Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aadu Puli Aattam
Aadu Puli Aattam
Aadu Puli Aattam
Ebook298 pages2 hours

Aadu Puli Aattam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100703967
Aadu Puli Aattam

Read more from Indira Soundarajan

Related to Aadu Puli Aattam

Related ebooks

Related categories

Reviews for Aadu Puli Aattam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aadu Puli Aattam - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    ஆடுபுலி ஆட்டம்

    Aadu Puli Aattam

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    1

    நம்மை ஒருவன் இகழ்ந்து பேசினாலும் பதிலுக்கு நாம் அவனைத் தூற்றிப் பேசக்கூடாது. இகழப்பட்டவர் பொறுமையாக இருந்தால் அவர் அடங்கிக் கொண்ட வேதனை நெருப்பைப் போல் தீவிரம் பெற்று அவரை இகழ்ந்தவனைப் பற்றிக்கொண்டு விடும். அது மட்டுமல்ல, இகழ்ந்தவன் ஏதாவது புண்ணியம் செய்திருந்தால் அது இகழப்பட்டவனைப் போய்ச் சேர்ந்து விடும்.

    - விதுர நீதி

    அதிகாலை நேரம்!

    தெருக்களில் பேப்பர் போடும் மனிதர்களின் சைக்கிள் மணி ஒசையோடு, பால்காரரின் வருகையை பிரத்யேகமாக தெரிவிக்கும் அவனது கோயில் மணி போன்ற பித்தளை மணியின் ஓசையும் கலந்து ஒலிக்கும் அதிகாலை வேளையில் அந்த பங்களாவின் எழிலான மெயின் கேட் திறந்து கொள்ள உள்ளிருந்து ஒரு நவீனமான படகு கார் தெருவில் இறங்கியது! காருக்குள் டிரைவிங் சீட்டில் இருந்த காயத்ரியை பார்த்து கேட் வாட்ச்மேன் வடிவேலு சற்று அதிர்ந்தான். அவன் அதிர்விலிருந்து மீள்வதற்குள் அந்தக் கார் தெருவில் இறங்கி கண்களை விட்டும் மறைந்துவிட்டது.

    வாட்ச்மேன் கதவை திரும்ப மூடினான். சில விநாடிகள் தயக்கத்தோடு நின்றவன் மெயின் கேட்டை தொடர்ந்து செழிப்பாய் வளர்ந்திருக்கும் தோட்டப் பகுதியை கடந்து பங்களாவின் போர்ட்டிகோ முகப்பை நோக்கி நடந்தான்.

    போர்ட்டிகோவின் நடுவில்தான் அந்த பிரம்மாண்டமான பங்களாவின் மையமான வாசல்பகுதி இருந்தது. அதன் வழியாக பார்த்தபோது ஹாலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டு தயங்கித் தயங்கி நடந்தான்.

    ஹாலில் தாமோதர் ஒரு ஓரமாய் அமர்ந்த நிலையில் டேபிளில் எதையோ பார்த்தபடி இருந்தார். நைட் டிரஸ்ஸில் அவரைப் பார்க்கவும் வாட்ச்மேன் வடிவேலுவிடமும் ஒரு செருமல்.

    அவரும் நிமிர்ந்தார். வடிவேலுவை ஏறிட்டார்.

    ஐயா....

    என்ன வடிவேலு...?

    அம்மா மட்டும் கார்ல வெளிய போனாங்க... அதான்....

    ஓ அதுவா? காயத்ரி நானே ஜிம்முக்கு போய்ட்டு வந்துட்றேன்பான்னு ரொம்ப ஆசையாவும், கெஞ்சலாவும் கேட்டா... சரி ஜாக்ரதையா போய்ட்டு வான்னு நான் தான் அனுப்பி வெச்சேன்....

    அப்படியா?

    எங்க உங்களுக்கு தெரியாம தன்னிச்சையா புறப்பட்டு போயிட்டாங்களோன்னு எனக்குள்ள கொஞ்சம் சுருக்குன்னு இருந்துச்சிங்க...."

    சரி சரி நீ போ... போய் உன் வேலைய பார். எனிவே நீ ஷார்ப்பா இருக்கேன்னு நல்லா தெரியுது. குட்! கீப் இட் அப்...!

    வடிவேலு திரும்பி நடந்தான்.

    அவரும் டேபிளில் கவனமானார். சில நொடிகளில் வளைவான மாடிப்படிகளில் ஏறி அவரது பிரத்யேக உடற்பயிற்சி அறை நோக்கி நடந்தார்.

