Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Muthamitta Soppanangal
Muthamitta Soppanangal
Muthamitta Soppanangal
Ebook125 pages1 hour

Muthamitta Soppanangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110004087
Muthamitta Soppanangal

Read more from Anuradha Ramanan

Related to Muthamitta Soppanangal

Related ebooks

Reviews for Muthamitta Soppanangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Muthamitta Soppanangal - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    முத்தமிட்ட சொப்பனங்கள்

    Muthamitta Soppanangal

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    அழகாய், சின்னதாய், சிவப்பு சாந்துத் திலகம் தேவியின் முகத்துக்கு மேலும் கம்பீரத்தைக் கூட்டுகிறது.

    அவள், மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்.

    அவளது கணவன் ஜெகன் சொல்வது போலச் சொல்ல வேண்டுமானால்

    உன்னைக் கல்யாணம் செஞ்சிட்டப்ப நீ இருந்ததை விடவும் இப்ப ரொம்ப அழகா இருக்கே...

    அவன் இப்படிச் சொல்லும் போதெல்லாம் தேவியும் மறக்காமல் சொல்வாள்.

    அதெல்லாம் ஒண்ணுமில்லே. என்னைக் கல்யாணம் செஞ்சிட்டப்ப, நீங்க ஏற்கனவே ஒரு பெண்டாட்டிய இழந்த வருத்தத்துல இருந்தீங்க. மூணு வயசுப் பொண் குழந்தைய வச்சிட்டு அதை வளர்க்கத் தெரியாமப் படாத பாடு பட்டுட்டு இருந்தீங்க. அப்ப உங்க முன்னாலே ரதியையே கொண்டு வந்து நிறுத்தினாலும் ஏறெடுத்துப் பார்த்திருக்க மாட்டீங்க, என் அதிருஷ்டம்... அந்த நேரத்துல உங்க வீட்டு வாசப்படிய மிதிச்சேன்... இன்னிக்கு உங்க கண்ணுக்கு என்னோட சாதாரண முகம்கூட அழகாத் தெரியுது...

    அவள் இப்படிச் சொல்லும்போதெல்லாம், ஜெகன் அவளது இதழ்களைத் தனது இரண்டு விரல்களால் அப்படியே இறுக்கி முத்தமிடுவான்.

    கல்யாணமான புதுசுல இருந்ததை விட இப்ப நிறைய பேசக் கத்துட்டிருக்கே!

    அவளும் சளைக்காமல் சிரித்தபடி பதிலளிப்பாள்.

    என்ன செய்யறது... வாயுள்ள பிள்ளை பிழைக்கும்னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க அது இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் தெரிஞ்சிட்டேன். இங்கே, எல்லாத்தையும் ஆரம்பத்துல கேட்டுத்தானே வாங்க வேண்டியிருந்தது...

    இதைச் சொல்லும்போது தேவியின் முகத்தைப் பார்க்க வேண்டும். அந்த செதுக்கிய நாசியிலும், அடர்ந்த கண் இமைகளிலும் மெலிதான கர்வம் தெரியும்.

    அது... ஆணவத்தினால் உண்டான கர்வமில்லை. அன்பினால் அந்த வீட்டின் இரண்டு இதயங்களிலும் இடம் பிடித்துவிட்ட கர்வம்...

    நிரூபமா.......

    ஜெகனின் மனைவியாக தேவி, அந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தபோது மூன்று வயசுக் குழந்தை.

    அம்மா பாரு...

    இப்படி ஜெகன், தேவியைச் சுட்டிக் காட்டிய போது, 'குபுக்' கென மெத்தையில் குப்புறப் படுத்து முகத்தை மூடிக் கொண்ட குழந்தை --

    ம்மா... நா நா...

    என்ன சொல்றா...

    ஜெகன், குழந்தையைத் தூக்கித் தோளில் சாய்த்துக் கொண்டு விரக்தியுடன் சிரிக்கிறான்....

    அவளுக்குள்ளே இன்னமும் அவ அம்மா முகம் அப்படியே இருக்குன்னு நினைக்கிறேன். குழந்தைதானே... கொஞ்நாளுல எல்லாத்தையும் மறந்துடுவான்னு தோணுது. பார்ப்போம். இப்ப எவ்வளவோ தேவலை. அவ அம்மா போன புதுசுல எல்லாம், என்கிட்டகூட வரமாட்டா... 'ஓ'ன்னு அழுவா... பாதி ராத்திரியில நினைச் சிட்டு அலற ஆரம்பிச்சா - பொழுது விடியற வரைக்கும் ஒயமாட்டா...

