செய்யப் படும் பாலியல் குற்றங்கள் பெருகி வருவதைக் குறித்து ஒன்றும் கூறுவதற்கில்லை.
கர்த்தருடைய பிரமாணத்தைக் குறித்து அநேக கிறிஸ்தவ பெற்றோர்கள் தம்முடைய பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க இப்போது முயன்றாலும் கூட, அவற்றினால் எந்த பலனும் இல்லை. இது வளர்ந்த, பக்குவமான கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தி வருகிறது. இந்நாட்களிலே, வளர்ந்த கிறிஸ்தவர்களும் கூட தம்முடைய உள்ளிருக்கும் பாவம் நிறைந்த விருப்பங்களைக் கட்டுப் படுத்த இயலாதவர்களாக இருக்கின்றனர், இதன் விளைவாக அவர்கள் தொடர்ந்தும் பாவம் செய்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக, கிறிஸ்தவர்களும் கூட தம் பாவங்களினால் பெரும்துயரம் அடைந்து அவற்றைக் குறித்து தொடர்ந்தும் புலம்பி வருகிறார்கள். ஆயினும், இந்த காலத்தின் கிறிஸ்தவ தலைவர்களினால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலாமாக பாவப் பிரச்சனைகளையும் அக்கிரமங்களையும் குறித்து திருப்தி அளிக்கும் வகையிலே பதில் அளிக்க திறனில்லாதவர்களாக இருக்கின்றனர்.
அப்படி இருந்தாலும் கூட, நம்மை பெருந்துயரத்திற்குள் ஆளாக்கியிருக்கும் பாவப் பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடிய உயிரோடிருக்கும் தேவன் நம்மிடம் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுவது நமக்கு முக்கியமாகும். மனிதர்கள் கர்த்தருக்கு எதிராகவும் மனிதருக்கு எதிராகவும் பாவம் செய்யக் கூடியவர்கள் என்பதை அறிந்து, இந்தப் பிரச்சனையை முழுமையாக தீர்க்கும் படியாக கர்த்தர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை ஆயத்தம் செய்தார். பாவங்களின் எல்லாப் பிரச்சனைகளையும் சரி செய்து தன்னுடைய பரிசுத்தமான சந்நிதிக்கு எல்லோரும் வருவதை கர்த்தர் சாத்தியமுள்ளதாக்கினார். குறிப்பாக கூறினால், பழைய ஏற்பாட்டில் இருக்கும் லேவியராகமம் புத்தகமானது, கர்த்தரால் ஏற்படுத்தப் பட்ட பலிகாணிக்கை முறையினைக் குறித்து விவரிக்கிறது, மனிதர்கள் பாவம் செய்யும் போது அவர்களால் எப்படி அதனை சமாளிக்க முடியும் என்று விளக்குவதுடனே எல்லா மனிதர்களுக்குமான பாவங்களுக்கான மன்னிப்பைக் குறித்தும் அது சுட்டிக் காட்டுகிறது. உண்மையிலே, நாம் நம்முடைய கிருபை நிறைந்த கர்த்தருக்கு நன்றி கூறுவதை நம்மால் தவிர்க்க முடியாது.
இஸ்ரவேல் மக்கள் கர்த்தருக்கு எதிராகவோ அல்லது மனிதர்களுக்கு எதிராகவோ பாவம் செய்த போது இஸ்ரவேல் மக்கள் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள பயன்படுத்திய பலிகாணிக்கை முறையினைக் குறித்து லேவியராகமம் புத்தகம் விளக்குகிறது. எல்லா மனிதர்களுக்குமான பாவ பிரச்சனையைக் குறித்து பேசுகிற கர்த்தர், அவரால் நிறுவப்பட்ட பலி காணிக்கை முறையின் விதிமுறைகளின் படியாக ஒரு குறிப்பிட்ட பலி காணிக்கையைக் கொடுத்து ஒருவனால் எப்படி தன் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியும் என்று சுட்டிக் காட்டுகிறார். பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் இருந்து, உங்கள் பாவப் பிரச்சனையை தீர்த்து விட்ட சத்தியத்தை இப்போது கண்டு கொள்ள முடியும். ஆகவே இப்போது நீங்கள் செய்வதற்கு ஒரே ஒரு காரியம் மட்டுமே இருக்கிறது, நீங்கள் இப்போது கர்த்தருடைய கிருபையையும் நீதியின் அன்பையும் அவர் உங்களுக்காக நிறைவேற்றிய கர்த்தருடைய நீதியையும் விசுவாசித்து உங்களுடைய பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆயர் பால் சி. ஜோங்
Sermon01.gif01.jpgஉண்மையான நற்செய்தி எது?
< லேவியராகமம் 1:1-9 >
கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக்கூப்பிட்டு, அவனை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது, ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும். அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்கதகன பலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் கொண்டுவந்து, அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். பின்பு அவன் அந்தச் சர்வாங்கத் தகனபலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்துதாகத் துண்டிக்கக்கடவன். அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப்போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி, அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள். அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக் கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
இந்த சாயங்காலத்திலே, கீழ்வரும் கேள்வியைக் கேட்க நான் விரும்புகிறேன், நற்செய்தி என்பது என்ன?
நான் சியோலுக்கு வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன, இன்று நான் பொருட்களை வாங்க சிறிது நேரத்தை செலவிட்டேன். அந்தப் பொருட்களைப் பார்த்ததாலே என்னுடைய கண்கள் மங்கலாகிவிட்டன.
நான் ஒரு சிறுவனாக இருந்த போது, சியோலின் உயரமான கட்டிடங்களைக் காண கட்டனம் செலுத்த வேண்டும் எனக் கேள்விப்பட்டிருந்ததினால், உயரமான கட்டிடங்களுக்கு முன் நிற்பதில்லை. உண்மையிலே, யாரோ என்னைக் கேலி செய்திருக்கிறார்கள், ஆனால் நான் சிறுவனாக இருந்ததினால் அதனை உண்மை என்று நம்பி விட்டேன். ஆகவே எந்த உயரமான கட்டிடங்களையும் நான் பார்த்ததில்லை. நான் அப்படிச் செய்தால் யாராவது வந்து, எவ்வளவு உயரம் வரை பார்த்தாய்? ஒரு மாடியைப் பார்க்க வேண்டுமானால் எத்தனை பணம் செலவு செய்ய வேண்டும் எனத் தெரியுமா?
எனக் கூறி பணம் கேட்பார்களோ என்று பயந்தேன். சீக்கிரமாகவே, உயரமான கட்டிடங்களைக் காண பணம் செலவு செய்ய வேண்டியதில்லை எனக் கண்டு கொண்டேன். ஆகவே சியோலின் உயரமான கட்டிடத்தை நான் பார்த்தேன், அக்காலத்திலே அந்தக் கட்டிடத்திற்கு அதிலிருக்கும் மாடிகளை வைத்து கட்டிடம் 63 என அழைத்தார்கள், அதன் உச்சி வரையிலே உள்ள ஒவ்வொரு மாடியையும் நான் பார்த்தேன். எல்லா மாடிகளையும் எண்ணி முடிக்கையில் தலை சுற்றி விட்டது. அப்படி இருந்தாலும், என் இருதயத்திலே, என் எல்லாப் பாவங்களையும் தேவன் துடைத்து விட்டார் என்று தெளிவாக இருந்தேன். இந்த சாயங்காலத்திலே கர்த்தருக்கு நம் மணங்களையும் இருதயங்களையும் அர்ப்பணம் செய்து, உண்மையான நற்செய்தி என்னவென்று காண விரும்புகிறேன்.