    அந்த அறைக்குள் நவீனமான அவ்வளவு உடற்பயிற்சி சாதனங்களும் இருந்தது. சுவரில் அதிநவீன எல்.சி.டி. டிவி ஒன்று பெரிய ஸ்க்ரீனோடு காட்சி தந்தது. ரிமோட்டில் கை படவும் அது ஓடத் தொடங்கியது. அது ஒரு நியூஸ் சேனல். அதை பார்த்தபடியே ட்ரெட் மில் என்னும் நடைபயிற்சி எந்திரத்தில் நடக்கத் தொடங்கினார்.

    இனி ஒரு மணி நேரம் மனிதர் கீழேயே இறங்கமாட்டார்.

    இந்த மாதிரி நவீன கருவிகள் எல்லாம் வருவதற்கு முன்பு வரை தாமோதர் இந்த அதிகாலை வேலையில் பீச்சுக்குத்தான் நடைபயிற்சிக்காக செல்வார். இப்போது வீட்டுக்குள்ளேயே நடக்க கருவி வந்துவிட்டது. அதில் நடந்தாக வேண்டும்! எக்காரணம் கொண்டும் நடக்காமல் மட்டும் இருந்து விடக் கூடாது. அப்படி ஒரு நாள் இருந்தால் கூட போதும். சக்கரை அளவு கணிசமாக ஏறும். செரிமானத்தில் சிக்கல் உருவாகும். குறிப்பாக தலைவலி வந்துவிடும் தாமோதருக்கு!

    பணக்காரர்களால் தங்கள் பணத்தால் எதையும் வாங்க முடிந்து விடுகிறது. தங்கள் ஆரோக்கியத்தை தவிர... இந்த உலகத்தையே கூட ஒரு செக்கில் வாங்கும் சாத்யம் சிலருக்கு எப்போதாவது வரலாம். ஆனால் உடல் உறுப்புகளில் ஒன்று பழுதாகிவிட்டால் அதை விற்கும் கடை மட்டும் இந்த உலகத்தில் இல்லவே இல்லை.

    தாமோதருக்கும் கொஞ்சம் ஓட்டை உடம்புதான்! இரண்டு கண்களில் ஒன்று அரை பார்வைக்கு குறைந்து விட்டது.

    கால் மூட்டு மாற்றப்பட்டு செயற்கை மூட்டு பொருத்தப்பட்டுள்ளது. கொஞ்சம் கவலைப்பட்டாலும் பிரெஷர் எகிற ஆரம்பித்து விடுகிறது.

    இத்தனை நோய்களுக்கும் ஒரே சர்வரோக நிவாரணி நடைபயிற்சி மட்டும்தான் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். நடையின் அருமை தாமோதருக்கு நன்றாகவே தெரியும். யாராவது தாமோதரிடம் 'ஒவ்வொண்ணுக்கும் நாயா அலைய வேண்டியிருக்கும்' என்று அலுத்துக்கொண்டால் கொடுத்து வெச்சவன்டா நீ.... என்பார். அப்படியே "உனக்கு எந்த காலத்துலயும் வியாதி வராது... கடவுள் அருள் உனக்கு தான் அதிகம்' என்பார்.

    அந்த அளவு அவர் உடம்பு ஆரோக்யம் குறித்து சிந்தித்து ஒரு தெளிவிலும் இருக்கிறார்.

    அறுநூறு கோடிக்கும் மேல் சொத்து இருக்கிறது. கிட்டதட்ட ஐநூறு பேர் மாதம் தவறாமல் இவரிடம் சம்பளம் வாங்குகிறார்கள் எஸ்டேட், தோப்பு, வயல்வெளி என்று எல்லா விதமான சொத்துக்களும் வாங்கி விட்டார்.

    ஒரே வாரிசு தான்! அவள் தான் காயத்ரி. பார்த்துப் பார்த்து செதுக்கிய செப்புச் சிலை என்று ஒரு வார்த்தையில் கூறி விடலாம். காயத்ரி பிறந்த கொஞ்ச நாளிலேயே அவள் தாய் கண்ணை மூடிவிட்டாள். அந்த குறை தெரியாதபடி அவரும் அவளை வளர்த்து ஆளாக்கிவிட்டார். காயத்ரிதான் தாமோதரின் எல்லா நிறுவனங்களுக்கும் ஜே.எம்.டி. அதாவது தூய தமிழில் சொல்வதானால் இணை நிர்வாக இயக்குநர்!

