மத்தேயு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (V) - நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் இவ்வாறு கூறினர்
By Paul C. Jong
()
About this ebook
நாம் பரப்பிக்கொண்டிருக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து புதிதாக மறுபடியும் பிறந்த புதிய கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். ஜீவ அப்பத்தினால் அவர்களை நிறைவாக்க நாம் முயன்று வருகிறோம். ஆனால் அவர்கள் நம்மிடமிருந்து அதிக தொலைவிலிருப்பதால், உண்மையான நற்செய்தியினால் அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.
ஆகவே இராஜாதி ராஜாவான இயேசு கிறிஸ்துவின் மக்களுடைய ஆவிக்குரிய தேவைகளைச் சந்திக்கவும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை விசுவாசித்து தம் பாவங்களுக்கு மன்னிப்பு பெற்றவர்களான அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையை நடத்தவும், தம்முடைய விசுவாசத்தைக் காத்துக் கொள்ளவும், அவருடைய தூய வார்த்தையினால் போஷிக்கப்பட வேண்டுமென நூலாசிரியர் அறிவிக்கிறார். இப்புத்தகங்களில் உள்ள பிரசங்கங்கள் மறுபடியும் பிறந்தவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான புதிய அப்பமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
கர்த்தர் தம்முடைய ஆலயத்தின் மூலமாகவும் ஊழியர்கள் மூலமாகவும் இந்த ஜீவ அப்பத்தை உங்களுக்குத் தொடர்ந்து அளிப்பார். இயேசு கிறிஸ்துவினுள் நம்முடனே கூட உண்மையான ஆவிக்குரிய ஐக்கியத்தை வைத்துக் கொள்ள விரும்பும், நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்தவர்களுடன் கர்த்தரின் ஆசீர்வாதங்கள் இருப்பதாக.
Related to மத்தேயு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (V) - நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் இவ்வாறு கூறினர்
Related ebooks
மத்தேயு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (I) - ஒரு கிறிஸ்தவனால் எப்படி தேவனுடனே கூட நெருக்கமாக உரையாட முடியும்? Rating: 0 out of 5 stars0 ratingsகலாத்தியரைக் குறித்த பிரசங்கங்கள் - சரீர விருத்தசேதனத்திலிருந்து மனந்திரும்பும் கொள்கை வரை (I) Rating: 0 out of 5 stars0 ratingsஉங்களுடைய இருதயத்தில் குழப்பமும் வெறுமையும் இருந்தால், சத்தியத்தின் ஒளியைத் தேடுங்கள் (I) (Tamil67) Rating: 0 out of 5 stars0 ratingsOnly God Works: (Tamil) Investing Now What Matters Then Rating: 0 out of 5 stars0 ratingsஆசரிப்புக் கூடாரம்: இயேசுகிறிஸ்துவைக் குறித்த ஒரு விளக்கமான ஓவியம் (I) Rating: 0 out of 5 stars0 ratingsஆசரிப்புக் கூடாரம்: இயேசுகிறிஸ்துவைக் குறித்த ஒரு விளக்கமான ஓவியம் (II) Rating: 0 out of 5 stars0 ratingsமாற்கு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (III) - விசுவாசத்தின் ஆசீர்வாதம் இருதயத்தினால் பெற்றுக் கொள்ளப் படுகிறது Rating: 0 out of 5 stars0 ratingsகொரோனா வைரஸ் காலத்தில் நமக்கான கர்த்தருடைய நிரூபங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsதேவபக்தியும் அவபக்தியும்!: தேவபக்தியை அடையக்கூடிய வழிமுறைகளை விளக்கும் ஒரு புத்தகம்! Rating: 0 out of 5 stars0 ratingsலேவியராகமத்தைக் குறித்த பிரசங்கங்கள்: கர்த்தர் உங்கள் எல்லா மீறுதல்களையும் தீர்த்து விட்டார் Rating: 0 out of 5 stars0 ratingsஉங்களுடைய இருதயத்தில் குழப்பமும் வெறுமையும் இருந்தால், சத்தியத்தின் ஒளியைத் தேடுங்கள் (II) Rating: 0 out of 5 stars0 ratingsSankarar Endra Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsAnugraham Rating: 0 out of 5 stars0 ratingsAanma Vazhikatti Punitha Thanthai Pio Rating: 0 out of 5 stars0 ratingsKural Selvam Rating: 0 out of 5 stars0 ratingsDeviyar Thirumanam Rating: 0 out of 5 stars0 ratingsDeivathin Kural – Vol 1 Rating: 0 out of 5 stars0 ratingsசிவபுராணம் (மறைபொருள் விளக்கவுரையுடன்) Rating: 0 out of 5 stars0 ratingsGeethodhayam Rating: 0 out of 5 stars0 ratingsடிடகே: The Didache in Tamil Rating: 0 out of 5 stars0 ratingsDeiveega Ragasiyangal! Rating: 0 out of 5 stars0 ratingsGaruda Puranam Rating: 0 out of 5 stars0 ratingsInnilai Rating: 5 out of 5 stars5/5Palan Tharum Parigara Koyilgal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsBhagavath Geethaiyil Athisaya Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsUdaikkum Uligal Rating: 0 out of 5 stars0 ratingsKanchi Thalaivan Karunai Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsKarikaal Valavan Rating: 0 out of 5 stars0 ratingsVisithra Jothida Murai Rating: 4 out of 5 stars4/5Aanandha Sai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for மத்தேயு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (V) - நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் இவ்வாறு கூறினர்
0 ratings0 reviews
Book preview
மத்தேயு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (V) - நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் இவ்வாறு கூறினர் - Paul C. Jong
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை
விசுவாசிப்பவர்கள் இவ்வாறு கூறினர்
மத்தேயு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (V)
Smashwords Edition
Copyright 2007 by Hephzibah Publishing House
எல்லா உரிமையும் பதிப்பாளருக்கே. இப்புத்தகத்தின் எப்பகுதியையும் பிரதியெடுக்கவோ, மறுபடியும் நூலாக்கும் வகையில் பதிவு செய்தலோ; மின்னனுவியல், இயந்திரவியல், ஒளிப்பிரதியெடுத்தல், பதிவு செய்தல் மேலும் எவ்வகையிலோ தகவல் பரிமாற்றம் செய்யலாகாது. அப்படிச் செய்வதானால் பதிப்பாளர் அல்லது பதிப்புரிமை உடையவர்களிடமிருந்து எழுத்து மூலமான அனுமதி பெறப்பட வேண்டும்.
வேதவசனங்கள் தமிழ் வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டப்.
ISBN 978-89-6532-248-1
அட்டைப்படம்: மின்.சூ.கிம்
வரைபடம்: யங்-ஏ. கிம்.
இந்நூல் கொரியாவில் அச்சிடப்பட்டது.
பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் 24
· தேவனுடைய இரண்டாவது வருகைக்காக ஆயத்தம் செய்யுங்கள் (மத்தேயு 24:7-31)
· Rகடைசிநாட்களில் உங்களுடைய சுயநலத்தை வீசிவிட்டு உங்கள் விசுவாசத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் (மத்தேயு 24:9-14)
· உபத்திரவகாலம் வருகிறது என்பதை அறிந்து கொண்டு உங்கள் விசுவாசத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் (மத்தேயு 24:29-31)
· உபத்திரவத்திற்கு பின்னர் என்ன நடக்கும்? (மத்தேயு 24:29-31)
· கர்த்தர் உங்களுக்கு கொடுத்த தாலந்துகளினால் தேவனுக்கு ஊழியம் செய்யுங்கள் (மத்தேயு 24:32-44)
· கடைசிநாட்களைக் குறித்த விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும் (மத்தேயு 24:32-51)
· ஞானத்தை விரும்புங்கள் (மத்தேயு 24:32-51)
· உலகத்தின் காரியங்களை விடவும் தேவனை அதிகமாக நேசியுங்கள் (மத்தேயு 24:32-51)
· நியாயத்தீர்ப்பைக் குறித்து கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருங்கள் (மத்தேயு 24:37-43)
· காலத்தை பிரித்துணரும் ஞானிகளாக நாம் இருப்போம் (மத்தேயு 24:37-51)
அத்தியாயம் 25
· முட்டாள் கிறிஸ்தவர்களும் ஞானிகளான கிறிஸ்தவர்களும் (மத்தேயு 25:1-12)
· நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது உங்கள் இருதயங்களை வையுங்கள் (மத்தேயு 25:1-13)
· தேவனுடைய செயலைச் செய்யுங்கள் (மத்தேயு 25:14-30)
· நம்மால் முடியும் போதெல்லாம் நற்செய்தியை பரப்ப வேண்டும் (மத்தேயு 25:14-30)
முன்னுரை
அனைத்து நாடுகளிலும், மக்கள் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுகிறார்கள். அதன் விளைவாக, அவர்கள் தேவனாகிய இயேசு கிறிஸ்துவுடனே நடக்கும் போது அவர்களுக்கு வழிகாட்டவும் வழிநடத்தவும் மக்கள் தேவைப் படுகிறார்கள். தம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் பாவ மன்னிப்பு பெற்றுக் கொண்டவர்களை ஆலயத்திற்குள்ளாக நாம் வழிநடத்த வேண்டும். உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் அநேக தலைவர்கள் தோன்றுவார்கள் என நான் உறுதியாக விசுவாசிக்கிறேன். கர்த்தரின் தூதர்களாகவும், மிஷனரிகளாகவும் எனது எல்லா அலுவலக ஊழியர்களையும் உலகம் முழுவதும் அனுப்ப நான் விரும்புகிறேன். ஆயினும், நான் அவர்களை நாடுகளின் மத்தியில் அனுப்பிவிட்டால், பொன் விளக்குத்தண்டின் மொட்டுக்களாக இருக்கும் கர்த்தரின் செயல்களிலும் நீதியின் நற்செய்தியிலும் நம்மைத் தாங்குவது யார்? ஆகவே, அவர்களின் சொந்த நாட்டிலே, கர்த்தரின் ஊழியர்கள் எல்லா நாடுகளிலும் உருவாவார்கள் என்று விசுவாசத்துடனே நான் ஜெபிக்கிறேன்.
விடுவிக்கப்பட்டோர்களின் எதிர்கால தலைவர்களுக்கு நான் எழுதும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான வரிசையின் முதலாவது நூல் இந்த வெளியீடாகும். நான் தேவனுக்கு ஊழியம் செய்வதின் மூலமாக, கர்த்தரின் மக்கள் எழும்புவார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். இந்த எதிர்கால ஊழியர்களை எதிர்பார்த்து, இந்த பிரசங்கங்களை நான் ஒலிநாடாவில் பதிவு செய்தேன், அதனை நான் இப்போது உங்களுக்கு வழங்குகிறேன். நாளைய தலைவர்களைப் பயிற்றுவிப்பதற்காக இந்த பிரசங்கங்கள் செப்பம் செய்யப்பட்டு மொழிபெயர்க்கப் பட்டுள்ளன, இது ஆத்துமாவைப் போஷிக்கும் செய்தியை உங்கள் இருதயத்திற்கு அளிக்கும்.
இந்தப் பிரசங்கங்கள் எல்லா மக்களுக்கும் ஆவிக்குரிய உணவாக இருக்கும் என நான் விசுவாசிக்கிறேன். எல்லா விசுவாசிகளுடனும், மற்ற நாடுகளில் உள்ள கர்த்தரின் ஊழியர்களுடனும் நேரடியாக ஐக்கியமாவது நம்மால் முடியாத காரியமாகையால், இந்த புத்தகத்தைப் பகிர்ந்து கொள்ளுவதின் மூலமாக, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை ஏற்கனவே விசுவாசித்தவர்களுடன், என்னால் ஆவிக்குரிய ஐக்கியத்தைப் பெற முடியும். ஜீவ ஆகாரத்தை எங்களுக்கு அளித்து எங்களைத் தனது ஊழியர்களாக மாற்றிய அவருக்கு நன்றியறிதல் உள்ளவர்களாக இருக்கிறோம்.
இதுவரை நாம் ஆங்கிலத்தில் 20 இற்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம்முடைய பாவங்களில் இருந்து பாவமன்னிப்பு பெற்றுக் கொண்டதினால், நம்முடைய புத்தகங்களை வாசித்தவர்கள் நன்றியுடையவர்களாக இருப்பதையும் நாம் கண்டோம். இப்போது இந்த பிரசங்கங்களின் மூலமாக, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே வாழ்க்கையைக் கொடுக்கும் ஒரே சத்தியமாக இருக்கிறது என்பதைக் குறித்து மீண்டுமாக நான் கூற விரும்புகிறேன். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தால் அனைத்து வேதவசனங்களும் நிறைந்துள்ளன என்பதை அவர்கள் அனைவரும் அறிந்து கொள்ளுவார்கள் என்பதில் நான் நிச்சயமாக இருக்கிறேன். இதனைத் தொடர்ந்து உலகில் உள்ள அனைத்து மக்களும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே ஒரே சத்தியம் என்பதை அறிந்து கொள்ளுவார்கள். இந்த சத்தியத்தை அவர்கள் அறிந்து, தம்முடைய உணர்ச்சிகளால் நிறைந்த விசுவாசத்தை வீசி விட்ட பிறகு, அவர்களின் இருதயங்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் நிறையும், மேலும் இது மட்டுமே நித்திய பாவமன்னிப்பிற்கான ஒரே வழியாகவும் இருக்கிறது. ஆகவே, உலகம் முழுவதும் உள்ள மக்கள் கிறிஸ்துவின் சீடர்களாக வாழ்வர். இப்போது, நாம் இழந்து போன ஆத்துமாக்களை இரட்சிக்கும் கருவிகளாக மாறுவோமாக, மேலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வல்லமையின் மீதுள்ள விசுவாசத்தினால், உலகம் முழுவதும் உள்ள இழந்து போன ஆடுகளுக்கான அவரின் செயல்களை செய்வோமாக.