இந்த கடைசி காலங்களிலே இயேசுவானவரைத் தம் இரட்சகராக விசுவாசிக்கும் அநேக மக்களைக் காணுகிறோம். அவர்களில் அநேகர் இரட்சிப்பிற்காக இயேசுவானவரின் சிலுவையை மட்டுமே பிரசங்கம் செய்கிறார்கள். இதன் விளைவாக, இந்த விசுவாசத்தின் மூலமாக தாம் பாவமற்றவர்களாக மாறி விட்டதாக எண்ணிலடங்காத மக்கள் கூறுகிறார்கள். ஆயினும், இங்குள்ள பிரச்சனை என்னவென்றால், இயேசுவானவரை அவர்கள் தம் இரட்சகராக விசுவாசித்தாலும் அவர்களுடைய இருதயங்களில் இன்னமும் பாவங்கள் அப்படியே இருக்கின்றன. இயேசுவானவரைத் தம் இரட்சகராக ஏற்றுக் கொண்டதினால் தம்முடைய மூலப் பாவம் அவர் மீது சுமத்தப் பட்டு விட்டாலும், தம்முடைய இருதயங்களிலே இன்னமும் சொந்தப் பாவங்கள் இருக்கின்றன என அநேக கிறிஸ்தவர்கள் விசுவாசிக்கின்றனர். இன்றைய கிறிஸ்தவர்கள் இயேசுவானவரை விசுவாசித்தாலும் கூட அவர்களுடைய இருதயங்களில் இன்னமும் பாவங்கள் நிறைந்திருப்பதே, அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனையாகும். ஆகவே கிறிஸ்தவர்கள் இயேசுவானவரை விசுவாசித்த போதிலும் அவர்களுடைய இருதயங்கள் பாவம் நிறைந்ததாக இருக்கலாமா?
என்பது கேள்வியாகும். இல்லை, அப்படி இருக்க முடியாது. இயேசுவானவரை விசுவாசித்த போதிலும் அவர்களுடைய இருதயங்களில் இன்னமும் பாவங்கள் இருந்தால், இயேசுவானவர் மீது இந்த நபர் வைத்துள்ள விசுவாசம் தவறானது என்றே இதற்கு பொருள் படும். வேதாகமத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இந்த மோசமான சூழ்நிலையைக் குறித்து என்னால் சாட்சி கூற முடியும். இந்த மணி நேரத்திலே, மக்கள் ஏன் இயேசுவானவரைத் தவறாக விசுவாசிக்கிறார்கள் என்று பேச விரும்புகிறேன். ஆகவே, இதற்காக, உண்மையான நற்செய்தி என்ன என்று நான் விவரிக்கிறேன்.
நற்செய்தியைப் போலவே, மற்ற அருமையான சொற்றொடர்களை கிறிஸ்தவர்கள் பயன் படுத்துவதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். நற்செய்தி, என்ற வார்த்தையின் பொருள் தெரியாதவர்கள் யாரும் உங்களுக்கு நடுவிலே இருக்க முடியாது. அப்படியானால், நற்செய்தி என்பது என்ன? இந்த உலகத்திலே இருக்கும் அநேக சபையினரும் போதகர்களும் எழுப்புதல் கூட்டங்களை கூட்டி விளம்பரம் செய்து வருகிறார்கள். உலகத்தின் எல்லா இடங்களிலும் நற்செய்தியைப் பரப்பும் படி தேவன் கட்டளை இட்டார். ஆகவே, தம்முடைய நகரங்களை பரிசுத்தமாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கிறிஸ்தவ தலைவர்கள் எழுப்புதல் கூட்டங்களை நடத்துகின்றனர்.
தம்முடைய நகரத்தை பரிசுத்தமாக்கும் படியாக, அதன் மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் படி கூறுகிறார்கள். கீழ்வருமாறு கூறுகின்ற அத்தகையை எழுப்புதல் கூட்டம் ஒன்றைக் குறித்த விளம்பரத்தைப் பார்த்தேன், இந்த நகரத்திலே கிறிஸ்தவும் காலத்தை நாம் தொடங்குவோம்!
கிறிஸ்துவின் நற்செய்தியை பிரசங்கிக்கும் படியும், உலகத்தின் எல்லா இடங்களுக்கும் கிறிஸ்துவின் ராஜ்யத்தை விரிவு படுத்தவும், கிறிஸ்துவின் காலத்தை தொடங்கும் படியாகவும், எல்லாக் கிறிஸ்தவ தலைவர்களும் இந்நாட்களிலே தம்மைப் பின்பற்றுகிறவர்களிடம் கூறி, அவிசுவாசிகளை விசுவாசிகளாக மாற்றுகிறார்கள். ஆயினும், இங்கே பெரும் கேள்வி எழுகிறது, கர்த்தருடைய ஊழியர்கள் முன்னதாக பிரசங்கம் செய்ததைப் போல ‘நற்செய்தியை’ பிரசங்கிக்க என்ன செய்ய வேண்டும் என அவர்களுக்குத் தெரியுமா என்பது கேள்விக் குறியே ஆகும். துரதிருஷ்ட வசமாக, வெகு சில மக்கள் மட்டுமே உண்மையான புரிந்து கொள்ளுதலுடனே நற்செய்தியை பிரசங்கம் செய்து வருகிறார்கள். இக்காலத்திலே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அவர்களில் சிலருக்கு மட்டுமே ‘நற்செய்தி’ என்பதின் பொருள் தெரியும்.
நாம் மத்தேயு 7:21 ஐ பார்க்கும் போது, இயேசுவானவர் இவ்வாறு கூறுகிறார், பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
இங்கே பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே
என்று இயேசுவானவர் கூறுவதின் பொருள் என்ன. பிதாவாகிய கர்த்தர் தன் குமாரரை இந்த பூமிக்கு அனுப்பி ஒரு காரியத்தைச் செய்தார், இதுவே ‘நற்செய்தி’ என்று அழைக்கப் படுகிறது. மனிதகுலத்தை தம் பாவங்களில் இருந்து இரட்சிக்க தேவன் செய்த செயலே - நற்செய்தி, ஆனால் சில மக்கள் மட்டுமே இந்த செயலை அறிந்து விசுவாசிக்கின்றனர். அப்படியானால், யார், பிதாவாகிய கர்த்தரின் சித்தத்தின் படி செய்கிறவன் யார்? இந்த உலகத்தில் இருக்கும் எல்லோருடைய பாவங்களையும் துடைப்பதற்காக பிதாவாகிய கர்த்தர் தன் குமாரரை அனுப்பினார் என்று தம்முடைய இருதயங்களிலே விசுவாசிக்கும் அவர்கள், அதன் படியாக, இந்த நற்செய்தியை பிரசங்கம் செய்கிறார்கள். தன்னுடைய சித்தத்தை திட்டமிட்ட பிதாவாகிய கர்த்தர், பரிசுத்த ஆவியானவருடனே கூட தன் குமாரரை அனுப்பி மனித குலத்தை இரட்சித்தார். இதன் மூலமாக நம் இரட்சிப்பைக் குறித்த உறுதியை அவர் நம் இருதயங்களுக்குத் தந்தார். இந்த ‘இரட்சிப்பை’ விசுவாசித்து அதனை அறிவிப்பவன் மட்டுமே பிதாவாகிய கர்த்தருடைய சித்தத்தை செய்கிறான். பிதாவானவருடைய மனிதர்களுக்கான சித்தமானது அவர்கள் இயேசுவானவரைத் தம் இரட்சகராக விசுவாசித்து - தம் இருதயங்களில் பாவமில்லாதவர்களாக மாற வேண்டும் என்பதாகும். துரதிருஷ்ட வசமாக, அநேக மக்களுக்கு இந்த உண்மைத் தெரியவில்லை. ஆகவே உண்மையான நற்செய்தியின் மூலத்தைப் புரிந்து கொள்ளுவது நமக்கு மிகவும் முக்கியமாகும்.
நற்செய்தி
என்ற சொல்லானது கிரேக்கத்தில் யூன்செலியன்
ஆகும்
இந்த சொல்லின் பொருள் நல்ல செய்தி.
