Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மாற்கு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (III) - விசுவாசத்தின் ஆசீர்வாதம் இருதயத்தினால் பெற்றுக் கொள்ளப் படுகிறது
மாற்கு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (III) - விசுவாசத்தின் ஆசீர்வாதம் இருதயத்தினால் பெற்றுக் கொள்ளப் படுகிறது
மாற்கு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (III) - விசுவாசத்தின் ஆசீர்வாதம் இருதயத்தினால் பெற்றுக் கொள்ளப் படுகிறது
Ebook600 pages3 hours

மாற்கு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (III) - விசுவாசத்தின் ஆசீர்வாதம் இருதயத்தினால் பெற்றுக் கொள்ளப் படுகிறது

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து, பாவங்களுக்கான மன்னிப்பு மற்றும் விசுவாசத்தின் ஆசீர்வாதங்கள் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடிய மன்னிப்பு தினம், என்பது இந்த உலகத்திலே எங்கும் காணப் படுவதில்லை, ஆனால் அதுவே இந்த உலகத்தில் இருக்கும் எல்லா நாட்டு மக்களும் ஒன்றுகூடி கொண்டாடக் கூடிய ஒரு பண்டிகை அதுவாகும். இந்த நாளானது நீங்கள் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நாளாகும், இதுவே உலகம் முழுவதும் இருக்கும் கர்த்தருடைய மக்களால் ஒன்று கூடி கொண்டாடக் கூடிய ஒரு பண்டிகையாகும்.

Languageதமிழ்
PublisherPaul C. Jong
Release dateOct 10, 2023
ISBN9788965322498
மாற்கு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (III) - விசுவாசத்தின் ஆசீர்வாதம் இருதயத்தினால் பெற்றுக் கொள்ளப் படுகிறது

Related to மாற்கு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (III) - விசுவாசத்தின் ஆசீர்வாதம் இருதயத்தினால் பெற்றுக் கொள்ளப் படுகிறது

Related ebooks

Reviews for மாற்கு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (III) - விசுவாசத்தின் ஆசீர்வாதம் இருதயத்தினால் பெற்றுக் கொள்ளப் படுகிறது

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மாற்கு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (III) - விசுவாசத்தின் ஆசீர்வாதம் இருதயத்தினால் பெற்றுக் கொள்ளப் படுகிறது - Paul C. Jong

    paul_Tm43_coverFrontflap_Tm431st_page

    மாற்கு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (III)

    விசுவாசத்தின் ஆசீர்வாதம் இருதயத்தினால் பெற்றுக் கொள்ளப் படுகிறது

    Smashwords Edition

    Copyright 2011 by Hephzibah Publishing House

    எல்லா உரிமையும் பதிப்பாளருக்கே. இப்புத்தகத்தின் எப்பகுதியையும் பிரதியெடுக்கவோ, மறுபடியும் நூலாக்கும் வகையில் பதிவு செய்தலோ; மின்னனுவியல், இயந்திரவியல், ஒளிப்பிரதியெடுத்தல், பதிவு செய்தல் மேலும் எவ்வகையிலோ தகவல் பரிமாற்றம் செய்யலாகாது. அப்படிச் செய்வதானால் பதிப்பாளர் அல்லது பதிப்புரிமை உடையவர்களிடமிருந்து எழுத்து மூலமான அனுமதி பெறப்பட வேண்டும்.

    வேதவசனங்கள் தமிழ் வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டப் பட்டுள்ளன.

    ISBN 978-89-6532-249-8

    அட்டைப்படம்: மின்.சூ.கிம்

    வரைபடம்: யங்-ஏ. கிம்.

    இந்நூல் கொரியாவில் அச்சிடப்பட்டது.

       பொருளடக்கம்   

    முன்னுரை

    1. உண்மையான விசுவாசம் என்பது என்ன? (மாற்கு 11:12-14, 19-24)

    2. கர்த்தரைப் பிரியப்படுத்தும் படியாக விசுவாசத்தால் வாழுங்கள் (மாற்கு 11:11-14, 20-24)

    3. உண்மையாகவே நாம் கர்த்தருடைய நீதியின் மீதுள்ள விசுவாசத்தால் நடக்கிறோமா? (மாற்கு 11:20-24)

    4. தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்ட அனைவருக்கும் உயிரோடு எழுந்த இயேசுவே கர்த்தர் ஆவார் (மாற்கு 12:18-27)

    5. கர்த்தர் மரித்தவர்களுக்கான கர்த்தராக அல்லாமல் ஜீவனுள்ளோரின் கர்த்தராக இருக்கிறார் (மாற்கு 12:18-27)

    6. நாம் எத்தகைய காலத்திலே வாழுகிறோம் என்று அறிந்து கொள்ளுவோம் (மாற்கு 13:1-27)

    7. நற்செய்திக்கு ஊழியம் செய்யும் போது மட்டுமே அதனை பிரசங்கிக்க முடியும் (மாற்கு 14:3-9)

    8. கர்த்தருடைய நற்செய்திக்கு ஊழியம் செய்வதற்கான நேரம் இதுவேயாகும் (மாற்கு 14:3-9)

    9. மாமிசத்தைப் புசித்து இரத்தத்தைக் குடியுங்கள் (மாற்கு 14:22-24, யோவான் 6:53-58)

    10. பரபாசைப் போன்ற நம்மை மனித குலத்தின் ராஜா இரட்சித்தார் (மாற்கு 15:1-15)

    11. இயேசு கிறிஸ்துவே உண்மையான கர்த்தர் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (மாற்கு 15:16-41)

    12. கர்த்தர் நமக்கு உண்மையான இரட்சிப்பைத் தந்தார் (மாற்கு 16:1-20)

    13. அனைத்து படைப்புகளுக்கும் நற்செய்தியை பிரசங்கம் செய்யுங்கள் (மாற்கு 16:14-18)

    14. விசுவாசித்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொள்ளுகிறவர்கள் இரட்சிக்கப் படுவார்கள் (மாற்கு 16:14-20)