ஒவ்வொரு செடியும் பூ பூத்து கனிகளைத் தருவதைப் போல, உண்மையான நற்செய்தியின் வல்லமையானது அதனை விசுவாசிப்பவர்களை ஆசீர்வதிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் தம்முடைய வாழ்க்கையை கர்த்தரின் ஊழியர்களாக வாழவும் அனுமதிக்கிறது. அவர்கள் சரீரப்படியாகவும் ஆவிக்குரிய படியாகவும் ஆசீர்வதிக்கப்படுவார்கள். இப்போது, அனைத்து நாடுகளிலும் உள்ள கர்த்தரின் ஊழியர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விதைப்பதுடன் எண்ணிலடங்காத மக்களை அவர்களின் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கின்றனர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களாகிய நாம், கர்த்தரின் ராஜ்யத்திற்கு அதிக கனி கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். நாம் அறுவடையின் காலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதோடு இரட்சிப்பின் கனிகளை அதிகமாக கொடுப்பவர்களாக இருக்கவேண்டும். இப்போது, நாம் அவரின் வார்த்தைகளை விசுவாசிப்போம், அவருக்கு நன்றியறிதல் உடையவர்களாக இருப்போம், மற்றும் அவருக்கு மகிமை செலுத்துவோம்.
கர்த்தர் அனுமதித்தால், நாம் இந்த காரியங்களையும் இன்னமும் அநேக காரியங்களையும் செய்வோமாக. அவர் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன் - அந்த ஆசீர்வாதமானது பரலோகத்தின் பரிசுத்த விசுவாச ஆசீர்வாதமாகவும் பூமியின் செழிப்பாகவும் இருக்கிறது - அது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் அனைவருக்கும் கொடுக்கப் படுகிறது.
Paul C. Jong
Chapter2424தேவனுடைய இரண்டாவது வருகைக்காக ஆயத்தம் செய்யுங்கள்
< மத்தேயு 24:7-31 >
ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன். வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரத்தை எடுப்பதற்கு திரும்பாதிருக்கக்கடவன். அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ. நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில், உலகம் உண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாகும். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும். அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
எனக்குள் ஒரு சிந்தனை தோன்றியது, நீதிமான்கள் அனைவரும் ஒன்று கூடி ஆராதனை செய்வதற்கு, இந்த நேரத்திலிருந்து இன்னமும் எவ்வளவு நேரம் மிச்சமிருக்கிறது?
10 வருடங்கள் போதுமானது என நான் எண்ணுகிறேன். எடுத்துக் கொள்ளப்படும் வரை, மகா உபத்திரவத்தின் காலத்தை நீதிமான்களாகிய நாம் எப்படி சகித்துக்கொள்ளப் போகிறோம் என்று நான் கவலைப் படுகிறேன். ஆயினும், மறுபுறம் பார்க்கும் போது, நன்றியின் உணர்ச்சியும் கூட எழும்புகிறது. எடுத்துக்கொள்ளப் படும் வரையில் நாம் உயிரோடு இருக்க நேரிட்டால், தேவனுக்கு முன்னால் நாம் உயர்த்தப் படுகிற மகிமையை அனுபவிப்பதோடு, மரணத்தை அனுபவிக்காமலேயே நம்மால் மாற முடியும் என்பதைக் குறித்து நான் எண்ணியதே இதற்கு காரணமாகும். அப்போஸ்தலனாகிய பவுல், இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்
(1 கொரிந்தியர் 15:51), என்று கூறியதின் மூலமாக, நாம் அனைவரும் கண்ணிமைக்கும் நேரத்திலே மறுரூபமாக்கப்பட்டு, தேவனை ஆகாயத்திலே சந்திக்க மேகமீதில் என்று பொருள் படும் படி கூறினான் (1 தெசலோனிக்கேயர் 4:17). ஆகவே, நாம் நல்ல நேரத்தில் பிறந்தோம் என்று உங்களிடம் கூறுவதா அல்லது கெட்ட நேரத்தில் பிறந்தோம் என்று உங்களிடம் கூறுவதா என்பது எனக்குத் தெரியவில்லை. இதற்கு காரணம் விசுவாச வாழ்வு ஏட்டின் படியாக இல்லாமல் உண்மையாக இருப்பதேயாகும்.
நீதிமான்கள் எப்படி 10 வருடங்கள் சகித்திருப்பார்கள்
நீதிமான்களாகிய நாம் இப்போதிலிருந்து 10 வருடங்களுக்கு எப்படியாக நம் விசுவாச வாழ்வை வாழப் போகிறோம் என்பது மிகவும் முக்கியமாகும். இப்போதிலிருந்து தேவன் 10 வருடங்களுக்குள்ளாக வராவிட்டாலும் கூட, அழிவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகத்திலே இன்னுமொரு 10 வருடங்கள் நம் விசுவாச வாழ்வை வாழுகிறோமா இல்லையா என்பது நமக்கு மிகவும் முக்கியமாகும்.
நான் உங்களை பலவந்தப் படுத்தவில்லை. இந்த வேளையில், தடையில்லா சந்தை என்ற தலைப்பின் அடிப்படையில், உலகம் முழுவதும் பொருளாதார கூட்டமைப்பின் கீழ் வரவேண்டும் என்று உருகுவே பேச்சு வார்த்தையில் உலகம் ஒத்துக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பான வியாபார கொள்கையை விட்டு விட்டு விவசாய பொருட்களைத் திறந்து விடும் படியாக உலகம் முழுவதும் உள்ள நாடுகள் கொரியாவை நிர்ப்பந்திக்கின்றன. இத்தகைய நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, நான் இவ்வாறு எண்ணத்தொடங்கினேன், அவர்கள் நல்லதொரு நாடகத்தை நடித்துக் கொண்டிருக்கிறார்கள். சீக்கிரமாக, அவர்களுக்கே புசிப்பதற்கு எதுவும் இருக்காது, இந்நிலையில் தம் உணவுப் பொருட்களை வாங்கும் படியாக கொரியாவை பலவந்தம் செய்கிறார்கள். 2 அல்லது மூன்று வருடங்களுக்கு உலகம் முழுவதும் பஞ்சம் நிலவினால், அவர்களுடைய உணவுப் பற்றாக்குறையினால் அனைவரும் பட்டினியால் மரித்துப் போவார். இத்தகைய சூழ்நிலை இருந்தாலும் கூட, தம்முடைய உணவுகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் ஏன் பலவீனமான ஒரு நாட்டிற்கு வந்து அதனை பயமுறுத்த வேண்டும்?
ஒரு காலத்திலே, முன்னால் சோவியத் ஒன்றியத்தின் ஒரு அரசியல் தலைவரான, கோர்ப்பசேவ், பெரெஸ்ட்ரோய்க்கா என்ற தலைப்பிலே சோவியத் ஒன்றியத்தை சீர்த்திருத்தம் செய்ய முயன்றார். அந்த காலத்திலே, கோர்ப்பசேவ் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு தலைவர், ஆனாலும் கூட கோர்ப்பசேவ் நிச்சயமாக கவிழ்க்கப்பட்டு அவருடைய கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப் படாது என்பதில் நான் நிச்சயமாக இருந்தேன். கடைசிகாலத்திலே வடதிசையின் ராஜா இஸ்ரவேலின் மீது படையெடுப்பான் என்று வேதாகமம் கூறுகிறது (தானியேல் 11:9). அப்படியாக இருக்கப் போகும் ஒரு நாடாகிய ரஷ்யா, குடியரசைக் குறித்தும் அரசியல் சீர்த்திருத்தத்தைக் குறித்தும் மாறுவார்கள் என்று தோன்றவில்லை. அந்த நாடு அடிப்படையில் வன்முறையும் மூர்க்கமும் நிறைந்த ஒரு நாடாகும். அந்த நாடு தன் ஒன்றியத்தைக் கலைத்துக் கொண்டு ஒவ்வொரு மாநிலமும் சுதந்திரமான நாடுகளாக மாறிவிட்டாலும் கூட, அவர்கள் சீர்த்திருத்தத்தைக் குறித்து சத்தமிட்டாலும் கூட, அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டாலும் கூட, கடைசியில் அவர்கள் மீண்டுமாக ஐக்கியமாவார்கள். இந்த நாடுகள் மீண்டுமாக ஒன்றாக சேர்ந்து, முழு உலகத்துடனும் போரிடத் தொடங்குவார்கள். அப்படிச் செய்யக் கூடிய ஒரு நாடு முன்னால் சோவியத் ஒன்றியம் மட்டுமே.