இந்த சொல் டுனாமிஸ்
என்ற சொல்லுடன் தொடர்புடையது, இதன் பொருள் டைனமைட் ஆகும். நாம் பழைய ஏற்பாட்டைப் பார்க்கும் போது, இஸ்ரவேல் மக்கள் பல போர்களில் ஈடுபட்டிருப்பதைக் கண்டோம். இஸ்ரவேல் நாடு அருகில் உள்ள நாடுகளால் பலமுறை தாக்கப்பட்டது. அத்தகைய ஒரு காலகட்டத்தில், சமாரியா நாட்டை சிரியா தன் பெரிய படையுடனே தாக்கி அந்நகரத்தை முற்றுகை இட்டது. படையெடுத்து வந்த சிரிய படை வல்லமை உடையதாக இருந்ததினால், அவர்களை சமவெளிகளில் சந்திக்க பயந்து இஸ்ரவேலர் தம் நகரத்தின் வாசலைத் திறக்கவும் அஞ்சினர். அதற்கு பதிலாக, அவர்கள் நகரத்தில் சிக்கிக் கொண்டனர், பயந்து நடுங்கியவாறு உணவிற்கு அலைந்து திரிந்தனர். நகரத்தின் உள்ளே சூழ்நிலை மிகவும் மோசமாகியது, இதன் விளைவாக பெரும் பஞ்சமும் ஏற்பட்டது. அவர்களை முற்றுகையிட்ட சிரிய படையினர், எல்லா தொடர்புகளையும் துண்டித்து விட்டனர், இந்த படையினர் அகன்று செல்லாவிட்டால், இந்நகரத்து மக்களுக்குத் தேவையான பொருட்கள் எதுவும் கிடைக்காது.
பழைய ஏற்பாட்டின் புத்தகங்களான 2 ராஜாக்கள் 6:24-33 மற்றும் 7:1-20 இற்கு நாம் திரும்பினால், அங்கே சமாரியாவின் கோட்டை வாசலில் உட்கார்ந்திருந்த நான்கு குஷ்டரோகிகளைக் குறித்து வாசிக்கிறோம். அவர்களுடைய நாட்டிலே போர் மூண்டிருந்தாலும் கூட, இந்த குஷ்டரோகிகளால் பாதுகாப்பு கேட்டு தம் நாட்டிற்குள் பிரவேசிக்க முடியவில்லை. அவர்கள் பிச்சைக்காரர்கள், அவர்கள் நகரத்தை விட்டு விரட்டப் பட்டு வீசப்படும் பொருட்களை உண்டு வாழ்ந்தனர்.
இந்த நான்கு குஷ்டரோகிகளும் தம் நாட்டவரிடம் இருந்து பிரிக்கப் பட்டு, இந்த போரின் காலத்திலே, இந்த கொடிய பஞ்சத்தினால் தாக்கப் பட்டார்கள். உணவு பொருட்கள் எதுவும் இல்லாது போன நிலையில், தாம் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருப்பதினால் எந்த பயனும் இல்லை என்று எண்ணினார்கள், எப்படியாயினும் பட்டினியினால் அவர்கள் இறக்க வேண்டியிருந்தது. ஆகவே, தாம் பசியால் சாகப்போகிறோம் அல்லது சிரியர்களின் கைகளினால் சாகப் போகிறோம் என்று எண்ணியவர்களாக, சிரியர்களின் இராணுவத்தினரிடம் சரணடைந்து பார்க்கலாம் என்று எண்ணினார்கள். அவர்கள் தாம் கொல்லப் பட மாட்டோம் என்றும் தாம் புசிக்க ஏதாவது கிடைக்கும் என்று எண்ணி தம் வாழ்வைக் குறித்து ஆசுவாசமடைந்தனர். ஆயினும், அவர்கள் எதிரிகளின் பாசறைக்கு முன்னதாக வந்த போது, சிரியர்கள் எல்லாம் அங்கிருந்து ஓடிப் போயிருப்பதையும், பாசறையில் யாரும் இல்லாததையும் கண்டார்கள். ஆகவே முதலாவதாக தம்முடைய பசியுடனிருக்கும் வயிற்றை நிரப்பும் படியாக அவர்கள் பாசறைக்குள் சென்றனர், அதன் பிறகு அவர்கள் தாம் சமாரியாவிற்கு சென்று இந்த அதிசயமான செய்தியை அறிவிக்கவில்லை என்றால் தாம் தண்டிக்கப் படுவோம் என்று உணர்ந்தார்கள். ஆகவெ அவர்கள் சமாரியாவிற்கு நல்ல செய்தியுடனே திரும்பிச் சென்றார்கள்.
எதிரிகளினால் சூழப்பட்டு பசியால் வாடி நடு நடுங்கியாவாரு தாம் எப்போது மரிக்கப் போகிறோம் என்று அறியாத, நகரத்திற்கு உள்ளேயிருந்த மக்கள், இந்த குஷ்டரோகிகள் எடுத்து வந்த நல்ல செய்தியைக் கேட்ட போது மிகவும் மகிழ்ந்தார்கள்; இந்த செய்தியைக் கேட்ட அவர்கள் சிரியர்கள் ஓடிச் சென்ற போது விட்டுச் சென்ற பொருட்களை எல்லாம் அள்ளிச் சென்றனர், பஞ்சம் மறைந்து போயிற்று. இதுவே ‘நற்செய்தி’, வேதாகமம் கூறுகிற நல்ல செய்தியும் வெடியும் இதுவேயாகும்.
இந்த பூமியிலே வாழுகிற அனைத்து மக்களின் இருதயங்களிலும் பாவங்கள் இருக்கின்றன, அவர்கள் தம்முடைய இந்தப் பாவங்களுக்காக மரிக்க வேண்டியிருக்கிறது. ஆயினும், கர்த்தர் தன்னுடைய குமாரரை இந்த பூமிக்கு அனுப்பியதின் மூலமாக, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக உலக மக்களுடைய எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்டார். இந்நிலையில் இது நல்ல செய்தியல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்? இதனால் தான் நற்செய்தியானது நல்ல செய்தி என்று அழைக்கப் படுகிறது. நற்செய்தியின் வல்லமை டைனமைட்டைப் போன்றது. மனிதர்களாக நாம் அனைவரும் கர்த்தருடைய பார்வையிலே பாவம் நிறைந்தவர்களாக இருக்கிறோம், ஆகவே நம்முடைய பாவங்களுக்குத் தண்டனையாக நாம் நரகத்தினுள் வீசப் பட வேண்டியவர்கள்; ஆயினும், பிதாவாகிய கர்த்தர், நம் ஒவ்வொரு மீறுதல்களையும், தம்முடைய குமாரரை இந்த பூமிக்கு அனுப்பியதின் மூலமாக துடைத்து விட்டார். இதனைத் தவிர வேறு எதுவும் ‘நற்செய்தியும்’ இல்லை, நல்ல செய்தியும் இல்லை.
சமாரியாவை மிகபெரும் சிரிய இராணுவம் முற்றுகை இட்ட போது, அந்த நகரத்தில் இருந்த அனைவரும் பட்டினியால் மரித்தனர், ஆனால் கர்த்தர் சிரியர்களுக்கு நடுவிலே மிகப்பெரும் பரலோகத்தின் இராணுவத்தினுடைய இரைச்சலை உருவாக்கினார், இதனைக் கேட்ட அவர்கள், மிகவும் பயந்தவர்களாக, அந்த பயத்திற்கு அடிபணிந்து, ஓடிப்போயினர். இது அனைத்தும் கர்த்தருடைய வார்த்தைகள், ஏனெனில் வேதாகமம் கூறுகிறது, மனிதர்களால் கூடாது, ஆனால் தேவனால் எல்லாம் கூடும்
(மத்தேயு 19:26). கர்த்தர் போர்க்களத்திற்கு நடுவிலே காதை செவிடாக்கும் படியான வானசேனையின் இரைச்சலை எடுத்து வந்தார். இரதங்களும் குதிரைகளும் உள்ளடங்கிய பெரிய இராணுவத்தின் ஒலியினை சிரியர்கள் கேட்கும் படிச் செய்த அவர், அவர்கள் அனைத்தையும் விட்டு ஓடும் படியாக, அவர்களுக்குள் ஒரு பயத்தை உருவாக்கினார். அநேக இரதங்களும் குதிரைகளும் தம்மை நெருங்கி வருவதைப் போல சிரியர்களுக்கு கேட்டதாலும், அது பெரிதாக இருந்ததாலும் அவர்கள் கீழ்வருமாரு தமக்குள் எண்ணினர், நம்மைத் தாக்கும் படியாக இஸ்ரவேல் மக்கள் மற்ற நாட்டினருடன் கூட்டு சேர்ந்திருக்க வேண்டும்!