    0preface.jpg

    முன்னுரை

    ஒரு சிறுவன் தன் வீங்கிய கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அழுவதாக கற்பனை செய்யுங்கள். வேர் வரையிலே சிதைந்து போன பல்வலி அவனைப் பிடித்துள்ளது. நரம்பு வரையிலே பல் கெட்டுப் போய் இருப்பதினால், இரத்தமும், சீழும் வடிந்து அவன் தாடையில் இருந்து துர் நாற்றம் வீசிக் கொண்டிருந்தது, இதற்கு மேலும் வலியை பொறுக்க முடியாததினால் அந்தக் சிறுவன் தாங்க முடியாமல் அழுது கொண்டிருந்தான். தன் மகன் இத்தகைய வலியினால் பாடுபடுவதைக் கண்ட அவனுடைய தாய் இருதயம் உடைந்து கண்கள் குளமாகின, ஆனால் அவள் தன் கண்ணீரை துடைப்பதற்கு பதிலாக தன் மகனின் வலியை கட்டுப்படுத்த மிகவும் கடினமாக முயற்சி செய்தாள். ஆயினும், அந்த உடைந்து போன பல்லுக்கு சரியான சிகிச்சை கொடுத்து விட்டால், சிறுவனின் வலி உடனடியாக நீங்கி விடுவதுடன் அவன் அழுவதையும் நிறுத்தி விடுவான், மீண்டுமாக அவன் சிரிக்கத் தொடங்குவான்.

    ஒரு மோசமான பல்லானது மிகுந்த வேதனை அளிப்பதினால் அது வளர்ந்த மனிதனையும் கூட கண்ணீர் விடச் செய்து இந்தப் பிரச்சனையை தீர்க்க பல்மருத்துவரை அனுகச் செய்கிறது. இப்படி இருக்கும் போது, அவர்கள் தம் உடலின் வலியை நேரடியாக அறிந்து கொண்ட போதும் கூட, எதனால் அநேக மக்கள் தம் இருதயங்களின் வேதனையை உணராதவர்களாக இருக்கிறார்கள்? தம் இருதயங்களின் நோயானது அவர்களுக்கு கவலையையும் வேதனையையும் அளிக்க வேண்டும், ஆனால் அவர்களில் அநேகர் தம் இருதயங்களும் கூட நோய்வாய்ப்படும் என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள். உண்மையிலே அவர்களின் இருதயத்தின் நோயானது புற்றுநோயைப் போன்றது, ஏனெனில் எண்ணில் அடங்காத மக்களுடைய ஆத்துமாக்கள் நோய்வாய் பட்டு தம் பாவங்களினால் மரித்த போதிலும் கூட, அவர்கள் தாம் மரித்துப் போகும் வரையிலே தாம் அழிந்து கொண்டிருப்பதை உணருவதேயில்லை, மேலும் தாம் நோய்வாய் பட்டிருக்கிறோம் என்பதைக் குறித்து முற்றிலும் அறியாதவர்களாக இருக்கிறார்கள். மக்களுடைய பாவ நோயை குணமாக்கக் கூடிய ஒரு மருத்துவமனை இருந்து அவர்களுடைய பாவம் எப்படி அவர்களுடைய இருதயங்களை பிய்த்துப் போடுகிறது என்பதைக் காட்டக் கூடிய எக்ஸ்ரே கருவி இருந்தால் அது மிகவும் நல்லதாக இருக்கும்.

    நம்முடைய ஆத்துமாக்கள் ஆரோக்கியமாக இல்லாத போது நம் இருதயங்கள் வேதனைப் படுகிறது. உங்கள் ஆத்துமா உங்கள் உயிராக இருப்பதினால்; உங்கள் ஆத்துமா ஆரோக்கியமாக இல்லாத போது, உங்கள் வாழ்வு ஆபத்தில் இருக்கிறது என்றே பொருள் படுகிறது. அப்படி இருந்த போதிலும், அநேக மக்கள் தம்முடைய அழிந்து கொண்டிருக்கும் ஆத்துமாவின் நிலையைக் குறித்து கவலைப் படுவதில்லை, ஆனால் அவர்கள் சரீரப்படியாக நோய்வாய்ப்படும் போது, தம்முடைய நல்ல ஆரோக்கியத்தை இழந்து விட்டதாக அவர்கள் எண்ணி கவலைப் படுகிறார்கள்.

    சரீரமும் ஆத்துமாவும் சமாதானத்துடனும் ஒன்றுடன் ஒன்று இசைந்து இருக்கும் போது மட்டுமே நல்ல ஆரோக்கியம் நிலவும். ஆனால் பாவம் நிறைந்த இருதயத்தினால் சமாதானத்தையோ இசைவையோ பெற்றுக் கொள்ள முடியாது. அனைவரும் பாவ நோயினால் பாடுபடுகிறார்கள். ஆகவே அனைவரும் தம் இருதயங்களிலே தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் இருதயத்தில் இருந்து உங்கள் எல்லாப் பாவங்களும் முற்றிலும் மறையும் போது தான் உங்களால் ஆரோக்கியமான இருதயத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்; ஆரோக்கியமான இருதயம் உங்களிடம் இருக்கும் போது தான் ஆரோக்கியமான சரீரமும் இருக்கும்.

    உங்கள் இருதயத்திலே நித்தியமான பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டு ஆரோக்கியமான சரீரத்துடனே ஆரோக்கியமான ஆத்துமாவையும் நீங்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதே என் நம்பிக்கையும் ஜெபமுமாக இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும், உண்மையான ஆசீர்வாதம் என்பது இதுதான் அல்லவா? உங்கள் இருதயம் நோயுடனே இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இயேசுவானவர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக உங்கள் இருதயத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு, இதன் மூலமாக உங்கள் எல்லாப் பாவங்களையும் அழித்து, கர்த்தருடைய வார்த்தையால் உங்கள் இருதயத்தை சுகமாக்கி, அதனை பரிசுத்த ஆவியானவரால் தரிப்பிக்கிறார் என்று விசுவாசிப்பது மட்டுமே. நியாயப்பிரமாணத்தின் மூலமாக உங்கள் இருதயத்தின் நோயை அறிந்து, அனைத்து நோய்களையும் குனமாக்கும் இயேசு கிறிஸ்துவை சந்தித்து, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து மறுபடியும் பிறப்பது தான் இவைகளாகும்.

    Sermon0101

    உண்மையான விசுவாசம் என்பது என்ன?