ஆகவே, கோர்ப்பசேவின் புகழ் உயர்ந்து கொண்டிருந்த போது, நகைச்சுவையாக நான் கீழ்வருமாறு கூறினேன், ஆ, சீக்கிரமாகவே அந்த மனிதர் தன் பதவியில் இருந்து விலகிவிடுவார். இப்போது, எந்த பொருளும் இல்லாத கொள்கைகளை அவர் தினித்துக் கொண்டிருக்கிறார்.
என்னைச் சுற்றிலும் இருக்கும் மறுபடியும் பிறக்காதவர்களிடம் இதனைக் கூறிய போது, அவர்கள் என்னை பைத்தியம் பிடித்தவன் என்று சுட்டிக் காட்டினர். அவர்கள் நிந்திக்கும் படியாக என்னிடம் கூறினர், உங்களுக்கு என்ன தெரியும்? சோவிய ஒன்றியத்தின் திறந்த கதவுகள் கொள்கையை அமெரிக்கா ஆதரிப்பதுடன் முழு உலகமும் கைத்தட்டுகிறது. ஆனாலும், அப்படி ஒரு காரியத்தைக் கூறுவதற்கு உங்களுக்கு என்ன தெரியும்?
நான் அவர்களிடம் கூறினேன், அது உண்மையாகவே நடக்கிறதா என்று நாம் காத்திருந்து பார்ப்போம். சிறிது காத்திருங்கள், கோர்ப்பசேவின் கொள்கைகள் திருப்தியில்லாததாக மாறிவிடும். சீக்கிரமாகவே, அவர் தன் பதவியில் இருந்து இறங்கி விடுவார்.
அதன் படியாக, சிறிது காலத்திற்கு பிறகு அவர் தன் பதவியிலிருந்து இறங்கினார். அப்போது, பாவிகள் என்னை ஒருமாதிரியாக பார்த்தனர். அவர்கள் கீழ்வருமாறு கூறினர், அந்த மனிதன் ஆச்சரியமானவன். வாவ், அவரால் அதனை எப்படி முன்கூறமுடிந்தது?
என்னுடைய உடன் விசுவாசிகளே, நான் அறிவாளியா? நான் அறிவாளியாக இருப்பதினால் இந்த வார்த்தைகளைக் கூறினேனா? இல்லை, அது உண்மை இல்லை. இந்த காரியங்கள் வேதாகமத்தில் காட்டப்பட்டிருப்பதினால் வேதாகமத்தை அப்படியே விசுவாசித்து அதனைக் கூறினேன். எல்லா காரியங்களிலும் விசுவாசமே சாரமாக இருக்கிறது என்று கர்த்தர் கூறும் கர்த்தருடைய வார்த்தையை நான் விசுவாசிப்பதினாலும், வார்த்தையின் படியாக ஒவ்வொரு காரியங்களும் நடைபெறுகின்றன என நான் விசுவாசிப்பதினாலும், இந்த வார்த்தைகளை என்னால் விசுவாசத்தினால் கூற முடிந்தது. மதச் சுதந்தரம் இருக்கும் ஒரு நாட்டிலே, ஒரு மனிதனால் தன் விசுவாசத்தைக் குறித்து பேச முடியாதா? ஒரு மனிதனால் அப்படி பேசமுடியாத ஒரு நாடு, கம்யூனிச நாடாக மட்டுமே இருக்க முடியும். எது எப்படி இருந்தாலும் கூட, அது அப்படி நடந்ததினால், என் புகழ் பாவிகளுக்கு நடுவே ஓரளவு உயர்ந்தது.
பயங்கரமான உலகம்
என்னுடைய உடன் விசுவாசிகளே, உலகம் எப்படி மாறிக்கொண்டிருக்கிறது என்பதை தயவு செய்து பாருங்கள். நீங்கள் நல்லதொரு மனநிலையுடன் இருக்கலாம், ஆனால் உலகம் எப்படி மாறிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் யோசித்து பார்த்தால், உங்கள் இருதயங்களால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியாது. சாக்சோவில் இருந்து நீங்கள் சன்ச்சியோனிற்கு வரும் போது, ஹான் நதியை ஒட்டியவாறே நீங்கள் பயணம் செய்வீர்கள். நான் ஒவ்வொரு வருடமும் சாக்சோவிற்கு பலமுறை சென்று வருவதால், அதன் நீர்மட்டம் உயர்ந்து, கரையோரம் வரை நீர் இருப்பதை நான் கண்டேன். ஆனால், ஒவ்வொரு வருடங்களாக சென்ற பிறகு, நீர் மட்டம் சிறிது சிறிதாக குறைந்து, இப்போது அங்கே நதியே இல்லை என்னும் அளவிற்கு அது குறுகிவிட்டது. மிகவும் அகலமான ஆற்றுப்படுக்கையில் இப்போது மிகவும் குறைந்த அளவு நீர் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது. உலகத்தின் மிகவும் பெரிய நதியான அமேசான் நதியும் கூட, அப்படியாக வற்றிக் கொண்டிருக்கிறது என கூறப்படுகிறது, உண்மையாகவே, வரட்சியினால் ஏற்படும் அதிகப் படியான நீர் பற்றாக்குறையைக் குறித்து மிகவும் அதிமாக கவலைப் படும் ஒரு இடமாக இந்த இடம் மாறிவிட்டது.
இந்த குளிர்காலத்தில் குறைவான பனிப்பொழிவு இருந்ததினாலே, கொரியாவின் தெற்குப் பக்கத்தில் வருகின்ற கோடைகாலத்திலே குடிநீருக்கு மிகவும் தட்டுப்பாடு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குடி நீருக்கே இப்போது முற்றிலும் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும், தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தவும், விவசாயத்திற்கு பயன்படுத்தவும் நீர் இல்லை என்று கூறப்படுகிறது. பின்காலத்தில், குளியலறையில் இருந்து வரும் கழிவு நீர் மிகவும் விலையேறப்பட்டதாக கருதப்பட்டு, அந்த நீரை நாம் மீண்டும் தூய்மையாக்கி குடிக்கும் படியான நிலை ஏற்படக்கூடும். அப்படி நடப்பது மிகவும் சாத்தியமான ஒன்றாகும். இப்படியாக, மிகவும் அதிகமாக பனி இருக்கும் வடக்குப் பகுதியில் நான் வாழுவதற்காக உண்மையாகவே நான் நன்றியறிதல் உடையவனாக இருக்கிறேன். நான் பூசான் நகரத்திலே பிறந்து வளர்ந்தேன், ஆனால் நான் அங்கே இருந்திருந்தால், மக்களுடைய சிறுநீர் மற்றும் மலம் போன்றவைகள் கலந்த நீரை சேகரித்து தூய்மைப் படுத்தி அதனை குடிக்க வேண்டியிருந்திருக்கும். ஆயினும், நான் இப்போது வடக்குப் பகுதியில் வாழ்ந்து வருகிறேன், நான் அப்படிச் செய்ய வேண்டியதில்லை என்பதற்காக நான் நன்றி கூறுகிறேன்.