ஆகவே அவர்கள் தம் வாழ்க்கைக்கு பயந்து ஓடித் திரிந்தனர், தம்முடைய எல்லாப் பொருட்களையும் பாசறையில் விட்டுச் சென்றனர்.
அந்த நேரத்திலே, சிரிய மக்கள் பட்டினியால் நிச்சயமாய் மரித்துப் போகும் நிலையில் இருந்தார்கள், ஆனால் கர்த்தருடைய சிறப்பான செயலின் உதவியினால், அவர்கள் தாம் மீண்டுமாக வாழும் படியாக அவருடைய கிருபையை மீண்டுமாக அணிந்து கொண்டனர். இது எப்படி நடந்தேறியது? இது கர்த்தருடைய ஆச்சரியமான ஒலியினால் உண்டாயிற்று. சிரியர்கள் அந்த ஒலியினைக் கேட்ட உடனேயே பய்ந்து போகும் படி கர்த்தர் செய்தார், இதனால் அவர்கள் முற்றுகையை விட்டு விட்டு தம் நாட்டை நோக்கி ஓடிப் போயினர். கர்த்தருடைய உதவியினால், ஒரு போரிலும் ஈடுபடாமலேயே சமாரிய மக்கள் தம்முடைய போரில் வெற்றி பெற்றனர். இது எல்லாம் கர்த்தருடைய செயலாகும், சமாரியாவில் வாழுகிற மக்களுக்கு இந்த வெற்றியானது ஆசீர்வாதமாக கிட்டியது. அவர்கள் தம்முடைய மிக நிச்சயமான மரணத்திலிருந்தும், பஞ்சத்திலிருந்தும், பாடுகளில் இருந்தும், தம்மை அலைக்கழித்த சாபங்களில் இருந்தும் இரட்சிக்கப் பட்டனர். இதனைத் தவிர வேறு எதுவும் நற்செய்தி அல்ல.
நற்செய்தி என்பது என்ன" அது கிரேக்கத்தில் யூகல்லியோன்
என்று அழைக்கப் படுகிறது, அதன் பொருள் டைனமைட்
என்பதாகும். நற்செய்திக்கு மிகப் பெரும் வல்லமை இருக்கிறது, அது ஒரு கட்டிடத்தை நொருக்கி சுக்கு நூறாக்கும் டைனைமைட்டைப் போன்றது. நற்செய்தியானது இத்தகைய வல்லமை உடையது. உங்களில் சிலர் இவ்வாறு எண்ணக் கூடும்
டைனமைட்டின் பயன் யாருக்குத் தான் தெரியாது? இங்கே புதியதாக என்ன இருக்கிறது? உங்களுக்கு மட்டும் தான் இது தெரியும் என்றில்லை. எனக்கும் கூட இது தெரியும்." ஆனால், டைனமைட்டைக் குறித்த என் உரையாடலுக்கு பின்னால் ஒரு நோக்கம் இருக்கிறது.
என் கூற்று இதுவாகும், இந்த உலகத்திலே வாழும் எண்ணிலடங்காத மக்கள் எண்ணிலடங்காத பாவங்களை செய்தாலும் கூட, இயேசுவானவர் இந்த உலகத்திற்கு வந்த போது, அவர் யோவான் ஸ்னானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதினாலும் சிலுவையிலே தன் இரத்தத்தைச் சிந்தியதினாலும், இந்த உலகத்தின் எல்லாப் பாவங்களையும் நொறுக்கிப் போட்டார். இங்குள்ள பிரச்சனையானது, உண்மை இப்படியிருந்தாலும், அநேக மக்கள் இயேசுவானவரை விசுவாசித்தாலும் கூட அவர்களின் இருதயங்களில் இன்னமும் பாவங்கள் இருக்கின்றன. இந்த பிரச்சனை கூறுவது என்ன? அநேக கிறிஸ்தவர்கள் இயேசுவானவரைத் தம்முடைய இரட்சகராக விசுவாசிப்பதாக அறிவித்தாலும் கூட அவர்களுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வல்லமையைக் குறித்து இன்னமும் தெரியாது என்பதையே இது காட்டுகிறது. இதிலே மிகவும் பரிதாபமான காரியம் என்னவென்றால், இந்த நாட்களிலே நற்செய்தி
என்ற வார்த்தையானது அதிக அளவில் கேட்கப் பட்டாலும் கூட, சில மக்களுக்கு மட்டுமே அதன் பொருள் என்னவென்று தெரியும்.
நற்செய்தியானது என்ன என்பதைக் குறித்த இன்றைய பிரசங்கம் பார்க்கவிருக்கிறது. இயேசுவானவரை நீங்கள் உங்களுடைய இரட்சகராக விசுவாசித்தாலும் கூட உங்கள் இருதயங்களில் பாவங்கள் இருந்தால், நீங்கள் இப்போது விசுவாசிக்கும் நற்செய்தியானது கர்த்தரால் கொடுக்கப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியல்ல என்றே பொருள் படுகிறது. வேதாகமத்திலே புதிய மற்றும் பழைய ஏற்பாடுகள் இருக்கின்றன இவையே இரட்சிப்பைக் குறித்த அளவுகோலாகும். இதுவே நம் பாவ மன்னிப்பிற்கான அடிப்படையாகும். வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தர் நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்க செய்த காரியங்களே நம் இரட்சிப்பிற்கான அடிப்படையாகும். நம்மை நம் பாவங்களில் இருந்து இரட்சிக்க கர்த்தர் செய்த இரட்சிப்பின் செயல்கள் அனைத்தும் அவருடைய வார்த்தையில் எழுதப் பட்டுள்ளன, அதாவது, வேதாகமத்தில் எழுதப் பட்டுள்ளது, ஆகவே வேதாகமத்திற்கு திரும்புவதின் மூலமாக நம் இரட்சிப்பு எப்படி நிறைவேற்றப் பட்டது என்பதை நம்மால் காண முடியும். அப்படியானால் வேதாகமத்தை நாம் ஒவ்வொரு அடியாக கவனமுடன் பார்ப்போமாக.
ஒரு வேடிக்கை கதை ஒன்றை உங்களுக்கு கூற விரும்புகிறேன், ஆகவே, மேலே செல்லுவதற்கு முன்னதாக, அதனைக் குறித்து பேச சில நொடிகளை எனக்கு அனுமதியுங்கள்.