    < மாற்கு 11:12-14 >

    மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டு வருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராத படியால், அவர் அதினிடத்தில் வந்தபோது இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை. அப்பொழுது இயேசு அதைப்பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்.

    < மாற்கு 11:19-24 >

    சாயங்காலமானபோது, அவர் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார். மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப் போயிருக்கிறதைக் கண்டார்கள். பேதுரு நினைவுகூர்ந்து அவரை நோக்கி: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப் போயிற்று என்றான். இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆதலால், நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.

    உண்மையான விசுவாசம் என்பது என்ன?

    மாற்கு எழுதிய நற்செய்தியில் இருந்து இன்றைய வேதாகம வசனத்தை நாம் பார்க்கும் போது, நம் தேவன் தன் சீடர்களுடனே கூட எருசலேமை சுற்றிலும் இருக்கிற அநேக இடங்களுக்கு சென்று பிரசங்கம் செய்ததையும் அதிசயங்கள் செய்ததையும் காண்கிறோம், ஒரு சாயங்காலம் தேவன் அதிக பசி உடையவராக சாப்பிட ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தார். அந்த நேரத்திலே, தொலைவிலே ஒரு அத்திமரமானது இலைகள் அடர்ந்து இருப்பதைக் கண்டார். அந்த மரத்திலே ஏதாவது பழங்கள் இருக்கிறதா என்று காண அவர் இந்த அத்திமரத்தின் அருகில் சென்று பார்த்தார், ஆனால் அந்த மரத்திலே எந்தப் பழமும் இருக்கவில்லை. இந்த கனி தராத அத்திமரத்தைப் பார்த்த இயேசுவானவர் கீழ்வருமாறு கூறி அதனை சபித்தார், இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்க கடவன்.

    ஒரு அத்திமரமானது கோடைகாலத்தின் நடுவிலே கனிதருவது வழக்கம். கோடைகாலத்தில் தொடங்கி குளிர்காலம் வரையிலும் அது தொடர்ந்து கனிகளைத் தரும். அத்திமரமானது முதலில் கனி தரும், அதன் பிறகு சிறிய பூக்கள் அந்த கனியின் உள்ளே பூக்கத் தொடங்கும். ஒரு அத்திமரமானது இஸ்ரவேல் நாட்டையும் சுட்டிக் காட்டுகிறது. இந்த கனிதரும் மரமானது ஆசியாவின் பல இடங்களில் வளருகிறது. நான் 10 வருடங்களுக்கு முன்னதாக ஜப்பான் நாட்டிற்கு சென்றிருந்த போது அந்த நாட்டிலே அநேக அத்தி மரங்களைக் கண்டேன்.

    இயேசுவானவரும் அவருடைய சீடர்களும் ஒன்றாக பயணம் செய்த பிறகு மிகுந்த பசி உடையவர்கள் ஆனார்கள், ஆகவே சிறிது கனிகளை புசிக்கும் படியாக அத்திமரத்திற்கு அருகில் சென்றனர். ஆனால் அந்த மரம் இலைகள் நிரம்பியதாக இருந்தாலும் எவ்வித கனியும் இல்லாமல் இருந்தது. ஆகவே, தேவன் இந்த அத்தி மரத்தை சபித்தார். நம் தேவன் மேலும் கூறினார், எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும். இந்த கனி தராத அத்திமரத்தைக் குறித்து கூறுவதற்கான தேவனுடைய நோக்கம் உண்மையான விசுவாசத்தைக் குறித்து நம்மிடம் போதிப்பதாகும். கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்கும் இத்தகைய விசுவாசத்தை தேவன் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறார், அவர் கூறினார், ஆதலால், நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன் (மாற்கு 11:24). தேவன் நம்மிடம் கேட்கிற ஒரே காரியம் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்கும் விசுவாசம் மட்டுமே. எப்படியோ நாம் வாழுவதற்கு பதிலாக நாம் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்கும் விசுவாசத்துடனே வாழ வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். தேவன் இவ்வாறு கூறினார் ஆதலால், நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன் இதன் மூலமாக நாம் கர்த்தரிடம் எதனைக் கேட்டு ஜெபிக்கிறோமோ அதனைப் பெற்றுக் கொள்ளுவோம் என்று விசுவாசிக்க வேண்டும் என அவர் நம்மிடம் கூறுகிறார்.

    கர்த்தரால் நிறைவேற்றப் பட வேண்டும் என நாம் விரும்பும் சில காரியங்கள் இருக்கின்றன. அவை நிறைவேறும் என்ற விசுவாசத்தினால் நாம் பொறுமையுடன் காத்திருக்கிறோம். அவர் கூறிய படி அப்படியே நாம் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்தால், நாம் கர்த்தரிடம் விசுவாசத்தால் ஜெபித்து பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். கர்த்தரே, தயவு செய்து, எங்களை ஆசீர்வதியும் என்று அவருடைய உதவி கேட்டு ஜெபித்து இந்த காரியங்களை தேவன் நிறைவேற்றுவார் என்று நாம் விசுவாசித்தால் அப்படியே அவற்றை நிறைவேற்றுவதாக தேவன் நமக்கு வாக்குத்தத்தம் செய்தார். தேவன் நம் ஜெபங்களைக் கேட்டு நமக்காக செயல் படுகிறார், இதனால் அவருடைய தன்மைக்கு ஏற்றபடியாக அந்த காரியங்கள் நிறைவேற்றப் படும். இதுவே கர்த்தரை விசுவாசிக்கும் விசுவாசம் என்று தேவன் கூறுகிறார்.

    கர்த்தருடைய நீதியை விசுவாசிக்கும் விசுவாசத்தினால் நம் ஆவிக்குரிய வாழ்வு வாழப் பட வேண்டும்

    ஒரு விசுவாச வாழ்வை வாழ நம் சரீரத்திலும் ஆவியிலும் அநேக காரியங்கள் தேவைப் படும். இவற்றில் ஒரு காரியம் குறைவாக இருந்தாலும் கூட அது அசெளகரியமாகவும் திருப்தியின்மையாகவும் இருக்கும். ஆகவே, அனைத்து காரியங்களும் நமக்குத் தேவை. ஆனால் இவை அனைத்தையும் நம் சொந்த பலத்தினால் பெற்றுக் கொள்ள முடியுமா? இல்லை, நம்மால் முடியாது. இந்த நேரங்களிலே, நாம் கர்த்தரை விசுவாசித்து, ஜெபித்து நம் விசுவாசத்தை செயல் படுத்த வேண்டும்.