வேதாகமத்திலே கூறப்பட்டுள்ள காலத்தின் முடிவு எப்போது தொடங்கும்?
துல்லியமாக கேட்டால், எந்த திகதியிலே இந்த உலகமானது தன்னுடைய முடிவைச் சந்திக்கும்? எடுத்துக் கொள்ளப் படுதல் எப்போது நடக்கும்? அனைத்து மக்களுடைய கவலையும் இதுவேயாகும். மனிதகுலம் முழுவதும் மிகவும் கவலைப் படுகின்ற மிகப் பெரிய காரியங்கள் கீழ்வரும் மூன்று கேள்விகள் மட்டுமே. மகா உபத்திரவ காலம் எப்போது தொடங்கும்? இந்த உலகம் எப்போது முடிவுக்கு வரும்? மேலும், நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறந்த நீதிமான்கள் எப்போது எடுத்துக் கொள்ளப் படுவார்கள்? காலத்தின் முடிவிலே மகா உபத்திரவம் உண்டு என வேதாகமம் அடிக்கடி கூறுகிறது. இஸ்ரவேல் நாடு மகா உபத்திரவத்திற்குள் விழுந்து மூன்றரை வருடங்கள் உபத்திரவத்தை அனுபவிக்கும் என எழுதப் பட்டுள்ளது. மேலுமாக, கர்த்தருடைய மக்களில் கடைசிகாலத்தினை சகித்துக் கொள்ளும் மக்கள் இரட்சிப்பை பெற்றுக் கொள்ளுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் உலகத்தின் முடிவு மிகவும் சமீபம் என்று வேதாகமம் கூறுகிறது.
இஸ்ரவேல் நாடு தன்னுடைய நாட்டை 2,000 வருடங்களாக இழந்திருந்த நிலையில், அன்மையில் தான் அது மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. மீண்டுமாக முளைத்த அந்த நாடு மிகவும் அடர்த்தியான இலைகளுடன் வளர்ந்து வருகிறது. அந்த நாடு இன்னமும் சிறிது வளர்ந்தவுடன், அவர்கள் காத்திருந்த இயேசுவானவர் ஏற்கனவே கடந்தகாலத்திலே வந்தார் என்ற சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் வரையும், அவர்கள் மீண்டுமாக பகைவர்களாக படையெடுக்கப் படுவார்கள். அப்போது அது மகா உபத்திரவத்திற்கு நடுவே வாழும். இஸ்ரவேல் நாட்டின் தேவாலயத்திலே, உடன்படிக்கை பேழை வைக்கப் பட்டிருந்த இடத்தின் மேலே மிகவும் திமிரான ஒரு மனிதன் அமர்ந்து கொண்டு, கீழ்வருமாறு அவன் கூறுவான், நானே கர்த்தர். இந்த நொடிப்பொழுதில் இருந்து, நீங்கள் கர்த்தருக்கு பலிகாணிக்கை செலுத்துவதை முற்றிலுமாக நான் தடுக்கிறேன்.
இஸ்ரவேல் மக்கள் மீதும் முழு உலகம் மீதும் மகா உபத்திரவம் மூன்றரை வருடங்களுக்கு இருக்கும் என தேவன் கூறினார். இஸ்ரவேல் நாடு மூன்றரை வருடங்களுக்கு மகா உபத்திரவத்தை அனுபவித்த பிறகு இந்த உலகத்திற்கு முடிவு வரும் என்று தானியேலின் புத்தகம் கூறுகிறது.
அப்படியானால், வேதனைகளின் தொடக்கம் எந்த நேரம் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்?
இந்த உலகத்தின் முடிவு எப்போது இருக்கும் என வேதாகமம் கூறுகிறது? இன்று, இதனைக் குறித்தும் இப்போதிலிருந்து நாம் எப்படி வாழுவது என்பதைக் குறித்தும் எண்ணி பார்க்கப் போகிறோம்.
மத்தேயு எழுதிய நற்செய்தியின் அதிகாரம் 24 இல், முழுவதுமாக, இஸ்ரவேல் நாட்டின் முடிவைக் குறித்தும் இந்த உலகத்தின் முடிவைக் குறித்தும் கூறப்பட்டுள்ளது. ஆகவே, இந்த அதிகாரம் கடைசிகாலத்தின் அதிகாரம் என்றே குறிப்பிடப்படுகிறது. சீடர்கள் முதலாவது தேவனிடம் கேட்டார்கள், இந்த காரியங்கள் எப்போது நடக்கும் என்று, எங்களுக்கு கூறும்? காலத்தின் முடிவிலே நீர் வருவதற்கான அடையாளம் என்ன?
தேவன் அவர்களுக்கு பதில் கூறி அவர்களிடம் கூறினார், உங்களை யாரும் வஞ்சிக்காதபடி எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அநேகர் என்னுடைய பெயரைக் கூறி, ‘நானே கிறிஸ்து’ என்று அநேகரை வஞ்சிப்பார்கள். போரையும் போரையும் குறித்து நீங்கள் கேள்விப் படுவீர்கள். இதனால் நீங்கள் கலக்கம் அடைய வேண்டாம்; ஏனெனில் இவை அனைத்தும் நடந்தேற வேண்டும், ஆனால் உடனே முடிவு வராது. மக்களுக்கு எதிராக மக்களும் நாடுகளுக்கு எதிராக நாடுகளும் போரிடும். வெவ்வேறு இடங்களில் பஞ்சங்களும், பட்டினிகளும், பூமி அதிர்ச்சிகளும் ஏற்படும். இவை அனைத்தும் வேதனைகளுக்கான தொடக்கமாகும்.
வார்த்தையின் மூலமாக, ஒரு கதையினைக் கூறுவதைப் போல உலகத்தின் முடிவைக் குறித்து தேவன் பேசினார். மேலுமாக, முடிவு காலத்தின் என்ன நடக்கும் என்பதைக் குறித்து தேவன் மீண்டும் மீண்டும் கூறினார். இப்படியாக, இந்த வசனத்தை ஒரு முறை வாசிப்பதின் மூலமாக மறுபடியும் பிறந்த நீதிமானால் இதனை புரிந்து கொள்ள முடியும். வேறு வார்த்தைகளில் கூறினால், இருளின் பிள்ளைகளின் மீது அழிவானது திருடனைப் போல வரும், ஆனால் வெளிச்சத்தின் பிள்ளைகள், உறங்காமல், அந்த நாளுக்காக உற்சாகத்துடன் காத்திருப்பார்கள் (1 தெசலோனிக்கேயர் 5:4-5). இந்த உலகத்தின் மக்களால் உலக முடிவைக் குறித்த கிறிஸ்துவின் வார்த்தையை புரிந்து கொள்ள முடியாது.
முதலாவதாக, மகா உபத்திரவம் எப்போது தொடங்கும் என தேவன் கூறினார், வசனம் 6இல் இப்படி கூறப்பட்டுள்ளது, யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது.
