Oru Vaanam Sila Paravaigal
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsOru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsUlaraatha Raththam Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Un Naanum En Neeyum Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oru Vaanam Sila Paravaigal
Related ebooks
Ethirukal Thevai Rating: 5 out of 5 stars5/5Iruttuku Irandu Niram Rating: 0 out of 5 stars0 ratingsAagave, Section 302 Padi Rating: 5 out of 5 stars5/5January February Mortuary Rating: 0 out of 5 stars0 ratingsMatroru Mahaabaratham Rating: 3 out of 5 stars3/5Thadaiyai Udai Rating: 0 out of 5 stars0 ratingsPagai Enakku Pagai Rating: 0 out of 5 stars0 ratingsSivappai Sila Pulligal and Sivappu kavithai Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsRosap Poovu Lesaai Saavu Rating: 5 out of 5 stars5/5Thooratthu Ponman Rating: 0 out of 5 stars0 ratingsGangai Aarum Paathai Maarum! Rating: 5 out of 5 stars5/5Ippadikku Oru Indian Rating: 0 out of 5 stars0 ratingsOndrum Ondrum Moondru Rating: 0 out of 5 stars0 ratingsArai Vinaadi Aniyaayam Rating: 0 out of 5 stars0 ratingsUrainthu Pona Unmai! Rating: 4 out of 5 stars4/5Thevai Oru Thevathai Rating: 0 out of 5 stars0 ratingsPachai Poiyum Sivappu Unmaiyum Rating: 0 out of 5 stars0 ratingsVinaya Oru Vidukathai Rating: 0 out of 5 stars0 ratingsKatrathu Diamond Kalavu Rating: 0 out of 5 stars0 ratingsIrandil Ontru Rating: 0 out of 5 stars0 ratingsOru Maranathin Maranam Rating: 5 out of 5 stars5/5Raththamindri Oru Yuttham Rating: 0 out of 5 stars0 ratingsDecember Iravukal Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Michamillai Rating: 0 out of 5 stars0 ratingsElithu Elithu Kolvathu Elithu Rating: 5 out of 5 stars5/5Kaiyil Sikkiya Minnal Rating: 0 out of 5 stars0 ratingsThazhambu Naagangal! and Irandavathu Mugam Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Yethiri Rating: 0 out of 5 stars0 ratings01.01.2000, Muthal Nimisham Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Oru Vaanam Sila Paravaigal
0 ratings0 reviews
Book preview
Oru Vaanam Sila Paravaigal - Rajeshkumar
ராஜேஷ்குமார்
1
அந்த வியாழக்கிழமையின் அதிகாலை ஒரு பூவைப் போல் விடிந்து கொண்டிருந்தது.
அபிராமி பெண்கள் விடுதி. அறை எண் 41-ல் மட்டும் ட்யூப்லைட் உயிரோடு ஹிருக்க, மிதிலா குளித்துவிட்டு கண்ணாடி முன் நின்று ஒரு பட்டுப்புடவைக்கு மாறிக் கொண்டிருந்தாள். பக்கத்துக் கட்டிலில் படுத்து போர்வைக்குள் முடங்கியிருந்த அவளுடைய தோழி காமினி தலையை மட்டும் வெளியே நீட்டி மிதிலாவைப் பார்த்தபடி கேட்டாள்.
கல்யாணம் யார்க்குன்னு சொன்னே மிதிலா...?
என்னோட ஆபீஸ் கொலீக் கோமதிக்கு...
பட்டுப் புடவையைக் கொசுவம் வைத்து ஹிடுப்பில் சொருகிக் கொண்டே சொன்னாள் மிதிலா.
கொஞ்சம் ஒடிசலா உயரமா ஹிருப்பாளே... அந்தப் பெண்ணா...?
அவளேதான்...! போன வருஷம் ஒரு தடவை நம்ம ரூமுக்குக் கூட வந்திருக்கா... உனக்குக் கூட அறிமுகம் பண்ணி வெச்சேன். ஞாபகம் ஹிருக்கா...?
நல்லாவே ஞாபகம் ஹிருக்கு... ஒரு அஞ்சு நிமிஷம் பேசினாலும் சிரிக்கச் சிரிக்கப் பேசினா... மாப்பிள்ளை என்ன பண்றார்...?
தனியார் கல்லூரியில் லெக்சரர்...
கல்யாணம் எங்கே...?
சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கிற ‘சுபமங்களா’ கல்யாண மண்டபம்... ஆறு மணிக்கு முகூர்த்தம். இப்பவே மணி அஞ்சே முக்கால். முகூர்த்தம் முடியறதுக்குள்ளே மண்டபம் போய் சேர்ந்துட முடியுமான்னு தெரியலை... ரெண்டு றெக்கை இருந்தாலாவது பரவாயில்லை. மண்டபத்துக்கு பறந்து போயிடலாம்...
மிதிலா...! உனக்கு ரெண்டு றெக்கை இருந்தா நீ எப்படி இருப்பே தெரியுமா...?
சொல்லு...
தேவதை மாதிரி இருப்பே...
காலங்கார்த்தால எதுக்காக என்னோட தலையில் இவ்வளவு பெரிய ஐஸ்கட்டி?
இது ஐஸ் இல்லை... மிதிலா... உண்மையாத்தான் சொல்றேன். நீ ஒரு சாதாரண வாயல் சேலையைக் கட்டிக்கிட்டாலும் அழகாத்தான் இருக்கே... ஒரு பட்டுப் புடவையைக் கட்டிக்கிட்டாலும் அழகாத்தான் இருக்கே. ரோட்ல நீ நடந்தா வர்றவன் போறவன் எல்லாம் உன்னைத்தானே பார்க்கிறான்? இன்னிக்கு நீ கட்டியிருக்கிற இந்த ரோஸ் நிற பட்டுப்புடவையில் எப்படி ஜொலிக்கிறே தெரியுமா...? ஊட்டி ரோஜாவுக்கு கையும் காலும் முளைச்ச மாதிரி இருக்கே... உன்னைப் படைக்கும்போது பிரம்மன் ரொம்பவும் ஜாலியான மூடில் இருந்து இருப்பான் போலிருக்கு...
ஏய் காமினி... போதும்... போதும்... நிறுத்து!
நீ என்னதான் சொல்லு... உன்னோட இந்த அழகு உனக்கு ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட்.. பார்த்துட்டேயிரு... ஒரு நாளைக்கில்லை ஒரு நாளைக்காவது பில்கேட்ஸ் மாதிரி இருக்கிற கோடீஸ்வரன்களில் எவனாவது ஒருத்தன் வந்து உம் முன்னாடி நின்னு
ஐ லவ் யூ"ன்னு சொல்லப் போறான்...
டோண்ட் பி சில்லி காமினி... நான் ரொம்பவும் அழகாய் இருக்கிறதாய் நீ மட்டும் இல்லை.. எல்லாருமே சொல்றாங்க... இதை நான் பெருமையா நினைக்கலை. பெரிய அவஸ்தையாய் நினைக்கிறேன். என்கிட்டே உண்மையான அக்கறையோடு பேசறவங்களை வடிகட்டித்தான் கண்டுபிடிக்கணும். நான் பஸ்ஸுல போறப்பவும் சரி... ரோட்டில் நடந்து போகும்போதும் சரி... ஏதோ வேற்று கிரகவாசியைப் பார்த்துட்ட மாதிரி என்னை வெறிச்சுப் பார்க்கிற ஆண்கள்தான் அதிகம். பஸ்ஸுல... கூட்டத்தை சாக்கா வெச்சுகிட்டு என்னை வேணும்ன்னே உரசறவங்க... அநாவசியமா தொட்டுப் பேச முயற்சி பண்றவங்க... இது மாதிரியான வக்ர ஆசாமிகளை சமாளிக்கவே எக்ஸ்ட்ராவா ஒரு மூளை வேணும். எவ்வளவு டென்ஷன் தெரியுமா...? பார்க்க டீஸண்டா இருப்பாங்க... ஆனா அவங்க நடந்துக்கிற விதத்தைப் பார்த்தா சாக்கடைதான்... கால்ல இருக்கிற ஸ்லிப்பரைக் கழட்டிகிட்டு நாலு சாத்து சாத்தலாம்ன்னு தோணும்... என்ன ஜென்மங்களோ...?
சரி... சரி... மிதிலா... கல்யாணத்துக்கு சந்தோஷமாய் போகிற இந்த நேரத்துல அநாவசியத்துக்கு டென்ஷன் படாதே... நெற்றியில் இருக்கிற ஸ்டிக்கர் பொட்டைப் பார். லேசா சைடு அடிக்குது... கண்ணாடியைப் பார்த்து சரி பண்ணிக்க...
