Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Reethu
Reethu
Reethu
Ebook112 pages1 hour

Reethu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவர் ஒரு பட்டதாரி எழுத்தாளர். தமிழ்நாட்டில் மிகப் பாரம்பர்யமிக்க வழக்கறிஞர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பல்வேறு இதழ்களில் சிறுகதைகளும், குறுநாவல்களும் எழுதியுள்ளார். இதுவரை தொடர்ந்து 20 நாவல்கள் இவர் எழுதி வெளி வந்துள்ளது.

இவரது நாவல்களை ஆய்வு செய்து இதுவரை 4 பேர் எம். பில்(M. Phil) பட்டம் பெற்றுள்ளார்.

இவரது 50 வயதில் இவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580131505083
Reethu

Read more from Latha Mukundan

Related to Reethu

Related ebooks

Reviews for Reethu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Reethu - Latha Mukundan

    http://www.pustaka.co.in

    ரீது

    Reethu

    Author:

    லதா முகுந்தன்

    Latha Mukundan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lathamukundan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 1

    குருவிற்கு அந்த நாலு கால் பிராணி என்றாலே மரண பயம்தான். 'நாய் என்று அந்த வார்த்தையை வழி மொழிந்தாலே மனம் ஒரு எக்கு எக்கி தவிக்கும்.'

    டேய் குரு. நீயா நிறைய கற்பனை பண்ணிக்கறே? நாய் ரொம்ப ரொம்ப நன்றியுள்ள பிராணிடா. நீ படிச்சதில்லையா? அவனுடைய உயிர் நண்பன் தனபால் தலையில் அடித்து தட்டாத குறையாகச் சொல்கிறான்.

    நாயை வளர்த்துப்பாருடா அதன் அருமை தெரியும் நாயின் அருமை குருவிற்கா தெரியாது?

    ஏனோ சின்ன வயதிலிருந்தே நாயென்றாலே குருவிற்கு பயம்தான். அம்மா சிறுவயதில் கதை சொல்லும்போது தன் கற்பனை சக்தியை வீசி விசிறி நாய் கதைகள் கூட சொல்லி இருக்கிறாள்.

    அஞ்சு அறிவு. அஞ்சு அறிவுங்கறோம். அதுக்கு அஞ்சறிவா? இல்லை நமக்கா? ஏதாவது தப்பு பண்ணிட்டோம்னா நாய்க்கு கட்டாயம் தெரிஞ்சிடும் நம்மால நல்லவன் யார், கெட்டவன் யார்னு சொல்ல முடியுதா?

    அம்மா சொல்ல சொல்ல சின்ன வயது குரு ஆர்வமாகக் கேட்பான். நாய்க்கு மட்டும் நாம திருடினோம்னு எப்படி தெரியும்மா?

    அதுக்கு மோப்ப சக்தி இருக்கே. அதுவே எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடும். ஒரு சின்ன தப்பு. திருட்டு பண்ணியிருந்தாலும் அது விடவே விடாது.

    நாயைக் கடவுளுக்கு சரி சமானமாக அம்மா சொல்ல சொல்ல, குருவிற்கு திக் திக்கென்று இருக்கும். 'வகுப்பில் பக்கத்தில் அமரும் பையனின் பலப்பம் நல்ல சிகப்பு கலராக இருக்கிறது என்றுதான் யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டோமே அதுவும் நாய்க்குத் தெரிந்திருக்குமோ? இன்னுமொரு நாள் இனிப்பு வகைகள் விற்கும் கடைக்கு சென்றபோது கடைக்காரனுக்குத் தெரியாமல் கொஞ்சூண்டு பால்கோவாவை எடுத்து வாயில் போட்டோமே. அதுவும் நாய்க்கு தெரிந்திருக்குமோ? தீபாவளியன்று தனக்கும் தங்கைக்கும் அம்மா பட்டாசுகளைப் பிரித்து கொடுத்தபோது தங்கையை ஏமாற்றி, பயமுறுத்தி பாதி பட்டாசு கட்டுகளை வாங்கியதும் நாய்க்குத் தெரிந்திருக்குமோ?' இப்படி நினைத்து, நினைத்து நாயை எங்கே பார்த்தாலும் உதறல்தான்.

    வீட்டுநாயோ, தெருநாயோ அதைப் பார்த்ததுமே மனம் நடுங்க ஆரம்பித்துவிடும். தான் செய்த சின்ன, சின்ன திருட்டுகளை நாய் கண்டுபிடித்து விடுமோ? இந்த நினைப்பில் சற்று பயத்துடன்தான் நாயையே பார்ப்பான். நாயை ஒரு முறை பார்த்ததும் அது ஒரு சிறு குரைப்பு குரைத்தால் போதும் கதி கலங்கிவிடும். முகம் வெளிறிப் போய்விடும். திருடனை நாய் பிடிக்குமோ என்னவோ. ஆனால் பயந்தவன் என்றால் மட்டும் அதற்கு மிக நன்றாக பிடிக்கும். இவன் சற்று ஓரக் கண்ணால் பார்த்து முகம் வியர்த்து நிற்கும்போது சாதாரணமாக குலைக்க ஆரம்பிக்கும். நாய் இன்னும் மிக மிக சந்தோஷத்தோடு வேக வேகமாக குரைக்க ஆரம்பிக்கும். நாய் இருக்க வீட்டைப் பார்த்தாலே போதும் நாலுகால் பாய்ச்சலில் நகர ஆரம்பிப்பான்.