போர்களைக் குறித்தும் போர்களைக் குறித்த செய்திகளும் அதிகமாக இருக்கும். ஆயினும், அது முடிவாக இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
வசனம் 7 மற்றும் 8 இல், இவ்வாறு கூறப்பட்டுள்ளது, ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
என்னுடைய உடன் விசுவாசிகளே, எதிர்காலத்திலே மக்களுக்கு எதிராக மக்களும், நாடுகளுக்கு எதிராக நாடுகளும் எழும்பும், பஞ்சங்களும், பட்டினிகளும், பூமி அதிர்ச்சிகளும் ஏற்படும். சீக்கிரமாக, உலகம் முழுவதும் உள்ள பஞ்சம் மோசமாகும். ஒவ்வொரு நாடுகளும் அணிதிரண்டு ஒன்றுடன் ஒன்று போரிடும். ஒரு நாடு தன்னை பாதுகாத்துக் கொள்ள, அணு ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும். போர்கள் நடைபெறும் போது, அணு ஆயுதங்கள் இல்லாத பலவீணமான நாடுகள் பலமான நாடுகளினால் நசுக்கி அழிக்கப் படும்.
மேலுமாக, வல்லமையான நாடுகள் தன் இராணுவத்தை பயன்படுத்தாவிட்டாலும் கூட, பொருளாதார போர்களின் மூலமாக பலவீனமாக இருக்கும் நாடுகளை அழித்துப் போடுவர். உருகுவே பேச்சு வார்த்தையின் போது ஏற்படுத்தப் பட்ட உலக வர்த்தக நிறுவனத்தைப் பயன் படுத்தி, அனைத்து வல்லமையான நாடுகளும் தமக்கு சாதமாக இருக்கும் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு பலவீனமான நாடுகளை ஆளுகைச் செய்ய முயற்சி செய்வார்கள். உலகமயமாவது ஆதாயமளிக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள், ஆனால் அது எப்போதும் நல்லதல்ல. உலகமயமாக்குவதை முடிவு செய்வதின் மூலமாக, உலகம் ஒன்றாக மாறும், அப்போது முழுமையான ஒரு ராஜா உருவாவான். அப்போது, கடைசியில், 666 என்ற அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரையும் அவன் பலவந்தம் செய்வான். வேறு வார்த்தைகளில் கூறினால், முடிவை நோக்கி செல்லுவதற்காக உலகமானது இப்போது உலகமயமாதலைக் குறித்து ஓசை எழுப்புகிறார்கள்.
நாடுகளுக்கு இடையே ஏற்படும் போரினால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் எதிராக போரிடுவது செயற்கையான பேரழிவு என்று கூறப்படும், ஆனால் பஞ்சங்கள் மற்றும் பூமி அதிர்ச்சிகளினால் எடுத்து வரப் படும் இரண்டு பேரழிவுகளைக் குறித்து நம்மால் என்ன செய்ய முடியும்? உலகம் முழுவது, பஞ்சங்களின் எண்ணிக்கையும் பூமி அதிர்ச்சியின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இப்போது, பஞ்சத்தினால் அநேக மக்கள் மரித்து வருகிறார்கள். சிறிது காலத்திற்கு முன்னால் எத்தியோப்பிய அகதிகளும் சோமாலிய அகதிகளும் தொலைகாட்சிகளில் காட்டப்பட்டார்கள், சில குழந்தைகள் வயிறு வீங்கி பட்டினியால் வாடும் காட்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த வயிறு வீங்கிய குழந்தைகளை நான் பார்த்த போது என்னுடைய இளமையான நாட்கள் என் நினைவுக்கு வந்தது.
நான் சிறுவனாக இருந்தபோது, உணவு தட்டுப்பாடின் காரணமாக உண்ணுவதற்கு எதுவுமே இருக்காது, ஆகவே அந்த சிறுவர்களைப் போன்ற தோற்றமே என்னுடையதாக இருந்தது. அது கொரிய போருக்கு பின்னால் வந்த காலமாகும் (1950~1953), நாடே இடிபாடுகளுக்கு நடுவே இருந்தது. மேலும், உயிர் வாழுவது மிகவும் கடினமாக இருந்தது. சில உண்ணக்கூடிய புற்களை வயல்வெளிகள் இருந்து பறித்து அதனை சிறிதளவு அரிசியுடன் சேர்த்து பாத்திரத்திலே வெகு நேரமாக கொதிக்க வைத்தால், அங்கே ஒரு கஞ்சி கிடைக்கும். என் தாயார் அதிலே சிறிதை எடுத்து, ஒரு கோப்பையில் ஊற்றி, அதனைக் கலக்குவார். அதிலுள்ள சோற்றுப் பருக்கைகளை உங்களால் எண்ணிவிட முடியும். சிறிது சோற்றுப் பருக்கைகளும், சிறிது உண்ணக் கூடிய காட்டுக் கீரைகளையும் தவிர மீதி எல்லாம் வெறும் நீர் மட்டுமே. ஆகவே, நீங்கள் எத்தனையாக புசித்தாலும் கூட, மீண்டும் பசி எடுத்துக் கொண்டே இருக்கும். உங்கள் பசியை தனிக்க தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள், ஆனாலும் உங்கள் வயிற்றிலே மிகவும் அதிகமாக நீர் நிரம்பி விடுவதினால் உங்களால் அப்படிச் செய்ய முடியாது. ஆகவே, நீங்கள் எழுந்திருக்க வேண்டுமானால், சாப்பாட்டு மேசையை பற்றிக் கொண்டு தான் அங்கிருந்து எழுந்திருக்க வேண்டும். உப்பலான வயிறு நிரம்பியதைப் போல தெரியக் கூடும், ஆனால் அங்கே எந்த சத்தும் இல்லாத நீர் மற்றுமே நிறைந்திருப்பதினால், நீங்கள் மிக அதிகமான பசியுடன் இருக்கிறீர்கள். இதனால் தான், தம்முடைய வயிறுகள் உப்பியிருக்கும் சோமாலிய சிறுவர்களை நான் பார்க்கும் போது, என்னால் அவர்கள் எத்தனை பசியுடன் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியும்.
அநேக பாவிகள் பஞ்சத்தினால் மரித்துப் போவார்கள்
எதிர்காலத்தில், சோமாலியர்கள் மட்டுமே பஞ்சத்தினால் மரிப்பவர்களாக இருக்கமாட்டார்கள், ஆனால் உலகம் முழுவதும் உள்ள அநேக மக்கள் பஞ்சத்தினால் மரிப்பார்கள். பூமி அதிர்ச்சிகளும் எல்லா இடங்களிலும் ஏற்படும். நேற்று, ஜப்பானின் ஒரு பலத்த பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. போதகர் கிம்மிடமிருந்து சில செய்திகளை அறிந்தேன், குறைந்தது 2,500 மக்கள் மரித்துப் போயினர், 4,000 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த பூமி அதிர்ச்சி மிகவும் பலம் வாய்ந்தது, இதன் அளவு ரிச்டர் அளவுகோலில் 7 ஆகும்; அநேக அழிவுகள் ஏற்பட்டன, வீடுகள் நொறுங்கின, சாலைகள் அழிக்கப் பட்டன, தொடர்வண்டி தடங்களும் துண்டிக்கப் பட்டன. உலகத்திலேயே உறுதியான கட்டிடங்களைக் தாம் கட்டியுள்ளதாக ஜப்பானியர்கள் பெருமைப் படுகிறார்கள். ஆனாலும், இந்த பூமி அதிர்ச்சியினால் பல கட்டிடங்கள் உடைந்து போயின. உடைபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க முடியாததினால் மரித்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று ஆயர் கிம் கூறினார்.