அறிவைக் குறித்த ஒரு உவமை
ஒரு கிராமத்தைச் சேர்ந்த வாலிபன் தன் படிப்பைத் தொடருவதற்கான பெரியதொரு நகரத்திற்குச் சென்றான், அவன் தத்துவத்திலே முனைவர் பட்டம் பெற்ற பிறகு, தன்னுடைய கிராமத்திற்கு வெற்றி வாகை சூடியவனாக திரும்பி வந்தான். அவன் தன் கிராமத்தை விட்டுச் செல்லும் போது வாலிபனாகச் சென்றான், ஆனால் அவன் தன் பட்டப் படிப்பை முடிக்கும் போது, அவன் 30 வயதுகளைக் கடந்தவனாக இருந்தான். அவன் வாலிபனாக இருந்த போதிலிருந்தே அவனைக் குறித்து அறிந்திருந்த அநேகரும் கூட வயதானவர்களாகியிருந்தனர், அவர்களில் சிலருக்கு நரை முடியும் வந்திருந்தது என்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அவன் தன் கிராமத்தை அடைய வேண்டுமானால், ஒரு ஆற்றைக் கடக்கும் படியாக அவன் ஒரு படகை பயன் படுத்த வேண்டியிருந்தது. அந்த படகோட்டி மிகவும் வயதான ஒரு மனிதர் அவரை அவன் இளம் வயதில் இருந்தே அறிந்திருந்தான். ஆகவே அவன் அவருக்கு மரியாதையுடன் வணக்கம் செலுத்தி, தான் படித்து முடித்து தத்துவத்திலே முனைவர் பட்டம் பெற்று விட்டு தன் கிராமத்திற்கு திரும்பி வருவதாக கூறினான். முதியவர் அவனை வாழ்த்தி விட்டு, அவனை தன் படகிலே ஏற்றி அக்கரையில் விடுவதாக கூறினார்.
இந்த இளம் முனைவரும் படகில் ஏறியவுடன், முதியவர் தன் படகை செலுத்தத் தொடங்கினார். அவர் ஓட்டும் போது, அந்த முதியவர் தனக்குத் தானே கூறிக் கொண்டார். நம் கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபன் மிகப் பெரிய நகரத்திற்குச் சென்று முனைவர் பட்டத்துடன் திரும்பி வருவது ஆச்சரியமானது. இதனை நம் கிராமம் முழுவதும் கொண்டாட வேண்டும்.
அப்போது புதிதாக முனைவர் பட்டம் பெற்றவன் அவரிடம் கேட்டான் உங்களுக்கு தத்துவத்தைக் குறித்து தெரியுமா?
இல்லை, எனக்கு தத்துவத்தைக் குறித்து எதுவும் தெரியாது,
இவ்வாறு முதியவர் கூறினார். அப்போது அந்த வாலிப முனைவர் கூறினார், உங்களுக்குத் தத்துவம் தெரியவில்லை என்றால் உங்கள் வாழ்வில் கால் பாகத்தை இழந்து விட்டீர்கள்.
இதனைக் கேட்ட அந்த முதியவர் தாக்கப் பட்டவராக அதிர்ந்து போயினார். ஆகவே அவர் தனக்குத் தானே எண்ணினார், இது என்ன இப்படி இருக்கிறது? இந்த நபர் தத்துவத்திலே முனைவர் பட்டம் வாங்கியிருக்கலாம், ஆனால் அதற்கு பொருள் என்னை இப்படியாக அவமானப் படுத்துவது இல்லை.
ஆயினும், தன்னை இழிவு படுத்தியும் கூட, அந்த முதியவர் தன்னுடைய மகிழ்ச்சியின்மையைக் காட்டாமல் தொடர்ந்து சென்றார்.
சிறிது நேரத்திற்கு பிறகு அந்த இளம் முனைவர் மீண்டும் கேட்டார், இலக்கியத்தைக் குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
அந்த முதியவரோ அந்த படகை செலுத்தியதைத் தவிர வேறு எதனையும் அறியாதவர், ஆகவே அவருக்கு இயற்கையாகவே இலக்கியத்தைக் குறித்து தெரியாது தானே. அதன் பிறகு அந்த இளைஞன் கூறினான், இலக்கியத்தைக் குறித்து எதுவும் தெரியாமலேயே இத்தகைய ஒரு அழகிய இடத்திலே வாழுவது உண்மையாகவே கவலை அளிக்கிறாது. இலக்கியத்தைக் குறித்து எதனையும் அறிந்திராவிட்டால் அது நீங்கள் பாதி மரித்துப் போனதற்கு சமம்.
இதனைக் குறித்து கேட்ட அந்த முடியவர் மனமுடைந்து தனக்குத் தானே கூறிக் கொண்டார், இவன் எத்தகையவன்! நீ சிறியவனாக இருந்து சட்டையிலேயே மலசலம் கழித்ததைப் பார்த்திருக்கிறேன். எனக்கு இலக்கியத்தைக் குறித்து எதுவும் தெரியாது என்று இப்போது நீ என்னிடம் கூறுகிறாயா? இத்தனை மூர்க்கம் நிறைந்த ஒருவன்!
இந்த இளைஞன் முனைவர் பட்டம் வாங்கியிருந்ததினால் அகம்பாவம் நிறைந்தவனாக இருந்தான். ஆனால், அந்த முதியவரோ எல்லா அவமானங்களையும் தாங்கிக் கொண்டார், அவருக்கு அந்த இளைஞன் மீது எத்தனைய நல்லெண்ணமும் இருக்கவில்லை.
தனக்குண்டான அவமானங்களைத் தாங்கியவாறு, அந்த முதியவர் படகைத் தொடர்ந்து செலுத்திக் கொண்டிருந்தார். அதன் பிறகு அந்த இளைஞன் அவரிடம் இன்னொரு கேள்வியையும் கேட்டான், வானியலைக் குறித்து என்ன? உமக்கு வானியலைக் குறித்து ஏதாவது தெரியுமா?
வயதான அந்த மனிதர் கூறினார், இல்லை, எனக்கு வானியலைக் குறித்து எதுவும் தெரியாது. நீ நன்றாக கல்வி கற்றவன் என்பதினால், உன் அறிவைக் குறித்து பெருமை பாராட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் எனக்கோ இலக்கியத்தைக் குறித்தோ, தத்துவத்தைக் குறித்தோ, வானியலைக் குறித்தோ எதுவுமே தெரியாது. எனக்கு எதுவுமே தெரியாது, ஆகவே இந்த கேள்விகளைக் கேட்பதை விட்டுவிடு.
உனக்கு வானியலைக் குறித்து தெரியாது என்பது பரிதாபத்திற்கு உரியது. உன்னுடைய வாழ்வின் நான்கில் மூன்று பகுதியை இழந்து விட்டாய்
என்று இளம் முனைவர் பட்டம் பெற்றவன் கூறினான். இந்த நிலையில் அந்த முதியவர் மிகுந்த மனவருத்தம் அடைந்தார், ஆகவே கோபத்தினால் அவர் படகை தாறுமாறாக செலுத்தத் தொடங்கினார், தனக்குள் எண்ணினார், அவ்வளவு தான்! என்னுடைய துடுப்பினால் அவனை நன்றாக அடிக்க வேண்டும். இதற்கு மேல் என்னாக் தாங்க முடியாது! இந்த வாலிபன் என்னை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறான்.
திடீரென, ஒரு பெரிய சத்தத்துடனே அந்த படகு அப்படியே நின்று போயிற்று. அது கல்லில் மோதி விட்டதினால் உண்டான உடைப்பின் மூலமாக நீர் உள்ளே வரத் தொடங்கியது. அத்தகைய ஒரு நேரத்தில், முதியவர் இளம் பட்டதாரியிடம் கேட்டார், உனக்கு நீந்தத் தெரியுமா?
இல்லை, எனக்கு எப்படி நீந்துவது என்று தெரியாது,
என அவன் பதில் கூறினான். ஓ, நல்லது? அப்படியானால் உன்னுடைய வாழ்க்கை முற்றிலுமாக முடிந்து போய் விட்டது. உனக்கு நீ தான் உதவி செய்ய வேண்டும். நான் இதிலிருந்து சென்று விடுகிறேன்!