    கர்த்தருடைய நீதியை விசுவாசித்து விசுவாசத்தால் வாழுவது நேர்மையானதும் சரியானதுமான செயல் என்று தேவன் கூறினார், ஆகவே விசுவாசத்தால் வாழும் படியாக நாம் கர்த்தருடைய சித்தத்தை முழுமையாக பின்பற்ற வேண்டும். மாற்கு எழுதிய நற்செய்தியிலே தேவன் தன் சீடர்களிடம் இவ்வாறு கூறினார், நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும், கர்த்தரிடம் இருந்து நமக்கு தேவையான காரியங்களை நாம் வேண்டும் போது, நாம் கேட்கும் இந்த காரியங்களை அவர் அருளிச் செய்கிறார் என்றே இதற்கு பொருள் படுகிறது. நாம் ஜெபிப்பதற்கு ஏற்றவாறு அப்படியே கர்த்தர் கொடுக்கிறார் என்று இதற்கு பொருள் படுகிறது. நாம் ஜெபிக்கும் காரியங்களை ஏற்கனவே பெற்றுக் விட்டோம் என்று தேவன் கூறினார். இந்த கர்த்தருடைய வார்த்தையை நாம் விசுவாசிக்கும் போது, கர்த்தருடைய வார்த்தையில் எழுதப் பட்டுள்ளதைப் போல அவர் அனைத்து காரியங்களையும் நிறைவேற்றுவார். இந்த வார்த்தையை விசுவாசிக்கும் படி தேவன் நம்மிடம் கூறுகிறார்.

    கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்கும் விசுவாசத்துடனே வாழுவதே இதுவாகும். உதாரனமாக, அத்தி மரம் கனி கொடுக்க வேண்டுமானால் சரியான காலம் வர வேண்டும். ஆனால் கர்த்தருடைய ராஜ்யத்தின் செயல்கள் காலத்திற்கு ஏற்றவாறோ அல்லது வேறு காலத்திலே நிறைவேற்றப் படும், நாம் ஜெபிக்கிற இந்த காரியங்கள் முழுமையாக கர்த்தரால் நிறைவேற்றப் படும் என்று விசுவாசிக்கும் விசுவாசத்துடனே கர்த்தரிடம் நாம் ஜெபிக்கும் போது அப்படியே தேவன் அதனைச் செய்வார்.

    இதுவே கர்த்தரை விசுவாசிக்கும் விசுவாச வாழ்வாகும். கர்த்தரை விசுவாசித்து அவரை சார்ந்திருக்கும் நம் விசுவாச வாழ்வானது நாம் ஜெபிக்கிற அவசியமான காரியங்களையும் தேடுகிற காரியங்களையும் கர்த்தர் முழுமையாக அருளிச் செய்வார் என்று விசுவாசிப்பதாகும். அப்போது நாம் விசுவாசிக்கும் படியாக அப்படியே கர்த்தர் அவற்றை அருளிச் செய்வார். நாம் கர்த்தரிடம் ஜெபிக்கும் போது நம் ஜெபங்களுக்கு பதில் அளித்து நமக்குத் தேவைப் படும் இந்த காரியங்களை அவர் அருளிச் செய்வார். இதுவே உண்மையான விசுவாசம் என்று கர்த்தர் கூறினார்.

    தேவன் அத்திமரத்தை சபித்த போது அது வேரில் இருந்து காய்ந்து போயிற்று. அதன் பிறகு தேவன் நம்மிடம் கூறினார், நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள். நாம் எதனை வேண்டிக் கொள்ளுகிறோமோ அதனைப் பெற்றுக் கொள்ளுவோம் என்று கர்த்தர் நமக்கு தெளிவாக காட்டிய பாகம் இதுதான். நாம் கர்த்தரிடம் ஜெபித்து நாம் வேண்டிகொண்டவைகள் நிறைவேறும் என்று விசுவாசிக்கும் போது, நாம் வேண்டியபடி அப்படியே கர்த்தர் அதனை நிறைவேற்றுவார். இந்த சத்தியத்தை உங்களால் விசுவாசிக்க முடியுமா?

    விசுவாச வாழ்வு என்பது கர்த்தருடைய செயலை விசுவாசிப்பதாக இருக்கிறது. இப்படியாக எழுதப் பட்டுள்ளது, விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (எபிரெயர் 11:1). இந்த உலகத்திலே நாம் வாழும் போது அநேக காரியங்கள் நமக்கு தேவைப் படுகிறது. கர்த்தருடைய உதவி தேவைப் படுகிறதும் கர்த்தருடைய அதிகாரத்தினால் மட்டுமே தீர்க்கப் படுகிறதுமான அநேக காரியங்கள் இல்லையா? ஆயினும், அனைத்து காரியங்களுக்காகவும் கர்த்தரிடம் நாம் ஜெபித்து நாம் அவரிடம் ஜெபித்த அனைத்தையும் அவர் முற்றிலுமாக கொடுப்பார் என்று விசுவாசித்தால், இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து போய் விடும். தேவன் நம் ஜெபங்களை கவனமாக கேட்டு நம் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறார். இதுவே கர்த்தரை விசுவாசிக்கும் விசுவாசமாக இருக்கிறது.

    நாம் விசுவாசத்தால் வாழ வேண்டும். நீதிமான்கள் விசுவாசத்தால் மட்டுமே வாழ வேண்டும். கொடுக்கப் பட்ட சூழ்நிலைக்கு ஏற்றபடியாக மட்டுமே அனைத்து காரியங்களையும் நாம் செய்தால் எதனை நாம் சாதிப்போம். ஆயினும், கர்த்தரை விசுவாசிக்கும் விசுவாசத்தால் அவருடைய செயலை நாம் செய்தால் கர்த்தர் விரும்புகிற காரியங்களை நம்மால் செய்ய முடியும். கர்த்தருடைய நீதியை நாம் விசுவாசிக்கும் போது ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுகிறோம் என்றும், அதனை விசுவாசிக்கா விட்டால் சாபங்களைப் பெற்றுக் கொள்ளுவோம் என்றும் அது கூறுகிறது. தன் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்ட ஒருவன் கர்த்தருடைய நீதியை விசுவாசிக்கும் விசுவாசத்தால் வாழா விட்டால், கர்த்தருடைய சந்நிதிக்கு முன்னதாக அவன் கொடியதொரு பாவத்தைச் செய்கிறான்.