கடந்த வருடம் இதே நேரத்தில், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் பலத்த பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. சீக்கிரமாகவே அமெரிக்காவின் மேற்கு பகுதிகளில் மிகவும் பலமான பூமி அதிர்ச்சிகள் உருவாகும் என்று அமெரிக்க புவியியலாளர்கள் அறிவித்துள்ளனர். கண்டத்தகடுகளின் அமைப்பை வைத்தும் அவை எத்தனை வேகமாக நகருகின்றன என்பதை வைத்தும் புவியியலாளர்களினால் ஒரு பூமி அதிர்ச்சி எத்தனை பலமானதாக இருக்கும் என கண்டு பிடிக்க முடியும். ஜப்பானில் அன்மையில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியின் போது மூன்று தொடர்ச்சியான அதிர்வுகள் ஏற்பட்டன. முதலாவது ஏற்பட்ட பூமி அதிர்ச்சியைத் தொடர்ந்து பலத்த பின் அதிர்ச்சிகளும் இருந்ததினால் இழப்புகள் மிகவும் அதிகமாகின.
இப்படியாக, உலகம் முழுவதும் வரப்போகிற பஞ்சங்களைக் குறித்தும் பூமி அதிர்ச்சிகளைக் குறித்தும் மட்டுமே நாம் மிகவும் பயப்படுகிறோம். பஞ்சங்களும் பூமி அதிர்ச்சிகளும் போர்களை விடவும் பயங்கரமானவை. என்னுடைய உடன் விசுவாசிகளே, இதுவரை யாரும் துப்பாக்கியால் சுடாவிட்டாலும் கூட, ஒரு பஞ்சம் சில வருடங்களுக்கு தொடர்ந்து நீடித்தால் மக்கள் பலமிழந்து மரித்துப் போவார்கள். மக்கள் வாழுவதற்காக எத்தனையாக முயற்சி செய்தாலும் கூட எந்த உணவும் இல்லாததினால் அவர்கள் மரித்துப் போகும் பரிதாபமான நிலை வரும் என்பதையே நான் இங்கே கூறுகிறேன். இப்போது, ஏற்கனவே உலகம் முழுவதும் பஞ்சங்கள் தொடங்கி விட்டன. வழக்கத்திற்கு மாறான வானிலை மாற்றங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. சிறிது காலத்திற்கு முன்னதாக, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் குளிர்கால சூறாவளி காற்றைக் குறித்த அவசர நிலை பிறப்பிக்கப் பட்டதைக் குறித்து நான் கேள்விப் பட்டேன். எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகவும் அதிகமாக நடைபெறும். இத்தகைய இயற்கை பேரழிவுகள் அதிகமதிகமாக நடைபெறும் என்பதை தயவு செய்து அறிந்து கொள்ளுங்கள்.
கொரியா நீர் குறைபாடுள்ள ஒரு நாடாக இருக்கிறது. அநேக மக்கள் நீர் குறைபாட்டின் ஆபத்தை புரிந்து கொள்ளுவதில்லை. ஆயினும், நான் தொலைகாட்சியைப் பார்க்கும் போது, அது எத்தனை ஆபத்தானது என காண்கிறேன். உங்களைச் சுற்றிலும் உள்ள குளங்கள் வறண்டு போவதைப் பார்க்கும் போது, அது எத்தனை ஆபத்தானது என நீங்கள் புரிந்து கொள்ள முடியும். காலத்தின் முடிவிலே இத்தகைய காரியங்கள் இந்த உலகத்தில் நடக்கும் என்று வேதாகமத்திலே எழுதப்பட்டுள்ளதினாலேயே இதனை நாம் ஆபத்தானதாக கருதுகிறோம். காலத்தின் முடிவிலே இத்தகைய காரியங்கள் நடைபெறும் என்று நம் தேவன் கூறினார். பேரழிவுகள் தொடங்கிய பிறகு, மக்களுக்கு எதிராக மக்களும், நாடுகளுக்கு எதிராக நாடுகளும் எழுந்து நிற்கும் என்று அவர் கூறுகிறார். பஞ்சங்கள் தோன்றி வெவ்வேறு இடங்களில் பூமி அதிர்ச்சிகள் உருவாகும் என்றும் அவர் கூறுகிறார். அதற்கும் மேல், இவையே வேதனைகளின் தொடக்கம் என்றும் அவர் கூறுகிறார். இவை அனைத்தும் வேதனைகளின் தொடக்கம் என்று தேவன் கூறியதினால், அவை மிகவும் ஆபத்தானவை.
தொடக்கத்திலிருந்தே பூமியில் பூமி அதிர்ச்சிகள் இருந்து வருகின்றன என்பது உண்மையே, அவை இன்னமும் அப்படியே இருக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறினால், பூமி அதிர்ச்சிகள் எப்போதும் ஏற்படுகின்றன. ஆயினும், இந்த காலத்தின் போது, உலகம் முழுவதும் ஒரே நேரத்திலே பூமி அதிர்ச்சிகள் உண்டாகும். அன்மை காலத்திலே, கொரியாவிலும் கூட பூமி அதிர்ச்சிகள் ஏற்பட்டிருக்கின்றன, ஆனால் இந்த பகுதியில் பூமி அதிர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகளே இல்லை. பூமியோட்டிற்கு கீழே பாறைக் குளம்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன, அவற்றின் ஓட்டத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. வானிலையிலும் மிகவும் அதிகமான மாறுதல்கள் இருப்பதினால், குளிர்காலத்திலும் கூட புயல் வீசுகிறது.
கொரியாவில் மட்டுமே, வானிலையில் அநேக பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பூமியிலே பஞ்சங்களும் பூமி அதிர்ச்சிகளும் அடிக்கடி ஏற்படும் என்று தேவன் கூறிய போது, வேதனை தொடங்கும் என்று அவர் எச்சரிக்கை செய்தார். அதுவே மகா உபத்திரவத்தின் தொடக்கம் என்பது அதன் பொருள் ஆகும். வரப்போகிற மகா உபத்திரவத்திற்கான எச்சரிக்கை அடையாளங்களாக அடிக்கடி ஏற்படும் பேரழிவுகள் அமைகின்றன. கர்த்தர் எச்சரிக்கைக்கான ஒலியை கீழ்வருமாறு கூறி ஒலிக்கிறார், இந்த நொடிப் பொழுதில் இருந்து, மகா உபத்திரவம் இருக்கும்,
அந்த நேரம் எல்லா இடங்களிலும் பஞ்சங்களும் பூமி அதிர்ச்சிகளும் ஏற்படும் காலமாகவும், போர் ஏற்படக் கூடிய காலமாகவும் இருக்கும். பேரழிவுகள் தோன்றும் போது, ஒரு எச்சரிக்கை மணி அடிக்கப் படும், அது இந்த உலகத்தின் மீது மகா உபத்திரவம் வந்து விட்டதை அறிவிக்கும்.