    நிஜம்தான்.

    குழந்தை மனசு, கண்ணாடி போல இருந்தது... தேவியின் அன்பும், அரவணைப்பும் - குழந்தையை மெள்ள மெள்ள அவள்பால் ஈர்க்கச் செய்தது.

    ஜெகன் தான் நிரூபமாவை விடவும் பெரிய குழந்தையாக இருந்தான். அவன் மனசுக்குள் ஜானகி கோவில் கட்டி உட்கார்ந்திருந்தாள்.

    தேவி எத்தனைதான் அவனைக் கலகலப்பாக்க முயன்றாலும் அவனது பேச்சு சுற்றிச் சுற்றி முதல் மனைவியைப் பற்றித்தான் இருந்தது.

    உங்களை விட எனக்கு நிரூவைத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு.....

    ஏன் தேவி...

    பின்னே என்ன - நிரூ சமத்து.... அம்மாவுக்கு ஒரு முத்தம் கொடும்மான்னு கேட்டா- 'பச்' சுனு கொடுத்துடுத்து.

    இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி கற்பகம் சினிமா ஜெமினிகணேசன் மாதிரி முகத்தை வச்சிட்டிருக்கீங்....

    அவன், அவளைப் பார்த்துச் சிரிக்க முயற்சிப்பான். அவளோ, நிரூபமாவை விட்டே அவனது கன்னத்தைப் பிடித்துத் திருகச் சொல்லுவாள்.

    நிரூ... அப்பா கன்னத்தைக் கிள்ளும்மா...

    கிள்ளித்தேன்...

    அம்மாவுக்கு உம்மா கொடு...

    உம்மா...

    குழந்தையின் ரோஜா இதழ்கள் தேவியின் கன்னத்தில் பதிய- அவள் ஓரக்கண்ணால் கணவனைப் பார்த்துச் சிரிப்பாள்.

    சில சமயங்கள்லே பெரியவங்களை விட குழந்தைங்க புத்திசாலியா இருக்குங்க.... பாருங்க... கிடைச்சதை ஏத்து கிட்டு சந்தோஷமா இருக்கு...

    உன்னோட அன்புல குத்தம் சொல்லவே முடியாது தேவி. பார்க்கப் போனா- உன்னோட அந்த தாராள மனசு எனக்குக் கிடையாது.... ஏற்கனவே பெண்டாட்டி போய், ஒரு பிள்ளையையும் வச்சிட்டிருக்கற என்னைப் போய் கல்யாணம் செஞ்சிட்டுருக்கியே... உன் முன்னாலே நான் குறுகிப்போறேன்...

    அவன் என்னென்னவோ பிதற்றியிருக்கிறான்.

    இப்பொழுது கூட, நினைத்துக் கொண்டால் தேவிபழசை எல்லாம் நினைவு படுத்திக் கேலி செய்வாள்.

    அய்யோ... வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கு ஒண்ணு விட்ட தம்பி பேரன் தான் நீங்க.... தாலி கட்டினப் பெண்டாட்டியத் தொடறதுக்கு என்னமா பயந்தீங்க...

    அவனும் சிரிப்பான்.

    நீ ஆயிரம் தான் சொல்லு. என் மனசுல ஒரு பயம் எப்பவும் உண்டு. ஜானகி என் மேல உயிரையே வச்சிருந்தா. வீட்டுலேயே எங்க அம்மாகிட்ட கோவிச்சுப்பா. கடைசி மட்டும் எனக்குத் தன் கையாலேதான் சாப்பாடு... தான் தான் வெத்தலை மடிச்சுத் தரணும்னு.... இவ்வளவு ஏன்... எனக்கும் அவளுக்கும் நடுவுல நிரூபமாவைப் படுக்கப் போடமாட்டா... எப்பவும் அவளோட ஒரு பக்கத்துல நான்... இன்னொரு பக்கம் நிரூ... நான் கூட கேலி செஞ்சிருக்கேன். ரெண்டாவது பொறக்கப் போறதே - அப்ப என் இடம் எதுன்னு கேட்டு....

    "அப்படி என் மேல உயிரையே வச்சிருந்த ஜானகி போய், ஒரே வருஷத்துல உன்னைக் கல்யாணம்

    Enjoying the preview?
    Page 1 of 1