மிதிலா மறுபடியும் கண்ணாடியைப் பார்த்து ஸ்டிக்கரை சரி செய்து கொண்டு, மேஜையின் மீது வைத்து இருந்த கிப்ட் பாக்ஸை எடுத்துக் கொண்டாள். நான் வரட்டுமா... காமினி... நீ இன்னும் ஒரு மணி நேரத்துக்கு தூக்கத்தை கண்ட்டினியூ பண்ணு...
மிதிலா அறைக்கதவைச் சாத்திக் கொண்டு வெளியே வந்தாள். முழு ஹாஸ்டலும் அரையிருட்டிலும் அமைதியிலும் இருந்தது. ஆறரை மணிக்கு மேல்தான் அந்த ஹாஸ்டலுக்கு உயிர் வரும். எல்லோரும் வேலைக்குப் போகிற பெண்கள். எட்டரை மணிக்குள் ரெடி செய்து கொண்டு கிளம்பி விடுவார்கள். அரசு அலுவலகங்களில் பணி செய்யும் பெண்கள் மட்டும் ஒன்பதரை மணிக்குமேல் சாவகாசமாய்க் கிளம்புவார்கள்.
மிதிலா வராந்தாவில் நடந்து, ஹாஸ்டலுக்கு முன்பக்கம் வந்தபோது ஹாஸ்டலை நிர்வகிக்கும் லீலாவதி ஆபீஸ் அறையில் உட்கார்ந்து ஏதோ புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தாள். மிதிலாவைப் பார்த்ததும் புத்தகத்தை கவிழ்த்து வைத்தாள்.
ஒரு நிமிஷம் மிதிலா...
மேடம்...
என்ன... கல்யாணத்துக்குப் போறியா...?
ஆமா மேடம்...
இன்னிக்கு தேதி ஏன்ன...?
பத்து மேடம்...
ஆபீஸ்ல உனக்கு சம்பளம் கொடுத்துட்டாங்களா...?
கொடுத்துட்டாங்க மேடம்...
சம்பளம் வாங்கின நீ ஹாஸ்டலுக்குத் தர வேண்டிய பணத்தைத் தரலையே என்...?
அது... வந்து... மேடம்...
என்ன...?
இந்த மாசம் ஒரு அவசர செலவு... அதான்... அடுத்த மாசம் ரெண்டு ட்யூவையும் சேர்த்துக் கட்டிடறேன் மேடம்...
அதையாவது சொல்ல வேண்டாமா...? நீ பாட்டுக்கு கம்ன்னு இருந்தா என்ன அர்த்தம்?
ஸாரி... மேடம்... எப்படியோ மறந்துட்டேன்... அடுத்த மாசம் ரெண்டு ட்யூவையும் சேர்த்துக் கட்டிடறேன்...
இதுக்கு முன்னாடி ஒரு தடவையும் இதே மாதிரி பண்ணியிருக்கே... ஞாபகம் இருக்கா...?
இருக்கு மேடம்...
இதுவே கடைசி தடவையாய் இருக்கட்டும்... கல்யாணத்துக்குப் போய்ட்டு வா...
சொல்லிவிட்டு லீலாவதி மறுபடியும் கவிழ்த்து வைத்திருந்த புத்தகத்தை எடுத்துக்கொள்ள மிதிலா ஹாஸ்டலை விட்டு வெளியே வந்தாள். நடைபாதையில் சிலர் வாக்கிங் போய்க் கொண்டிருக்க, தெருமுனையில் இருந்த ஆட்டோ ஸ்டாண்ட்டை நோக்கிப் போனாள்.
முகூர்த்த வேளைக்குப் போய்ச் சேர முடியுமா...? மணிக்கட்டில் இருந்த வாட்ச்சைப் பார்த்தாள். நேரம் ஆறு மணியைத் தொட்டுக் கொண்டு இருந்தது. ‘ஸ்டாண்டில் ஆட்டோ இருக்குமா...?’
வேகமாய் நடை போட்டாள்.
பத்தடி நடந்து இருப்பாள். பின்பக்கம் அந்தக் குரல் கேட்டது.
ஹலோ... மிஸ் மிதிலா... குட்மார்னிங்...
திரும்பிப் பார்த்தாள் மிதிலா.