வரப்போகிற இயற்கைப் பேரழிவுகளைக் குறித்து முன்னரேயே அறிந்து கொண்டு உடனடியாக அதற்கேற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ளும் வல்லமை அனைத்து படைப்புகளிடமும் இருக்கிறது. நீங்கள் கடற்கரைக்குச் செல்லும் போது, புழுக்களைப் போன்ற, கடல் அட்டைகள் என்ற உயிரினங்கள் இருக்கின்றன. அவை வித்தியாசமாக தோன்றும். கடல் அட்டைகள் செத்துப்போன் மிருகங்களின் மாமிசத்தை சாப்பிட்டு கடற்கரையில் வாழுகின்றன. இந்த உயிரினங்கள் கற்களுக்கு இடையிலோ அல்லது கூழாங்கற்களுக்கு இடையிலோ வாழும். ஆனால் சில நாட்களில், கடற்கரையில் இருந்து 10 மீட்டர் உயரமுள்ள வயல்களுக்குள் அவை ஊர்ந்து வந்திருப்பதை காணக்கூடும். வயதானவர்கள் இதனைக் கண்டால், உயரமான அலைகள் உருவாகும் என கூறுவார்கள். அவர்கள் கீழ்வருமாறு கூறுவார்கள், மகனே நான் கூறுவதைக் கேள். இன்றிலிருந்து, கடலுக்குச் செல்ல வேண்டாம். கடற்கரையில் உயரமான அலைகள் எழும்பும்.
இல்லை, உயரமான அலைகள் என்று நீங்கள் கூறுவது என்ன? அலைகள் மிகவும் அமைதியாக இருக்கின்றன, ஆனாலும் கூட உயரமான அலைகள் உண்டாகும் என உங்களால் எப்படிக் கூற முடியும்?
நான் கூறுவதை கவனமாக கேள். உயரமான அலைகள் வரும் என்று நான் கூறினால் அது வரும் என்பதை அறிந்து கொள். ஒன்றிரண்டு நாட்கள் பொறுத்திருந்து பார். அது அப்படி வருகிறதா இல்லையா என்று பார்.
கடல் மிகவும் அமைதியாக இருக்கிறது என்பது பொருட்டேயல்ல. அது ஒரு குளத்தைப் போல அமைதியாக காணப்படுகிறது. ஆயினும், குறிப்பாக, உயரமான அலைகளுக்கு முன்னால் கடல் மிகவும் அமைதியாகவே இருக்கும். ஆனால் இரண்டு அல்லது மூன்று நாட்களிலே, கடல் திடீரென கொந்தளிக்கத் தொடங்கி, உயரமான அலைகளில் அதில் உண்டாகும். பெரிதான அலைகள் கடலை அப்படியே புரட்டிப் போடும். ஐந்திலிருந்து பத்து மீட்டர்கள் உயரமான அலைகள் உருவாகி அது கடற்கரையைத் தாக்கும்.
என்னுடைய உடன் விசுவாசிகளே, கடல் கொந்தளிக்கப் போவதை மக்களால் அறிய முடியாது, ஆனாலும் மனிதர்களாகிய நமக்கு முன்னதாக இந்த சிறிய உயிரினங்களால் அதனை எப்படி அறிந்து கொள்ள முடிகிறது? இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அவைகள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடுகின்றன, அதன் பிறகு அந்த பேரலைகள் முடிவிற்கு வந்தவுடன், மீண்டுமாக அவை கடற்கரைக்குச் சென்று விடுகின்றன. அவற்றை பெரும் எண்ணிக்கையில் பார்க்க முடியும். தாம் சந்திக்கப் போகும் பேரழிவுகளைக் குறித்து மக்களால் அறிந்து கொள்ள முடியாது, ஆனால் இந்த சிறிய உயிரினங்களால் அவற்றை நன்றாக அறிய முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. இதனால்தான், மக்கள் சிறிய உயிரினங்களை விடவும் சிறந்தவர்கள் இல்லை என்ற கூற்று எழுந்தது என நான் எண்ணுகிறேன்.
நம் தேவன் கூறுகிறார், அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். உதயமாகிறபோது செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?
(மத்தேயு 16:2-3), அவர் கவலைப் படுகிறார். நாம் மீண்டும் மீண்டும் சுற்றி, உணவை புசித்து, குளியலறைக்குச் சென்று வந்து, உறங்கி, அதன் பிறகு எழுந்திருக்கும் போது, மிகவும் முக்கியமாக அறிந்திருக்க வேண்டிய ஒரு காரியம் இருக்கிறது. எதிர்காலத்திலே இந்த உலகம் எப்படி மாறும் என்றும் இந்த நாளைக் குறித்தும் காலத்தைக் குறித்தும் தேவன் கூறியதை சரியாக புரிந்து கொண்டு, அவற்றை எண்ணியவாறே நாம் வாழ வேண்டும்.
பேரழிவுகள் இந்த உலகத்தில் தொடங்கிய பிறகு, பஞ்சங்களும் பூமி அதிர்ச்சிகளும் அடிக்கடி உருவாகும் என்றும் மக்களுக்கு எதிராக மக்களும் நாடுகளுக்கு எதிராக நாடுகளும் போரிடும் என்றும் அவர் கூறுகிறார். இத்தகைய பேரழிவுகளினால் அநேக மக்கள் மரித்துப் போவார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். மக்களுக்கு எதிராக மக்களும் நாடுகளுக்கு எதிராக நாடுகளும் எழும் போது, பலம் வாய்ந்த நாடுகள் பலவீனமான நாடுகளை பீறிப் போடுவார்கள். மக்களுக்கு எதிராக மக்களும் நாடுகளுக்கு எதிராக நாடுகளும் எழும் அந்த நேரத்திலே, அண்டை நாடுகளுடன் ஏற்படுத்தப் பட்ட நல்ல உடன்பாடுகள் அனைத்தும் அலட்சிய படுத்தப் படும். எப்படியோ பிழைத்திருக்க வேண்டும் என்பதால், ஒரு நாடு பலவீனமான நாடுகளை விழுங்கத் தொடங்கும். வேறு வகையாகக் கூறினால், பலம் வாய்ந்த ஒரு நாடு நல்லதொரு வர்த்தக உறவை உருவாக்கும், ஆனால் உறவை ஏற்படுத்திக் கொண்ட நாடு உடன்படிக்கைக்கு கீழ்ப்படியாமல் போகும் போது, பலம் வாய்ந்த நாடு தன் இராணுவ பலத்தால் அதனை நசுக்கிப் போடும். இந்த உலகத்தின் நாடுகளுக்கு இடையே அப்படிப் பட்ட ஒரு காரியம் நடக்கும் என்பது இதன் பொருளாகும்.
இந்த உலகத்திலே பேரழிவுகள் அடிக்கடி நடக்கும் போது, இஸ்ரவேல் நாடு குறிப்பிட்ட ஒரு நாட்டுடன் உடன்படிக்கைச் செய்யும். நாம் ஒருவருடன் ஒருவர் போரிடாமல் இருப்போம்.
ஆனால் திடீரென அந்த நாடு, ஒரு நாளிலே இஸ்ரவேலுக்கு துரோகம் செய்து அதன் மீது படையெடுக்கும். இஸ்ரவேல்