    வீட்டு நாய் மட்டுமல்ல, தெரு நாய்களுக்கும் குருவைக் கண்டால் இளக்காரம்தான். என்றாவது லேட்டாகி விட்டால் நாய்கள் இருந்தாலே தயங்கித் தயங்கிதான் உள்ளே வருவான். அவை சற்றுவேகமாக குரைக்க ஆரம்பித்தாலே ஓட்டம்தான் 'ஓடி விளையாடு பாப்பா' என்று பாரதியாரின் பாடல்களை நாய்கள் நன்றாக தெரிந்து வைத்திருக்குமோ என்னவோ குருவந்தாலே ஓட்டப் பந்தயம்தான். எல்லா நாய்களும் பெரியதாக குரைத்துக்கொண்டே மிக மிக சந்தோஷத்தோடு அவன் பின்னே ஓடிக்கொண்டு இருக்கும். டூவீலரில் போனால், காலைக் கடிப்பது போல் வேகவேகமாக ஓடிவரும் தெரு நாய்கள்.

    கூடுமான வரை நாய்க்கு பயந்தே ஆறு மணிக்குள் வீட்டிற்கு வந்து விடுவான் குரு.

    இன்று கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர் விடுமுறையில் இருந்தார். ஒரு முக்கியமான காகிதத்தில் அவர் கையொப்பம் தேவை என்பதால் அதை எடுத்துக்கொண்டு அவர் வீட்டுக்கு செல்ல வாசலிலேயே வரவேற்றது ஆளுயுர அல்சேஷன்.

    குருவைப் பார்த்து என்ன நினைத்ததோ என்னவோ சற்று உற்றுப் பார்த்தது. தலையை வேறு சாய்த்துப் பார்க்க குருவுக்கு வியர்த்துவிட்டது. கை, கால்கள் தந்தி அடிக்க அதை லேசாக ஓரக்கண்ணால் பார்க்க. ஆசாமி மாட்டினான் என்று நினைத்ததோ என்னவோ 'லொள் லொள்' என்று பெரியதாக மூன்று முறை குரைத்தது. குருவிற்கு பயத்தில் ஓடக் கூட கால்கள் எழாமல் கண்களில் நீரோடு பயத்தோடு நிற்க, அசையாமல் நிற்பவனை எரிச்சலோடு பார்த்தது அல்சேஷன் 'பிறகு ஒரு நீண்ட கொட்டாவியை விட்டது. மனிதன் ஓடவுமில்லை நகரவுமில்லை' அது சற்று அலுப்புடன் குருவைப் பார்த்தது. கிரிக்கெட் விளையாட்டில் எத்தனை பந்து போட்டாலும் அடிக்கவும், அடிக்காது. அவுட்டும் ஆகாத பேட்ஸ்மேனை குரோதத்தோடு பார்க்கும் பவுலர் போல் குருவைப் பார்க்காமல் அலுத்து போன பார்வையாளர்கள் போல் குருவைப் பார்த்தது. இன்னும் நான்கு முறை குருவைப் பார்த்து கத்திவிட்டு குரு நகராததால் சற்று எரிச்சலோடு அமர்ந்தது.

    குருவுக்கு கை கால்களே எழும்பவில்லை. நாய் படுத்துக் கொண்டவுடன் போன உயிர் திரும்பி வந்தது போல் தோன்ற சார் மெதுவாகக் குரல் கொடுக்கிறான். முன்னங்கால்களின் மேல் முகத்தை வைத்து படுத்த நிலையில் இருந்த அல்சேஷன் சற்று எரிச்சலோடு கண்களை மட்டும் திருப்பி பார்த்தது.

    சே! கேவலமான மானிடன் நீ என்பது போல் இருந்தது அதன் பார்வை.

    நாய் தன்னை லேசாக பார்த்துவிட்டு அலட்சியமாக படுத்திருக்க,

    சார் என்று சத்தமாக குரல் கொடுத்தான் குரு.

    அவ்வளவு தான் பகைவனைக் கண்ட - இந்திரஜித் போல் எழுந்தது அல்சேஷன். மேலே பாய்வது போல் நான்கு கால்களையும் தூக்கி குரை. குரை என்று குரைத்து ஆர்ப்பாட்டம் செய்ய, அல்சேஷன் ஆதிசேஷன் போலத் தோன்ற குரு வேகமாக ஓடுகிறான். கேட்டில் முட்டிக்கொண்டு கீழே விழுந்தான்.

    இதற்குள் ஹு ஈஸ் தேர்? என்றவாறே வெளியே வந்தார் மேனேஜிங் டைரக்டர் சந்திரன்.

    கென்னி கீப் கொய்ட் என்று அவர் அடக்க, "ஊ..

    Enjoying the preview?
    Page 1 of 1