    அழகு, அறிவு, அடக்கம், கருணை என்று எதுவும் காயத்ரியிடம் குறைவில்லாமல்தான் இருக்கிறது. அள்ள அள்ளக் குறையாத செல்வமும் இன்னொருபுறம்... இருந்தாலும் காயத்ரிக்கும் ஒரு பெரிய குறையை அவள் பிறந்த நாளில் இருந்தே அந்த கடவுள் வைத்து விட்டான்.

    பிறந்த மூன்றாம் மாதமே அவளுக்கு வலிப்பு வந்தது. பதறிப் போனார் தாமோதர். சிசேரியன் செய்து குழந்தையை எடுக்கும் போது ஆயுதம் போட்டதில் சில நரம்புகள் பாதிக்கப்பட்டதால் வந்த வினை என்பதே பல வருடங்களுக்கு பிறகுதான் தெரிந்தது.

    அதையும் தமிழ்நாட்டில் யாரும் சொல்லவில்லை. ஒரு வெளிநாட்டு டாக்டர்தான் கண்டுபிடித்துச் சொன்னார். அவரால் காரணத்தை கண்டறிய முடிந்தது. பூரணமாய் குணப்படுத்த மருந்தைத்தான் கண்டறிந்து கூற முடியவில்லை.

    வலிப்பு விஷயத்தில் இன்றைய மருத்துவ விஞ்ஞானம் மிகவே முன்னேறி விட்டதுதான்.... ஆனாலும் நூறு சதவிகித குணப்பாட்டை அதனால் காயத்ரி வரையில் தர முடியவில்லை.

    அது எப்போது எப்படி எட்டிப் பாயும் என்றும் கூற முடியவில்லை. கடந்த காலத்தில் அது எப்போதெல்லாம் வந்தது என்பதை ஒரு ஆராய்ச்சி மருத்துவர் காயத்ரி வரையில் சவாலாக எடுத்துக்கொண்டு ஆராய்ந்ததில் அவள் மிகவும் சந்தோஷப்பட்ட போதெல்லாமும் மிகவும் துக்கப்பட்ட போதெல்லாமும் அது வந்தது தெரிய வந்தது. இறுதியாக அவர் சொன்ன மருந்து கெமிகல் சார்ந்ததே இல்லை. மனம் சார்ந்தது அது!

    மேடம் நீங்க ஒரு யோகி மாதிரி சமநிலையில் இருக்கற வரை உங்களை இந்த நோயால எதுவுமே பண்ண முடியாது. ரொம்ப சந்தோஷப்பட்டாலும் சரி துக்கப்பட்டாலும் சரி இது உங்களை தாக்கறதை தவிர்க்கவும் முடியாது. சுருக்கமா சொல்லப் போனா இன்ப துன்பங்களை சமமா கருத வேண்டிய கட்டாயம் உங்களுக்கு. கொஞ்சம் கூட உணர்ச்சி வயப்படக்கூடாது. இது ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டும் பொருந்தாது. அது தாம்பத்யம்... தாராளமா கல்யாணம் பண்ணி குழந்தைகளை பெறலாம்.

    என்று அந்த மருத்துவர் கூறியதில் காயத்ரிக்கு தாராளமாக திருமணம் செய்து வைக்கலாம் என்று மருத்துவர் சொன்ன ஒரு விஷயம் மட்டும் தாமோதருக்கு மன ஆறுதல் தந்தது. மற்றபடி அவளை ஒரு பெண் சாமியாராக வாழச் சொன்னது சுத்தமாக பிடிக்கவில்லை.

    இவ்வளவு சொத்துக்கள் இருந்து என்ன புண்ணியம்? காயத்ரி ஒரு நடுத்தட்டு குடும்ப பெண்கள் போலத்தான் வாழ்ந்தாக வேண்டும். ஒருமுறை அவள் பிறந்த நாளைக்கு ஒண்ணரை கோடியில் ஒரு வைர மாலையை தாமோதரின் அக்கா மகன் கிரீஷ் பிறந்த நாள் பரிசாக தந்தான். கிட்டதட்ட பத்து சென்ட் அளவில் ஆயிரத்துக்கும் மேலான வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ஆரம் போன்ற வைர மாலை அது!

