Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaathirukkum Yugangal
Kaathirukkum Yugangal
Kaathirukkum Yugangal
Ebook71 pages37 minutes

Kaathirukkum Yugangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவர் ஒரு பட்டதாரி எழுத்தாளர். தமிழ்நாட்டில் மிகப் பாரம்பர்யமிக்க வழக்கறிஞர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பல்வேறு இதழ்களில் சிறுகதைகளும், குறுநாவல்களும் எழுதியுள்ளார். இதுவரை தொடர்ந்து 20 நாவல்கள் இவர் எழுதி வெளி வந்துள்ளது.

இவரது நாவல்களை ஆய்வு செய்து இதுவரை 4 பேர் எம். பில்(M. Phil) பட்டம் பெற்றுள்ளார்.

இவரது 50 வயதில் இவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580131505049
Kaathirukkum Yugangal

Read more from Latha Mukundan

Related to Kaathirukkum Yugangal

Related ebooks

Reviews for Kaathirukkum Yugangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaathirukkum Yugangal - Latha Mukundan

    http://www.pustaka.co.in

    காத்திருக்கும் யுகங்கள்

    Kaathirukkum Yugangal

    Author:

    லதா முகுந்தன்

    Latha Mukundan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lathamukundan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 1

    நான் சொல்றேனேன்னு நினைச்சுக்காதே சம்பா மாதிரி பொண்ணு லோகத்திலேயே கிடையாது. நூறாவது தடவையாக மாமியார் கூறவும், நித்யாவிற்கு ஒரு நிமிடம் மனதில் பொறாமை உணர்ச்சி தலை தூக்கியது. சம்பா தன் நாத்தனாரின் பெண் என்றவரை நித்தியாவிற்குத் தெரியும். மற்றபடி அவள் கறுப்பா, சிவப்பா, அழகா, உயரமா, குள்ளமா எதுவுமே தெரியாது. கல்யாணத்திற்கு வந்த கடந்த மூன்று நாட்களாக இவளை பார்க்கும் போதெல்லாம் மாமியாருக்கு சம்பாவின் நினைவுதான். உடனே சம்பாவைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவாள். நித்யாவை முதலில் பெண் பார்க்க வந்த போதே, மாமியார் சம்பாவைப் பற்றி புகழ ஆரம்பித்து விட்டாள். அப்போது ஒன்றுமே தோன்றவில்லை. ஆனால் திருமணம் நடந்த இந்த மூன்று நாட்களும் மாமியாரின் சம்பா புராணம் உண்மையிலேயே சம்பாவை பற்றி அதிகமாக நினைக்கத் தூண்டியது. அவளைப் பற்றின லேசான பொறாமையும் தோன்றியது, திருமணத்தின் மகிழ்ச்சி கூட அவளிடமிருந்து விட்டிருந்தது.

    'இந்த சம்பா எப்படி இருப்பாள்? தன்னை விட அழகா?' இந்த கேள்வி தான் கடந்த மூன்று நாட்களும் மனதைக் குடைந்து கொண்டிருந்தது. அவள் ஏன் திருமணத்திற்கு வரவில்லை? சொந்த மாமாவின் திருமணம் தானே, ஒரு வேளை இருவரும் முன்னாள் காதலர்களாக இருப்பார்களோ. மனம் ஏதேதோ எண்ணங்களை அசை போட்டது. திருமணம் முடிந்து இதோ கார் புகுந்த வீட்டை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.

    மாமியார் என்னென்னவோ பேசிக் கொண்டு வருகிறாள். எல்லாம் சம்பாவின் பெருமை தான். கணவன் வாயைத் திறக்காதவனாய் எங்கோ தியானித்தவாறு அமர்ந்திருக்கிறான். காரில் ஏறும் போதே சம்பந்தி அம்மா அவ இனிமே உங்க பொண்ணு நீங்க தான் கவனிச்சுக்கணும் என்று அம்மா அழ, அப்பா கலங்க, அவளின் கண்களும் லேசாக கலங்க அதையும் மீறி சம்பாவைப் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வு மேலிட அழுகை கூட அடங்கிவிட்டது.

    இட்லி எடுத்தான்னா இன்னிக்கெல்லாம் பாத்துண்டே இருக்கலாம். மாமியார் சம்பா பெருமையை சொல்லிக் கொண்டே இருக்க, மாமியாரை பார்த்துக் கொண்டே மனதை அலைய விட்டாள். அவள் மட்டும் எதில் குறைந்தவளாம்.

    ரதின்னா சங்கர் ஐயர் பொண்ணைப் பாத்தா போதும். அவள் இருக்கும் தெருவில் அழுத்தம் திருத்தமாக சொல்வார்கள். பொன்னை உருக்கி வார்த்து எடுத்தாற் போன்ற ஒரு நிறம், மினுமினுப்பு. நாவல் பழ கண்கள், கார்மேகக் கூந்தல், சின்னஞ் சிறிய ரோஜா நிற உதடுகள். இன்னும் அவளை வர்ணிப்பதென்றால் நேரம் போவது தெரியாமலேயே வர்ணித்துக் கொண்டிருக்கலாம்.

    அப்பா எத்தனை அழகான பெரிய கண்கள். உன் மூக்கு ஒன்றே மில்லியன் டாலர் பெறும்டி, தோழிகள் அவளின் ஒவ்வொரு அம்சத்தையும் புகழ்ந்து பேசுவார்கள். நித்யா நிறத்தில் அம்மாவைக் கொண்டிருந்தாலும், உருவத்தில் அப்பாவைத் தான் கொண்டு இருந்தாள். அவளின் தந்தைக்கு ஒரே பெருமை தான்.

    "என் பெண்ணுடைய அழகுக்கு ஏற்ற மாதிரியான வரன் வந்தா தான் பண்ணுவேன். பி. எஸ். ஸி படித்துக் கொண்டிருந்த மகளுக்கு, அவளை விட மேலான மாப்பிள்ளையாகத் தான் தேடினாள். அவள் படிப்பை முடித்தும் ஒருவருட காலம் தேடியவரின் கண்களுக்கு ரகுதான் தகுந்த மாப்பிள்ளையாக பட்டார்.

    எம் பொண்ணு பி.எஸ்.ஸி பர்ஸ்ட் கிளாஸ். எம்மாப்பிள்ளை எம்.எஸ்.ஸி எம்.பில். என்று பெருமையாகச் சொல்லுவார்.

    ஏண்டி என்ன சொன்னே? இப்படி எல்லாம் தேடினா நித்யாவுக்கு இந்த ஜன்மத்துலே கல்யாணம் ஆகாதுன்னியே. இப்ப என்ன சொல்றே? அவர்

    Enjoying the preview?
    Page 1 of 1