‘ஜாக்கிங் சூட்’டில் அந்த இளைஞன் தெரிந்தான். முகத்தில் லேசாய் வியர்வையின் மினுமினுப்பு. தலை கொள்ளாத கேசம் காற்றில் அசைந்தது. மிதிலா அவனையே பார்த்தாள்.
‘யார் இவன்...?’
‘பெயர் சொல்லி அழைக்கிறான்...!’
அவன் சிரித்துக் கொண்டே பக்கத்தில் வந்தான். என்ன மிதிலா...! பதிலுக்கு குட்மார்னிங் சொல்ல மாட்டீங்களா?
நீ... நீ... நீங்க... யார்ன்னு தெரியலையே...?
போச்சுடா... என்னையே... மறந்துட்டீங்களா? நான் வெங்கடேஷ்...
வெங்கடேஷ்...?
என்னங்க... இப்படி தடாலடியா என்னை மறந்துட்டீங்களே...? நீங்க வேலை பார்க்கிற கம்பெனியோட பேர் பர்ஃபெக்ட் சொல்யூஷன்ஸ் தானே...?
ஆமா...
போன ஆறு மாசத்துக்கு முந்தி சக்திவேலைப் பார்க்கிறதுக்காக நான் கம்பெனிக்கு வந்தபோது நீங்கதான் என்னை ரிசப்ஷன்ல மீட் பண்ணி ஷி.எம். சக்திவேல் கிட்டே கூட்டிட்டுப் போனீங்க...?
அப்படியா...?
என்ன அப்படியான்னு சர்வ சாதாரணமா கேட்கறீங்க...
ஸாரி... மறந்துட்டேன்...! ஷி.எம்.மைப் பார்க்க ஒரு நாளைக்கு எவ்வளவோ பேர் வர்றாங்க... அதுல அடிக்கடி வர்றவங்க முகங்கள் மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கும்...
நான் கடந்த அஞ்சு மாசமா இந்தியாவில் இல்லை. அமெரிக்காவில் ஒரு மேனேஜ்மெண்ட் கோர்ஸை முடிக்கப் போயிருந்தேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் இந்தியா வந்தேன்... ஆமா... நீங்க எங்கே இந்தப் பக்கம்..? இவ்வளவு காலையில் பட்டுப் புடவையைக் கட்டிக்கிட்டு எங்கே போயிட்டிருக்கீங்க....? ஏதாவது கல்யாணமா...?
ஆமா... என்னோட ‘கலீக்’ ஒருத்திக்குக் கல்யாணம். அதை அட்டெண்ட் பண்ணத்தான் போயிட்டிருக்கேன். ஆறு மணியிலிருந்து ஆறரை மணிக்குள்ளே முகூர்த்தம். அதான் ஆட்டோ பிடிக்க போயிட்டிருக்கேன்... ஸாரி ஸார்... உங்ககிட்டே நின்று பேசிட்டிருக்க எனக்கு நேரமில்லை
மிதிலா சொல்லிக் கொண்டே நகர முயல - வெங்கடேஷ் கையமர்த்தினான்.
ஒரு நிமிஷம்... மிஸ் மிதிலா...
என்ன...?
கல்யாணம் எந்த மண்டபத்துல...?
சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கிற ‘சுபமங்களா’ கல்யாண மண்டபத்துல...
நீங்க இப்ப ஆட்டோ பிடிச்சாலும் மண்டபம் போய்ச் சேர இருபது நிமிஷத்துக்கு மேலே ஆயிடுமே... இஃப்... யூ... டோண்ட் மைண்ட்... நான் ஒரு யோசனை சொன்னா கேப்பீங்களா...?
சொல்லுங்க...
உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா என்னோட கார்ல போயிடலாம்... பத்தே நிமிஷம்... நீங்க மண்டபத்துல இருப்பீங்க... உங்க தோழி கழுத்துல தாலி ஏறுறதை நீங்க ‘லைவ்’வா பார்க்கலாம்... என்னடா... இவன் ஜாக்கிங் சூட்ல வந்துட்டு கார்ல போலாம்ன்னு பேசறான்னு பார்க்கறீங்களா...? இந்த ஏரியா ஜாக்கிங் போறதுக்கு நல்ல ஏரியாங்கிற காரணத்தால காரைக் கொண்டு வந்து அப்படி ஓரமா நிறுத்திட்டு ஜாக்கிங் போய்ட்டு வந்துட்டு கார்ல வீட்டுக்குப் போயிடுவேன்... அதோ அந்த சில்வர் க்ரே அஸ்ஸண்ட் தான் என்னோட கார். வாங்க.... போலாம்...