    அதை அவன் பார்ட்டி ஹாலில் காயத்ரிக்கு அணிவிக்கவும் காயத்ரி திக்குமுக்காடிப் போனாள். எல்லா டிவிகளிலும் அன்று அவள் செய்தியாகவும் ஆகிவிட்டாள். அந்த வைர மாலையால் மட்டுமல்ல. அந்த நொடியே அவளுக்கு ஏற்பட்ட காக்கா வலிப்பாலும்....!

    அதனால் காயத்ரி இந்த அதிநவீன மருத்துவ விஞ்ஞான உலகிலும் ஒரு ஆபத்தான நோயாளியாக பரிதாபமாக பார்க்கப்படுவது தான் கொடுமை.

    தாமோதருடன் தொழில் நிமித்தமாக பேசுபவர்கள் கூட இறுதியில் காயத்ரி எப்படி இருக்கா... இப்ப அந்த ஃபிட்ஸ் வர்றது இல்ல தானே? என்று கேட்டு முடிக்கும்போது தாமோதருக்கு அவர்கள் ஏன் பேசினார்கள் என்று இருக்கும்.

    அதனால் காயத்ரிக்கும் கண்காணிப்பு அதிகம். அவளுடனேயே ஒரு பணிப்பெண் எப்போதும் இருக்க வேண்டும். எதற்காகவும் அவளை விட்டு விலகக் கூடாது. அப்படி ஒரு பணிப்பெண்ணாக மட்டுமில்லாமல் காயத்ரி வரையில் ஒரு தாயாகவும் மங்களம் மாமி அமைந்ததை இங்கே சொல்லியாக வேண்டும்.

    மங்களம் மாமிக்கும் சென்னைக்கும் சம்மந்தமே இல்லை. காஞ்சிபுரம் பக்கமாய் ஒரு கிராமம்...

    சிவலிங்கப்பாடி என்னும் அந்த கிராமத்து சிவன் கோவில் குருக்களின் மனைவி தான் மங்களம். குருக்கள் என்ன பாவம் செய்தாரோ மங்களத்துக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து அந்த குழந்தையும் இறந்துவிட்டது.

    அதன் பிறகு பிள்ளை உண்டாகவுமில்லை. அவள் மலடி இல்லை. அவ்வளவுதான்! மற்றபடி மலடிக்குண்டான அவ்வளவு வேதனைகளையும் கடவுள் அவளுக்கு கொடுத்து விட்டான். இப்படி ஒரு நிலையில்தான் தாமோதர் அந்த சிவலிங்கப்பாடி கோயில் ராஜகோபுரத்தை தன் செலவில் கட்டித்தர நேர்ந்தது.

    அதன் கும்பாபிஷேகத்துக்காக காயத்ரியோடு சிவலிங்கப்பாடிக்கு போன இடத்தில் காயத்ரிக்கும் மாமிக்கும் ஒரு நல்ல உறவும் உருவாக ஆரம்பித்தது. சில மாதங்களிலேயே குருக்கள் காலமாகவும் மாமி தனிமரமாகி நிற்க காயத்ரி தான் அவளை தன்னோடு அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்.

    இதனால் இருவருமே ஒருவருக்கொருவர் ஆறுதலாகிப் போனார்கள். மாமி வந்த பிறகு தாமோதருக்கும் பெரிய அளவில் சுமை குறைந்த மாதிரி ஒரு உணர்ச்சி. சில நேரங்களில் சில குறைபாடுகளே பெரிய நிறைபாட்டுக்கு காரணமாகி விடுகின்றன. இதை தாராளமாக அதிசயங்கள் பட்டியலில் வைத்து சிந்திக்கலாம்.

    மாமிக்கும் குறை. காயத்ரிக்கும் குறை! இருவருமே ஒருவருக்கொருவர் பெரிய நிறை! தாமோதர் சிவபெருமானுக்கு செய்து ஒரு நல்ல காரியம் இப்படி நல்லவிதமாக முடியும் என்று தாமோதரே கூட எதிர்பார்க்கவில்லை.

    தாமோதரும் ட்ரெட் மில்லில் தன் ஒரு மணி நேர நடையை முடித்தவராக காயத்ரி குறித்த ஒரு ப்ளாஷ்பேக்கை எண்ணி முடித்தவராக அந்த உடற்பயிற்சி அறையை விட்டு வெளியேறத் தொடங்கினார். பூஜை அறையில் சுப்ரபாதம் மெல்லிய அளவில் ஒலிப்பது காதில் விழுந்தது.