இந்த கதையில் ஒரு படிப்பினை இருக்கிறது. நாம் மூழ்கிக் கொண்டிருக்கும் போது, தத்துவம், இலக்கியம், மற்றும் வானியலைக் குறித்து தெரிந்து வைத்திருந்தால் அதனால் உண்டாகும் பலன் என்ன? நாம் மரித்துப் போனால் எல்லாம் முடிவுக்கு வந்து விடும். எப்படி நீந்துவது என்று தெரியாவிட்டால், நீங்கள் ஆற்றில் வீழ்ந்து விட்டால் அதிலே மூழ்கிப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். தத்துவம், இலக்கியம், மற்றும் வானியலைக் குறித்து நீங்கள் எத்தனையாக அறிந்திருந்தாலும் கூட, ஒரு நதியைக் கடந்து செல்லும் போது இந்த காரியங்களினால் ஏதாவது பயன் இருக்கிறதா? ஒரு மோசமான நதியைக் கடக்க வேண்டுமானால் ஒரு படகு வேண்டும், இந்நிலையில் நீங்கள் ஆற்றில் விழுந்து விட்டால், உயிர் பிழைக்க வேண்டுமானால், நீந்த தெரிந்திருக்க வேண்டும்.
அநேக இக்கால கிறிஸ்தவர்கள் இக்கதையில் வருகிற இளம் முனைவரைப் போன்றவர்கள். அவர்களுடைய கல்வியானது அவர்களின் படவாகும், ஆனால் அவர்கள் இறையியல், தத்துவம், அல்லது இலக்கனத்திலே முனைவர் பட்டம் வாங்கியிருந்தாலும் கூட, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அவர்கள் அறிந்திராவிட்டால் அதனால் உண்டான பயன் என்ன? அவர்கள் இயேசுவானவரை விசுவாசித்தாலும் கூட பாவிகளாகவே தொடர்ந்து வாழுவர். அவர்கள் இயேசுவானவரை விசுவாசித்தாலும் கூட் அவர்களால் பாவங்களில் இருந்து தப்ப முடியாது. இதனால் தான் அவர்கள் தம்முடைய சொந்த முயற்சிகளின் மூலமாக தம்முடைய சொந்த பாவங்களைக் கழுவ முயற்சி செய்கிறார்கள், ஆனால் அது வீன்.
இன்றைய கிறிஸ்தவ சமுதாயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் அநேக போதகர்கள் மற்றும் இறையியலாளர்களுக்கு தம்முடைய எல்லாப் பாவங்களையும் தம்மைப் பின்பற்றக் கூடியவர்களின் எல்லாப் பாவங்களையும் கழுவிடக் கூடிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து பிரசங்கம் செய்யத் தெரியாது. கர்த்தருடைய நீதியை உள்ளடக்கி இருக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அவர்களுக்கு ஒன்றும் தெரியாததினால், இந்த நற்செய்தியின் வல்லமையினால் தம்முடைய சபையாரின் பாவப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அவர்களுக்குத் தெரியாது. இந்த போதகர்கள் எத்தகைய கல்வி அறிவு உடைய்வர்களாக இருந்தாலும், அதனால் எந்த பயனும் இல்லை. இறையியல், இலக்கியம், தத்துவம் அல்லது வானியலிலே அவர்கள் முனைவர் பட்டம் வாங்கியிருந்தாலும் கூட, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டு விட்டார் என்று தம் சபையோரிடம் அவர்களால் கூற முடியவில்லை என்றால், அவர்களால் பாவிகளுக்கு எவ்வித பயனும் இல்லை. இத்தகைய மனிதர்களினால் வழிநடத்தப் படும் சபையினர் நரகத்தினை அடைவார்கள், ஏனெனில் அவர்கள் இயேசுவானவரை விசுவாசித்தாலும் கூட இன்னமும் பாவங்கள் அவர்களுடைய இருதயங்களில் இருக்கின்றன. இந்த கிறிஸ்தவர்கள் இயேசுவானவரை விசுவாசித்தாலும் கூட, அவர்களின் விசுவாசம் முற்றிலும் தவறானது. அவர்கள் தம் சபைக்கு உண்மையாகச் சென்று, தன்னார்வத்துடன் ஊழியம் செய்து, தம் போதகர்களை மதித்து, சபைக்கு உதவிகளை அளித்தாலும் கூட, அவை அனைத்தும் பயனற்றவை ஆகும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை தெளிவாக பிரசங்கம் செய்யும் ஒரு சபைக்கு நீங்கள் செல்லுவது உங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும், அந்த சபையை நடத்திக் கொண்டிருக்கும் போதகருக்கு உலகத்தைக் குறித்து எதுவும் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆயினும், கவலை தரும் விதமாக, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக கிட்டும் பாவ மன்னிப்பைக் குறித்து பிரசங்கம் செய்ய முடிந்த சபைகள் அநேகமாக இருக்கின்றன. இந்த உலகத்திலே 100 மில்லியன் ஆலயங்கள் இருந்து அவற்றால் பயன் என்ன, அவற்றில் சில மட்டும் தானே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து பிரசங்கம் செய்கின்றன? எண்ணிலடங்காத மருத்துவர்கள் இருந்தும் கூட நோயாளியைக் குணப்படுத்த முடியவில்லை என்பதை போன்றதாக இது இருக்கிறது. அப்படியானால் இத்தனை மருத்துவர்கள் இருந்தும் அதன் பயன் என்ன? ஆகவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து கற்று, ஆவிக்குரியபடி நோய்வாய் பட்டவர்களுக்கு நற்செய்தியை பிரசங்கம் செய்வது முற்றிலும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது, இதன் மூலமாக பாவங்களை நம்மால் முழுமையாக துடைக்க முடியும்.
கொரிய போர் உண்டான, அந்த பழைய காலத்திலே, மிக அதிகமான இடம் பெயர்ந்தவர்களை உருவாக்கியதினால் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் கூட அகதிகளுக்கான குடிசை பகுதிகள் உருவாகின. உருக்குலைந்து போன நாட்டை சரி செய்யும் படியாக அநேக வெளிநாட்டு ஊழியர்கள் கொரியாவிற்கு வந்தனர். இரவு நேரத்தின் போது விமானத்தின் மூலமாக வந்திறங்கிய அவர்கள் உயரமான கட்டிடங்களை கண்டு வியப்படைந்தனர். கொரியாவில் உள்ளவர்கள் மிகவும் ஏழைகள் என்றும் அவர்களுக்கு புசிப்பதற்கு கூட எதுவும் இல்லை என்றும் அவர்கள் கேள்விப் பட்டனர், ஆகவே இந்த ஏழை நாடு ஏன் இத்தகைய உயர்ந்த கட்டிடங்களைக் கட்ட வேண்டும் என்று அவர்கள் வியந்தனர். ஆனால் அவர்கள் காலையிலே எழுந்து தம் விடுதிகளில் இருந்து வெளியே வந்து பார்த்த போது, அவர்கள் உயர்ந்த கட்டிடங்கள் என்று எண்ணிய இடங்கள் மலைகளின் பக்கங்களில் கட்டப் பட்டிருந்த குடிசைகள் என்று கண்டு கொண்டனர். அவர்கள் விமானத்தில் இருந்து வந்தபோது கண்ட அந்த விளக்குகள் அந்த குடிசைகளில் இருந்து வந்தனவே தவிர, உயரமான கட்டிடங்களில் இருந்து அல்ல. பழைய நாட்களிலே, கொரிய நாடு ஏழ்மையானதாக இருந்த போது, குடிசைப் பகுதிகள் மலைகளில் உருவாகின, ஆகவே இரவில் அவை உயர்ந்த கட்டிடங்களைப் போல காட்சி அளித்தன.