    நான் தேவனை விசுவாசிப்பதால் அவரிடம் அநேக காரியங்களை வேண்டுகிறேன்

    அதிகாலையிலே நான் எழுந்த உடனே முதல் முதலாக செய்கிற வேலை ஜெபிப்பது தான். எனக்குத் தேவையான காரியங்களையும் சபைக்குத் தேவையான காரியங்களையும் கர்த்தரிடம் ஜெபித்து அவரிடம் கூறுவேன்; அந்த காரியங்களைத் தரும் படியாக ஒவ்வொரு காலையிலும் கர்த்தரிடம் வேண்டுகிறேன். இந்த எல்லா காரியங்களையும் தேவன் நிறைவேற்றுவார் என்று நான் விசுவாசிக்கிறேன். இந்த ஜெபங்கள் மிகவும் எளிதாக வெளி வருகின்றன. அவரிடம் நாம் ஜெபிக்கிற காரியங்களையும் வேண்டுகிற காரியங்களையும் தேவன் முழுமையாக நிறைவேற்றுவார் என்ற வார்த்தையை நான் விசுவாசிப்பதே இதற்கு காரணமாகும்.

    கர்த்தரிடம் ஜெபிப்பதும் கூட கீழ்வரும் காரியத்தைப் போன்ற ஒன்றாக இருக்கிறது: நீங்கள் ஒரு வங்கிக்கு செல்லும் போது அங்கே பணத்தை எடுப்பதற்கான சீட்டு இருக்கிறது, அந்த சீட்டிலே உங்களுக்குத் தேவையான பணத்தை எழுதுகிற போது, சிறிது நேரத்திலே அந்தப் பணம் உங்களுக்கு கிடைக்கும் என்பது நிச்சயம். கர்த்தரை விசுவாசிக்கிற விசுவாசம் அத்தகைய ஒன்றாக இருக்கிறது. ஆகவே, நாம் கர்த்தரிடம் ஜெபிக்கும் போது நமக்குத் தேவையான காரியங்களை கர்த்தர் தருகிறார் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். இதனை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இது உண்மையாகும். இப்படியாக விசுவாசிப்பதே உண்மையான விசுவாசம் ஆகும். கர்த்தரிடம் விசுவாசம் இல்லாவிட்டால் நீங்கள் இப்படியாக ஜெபிக்க மாட்டீர்கள். ஆனால் கர்த்தரை விசுவாசிக்கிற இந்த விசுவாசம் உண்மையாகவே உங்களிடம் இருந்தால் கர்த்தரிடம் நீங்கள் மன்றாடி ஜெபிப்பீர்கள். கர்த்தரை விசுவாசிக்கும் விசுவாசம் இல்லாவிட்டால் நாம் பரிதவிப்பிற்கு நடுவே இருப்போம். அப்படி இல்லாது, கர்த்தரை விசுவாசிக்கும் விசுவாசம் உண்மையாகவே நம்மிடம் இல்லாவிட்டால், நாம் இப்படிப் பட்ட பரிதவிப்பிற்கு உள்ளாக மாட்டோம்.

    இந்த கனி இல்லாத அத்திமரத்தின் மூலமாக உண்மையான விசுவாசம் என்ன என்பதை தேவன் விளக்குகிறார். உண்மையான விசுவாசம் என்பது கர்த்தரையும் கர்த்தருடைய வார்த்தையையும் விசுவாசிக்கும் விசுவாசமே என்றும், இயற்கை கோட்பாடுகளை சார்ந்திருப்பது அல்ல என்றும் தேவன் நம்மிடம் கூறினார். நாம் கர்த்தரையும் அவருடைய வார்த்தையையும் விசுவாசித்தால் அவருடைய சித்தத்தின் படியாக அனைத்து காரியங்களும் நிறைவேறும் என்று இதற்கு பொருள் படுகிறது. நாம் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்து அவரிடம் ஜெபிக்கும் அனைத்து காரியங்களையும் பெற்றுக் கொள்ளுவோம் என்று விசுவாசிக்கும் போது அவற்றை நாம் பெற்றுக் கொள்ளுகிறோம் என்று இதற்கு பொருள் படுகிறது. கர்த்தரை நீங்கள் விசுவாசித்தால் அனைத்து காரியங்களையும் நீங்கள் பெற்றுக் கொள்ளுவீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா?

    இன்றைய வேதாகம வசனத்தில் காணப் படும் மிகவும் முக்கியமான காரியம் என்னவென்றால் நம் ஜெபங்களிலே கர்த்தரை விசுவாசிக்கும் விசுவாசம் இருக்க வேண்டும் என்பதும் ஆவிக்குரிய வாழ்வை வாழ வேண்டும் என்பதுமேயாகும். நேர்மையான இருதயத்துடனே கர்த்தரை நாம் விசுவாசிக்க வேண்டும். நம்முடைய இருதயங்கள் திருப்தி அடையும் படியாக கர்த்தரை நாம் விசுவாசித்து அவரிடம் கேட்கும் எதனையும் தான் கொடுப்பதாக விசுவாசிக்கும் படி கர்த்தர் நம்மிடம் கூறினார்.