    மங்களம்தான் பூஜை அறையில் பூஜித்தபடி இருக்க வேண்டும் என்பது தாமோதருக்கு தெரியும். தோளில் பூந்துவாலையோடு பூஜை அறை வாசலில் போய் நிற்கவும் மாமி லலிதா சஹஸ்ரநாமம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவர் வரவும் சற்று நிறுத்தி சிரித்தாள்.

    யு கேரி ஆன்... நீங்க கண்டினியூ பண்ணுங்க என்றபடி நகரப் பார்த்தார் தாமோதர்.

    ஒரு நிமிஷம் என்று தடுத்தாள் மங்களம்.

    என்ன மாமி?

    காயத்ரி தனியா ஜிம்முக்கு போயிருக்கா போல இருக்கே...

    ஆமாம் மாமி.... நேத்து ராத்திரியே என்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டா....

    என்கிட்ட தான் முதல்ல கேட்டா. நான் தான் உங்ககிட்ட கேட்க சொன்னேன்....

    அப்படியா?

    ஆமாம்... அவ இனி தனியா எல்லா இடத்துக்கும் போகணும் வரணும். அப்பதான் அவளுக்கு தன்னம்பிக்கை ஏற்படும்.

    புரியுது மாமி....

    அவளுக்கு நான் நிறைய ஸ்லோகம் சொல்லிக் கொடுத்துருக்கேன். அதெல்லாம் கவசமா அவளைக் காப்பாத்தும்.

    சந்தோஷம்...

    நீங்க இனியும் தாமதிக்கத் தேவையில்லை. அவளுக்கு கல்யாணம் பண்றத பத்தி தாராளமாக ஒரு முடிவெடுத்து களத்துல இறங்கலாம். அதுக்குதான் கூப்பிட்டேன்.

    மாமி கூறவும் தாமோதரிடம் சற்று தயக்கம் கூடவே ஒரு பெருமூச்சு....

    அப்போது ஹாலில் தொலைபேசி ஒலித்தது. தாமோதர் அதை எடுக்கச் செல்லவும் நீங்க இருங்கோ என்றபடி மாமிதான் சென்று எடுத்தாள். ரிசீவரை காதில் வைத்தவள் அடுத்த நொடியே அதிர்ந்தாள்!

    2

    'ஒருவன் நற்குணத்தையும் நல்வழியையும் கைவிட்டுப் புலன்களின் தூண்டுதலின்படி அலைந்தால் அவனை விட்டு செல்வம் நீங்கிவிடும். அவனது ஆயுளும் குறைந்துவிடும். அவன் பெற்றிருந்த வாழ்க்கை வசதிகள் விலகிவிடும். மனைவியும் கைவிடுவாள்."

    - விதுர நீதி

    தொலைபேசி செய்தி மாமியை வாயடைக்க வைத்துவிட்டது. வேகமாக தாமோதர் மாமியிடம் இருந்து ரிசீவரைப் பிடுங்கி தன் காதைக் கொடுத்தார்.

    ஹலோ... யார் பேசறது?

    இங்க ஃலைப் ஸ்டைல் ஜிம்மோட சூப்ரவைசர் பேசறேன் நீங்க யார்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

    நான் தாமோதர் பேசறேன்....

    ஓ தாமோதர் சாரா.... வெரி சாரி சார்... உங்க டாட்டர்க்கு திடீர்னு ஃபிட்ஸ் வந்து இப்ப எங்க கஸ்டடில இருக்காங்க. ஜிம்முல டம்புள்ஸ்ஸை ஹேண்டில் பண்ணும்போது ஃபிட்ஸ் வந்ததால் அது அவங்க கால்ல விழுந்து வீங்கிடிச்சு. இப்ப ஃபிட்ஸ் நின்னுடிச்சு. ஆனா அவங்களால காலை தரைல வைக்க முடியல.

    "நோ பிராப்ளம்... வித் இன் ட்வென்ட்டி மினிட்ஸ் ஐ வில் பீ தேர்.... அதுவரை கேர்ஃபுல்லா பார்த்துக்குங்க... ப்ளீஸ்.

    ஷ்யூர் சார்.... மறுமுனையின் உத்திரவாதமான பதிலைத் தொடர்ந்து தாமோதர் பரபரப்பானார்.

    மங்களம் மாமி அவரை பதட்டம் குறையாமல் பார்த்தாள்.