இப்போது கொரியாவின் நகரங்களில் பல உயரமான கட்டிடங்கள் வந்து விட்டன மேலும் வெளிநாட்டினர் இதை புதிய எருசலேம் என்று அழைக்கிறார்கள். சீர்த்திருத்த கிறிஸ்தவம் இங்கு பெருகியுள்ளது, உலகத்திற்கு நற்செய்தியை அறிவிக்கும் கடமை கொரியாவிற்கு இருக்கிறது என்று உலகத் தலைவர்கள் கூறுகிறார்கள். இந்த நாட்களில் உலகம் முழுவதும் பல்வேறு ஆலயக் கட்டிடங்கள் உருவாகியுள்ளன, ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது அங்கே பிரசங்கம் செய்யப் படாததினால், அவை அனைத்திலும் எந்த பயனும் இல்லை. உலகம் முழுவதும் இயேசுவானவரைத் தம் இரட்சகராக விசுவாசிப்பதாக பல கிறிஸ்தவர்கள் அறிவிக்கிறார்கள், ஆனால் அவர்களில் அநேகர் இயேசுவானவரைத் தம்முடைய இரட்சகராக விசுவாசிப்பதாக அறிவித்தாலும் அவர்கள் மிகுந்த பக்தியுடன் இருந்தாலும் கூட, அவர்களின் இருதயங்களில் இன்னமும் பாவங்கள் இருக்கின்றன. இந்த பூமியிலே உள்ள நாடுகளில் உள்ள அநேக கிறிஸ்தவர்களிலே, கொரியாவின் கிறிஸ்தவர்களே மிகவும் பயபக்தி உடையவர்கள் என்று கூறப்படுகிறது. கொரிய கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் அதிகாலை ஜெபங்களை ஏறெடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
சபையோர் கொடுத்த ஸ்தோத்திர காணிக்கைக்களுக்காகவும் தசம பாகத்திற்காகவும் பொது வெளியிலே சபை ஜெபிக்கிறது என்ற ஒரே நாடு கொரியா மட்டுமே ஆகும். கொரியாவிலே, அந்த காரணத்தை முன்னிட்டு ஆராதனை கூட்டத்திலே யார் எதனை காணிக்கையாக கொடுத்தார் என்று போதகர் அறிவிப்பது பொதுவான ஒன்றாகும், பொது வெளியிலே இப்படி காணிக்கைக் கொடுத்தவருக்காக சிறப்பான ஜெபங்கள் ஏறெடுக்கப் படும். கர்த்தருக்கு நன்றி அறிவிப்பதற்காக விசுவாசிகளை பாராட்ட வேண்டும் என்றாலும் கூட, ஒவ்வொருவரும் எதனைக் காணிக்கையாக கொடுத்தார் என்று பட்டியலிடுவது நேரம் பிடிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையிலே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறிவிக்க இந்த போதகருக்கு நேரம் எங்கே இருக்கிறது? இங்கே நான் கூற விரும்புகிற காரியம் என்னவென்றால் ஒவ்வொரு சபையும் ஒவ்வொரு போதகரும் தமது சபையோருக்கு முக்கியமாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து பிரசங்கம் செய்ய வேண்டும், ஆனால் கவலை தரும் விதமாக, இது இப்படியாக நடப்பதில்லை. இந்த கருத்தை வலியுறுத்தும் படியாக கொரியாவில் உள்ள ஆலயங்களைக் குறித்த சில காரியங்களை உங்களிடம் கூறினேன்.
மேலே கூறியதைப் போல, காலை ஜெபக்கூட்டங்களுக்கு வர வேண்டும் என்பதிலே கொரிய கிறிஸ்தவர்கள் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள். கர்த்தருக்கு ஆராதனை செய்யும் போது அவர்கள் மிகவும் எளிதாக அழுகக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். உலகத்திலே இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு நடுவிலே கொரிய கிறிஸ்தவர்கள் தான் அழும் குழந்தைகள் என்று கூறினால் அது மிகையாகாது. அவர்கள் ஆராதனை நேரத்தின் போது அழுவதால் ஒரு ஆறு பெருக்கெடுத்து ஓடும். அப்படியானால், ஆராதனை நேரத்தின் போது, இத்தனை பய பக்தியுடனே மனம் வருந்தும் ஜெபங்களை ஏறெடுத்த போதிலும், அவர்களின் இருதயங்களிலே எதற்காக இன்னமும் பாவங்கள் அப்படியே இருக்கின்றன, எதனால் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியவில்லை? நீங்கள் இத்தகைய ஒரு கிறிஸ்தவராக இருந்தால், சபைக்கு எதற்காக சென்று வர வேண்டும்? நீங்கள் சிறந்த ஒரு போதகரிடம் இருந்து கற்றிருக்கலாம், ஆனால் பாவங்கள் இன்னமும் உங்கள் இருதயங்களில் இருந்தால் இதனால் உண்டாகும் பலன் என்ன?
இத்தகைய ஆவிக்குரிய படியான ஒரு காரியம் கொரியாவில் மட்டும் நடக்கிறதா, அல்லது உலகம் முழுவதும் இப்படிப் பட்ட காரியங்கள் நடந்து வருகிறதா? இது உலகம் முழுவம் காணக்கூடிய ஒரு காரியமாகும். கொரியாவின் கிறிஸ்தவ சமுதாயத்தை பாதித்துக் கொண்டிருக்கும் ஆவிக்குரிய படியான அழிவு உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது, சாத்தான் தன் பொய்களினால் அநேக மக்களை வஞ்சித்து வருகிறான் என்பதற்கு இதுவே அத்தாட்சியாகும். சாத்தான் கூறுகின்ற பொய்யான விசுவாசங்களுக்கு நாம் அடிபணிய கூடாது, அவனால் எப்போதும் நாம் வஞ்சிக்கப் படக் கூடாது. இதனை உறுதி படுத்தும் விதமாக, கர்த்தருடைய நீதியானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக வெளிப்படுத்தப் பட்டது என்பதை எழுதப் பட்ட வார்த்தையின் மூலமாக கண்டு கொள்ளும் படியாக உங்களிடம் வேண்டுகிறேன், இந்த கண்டுபிடிப்பின் மூலமாக கர்த்தர் உங்களுக்குத் தரும் அநேக ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளுவீர்கள் என்று நான் நம்பி ஜெபிக்கிறேன்.
தத்துவங்களை குறித்து நாம் அறிந்திராவிட்டாலும் அது பொருட்டல்ல. தத்துவத்தைக் குறித்த அறிவில்லை என்பதைக் குறித்து வருந்துபவர் யார்? நம்மைக் குறித்து தெளிவாக எண்ணி நம் நிலையை தெளிவாக நம்மால் கூற முடிகிறது. இலக்கியத்திலே நாம் சிறந்தவர்களக இல்லை என்றால் என்ன நடக்கும்? கதாசியர்களைப் போலவும் புலவர்களைப் போலவும் நம் சிந்தனைகளை வெளிப்படுத்த முடியாவிட்டாலும் கூட, சிறந்த கதை ஒன்றை வாசிக்கும் போதோ அல்லது அழகான கவிதையை வாசிக்கும் போது அதனை நம்மால் பாராட்ட முடிகிறது. உங்கள் சிந்தனைகளை இத்தகைய மனிதர்களைப் போல வெளிப்படுத்துகிற தாலந்து இல்லாவிட்டாலும் கூட, உங்கள் வாழ்க்கையை வாழுவதற்கு இவற்றால் எவ்வித தடையும் இருக்க முடியாது. வாழ்வைக் குறித்த இலக்கியங்களை பாராட்டுவதற்கோ அல்லது தத்துவங்களை ஆராய்வதற்கோ நீங்கள் கல்லூரி செல்ல வேண்டும் என்பதில்லை. வயலை உழுதுக் கொண்டிருக்கும் போதே அவற்றைக் குறித்து உங்களால் கற்க முடியும். வேலை செய்வது ஒவ்வொருவருக்கும் கடினமான ஒன்றாக இருந்தாலும் கூட, அது வாழுவதற்கு தேவையான பொருட்களைத் தருவதுடன், வாழ்விலே ஒரு நிறைவை அளிக்கிறது அதன் அழகை பாராட்டச் செய்கிறது.