    ஆயினும், நாம் அடிக்கடி கர்த்தரை சந்தேகிப்பதே பிரச்சனையாகும். நாம் கர்த்தரை முற்றிலுமாக நம்பி விசுவாசித்தால், நாம் விசுவாசிக்கும் படியே கர்த்தர் பதில் அளிப்பார், ஆனால் நாம் விசுவாசிக்கா விட்டால் எதனையும் பெற்றுக் கொள்ள மாட்டோம். நீங்கள் கர்த்தரை விசுவாசிக்காமல் அவரிடம் இருந்து எப்படி பதிலுக்காக காத்திருக்க முடியும்? கர்த்தரை விசுவாசிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் ஜெபத்திற்கான பதிலைப் பெற்றுக் கொள்ளுகிறீர்களா இல்லையா என்று காண முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் விசுவாசத்துடனே கர்த்தரிடம் ஜெபித்த பிறகு அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றால் மட்டுமே அவரிடம் உங்களால் எதனையாவது கூற முடியும்; ஆனால் நீங்கள் அவரை விசுவாசிக்காத நிலையிலே, கர்த்தர் எனக்கு பதில் அளிக்க மாட்டார் என்று முன்னரேயே கூறிவிட்டு அவரை முதலில் இருந்தே விசுவாசிக்காமல் இருந்தால் எப்படி இருக்கும்.

    முதலாவது கர்த்தரை விசுவாசியுங்கள். கர்த்தரை உங்களால் விசுவாசிக்க முடிகிறதா? அவரை நீங்கள் விசுவாசிக்க விரும்புகிறீர்கள்’ ஆனால் அது நீங்கள் எண்ணுவதைப் போல எளிதானதாக இருக்கிறதா? கர்த்தரை விசுவாசிப்பதை விட வேறு எந்த நம்பிக்கை இருக்க முடியும்? நண்பனே, நான் உன்னை நம்புகிறேன், என்று நாம் ஒருவரிடம் கூறினால், அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்யாத படியாக அந்த மனிதர் அந்த நம்பிக்கைக்கு ஏற்றபடியாக நடந்து கொள்ளுவார். இதற்கு காரணம் நாம் அந்த மனிதரை நம்பியது தான். ஒரு மனிதர் மீது வைத்த நம்பிக்கையின் படி அவர் நடந்து கொள்ளவில்லை என்றால், அது முற்றிலும் அவருடைய தவறாகும். மறுபுறம் பார்க்கையிலே, நாம் ஒருவரை நம்பவில்லை என்றால் அவர் தன்னை அவமரியாதை செய்வதாகவே கருதுவார். ஆயினும், ஒருவன் தன் நம்பிக்கையை நம்மீது வைக்கும் போது நாம் புளகாங்கிதம் அடைவோம். மனிதர்கள் ஒருவரை ஒருவர் நம்பும் போது நம்பிக்கை வளருகிறது.

    கர்த்தரால் நமக்கு எதுவும் செய்ய முடியும். நம்முடைய கடைமையாக அவரை நாம் விசுவாசிக்க வேண்டும். அனைத்தையும் கர்த்தரால் முழுமையாக செய்ய முடியும் என்பதே அதற்கு காரனமாகும். கர்த்தர் தன்னை விசுவாசிக்கும் மக்களுடைய ஜெபங்களுக்கு பதில் அளிக்கும் போது கர்த்தரும் கூட புளகாங்கிதம் அடைகிறார். அது ஒரு கல்லினால் இரண்டு பறவைகளை வீழ்த்துவதாக இருக்கிறது, கர்த்தரும் மனிதரும் திருப்தி அடைகிறார்கள். ஒரு கல்லினால் இரண்டு பறவைகளை பிடிப்பதைப் போலவும்; முற்றத்தைப் துப்புரவு செய்யும் போது பொற்காசுகளை கண்டெடுப்பதைப் போலவும் இது அனைவருக்கும் நன்மை தருவதாக இருக்கிறது. இது இப்படியானதாகும்.

    ஆயினும், மனிதர்கள் தம் பக்கத்தில் இருந்து கர்த்தரை விசுவாசிப்பதில்லை என்பதே பிரச்சனையாகும். கர்த்தர் நமக்கு சத்தியத்தின் வார்த்தையைத் தந்தார்; தன்னை விசுவாசிக்கும் படி கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். என்னை நீ விசுவாசிப்பாயா? என்னை விசுவாசித்தால் நீ கேட்கிற அனைத்தையும் அருளிச் செய்வேன்.

    என்னுடைய உடன் விசுவாசிகளே, நாம் கர்த்தரை எத்தனையாக விசுவாசித்தோம்? நாம் மறுபடியும் பிறப்பதற்கு முன்னதாக எத்தனையாக கர்த்தரை விசுவாசித்தோம்? கர்த்தரை விசுவாசிப்பதாக நாம் கூறினாலும், நாம் விரும்பும் படியாக ஒரு காரியம் நடைபெறாத போது அந்த விசுவாசத்தை எளிதாக விட்டு விடுகிறோம்.

    அப்படியானால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்த பிறகு நீங்கள் எத்தனையாக விசுவாசித்தீர்கள்? நீங்கள் சில காலம் தேவனை விசுவாசிப்பதாக அறிவித்து ஒவ்வொன்றும் கடினமாக மாறிய போது அவற்றை விட்டு விட்டீர்களா? கர்த்தரை நீங்கள் எத்தனையாக விசுவாசித்தீர்கள்? கடைசி வரையிலே நீங்கள் கர்த்தரை விசுவாசித்தீர்களா?

    கர்த்தர் மகத்துவமானவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருப்பதால் அவர் உண்மையாகவே நம் ஜெபங்களுக்கு மகிழ்ச்சியுடனே பதில் அளிப்பார். தேவன் கூறினார், கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும் (மத்தேயு 7:7). ஆனாம் நாம் விசுவாசிக்காமல் இருந்தால் கர்த்தரால் நமக்காக எதனையும் செய்ய முடியாது. கர்த்தரை நாம் விசுவாசித்தால் அவர் நமக்காக தன் செயலைச் செய்வார், ஆனால் நாம் விசுவாசிக்காமல் இருப்பதினால் அவர் அவற்றைச் செய்வதில்லை. ஆகவே, கர்த்தருடைய பார்வையிலே நாம் பரிதாபமானவர்களாக இருக்கிறோம். நாம் பக்குவம் அடையாத சிறுவர்களைப் போல இருந்து சிறிது நேரம் விசுவாசிப்பதாகவும் அடுத்த நொடிப்பொழுதில் விசுவாசிக்காமலும் இருக்கிறோம்; ஒரு காரியத்தை கர்த்தரிடம் ஒப்புக்கொடுத்து, அதன் பிறகு அவரை விசுவாசிக்காமல் மீண்டுமாக திரும்பிச் சென்று விடுகிறோம். கர்த்தரே, தயவு செய்து இந்தப் பிரச்சனையை பொறுப்பெடுத்துக் கொண்டு அதனை தீர்த்து விடும். கர்த்தரே, நான் உம்மை விசுவாசிக்கிறேன் என்று கூறி ஒரு காரியத்தை நாம் கர்த்தரிடம் ஒப்புவிக்கிறோம். ஆனால் அதனைக் குறித்து பின்னர் யோசிக்கும் போது அதனைக் குறித்த நிச்சயம் இல்லாதவர்களாக இருக்கிறோம். அதன் பிறகு, இல்லை, அது தவறான யோசனை என்று எண்ணுகிறேன். அதனை என்னிடமே விட்டுவிடும் என்று கூறி கர்த்தரிடம் இருந்து அந்த காரியத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுகிறோம். அதன் பிறகு மீண்டும் நாம் அந்த காரியத்தை கர்த்தரிடம் ஒப்படைத்து மீண்டும் திரும்ப பெற்றுக் கொள்ளுகிறோம், கர்த்தரே, என்னை மன்னியும்! இந்தப் பிரச்சனையை உம்மால் மட்டுமே தீர்க்க முடியும் என்று உண்மையாகவே நான் எண்ணுகிறேன்.