    என்ன மாமி.... இப்படி ஆயிடிச்சேன்னு வருத்தமா இருக்கா?

    "பின்ன... அதுலயும் ஆறு மாசமா வரவே வராத அந்த வியாதி திரும்ப இப்படி தலைய காட்டிடுத்தே. அதுவும் தன்னம்பிக்கையோட அவ தனியாப் போன முதல் நாளே....!

    எல்லாம் தலை எழுத்து தான்.... நீங்க அப்படி தானே சொல்வீங்க....

    பேச்சோடு பேச்சாக தன் அறை நோக்கி சென்று உடைமாற்றிக் கொண்டு புறப்படுவதில் வேகமானார். மாமி அவர் உடை மாற்றிக்கொண்டு வரவும் நானும் வருகிறேன் என்றாள்.

    இதை நான் எதிர்பார்த்தேன்.... சரி சரி வாங்கோ... என்றபடியே அவரோட காரில் ஏறி அமர்ந்து அதை கிளப்பினார்.

    வழக்கமாக அவர் பின் புறம் அமர்ந்து கொள்ள டிரைவர் லோகநாதன் தான் டிரைவிங் சீட்டில் அமர்ந்து காரை எடுப்பான். இன்று அவர் வருவதற்கு முன்பாக தாமோதரே காரைக் கிளப்பவும் வாட்ச்மேன் வடிவேலு முகத்தில் ஆச்சரியம்!

    அதை உணர்ந்தது போல தாமோதர் வடிவேலுவிடம் காயத்ரியை கூட்டிகிட்டு வரப் போறேன். போன இடத்துல அந்த கருமம் திரும்ப வந்துடுச்சி. வர்ற வரை நீயே போனை எல்லாம் அட்டெண்ட் பண்ணு என்றவராக காரை வேகப்படுத்தினார்.

    வடிவேலுவும் அப்பவே நான் பயப்பட்டேங்க.... என்றார்.

    சென்ட்ரல் ஸ்டேஷனில் நீலகிரி எக்ஸ்ப்ரஸில் இருந்து உதிர்ந்து கொண்டிருந்தான் இளங்கோவன். ஒரு கையில் சூட்கேஸ், தோளில் ஒரு ஹோல்டால் பேக் என்று பிளாட்ஃபாரத்தில் அவன் நடக்கவும் கருவாட்டு வாடை குப்பென்று அவன் மூக்கில் ஏறியது. பக்கத்து பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த சார்மினார் எக்ஸ்பிரஸின் பார்சல் கேரேஜில் இருந்து விசாகப்பட்டினத்து கருவாடுகள் இறங்கியிருந்தன. பக்கத்திலேயே பல வார, மாத பத்திரிகைகளின் பார்சல்கள். சில பார்சல்கள் கட்டு உடைந்து பல புத்தகங்கள் பிளாட்ஃபாரத்தில் சிதறிக் கிடந்தன. அதைப் பார்த்த இளங்கோவனுக்கு கோபமாக வந்தது.

    ஆனால் பிளாட்ஃபாரத்தில் எந்த ஒரு பயணியும் அதை பொருட்டாகவே கருதவில்லை. இளங்கோவன் அந்த புத்தகங்களை எடுத்து பார்சலோடு வைத்து ஓரமாகவும் வைக்க முயன்றான்.

    அய்ய... அத்த ஏன் தொட்றே?

    அப்பால நீ தான் பார்சல் உடைச்சேன்னு லோடுமேனுங்க உன்னாண்ட கரைச்சல் பண்ணுவாங்க" என்று ஒரு போர்ட்டர் சொல்லிக்கொண்டே பீடி புகையை ஊதிக்கொண்டு போனான். இளங்கோவன் கோபத்தை அது மேலும் கிளறிவிட்டது. அந்த கோபம் குறையாமல் நடந்தவன் நேராக என்கொயரி ரூமில் டைம் பாஸ் புத்தகம் படித்தபடி இருந்த ஒரு போலீஸ்காரர் முன் தான் நின்றான்.

    ஹலோ சார்....

    அவரும் நிமிர்ந்து பார்த்தார்.

    பிளாட்ஃபாரத்துல பார்சல் கட்டுக்களை கன்னா பின்னான்னு போட்றுக்காங்க. கட்டு உடைஞ்சு புத்தகமெல்லாம் சிதறிக் கிடக்குது....

    அதுக்கு நான் என்ன செய்யணும்?

    Enjoying the preview?
    Page 1 of 1