உங்களுடைய வாழ்விலே, பாடசாலைகளிலே கற்கும் இலக்கியம் அல்லது தத்துவத்தை விடவும் உழைப்பானது மிகவும் பொருள் உள்ளதாக இருக்கிறது. எழுத்தின் மூலமாக உங்கள் சிந்தனைகளை உங்களால் வெளிப்படுத்த முடியாது போயினும், உங்களுக்கு இலக்கியத்தைக் குறித்து எதுவும் தெரியாது என்று பொருள் படாது. அப்படியானால் வானியலைக் குறித்து என்ன? நாம் சிறுவர்களாக இருக்கையிலே, நம்மில் அநேகர் கோடை காலத்தின் போது திறந்த வெளிகளுக்குச் சென்று, தரையில் படுத்தவாறே வாணத்திலுள்ள உடுக்களை எண்ணிக் கொண்டிருந்திருப்போம். நம்மில் அநேகருக்கு உடுக்கூட்டங்களை, குறிப்பாக பெருங்கரடி உடுக்கூட்டத்தைக் குறித்து கண்டிப்பாக தெரிந்திருக்கும். இந்நிலையில் நாம் முற்றிலுமாக வானியல் அறியாதவர்கள் அல்ல. மேலுமாக வாழ்வை வாழுவதற்கு ஒருவர் வானியலை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை. எப்படிப் பார்த்தாலும், நான் உங்களிடம் கூறிய கதையுடைய இளம் முனைவரைப் போல, தன்னுடைய அறிவைக் குறித்து இத்தனையாக பெருமை பாராட்டிய போதிலும், முதியவர் கல்வி அறிவில்லாதவர் என்று கேலி செய்தாலும், படகு உடைந்து மூழ்கிப் போய் தன் உயிருக்கு ஆபத்து வரும் போது இலக்கியத்தாலும் தத்துவத்தினாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அந்த முதியவர் அவனைக் காப்பாற்றவில்லை என்றால் இந்த மனிதனுக்கு என்ன நடந்திருக்கும்? அவன் மூழ்கிப் போயிருப்பான். நீரிலே தப்பும் படியாக எப்படி நீந்த வேண்டும் என்று நீங்கள் அறிந்திருப்பதைப் போல, நம் இரட்சிப்பை நாம் அடைய வேண்டுமானால், கர்த்தரால் பேசப் பட்ட வார்த்தையாகிய, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக கர்த்தருடைய நீதி என்ற நற்செய்தியை நாம் அறிந்திருக்க வேண்டும். இந்த நற்செய்தியை நாம் விசுவாசிக்க வேண்டும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் வேதாகமத்தின் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளை விசுவாசிப்பது மட்டுமே, கர்த்தர் எப்பாடியாக பாவ நிவாரணத்தை ஏற்படுத்தினார் என்றும் அவருடைய நீதி என்னவென்றும் துல்லியமாக அறிந்து இந்த வேத வசனங்களை நாம் விசுவாசிக்க வேண்டும். உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் நம்மை இரட்சிக்கும் படியாக கர்த்தர் பயன் படுத்திய இரட்சிப்பின் நீதியைக் குறித்தும், கர்த்தர் எப்படியாக இரட்சிப்பின் விதிகளை ஏற்படுத்தினார் என்றும் வேதாகமத்தின் மூலமாக நாம் அறிந்து விசுவாசித்தால் நம்மால் இரட்சிப்பை அடைய முடியும். நாம் நீரிலே மூழ்கிக் கொண்டிருந்தால், நாம் எதனையாவது செய்து அத்தகைய ஆபத்தில் இருந்து தப்புவதே மிகவும் முக்கியமாகும், நாம் நாய்களைப் போல நடந்து கொண்டாலும் கூட அது ஒரு பொருட்டல்ல. நாம் நீச்சல் அடிக்கும் போது நாய்களைப் போல நீந்தும் போது அது பார்ப்பதற்கு அழகாக இல்லை என்பதால் சிலர் நம்மை ஏளனமாக பார்க்கக் கூடும், ஆனால் அது நீரில் மூழ்கிச் சாவாமல் இருக்கும் நிலையிலே நீந்துபவர்களுக்கானது.
லேவியராகவும் 1:1-9 இலிருந்து இன்றைய வேதாகம வார்த்தைகளைப் பார்ப்போமாக
கர்த்தரால் நியமிக்கப் பட்ட விதிகளைக் குறித்தும் இரட்சிப்பின் சட்டத்தைக் குறித்து இங்கே நாம் பார்க்கலாம். இங்கே லேவி
என்ற சொல்லிற்கு ஐக்கியம்
என்று பொருள் படும். யாக்கோபின் பன்னிரண்டு குமாரர்களுக்கு நடுவிலே லேவி என்றழைக்கப் படும் ஒருவன் இருக்கிறான், அவன் பெயரின் பொருள் ஐக்கியம் என்பதாகும். கர்த்தருடைய நீதியுடனே ஐக்கியமாகி தம்முடைய எல்லாப் பாவங்களும் கழுவப் பெற்றவர்கள் - அவருடைய மக்கள் என்று வேத வசனங்கள் கூறுகின்றன. மனிதகுலத்தின் பாவங்களை எந்த முறையின் மூலமாக கர்த்தர் துடைத்தார் என்று லேவியராக புத்தகம் கூறுகிறது.
லேவியராகமம் 1:1-4 இல் இவ்வாறு எழுதப் பட்டிருக்கிறது: கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக்கூப்பிட்டு, அவனை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது, ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும். அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்கதகன பலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் கொண்டுவந்து, அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்.
மோசேயை அழைத்த கர்த்தர், இஸ்ரவேல் மக்கள் பின்பற்ற வேண்டிய பலிகாணிக்கை முறையினைக் குறித்து அவனிடம் கூறத் தொடங்கினார். கர்த்தர் மோசேயை சினாய் மலையின் உச்சிக்கு அழைத்து அவனிடம் கூறியவைகள் கர்த்தருடைய பிரமாணங்கள் ஆகும் அவை லேவியராகமத்திலே எழுதப் பட்டுள்ளன.
கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு 613 விதிகளையும் கட்டளைகளைம் வழங்கினார். இந்த கட்டளைகளின் எண்ணிக்கையைக் குறித்து வேதாகம அறிஞர்கள் ஆராய்ந்து சரி பார்த்திருக்கிறார்கள். ஆனால், எந்த ஒரு மனிதனினாலும் கர்த்தருடைய இந்த 613 கட்டளைகளை எவ்வித தவறும் இன்றி கைக்கொள்ள முடியுமா? இதற்கு சாத்தியம் இல்லை என்றால், கர்த்தர் இந்த பிரமாணத்தைக் கொடுத்தமைக்கான காரணம் என்ன? கர்த்தர் மனிதர்களுக்கு இந்த பிரமாணத்தைக் கொடுத்ததின் மூலமாக அவர்கள் தம் பாவங்களைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கர்த்தர் அதனைக் கொடுத்தார், இதன் மூலமாக அவர்கள் தம் பாவங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டாக இயேசு கிறிஸ்துவிடம் செல்ல வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
யாத்திராகமம் அதிகாரம் 25 இல், தான் ஆசரிக்கும் படியாக ஒரு கூடாரத்தை அமைக்கும் படியாக கர்த்தர் இஸ்ரவேல் மக்களிடம் பேசினார். தன் ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டும் படியாக மோசேயிற்கு கட்டளையிட்ட பிறகு, இஸ்ரவேல் மக்கள் தன்னிடம் வந்து அவர்களுக்காக ஏற்பத்துப் பட்ட பலிகாணிக்கை முறையின் மூலமாக தம் விசுவாசத்தினால் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளும் படியாக கர்த்தர் அவர்களிடம் கூறினார். இஸ்ரவேல் மக்கள் கர்த்தரிடம் எவ்வாறு வரவேண்டும், அவருக்கு எத்தகைய பலிகாணிக்கையைக் கொடுக்க வேண்டும், விசுவாசத்தினால் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளுவது எப்படி என்று எல்லாக் காரியங்களும் லேவியராகமத்த்திலே கூறப்பட்டுள்ளது.
லேவியராகமம் 1:4 இவ்வாறு கூறுகிறது, "அவன் அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் கொண்டுவந்து, அது