    கர்த்தரை விசுவாசிப்பதின் மூலமாக அவரை நாம் பிரியப் படுத்துவோம்

    தேவன் இவ்வாறு கூறினார், நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது எவைகளை கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும். நாம் விசுவாசத்துடனே ஜெபிக்கும் போதெல்லாம் தேவன் பதில் அளிப்பார் என்று இந்த வசனத்திற்கு பொருள் படுகிறது. நம் தேவன் கீழ்வருமாறு கூறியதின் மூலமாக நம்மை வார்த்தையை பிரசங்கம் செய்கிறவர்களாக மாற்றுவதாக உறுதியளித்தார், பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார் (அப்போஸ்தலர் 1:8). நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டதினால் நற்செய்திக்கான சாட்சிகளாக மாறிவிட்டோம் என்று தேவன் இங்கே கூறுகிறார். ஒரு பிரசங்கியாளராக மாற வேண்டுமானால் நாம் கர்த்தருடைய நீதியை விசுவாசிக்க வேண்டும்; அவருடைய பிரசங்கியாளராக மாறுவதற்கு நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டியதில்லை. நாம் கர்த்தரை விசுவாசித்து அவருடைய வார்த்தையின் படியாக செயல் படும் போது அவர் நம்மிலே செயல் படுகிறார். ஆகவே நாம் கர்த்தரை விசுவாசிக்க வேண்டும்.

    தேவன் அத்தி மரத்திற்கு அருகே சென்ற போது அந்த அத்தி மரத்திலே எந்த காயும் இல்லாததைக் கண்டு அந்த மரத்தைச் சபித்தார், மீண்டுமாக எப்போதும் நீ கனி கொடுக்க மாட்டாய். (மத்தேயு 21:19) உடனடியாக அந்த அத்தி மரம் காய்ந்து போயிற்று. இந்த அத்தி மரத்திற்கு நீதியின் மீது சிறிது விசுவாசம் இருந்தால், அதனால் கனி கொடுக்க முடியாமல் போனாலும் கூட கர்த்தரிடம் ஜெபித்திருக்கும். அது இப்படி ஜெபித்திருக்க வேண்டும், கர்த்தரே, நான் கனி தரும் படியாக இதனை எனக்குச் செய்யும். கர்த்தரே, நான் உம்மை விசுவாசிக்கிறேன். ஒரு அத்திமரம் கர்த்தரை விசுவாசிக்கும் போது அது கனி கொடுக்கத் தொடங்குகிறது. இதுவே உண்மையான விசுவாசம் ஆகும்.

    நீதியின் மக்களாக மாறிய நம்மைக் குறித்து இந்த அத்திமரம் பேசுகிறது என்று இதன் மூலமாக தேவன் நம்மிடம் கூறுகிறார். வேதாகமத்திலே ஒரு மரம் எப்போதும் ஒரு மனிதனை சுட்டிக் காட்டுகிறது. நாம் கர்த்தரை விசுவாசித்தால் நாம் செய்கின்ற அனைத்து காரியங்களும் நிறைவேறும், அவரை விசுவாசிக்கா விட்டால் நம்மால் எதனையும் சாதிக்க முடியாது. நாம் ஒரு காரியத்தை செய்து முடிக்க எத்தனையாக முயற்சி செய்தாலும் கூட கர்த்தரிடம் விசுவாசம் வைக்கா விட்டால் நம்மால் எதனையும் முடிக்க முடியாது என்று இதற்கு பொருள் படுகிறது. சுருக்கமாக, கர்த்தர் மீது விசுவாசம் வைத்தால் மட்டுமே நம்மால் கர்த்தருடைய செயலைச் செய்ய முடியும்.

    கர்த்தரை விசுவாசிக்கும் போது மட்டுமே நம்மால் அவருடைய செயலைச் செய்ய முடியும். விசுவாசத்தினால் நாம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்ட பிறகு, நம்முடைய அன்றாட வாழ்விற்கு தேவையான காரியங்களையும், நம் கவலைகளையும், நம் பிரச்சனைகளையும், எதிர்காலத்திலே நமக்குத் தேவையான அனைத்து காரியங்களைக் குறித்தும் நாம் ஜெபிக்கும் போது கர்த்தர் முழுமையாக பதில் அளிப்பார். கர்த்தர் ஏற்கனவே நமக்கு பதில் அளித்து விட்டார். கர்த்தரை நாம் விசுவாசிக்கும் போது அவரிடம் நாம் கேட்கிறவைகளை அப்படியே அருளிச் செய்கிறார். இதனை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உண்மையான விசுவாசமும் கூட அதனை நாம் அப்படியே பார்க்கும் போது மிகவும் எளிதான காரியமாக இருக்கிறது. அது நாம் கர்த்தரை விசுவாசிப்பதாக மட்டுமே இருக்கிறது.