பரவாயில்ல ஸார்... உங்களுக்கு எதுக்கு சிரமம்...? நான் ஆட்டோவிலேயே போய்க்கறேன்... காலை நேரம்... ட்ராஃபிக் இருக்காது. ஆட்டோவும் பத்து நிமிஷத்துல போயிடும்...
கார்ல... என்கூட வர்றதுக்குப் பயப்படறீங்களா...?
சேச்சே... என்ன பயம்...?
அப்புறம் என்ன...? வாங்க...! உங்களை சிந்தாதிரிப் பேட்டை கல்யாண மண்டபத்துல ட்ராப் பண்ணிட்டு வீட்டுக்குப் போயிடறேன்.
அது... வந்து... வந்து...
ஓ... கே...! நீங்க தயங்கறீங்க... இதுக்கு மேல் உங்களை கம்பெல் பண்றது சரியில்லை. யூ மே கோ பை ஆட்டோ...
இல்ல.... ஸார்... உங்க கார்லயே போயிடலாம். உங்களுக்கு வீண் சிரமம் கொடுக்க வேண்டாம்ன்னு நினைச்சேன்.
இதுல எனக்கு எந்தவிதமான சிரமமும் கிடையாது. உங்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலையும் ஒரு பத்து நிமிஷத்தையும் செலவு பண்றது ஒரு பெரிய விஷயமா என்ன...? வாங்க... கார்க்குப் போலாம்...
ரோட்டின் மறுபக்கத்தில் ஒரு மரத்துக்குக் கீழே நின்றிருந்த தன்னுடைய அஸ்ஸண்ட் கார்க்குக் கூட்டிக் கொண்டு போனான் வெங்கடேஷ்.
அந்தக் காலை வேளையில் சென்னையின் தெருக்கள் போக்குவரத்தின்றி விரித்துப் போட்ட பாய் மாதிரி தெரிய, வெங்கடேஷ் காரை சிந்தாதிரிப்பேட்டையை நோக்கி விரட்டிக் கொண்டிருந்தான்.
ஒரு நிமிஷம் வரைக்கும் பேசாமல் இருந்த வெங்கடேஷ் பிறகு பேச்சை மெள்ள ஆரம்பித்தான்.
நீங்க ஹாஸ்டலிலிருந்து வெளியே வர்றதைப் பார்த்தேன்... அங்கேதான் ‘ஸ்டே’ பண்ணியிருக்கீங்களா?
ஆமா...
அப்படீன்னா... உங்களுக்கு சொந்த ஊர்...?
ஸாரி...
எதுக்கு ஸாரி...?
நான் என்னோட பிறந்த ஊரை மறக்கணும்ங்கிறதுக்காகத்தான் சென்னை வந்திருக்கேன். தயவு பண்ணி வேற ஏதாவது பேசுங்க... சுனாமி மறுபடியும் வருமாங்கிற மாதிரி ஏதாவது கேள்வி கேளுங்க...
உங்களுக்குப் பொறந்த ஊர் மேல அப்படி என்ன கோபம்?
சுனாமி மறுபடியும் வராதுன்னு நான் சொல்றேன்.
ஓ.கே... ஓ.கே...!
வெங்கடேஷ் சிரித்துவிட்டுக் கேட்டான். உங்க குடும்பத்தைப் பத்தியாவது கேட்கலாமா....? இல்லை... அதுக்கும் 144 தடை உத்தரவு உண்டா...?
ஸார்...! நீங்க என்னுடைய பாஸ் ஷி.எம்.க்கு வேண்டியவர் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் உங்க கார்ல ஏறினேன். நீங்க என்னை சிந்தாதிரிப்பேட்டை கல்யாண மண்டபத்துல இறக்கி விட்டுட்டாப் போதும்... நானும் ஒரு நன்றி சொல்லிட்டுப் போய்க்கிட்டு இருப்பேன்.
"இட்ஸ் ஆல்ரைட்...! ஒவ்வொருத்தர்க்கும் ஒவ்வொரு பாலிஸி...! நாம ரெண்டு பேரும் கொஞ்ச நேரத்துக்கு இந்தியாவின் பொருளாதார