    நமக்குத் தேவையான காரியங்களைக் கேட்டு, கர்த்தரை விசுவாசித்து, அவருடைய பதிலுக்காக காத்திருப்பதே விசுவாசமாகும். அப்போது நாம் கேட்கிற இந்த எல்லாக் காரியங்களையும் கர்த்தர் நிறைவேற்றுகிறார். நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் கர்த்தரை விசுவாசிப்பது மட்டுமே என்ற உண்மையை நாம் மீண்டும் உறுதி செய்து கொள்ள வேண்டும். நிலைமாறாது அவரை நாம் விசுவாசிக்க வேண்டும். நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் என்ன? கர்த்தர் மீது விசுவாசம் வைப்பதே அதுவாகும். நாம் எதனைச் செய்தாலும், விசுவாசத்தாலேயே அதனைச் செய்ய வேண்டும். கர்த்தரே, நீர் இதனை எனக்கும் சபைக்கும் செய்வீர் என்பதை நான் அறிவேன் என்று விசுவாசித்து கர்த்தரிடம் ஜெபிக்க வேண்டும். கர்த்தரை நாம் விசுவாசிக்கும் போது அவர் நம்மில் செயல் படுகிறார்.

    கர்த்தர் எப்படி செயல் படுகிறார் என்று அனுபவிக்க விரும்புகிறீர்களா?

    கர்த்தர் உங்களுக்காக எப்படி செயல்படுகிறார் என்பதை அனுபவிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்களுக்காக செயல் படும் அவரை விசுவாசியுங்கள். கர்த்தரை நீங்கள் விசுவாசித்தால் அவருடைய வல்லமையை ருசிப்பீர்கள். இல்லாவிட்டால் அதற்கு மாறாக கர்த்தருடைய சாபத்தை பெற்றுக் கொள்ளுவீர்கள். அவரை விசுவாசிக்காவிட்டால் நீங்கள் இப்போது இருக்கும் இடத்திலே அப்படியே இருக்க மாட்டீர்கள். உங்களிடம் இருக்கும் காரியங்களும் கூட உங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளப் படும். நாம் எதனைச் செய்தாலும், கர்த்தரை விசுவாசிக்கும் விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும். நிச்சயமாக நம்மிடம் விசுவாசம் இருக்க வேண்டும். நம் வாழ்விலே, கர்த்தரை விசுவாசிக்கும் விசுவாசம் இருக்க வேண்டும், அவரைப் பின்பற்றி அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டும். கர்த்தரே இதனை நீர் எனக்கு அருளிச் செய்வீர் என்று விசுவாசிக்கிறேன். கர்த்தரே, தயவு செய்து எனக்காக இதனைச் செய்யும்.

    என்னுடைய உடன் விசுவாசிகளே, கர்த்தரை விசுவாசித்து நீங்கள் விசுவாசத்தை கடை பிடிக்க வேண்டும். பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்ட பிறகு ஏனோதானோ என்று வாழுவது ஒரு விசுவாச வாழ்க்கை ஆகாது. கர்த்தரை நீங்கள் விசுவாசித்தால் குளிர்காலத்திலும் கூட உங்களால் அத்தி மரத்தின் கனியை புசிக்க முடியும். நீங்கள் கர்த்தரை விசுவாசிக்கும் போது சாத்தியமில்லாத காரியங்களும் கூட சாத்தியமுள்ளதாகும். கர்த்தர் மீதுள்ள விசுவாசத்தின் மூலமாக அளவில்லாமல் நீங்கள் ஆசீர்வதிக்கப் படுவீர்கள். இதுவே கர்த்தரை விசுவாசிக்கும் விசுவாசமாகும். நீங்கள் கர்த்தரிடம் ஜெபிக்கும் போது, நீங்கள் வேண்டுகிற காரியங்களை ஏற்கனவே பெற்றுக் கொண்டதாக விசுவாசித்தால், அப்போது நீங்கள் ஜெபித்தவாறு அப்படியே நிறைவேற்றுவார். நீங்கள் ஜெபிக்கும் போது, கர்த்தரே, அதனை எனக்குத் தாரும். தயவு செய்து எனக்கு அதனை அனுமதியும். இதனை எனக்கு அருளிச் செய்வீர் என்பது எனக்குத் தெரியும். கர்த்தரே, நான் உம்மை நேசிக்கிறேன், என்றால் அப்போது கர்த்தர் இதனை முழுவதுமாக அருளிச் செய்வார். ஆனால் நம்மிடம் கர்த்தர் மீதான விசுவாசம் இருக்க வேண்டும் என்பது ஒரே அவசியமான காரியமாகும். உங்கள் வாழ்விலே உங்களுக்கு விசுவாசம் இருக்க வேண்டும். உங்கள் எல்லாக் காரியங்களிலும் கர்த்தரை விசுவாசிக்கும் விசுவாசம் உங்களிடம் இருக்க வேண்டும். நாம் கேட்கிற எல்லா காரியங்களிலும் கர்த்தரை விசுவாசிக்கும் விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும். கர்த்தரை நாம் விசுவாசித்தால் அவை அனைத்தும் நிறைவேற்றப் படும்.

    நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் தேவன் தன் சீடர்களை அழைத்துச் சென்று கர்த்தரை விசுவாசிக்கும் விசுவாசம் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு காட்டினார். கீழ்வருமாறு தன் சீடர்களுக்கு போதிக்க இயேசுவானவர் விரும்பினார்: என்னை நீங்கள் விசுவாசித்தால் அது கனிதரும் காலமாக இல்லா விட்டாலும் கூட உங்களால் அத்திமரத்தில் இருந்து கனியை புசிக்க முடியும். நீங்கள் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டு என்னுடைய சீடர்களாக மாறி பிறகு சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு ஏனோதானோ என்று வாழ நீங்கள் முயற்சி செய்யக் கூடாது. நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டும். உங்கள் நித்திய ஜீவனை பாதுகாக்க எப்போதும் என்னை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். என்னை நீங்கள் விசுவாசித்தால் உங்களுக்குள் நான் செயல் படுவேன். இந்த சத்தியத்தை தன் சீடர்களுக்கு போதிக்க தேவன் விரும்பினார். தேவன் தன் சீடர்களிடம் மீண்டும் மீண்டும் இவ்வாறு கூறினார், "எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆதலால், நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ,

    Enjoying the preview?
    Page 1 of 1